'பவர்' வீட்டுக்கும் பாய்ந்த 'ஹம்மர்' ரெய்டு.. டிவிட்டரில் கலாய்த்த சிம்பு!

Simbu Teases Power Star Srinivasan

ஹம்மர் கார் விவகாரம் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் மட்டுமல்ல நம்ம பவர் ஸ்டார் வீட்டிலும் சிக்கலை ஏற்படுத்தியதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 33 ஹம்மர் கார் பற்றி சிபிஐக்கு கிடைத்த புகாரை அடுத்து கடந்த வாரம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட விஐபிக்கள் வீடுகளில் திடீர் ரெய்டு நடைபெற்றது.

யார் யாரிடம் கார் இருக்கிறது? எங்கெங்கு ரெய்டு நடைபெற்றது என்ற முழு பட்டியலை சி.பி.ஐ வெளியிடவில்லை. ஆனால் சிபிஐ நடத்திய ரெய்டில் பவர்ஸ்டார் சீனிவாசனும் அடக்கமாம். இது யாருக்கும் தெரியாத செய்தி.

இதை அதிகாரப்பூர்வமாக பவர்ஸ்டார் தெரிவிக்காவிட்டாலும், சிம்பு தனது டுவிட்டரில் கண்ணா டேக்ஸ் கட்ட ஆசையா? என்று கலாய்த்திருந்தார். அப்போது நிறைய பேருக்கு புரியவில்லை. இப்போதுதான் அர்த்தம் புரிந்து சிரிக்கின்றனர்.

எத்தனை லட்சம் வரி கட்டுனீங்க பவர்?

 

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு ரஜினி படம்னு வருது!

Ags Produce Rajini Movie   

ஏஜிஎஸ் நிறுவனம் 6 படங்களை ஒரே நேரத்தில் தயாரிப்பது குறித்த செய்தியை வெளியிட்டிருந்தோம்.

அதில் 5 படங்களின் பெயர்களை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம், 6 வது படம் என்னவென்று பிறகு சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த 6வது படம் மிகப் பிரமாண்டமாக தயாராகப் போகிறது என்றும் அறிவித்திருந்தனர்.

ரொம்ப நாட்களாகவே, ரஜினி நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக செய்தி வருவதும், அதை மழுப்பலாக மறுப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஏஜிஎஸ் தயாரிக்கும் படங்களில் ஒன்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். அதில் கவுதம் கார்த்தி நடிக்கிறார். இந்தப் படத்தை ஐஸ்வர்யாவுக்குக் கொடுத்ததே, ரஜினி படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைப் பெறத்தான் என்கிறார்கள்.

அதற்கேற்ப, ஐஸ்வர்யா இயக்கும் படத்தை அறிவித்த கையோடு, அடுத்து ஒரு மெகா படம் தயாரிப்போம் என ஏஜிஎஸ் அறிவித்துள்ளது.

அந்தப் படத்தின் ஹீரோ ரஜினிதான் என்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது!

 

ஓபனிங்கில் ஹிட்டடித்த அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'!

Aamir Khan Satyamev Jayate First Episode   

ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் ‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.

மே 6 ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி 1 லும் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தனது வழக்கமான மேனரிசத்துடன் நேயர்களிடம் உரையாடினார் அமீர்கான். ஓபரே வின்ஸ்ப்ரே போல நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும், போராடிக்காமலும் கொண்டு சென்றதாக நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான புரோமாஷன் போட்டது தொடங்கி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே முதல் நிகழ்ச்சியே பரபரப்பான விஷயம்தான். பெண் சிசுக்கொலை பற்றியும், கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற விவாதங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் கூட இதில் நேர்மறையான தீர்வு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் பாடலுக்காக தனது 5 மாத கைக்குழந்தையை அமீர் கான் நடிக்க வைத்திருந்தார். இதற்கு அவரது மனைவி கிரண்ராவ் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த காட்சியை நீக்கிய பின்பே ஒளிபரப்பினாராம் அமீர் கான். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டவே தனது 5 மாத குழந்தையை நடிக்க வைத்தாக அமீர் கானின் நெருங்கி நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் இதேபோல் விறுவிறுப்பான விவாதங்கள் முன் வைக்கப்படுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம்: அஜீத்தின் புதுப் பட துவக்க விழா தள்ளிவைப்பு!

Ajith S New Movie Launch Postponed

அஜீத் நடிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய பட தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த நாகி ரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அஜீத்தை வைத்து பிரமாண்டமாக புதிய படத்தைத் தயாரிக்கிறது பாரம்பரியம் மிக்க விஜயா புரொடக்ஷன் நிறுவனம்.

இந்தப் படத்தை சிறுத்தை படம் இயக்கிய சிவா இயக்குகிறார். இப் படத்தின் துவக்க விழா ஏப்ரல் முதல் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் அஜீத் குமார் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடக்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் படத்தின் துவக்க விழாவை தள்ளிவைத்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பதில், 5-ம் தேதி படத்தின் தொடக்க விழாவும், தொடர்ந்து படப்பிடிப்பும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் முடிந்ததும் காலில் அறுவைச் சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருப்பதால் சில மாதங்களுக்கு புதிய படத்தில் நடிக்க மாட்டார் அஜீத்.

 

தியேட்டர்களுக்கு வரும் முன்பே திருட்டு விசிடியாக வந்த 'கீரிப்புள்ள'!

Keeripulla Released Pirated Dvds Even   

கீரிப்புள்ள என்ற படம் இந்த வாரம் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் வரும் முன்பே நேற்று அதன் திருட்டு விசிடிகள் வெளியாகி திரையுலகை அதிர வைத்துள்ளது.

