நான் புதுமுகமா ? காஜல் கோபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நான் புதுமுகமா ? காஜல் கோபம்

4/20/2011 2:55:28 PM

காஜல் அகர்வால் கூறியது: தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பு தொழிலில் இருக்கிறேன். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'சிங்கம்Õ படம் இந்தியில் தயாராகிறது. இதில் அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடிக்கிறேன். ஆனால் என்னை இங்கு பாலிவுட்டில் புதுமுகம் என்று சொல்கிறார்கள். நடிகையாக வேண்டும், அதையே என்னுடைய பணியாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பித்தான் வந்திருக்கிறேன். அதை நிறைவுடன் செய்து வருகிறேன். திரையுலகில் இவ்வளவு அனுபவம் பெற்றிருந்தும் என்னை தொழில் ரீதியாக நடிகை என்று குறிப்பிடாமல் புதுமுகம் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. இந்தியிலும் என்னுடைய வேடத்துக்கு எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டுமோ அப்படி உழைக்கிறேன். அதை படம் பார்க்கும்போது எல்லோருமே சொல்வார்கள். வெறும் கிளாமர் பதுமையாக மட்டுமே நான் வந்து செல்வதில்லை.





Source: Dinakaran
 

கிசு கிசு - காதலனுக்கு தடை போட்ட ஹீரோயின்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
காதலனுக்கு தடை போட்ட ஹீரோயின்

4/20/2011 2:57:17 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

கோலிவுட் ஹீரோயின்கள் ஷூட்டிங்கிற்கு வரும்போது டாடி, மம்மி, பிரெண்ட்சுனு யாரையாவது ஒருவரை கையோடு கூட்டி வர்றாங்களாம். அனுஷ்கமான நடிகை அதற்கு தடை போட்டிருக்க¤றாராம். டாடியோ, மம்மியோ தன்னோட ஷூட்டிங் செட் பக்கம் தலை காட்டக்கூடாதுனு சொல்றாராம். காதலனுக்கும் இதே போல் தடா போட்டிருக்கிறாராம்... போட்டிருக்கிறாராம்...

காவ்யமான நடிகை சமீபத்துல சக நடிகருக்கு ஆதரவா கேரளால பிரசாரம் செய்யப் போனாரு. மற்ற கட்சிக்காரங்க கறுப்பு கொடி காட்டி, திரும்பிப் போன்னு நடிகையை பயமுறுத்திட்டாங்களாம். இதனால அரசியல் பக்கமே வரமாட்டேன்னு நடிகை எஸ் ஆகுறாராம்... ஆகுறாராம்...

அம்பி நடிகை கூந்தலை வெட்டி கிராப் கட் வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... அப்பப்போ ஹேர் ஸ்டைல், லுக்கை மாத்துறாராம். அப்போதான் இந்த வயசுலேயும் நடிக்க வாய்ப்பு வரும்னு சக நடிகைகள்கிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...





Source: Dinakaran
 

பிருத்விராஜ், மீராவுக்கு கோர்ட் சம்மன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிருத்விராஜ், மீராவுக்கு கோர்ட் சம்மன்

4/20/2011 10:56:17 AM

அட்வான்ஸ் வாங்கிவிட்டு மலையாள படத்தில் நடிக்காததால் தயாரிபாளர் தொடர்ந்த வழக்கில் பிருத்விராஜ், மீரா ஜாஸ்மினுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் கரிம்பில் பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு 'சுவப்ன மாளிகாÕ என்ற பெயரில் மலையாள படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். இதில் ஹீரோவாக பிருத்விராஜும், ஹீரோயினாக மீரா ஜாஸ்மினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இருவருக்கும் அட்வான்ஸ் தொகையாக தலா ணி5 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை வாங்கிக்கொண்டு அவர்கள் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை திருப்பித் தரக் கோரி மோகன்தாஸ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். மலையாள நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். ஆனால் இருவரும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, மோகன்தாஸ் கோழிக்கோடு தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பிருத்விராஜ், மீரா ஜாஸ்மின் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான், மே 16-ம் தேதி பிருத்விராஜ், மீரா ஜாஸ்மின் நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.





Source: Dinakaran
 

நடிகர் விஜய் வீட்டில் கல்வீச்சு மர்ம ஆசாமிகள் கைவரிசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் விஜய் வீட்டில் கல்வீச்சு மர்ம ஆசாமிகள் கைவரிசை!

4/20/2011 10:36:10 AM

நடிகர் விஜய் வீட்டில் மர்ம ஆசாமிகள் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சாலிகிராமம் ஸ்டேட் பேங்க் காலனி 3வது தெருவில், நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு இருக்கிறது. அதை தற்போது பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு கொடுத்து இருக்கிறார். அந்த வீட்டில் கீழ்தளத்தில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. விஜய் ஆண்டனி குடும்பத்துடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் சிலர் விஜய் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கண்ணாடி அறைகள் மீது கற்களை வீசினார்கள். இதில் கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கியது. சத்தம் கேட்டு வந்த விஜய் ஆண்டனி, அவரது மனைவி ஜன்னல் கண்ணாடி உடைந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





Source: Dinakaran
 

காதல், பாட்டு பாவனா சலிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதல், பாட்டு பாவனா சலிப்பு

4/20/2011 11:02:46 AM

மலையாள படப்பிடிப்பில் இருக்கும் பாவனா கூறியதாவது: துபாயில் நடந்த 'அரபியும் ஒட்டகமும் பி.மாதவன் நாயரும்' ஷூட்டிங்கில், ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். மலையாளத்தில் 'டாக்டர் லவ்', கன்னடத்தில் 'விஷ்ணுவர்த்தனா' படங்களில் நடிக்கிறேன். 'அசல்' படத்துக்கு பிறகு தமிழில் ஏன் நடிக்கவில்லை என்கிறார்கள். இதுவரை பல கதைகள் கேட்டேன். எதுவும் திருப்தி அளிக்கவில்லை. ஹீரோயின் என்றால், நான்கு பாட்டுக்கு ஆட வேண்டும். ஹீரோவுடன் காதல் காட்சியில் நடிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இதே போல் சில படங்களில் நடித்து விட்டேன். இது எனக்கே சலிப்பு ஏற்படுத்தி விட்டது. என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தால், உடனே தமிழுக்கு வருவேன்.





Source: Dinakaran
 

வில்லன் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வில்லன் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர்!

4/20/2011 10:57:45 AM

ஆர்.கே நடிக்கும் 'புலிவேஷம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார் காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'தெய்வத்திருமகன்' படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளேன். படத்தில் சாக்லெட் கம்பெனி டிரக் டிரைவர் கேரக்டர். 'வேலாயுதம்' படத்தில் விஜய்யின் தாய்மாமன் வேடம். 'எத்தன்' படத்தில் போலிச்சாமியாராக வருகிறேன். அடுத்து 'சடுகுடு', 'சிவா பூஜையில் கரடி' உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறேன். 'புலிவேஷம்' படத்தில், முதல்முறையாக வில்லன் வேடம் ஏற்றுள்ளேன். தனி காமெடி டிராக்கில் நான் நடிப்பதில்லை. டைரக்டர் உருவாக்கிய காமெடியில், மேலும் சுவாரஸ்யம் சேர்த்து நடிப்பேன். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி அதன் டைரக்டருக்கும், ஹீரோவுக்கும் சாதக, பாதகமாக அமைகிறது. காமெடி நடிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆயிரக்கணக்கான படங்களுக்கு டப்பிங் பேசிய அனுபவம், இப்போது காமெடி செய்ய உதவுகிறது.  கடைசிவரை காமெடி நடிகனாக இருக்கவே ஆசை.





Source: Dinakaran
 

அவன்-இவன் பாடல் வெளியீடு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அவன்-இவன் பாடல் வெளியீடு!