நடிகர் யுவன் - திஷா பாண்டே நடித்து நாளை வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் கீரிப்புள்ள. இந்தப் படத்தை திரைக்கு கொண்டுவரும் முன்னரே அதன் திருட்டு விசிடி மற்றும் டிவிடிகள் வெளியாகிவிட்டன. படத்தை சில இணையதளங்களும் வெளியிட்டுள்ளன.

இதனால் அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைமில் புகார் கொடுத்தார்.

உடனடியாக படம் வெளியாகியிருந்த 16 இனையதளங்களிலும் தடை செய்து விட்டனர். ஆனால் திருட்டு விசிடி மட்டும் தாராளமாகக் கிடைக்கிறது.

வேறு வழியில்லாமல் பெரோஸ்கான், யுவன் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து எல்லா ரோட்டு கடைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கடைகளை முற்றுகையிட்டு ஆறாயிரம் திருட்டு டிவிடிகளை கைப்பற்றி அழித்தனர்.

இது பற்றி பெரோஸ்கான் கூறுகையில், "கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு படம் எடுக்கும் எங்களது உழைப்பையும், பணத்தையும் கஷ்டபடாமல் திருடுகிறார்களே... சட்டத்தாலும் போலீசாலும் கூட தடுக்க முடியாத கொடுமையாக மாறி வருகிறது இந்த திருட்டு விசிடி பிரச்சினை," என்றார்.

 

விரைவில் சமந்தாவுடன் திருமணம்! - ஒருவழியாக ஒப்புக் கொண்ட சித்தார்த்

Sidahrd Talks About His Marriage With Samantha

சென்னை: விரைவில் சமந்தாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகர் சித்தார்த் ஒப்புக் கொண்டுள்ளார்.

நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும், 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் திருமணத்துக்கு சமந்தா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தாலும், சமந்தா பேசி சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி விட்டார்.

அதைத்தொடர்ந்து சித்தார்த்-சமந்தா ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவிட, ரகசியம் அம்பலமாகிவிட்டது. முதலில் இந்த செய்தியை மறுத்த சித்தார்த் இப்போது, ஆமாம், அதற்கென்ன இப்போது... அது எங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி வருகிறார்.

லேட்டஸ்ட் தகவல்படி சித்தார்த்-சமந்தா திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார் சித்தார்த். சமந்தாவும் புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டார்.

திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை சொல்லி வருகிறார் சித்தார்த்.

 

கோச்சடையான் டப்பிங் - அரைநாளில் பாதிப் படத்துக்கு பேசி முடித்த சூப்பர் ஸ்டார்!

சென்னை: கோச்சடையான் படத்துக்கான டப்பிங்கில், சூப்பர் ஸ்டார் ரஜினி காட்டிய வேகம் அத்தனை பேரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் இரட்டை வேடம் ஏற்றிருக்கும் ரஜினி, தன் பகுதிக்கான வசன டப்பிங்கில் பாதியை அரை நாளிலேயே முடித்துக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

kochadaiyaan superstar rajini finished half of his   
இதுகுறித்து படத்தின் சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி கூறுகையில், "சூப்பர் ஸ்டார் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை... அவர் பாதிப் படத்துக்கான டப்பிங்கை வெறும் அரைநாளில் பேசி முடித்துவிட்டார். ஒரு ரஜினி ரசிகனாக, இதைப் பார்க்க சந்தோஷமாக உள்ளது," என்று கூறியுள்ளார்.

கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், ஷோபனா, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் வரும் இந்தப் படத்தின் இசை வெளியீடு மே முதல் வாரம் ஜப்பானில் நடக்கவிருக்கிறது.

 

அப்பர் வேடத்தில் நடிப்பதா... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்!

Sivaji Fans Turn Against Comedian Vivek

சிவாஜி நடித்த அப்பர் வேடத்தில் நடிக்க விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கில்லாடி என்ற படத்தில் அப்பர் வேடத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றுகிறாராம் விவேக். சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவையொட்டி, விவேக் அப்பராகத் தோன்றும் போஸ்டர்களை சென்னையில் ஒட்டியிருந்தனர்.

இது சிவாஜியை அவமதிக்கும் செயல் என சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் பூமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பூமிநாதன் வெளியிட்ட அறிக்கையில், "விவேக்கின் அப்பர் வேட போஸ்டர்கள் சிவாஜியை அவமதிப்பது போல் உள்ளது.

இது குறித்து விவேக்கிடம் நேரில் பேசி உள்ளேன். இந்துக்களை இழிவுபடுத்துவது போன்றும் அவர் செயல் உள்ளது. சிவாஜி ரசிகர்கள் இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்றார்.

சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரனும் விவேக்குக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேசிடம் கேட்டபோது, "விவேக் சாமியார் வேடத்தில்தான் நடித்துள்ளார். அது சிவாஜி நடித்த "அப்பர்" வேடம் அல்ல. இதனை நடிகர் பிரபுவுக்கு தெரிவித்து விட்டோம்.

நான், விவேக், தயாரிப்பாளர் சந்திரசேகரன் அனைவரும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள்தான். விவேக்கின் கெட்டப் போஸ்டர் படங்கள் போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்டவை. விளம்பரத்துக்காக பயன்படுத்தினோம்," என்றார்.

அதான் கிடைச்சிடுச்சே!

 

என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்! - இளையராஜா

Ilayarajaa Speaks On Not Working Rajini Kamal

சென்னை: வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் தங்கள் படங்களில் என்னைப் பயன்படுத்தாதது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நஷ்டம் அவர்களுக்கே, என்று அதிரடியாகக் கூறியுள்ளார் இளையராஜா.

ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை.

ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை.

அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான்.

இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார்.

"விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ?

என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.

காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்?

எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம்.

ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை.

நெத்தியடி பதில்!