4/20/2011 10:59:18 AM

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் தயாரிக்கும் படம், 'அவன்-இவன்'. யுவன் சங்கர்ராஜா இசை. ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு. நா.முத்துக்குமார் பாடல்கள். பாலா இயக்குகிறார். ஆர்யா, விஷால், மதுஷாலினி, ஜனனி அய்யர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பாலுமகேந்திரா வெளியிட, கல்பாத்தி எஸ்.அகோரம் பெற்றார். விழாவில், ஜி.எம்.குமார், ஆர்.கே., அம்பிகா, பிரபா ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன், டி.முத்துராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





Source: Dinakaran
 

7-ஆம் அறிவு படத்தில் ஹாலிவுட் வில்லன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
7-ஆம் அறிவு படத்தில் ஹாலிவுட் வில்லன்!

4/20/2011 10:48:46 AM

சூர்யா நடிக்கும், '7-ஆம் அறிவு' படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம், '7-ஆம் அறிவு'. ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடித்துள்ளார். இவர், 'மொங் ஆன் ஃபயர்', 'தி ரிபல்', 'பவர் கிட்ஸ்' உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்காப்பு கலை சண்டைகளில் சிறந்தவரான இவர், 'த பெர்பக்ட் ஸ்லீப்', 'ஸ்பைடர் மேன்' உட்பட ஏராளமான படங்களுக்கு சண்டைக்காட்சிகளும் அமைத்துள்ளார். தமிழ் படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, 'இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். சூர்யாவுக்கும் எனக்குமான சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கும். சூர்யா திறமையான நடிகர். ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நாங்கள் இருவரும் 42 நாட்கள் உழைத்துள்ளோம். இதில் வெளிநாட்டுக்காரனாக நான் நடித்துள்ளதால் தமிழ்ப் பேச வாய்ப்பில்லை. இருந்தாலும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுள்ளேன்' என்றார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிக்காக சூர்யா, சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Source: Dinakaran
 

தள்ளிப்போனது ராணா ஷூட்டிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தள்ளிப்போனது ராணா ஷூட்டிங்!

4/20/2011 10:55:09 AM

சென்னையில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்த 'ராணா' பட ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது. ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் 'ராணா'. ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். 17ம் நூற்றாண்டு கதையான இதன் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை சென்னையில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், தொடங்கவில்லை. தீபிகா கால்ஷீட் இல்லாததால்தான் ஷூட்டிங் ஆரம்பமாகவில்லை என்று கூறப்பட்டது. இதுபற்றி பட யூனிட்டில் கேட்டபோது, 'இந்தப் படத்துக்காக ஏவி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருகிறது. செட் ஒர்க் இன்னும் முடியாததால் இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது' என்றனர்.





Source: Dinakaran
 

அனுஷ்காவுடன் அமலா பால் மோதலா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனுஷ்காவுடன் அமலா பால் மோதலா?

4/19/2011 4:01:20 PM

நடிகை அமலா பால் கூறியது: தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும், நானும் இணைந்துள்ளோம். எங்கள் இருவருக்கும் மோதல் வரும் என்று பலர் ஜோதிடம் கூறினார்கள். அதெல்லாம் பொய்யாகிவிட்டது. மாறாக இருவரும் நெருங்கிய தோழிகளாக விட்டோம். செட்டுக்கு வந்ததுமே சக நட்சத்திரங்களுடன் நட்புடன் பழக தொடங்கிவிடுவார் அனுஷ்கா.

அவருடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். ஹீரோ விக்ரமின் டெடிகேஷன் என்னை கண்கலங்க வைத்துவிட்டது. ஒரு காட்சியில் விக்ரமின் நடிப்பை பார்த்து கண் கலங்கினேன். அது எமோஷனல் காட்சி. அவர் வசனத்தை பேசி முடித்தபோது என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்த படத்தில் நடித்த பிறகு  மாற்றுத்திறனாளிகளுக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.





Source: Dinakaran
 

கிசு கிசு - படுகிளாமருக்கு மாஜி ஹீரோயின்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
படுகிளாமருக்கு மாஜி ஹீரோயின்

4/19/2011 4:02:46 PM

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

போராளி கதைல சசி இயக்குனரு நடிக்கிறாரு... நடிக்கிறாரு... ஜோடியா நடிக்கறதுக்கு அங்காடி நடிகையை முதல்ல கேட்டாங்க. கடைசி நேரத்துல வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களாம். இப்போ மூணுஷா நடிகையை நடிக்க கேட்டிருக்கோம்ன்னு பட யூனிட் சொல்லுது. ஆனா மூணுஷா நடிகையோ 'எங்கிட்ட யாருமே கால்ஷீட் கேட்கல. அப்புறம் எப்படி நான் நடிக்க¤றதா சொல்றாங்கÕன்னு உர்ராகுறாராம்.. உர்ராகுறாராம்...

அக்கா, அண்ணி ரோல்ல நடிக்க¤றீங்களான்னுதான் சோனி நடிகைகிட்ட இயக்குனருங்க கேக¢குறாங்களாம்... கேக்குறாங்களாம்... இதுக்கிடையே நடிகையை பற்றிய கதையில¢ படுகிளாமரா நடிக்க வாய்ப்பு வந்திருக்காம். இதுக்கு சோனியாவும் ஓகே சொல்லிட்டாராம். கவர்ச்சியா நடிச்சாத்தான் திரும்ப ஹீரோயினா ரவுண்ட் வரலாம்னு நட்பு வட்டாரங்கள் அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனாலதான் அந்த படத்துல நடிக்க சம்மதிச்சிருக்காராம்... சம்மதிச்சிருக்காராம்...

தமிழ் படங்கள்ல நடிக்காம வாய்ப்புகளை மிஸ் பண்றியேன்னு சித்தார்த்தமான நடிகர்கிட்ட, சினிமா நண்பருங்க கேக்குறாங்களாம்... கேக்குறாங்களாம்... 'Ôநானா மிஸ் பண்றேன். ஒரு நல்ல நடிகனை தமிழ் இயக்குனர்கள்தான் மிஸ் பண்ணாறாங்க. இதுல எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவங்களுக்குதான் நஷ்டம்Õன்னு நக்கலா சொல்றாராம்... சொல்றாராம்...




Source: Dinakaran
 

கமல்-செல்வராகவன் படத்துக்கு திடீர் சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமல்-செல்வராகவன் படத்துக்கு திடீர் சிக்கல்

4/19/2011 4:02:02 PM

கமல் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விரைவில் ஷூட்டிங் தொடங்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வந்த நிலையில், படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்கிரிப்ட் ரெடியான கையோடு இசை அமைப்பாளர் தேர்வும் நடந்தது. ஏற்கனவே கருத்துவேறுபாடு காரணமாக யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து பிரிந்திருந்த செல்வராகவன் இப்படம் மூலம் இணைவதாக கூறப்பட்டது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்த நிலையில் திடீரென்று சங்கர் மகாதேவன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தாமதமாகி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி ஷூட்டிங் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மலையாளத்தில் ராஜேஷ் பிள்ளை இயக்கிய 'டிராபிக்' என்ற படத்தை கமல் பார்த்தார். கதை பிடித்திருந்ததாம். உடனே அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஐடியா கொடுத்ததுடன் செல்வராகவன் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்குள் இப்படத்தில் நடித்து முடிக்க முடிவு செய்தார். டிராபிக் போலீஸ் உள்ளிட்ட 3 பேரின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை உருவாகி உள்ளது. போலீஸ் வேடத்தில் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார். கதைக்கு மெயினான அப்பாத்திரத்தை தேர்வு செய்யாத கமல் மற்ற 2 பாத்திரங்களில் ஒரு பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இந்த படத்தின் ஷூட்டிங்குக்கான பணிகள் தொடங்கி உள்ளன.





Source: Dinakaran