அசல் போனது போனதுதான்... திலகன் மறைவுக்கு கமல் இரங்கல்!


Kamal Condoles The Death Actor Thilagan
சென்னை: சாயல்கள் வரலாம், ஆனால் அசல் போனது போனதுதான் என்று மலையாள நடிகர் திலகனின் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலையாளிகளை மட்டுமல்லாமல் தமிழர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் திலகன். பழம்பெறும் நடிகரான திலகன் தமிழிலும் கமல்ஹாசனின் சாணக்கியன், விஜயகாந்த்தின் சத்திரியன் உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

திலகன் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

எனக்கு கேரள நடிகர்களுடன் முன்பு இருந்த அளவுக்கு தொடர்பு இல்லாமல் போனாலும் இருதரப்பிலும் அன்பு குறையாமல் இருப்பது என் பாக்கியமே.

கேரளத்தில் நல்ல நடிகர்களுக்கான பஞ்சம் வராத அளவிற்கு சராசரி நடிப்பின் தரம் உயர்ந்து இருக்கிறது. எனினும் திரு.திலகன் போன்றவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அனுபவமும் அபார தன்னபிக்கையும் உள்ளவர்.

சாணக்கியன் படப்பிடிப்பின் போது திரு.ஜிஜோ எனக்கு அவரை அறிமுகப் படுத்தியது "formidable actor" என்றுதான். திலகனைக் கண்டு படித்தவர்கள் நன்றியுடன் கண்ணீர் சிந்துவர்.

கண்டு வியந்தவர் இனி எங்கே என்று மயங்குவர். மயங்கத் தேவையில்லை இனியும் வருவர் நல்ல கலைஞர்கள். ஆனால் இவர் போல் இருக்காது. சாயல் தெரியலாம் ஆனால் அசல் போனது போனதுதான். இத்தனை நாள் எங்களுடன் இருந்ததற்காக நன்றி, யாம் பெற்றதற்காகத் தனி நன்றி தோழரே என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
 

12 வயது சிறுவனுக்கு 'லிப் டூ லிப்' கொடுத்த அமெரிக்க நடிகை!

Carrie Underwood Gives Lip Lip 12 Year
லூயிஸ்வில்லி, கென்டகி: அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான கேரி அன்டர்வுட் 12 வயது சிறுவனுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து அசத்தி விட்டார். அந்த சிறுவன், கேரியின் தீவிர ரசிகனாம். கேரிக்கு உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசையாம். இதை கேரியிடமே ஒரு நிகழ்ச்சியின்போது அவன் சொன்னதுமே வேகமாக நெருங்கி வந்து தனது குட்டி ரசிகனின் உதட்டில் முத்தமிட்டு அவனது ஆசையை நிறைவேற்றி அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் கேரி.

29 வயதாகும் கேரியிடம் 12 வயது சிறுவன் உதட்டு முத்தம் பெற்ற சம்பவம் கென்டகி, லூயிஸ் வில்லியில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் நடந்தது. அந்தப் பையனின் பெயர் சேஸ். கேரியின் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அவன், கூட்டத்தோடு கூட்டமாகத்தான் நின்று கொண்டிருந்தான். ஆனால் கையில் வைத்திருந்த சிறிய அட்டைத் தட்டியில் தனது ஆசையை எழுதி காட்டினான். அதைப் பார்த்து கேரி அவனை மேடைக்குக் கூப்பிட்டார்.

பின்னர் சிறுவனை அணைத்துப் பிடித்தபடி அவனிடம் பேசினார். அப்போது தனக்கு 14 வயது இருந்தபோது முதல் முத்தம் கிடைத்ததாக கேரி கூறவே கூட்டத்தினர் கரகோஷித்தனர். சிறுவனுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை.

பின்னர் சிறுவனை நோக்கிக் குணிந்த கேரி, தனது கண்களை மூடியபடி அவனது உதடுகளுடன் தனது உதடுகளைப் பொறுத்தி ஒரு முத்தமிட்டார். இதைப் பார்த்தும் கூட்டத்தினர் கரகோஷம் எழுப்பினர்....

பின்னர் தனது ஆசையை தைரியமாக வெளிப்படுத்திய சிறுவன் மிகவும் புத்திசாலியானவன் என்றும் அவனைப் பாராட்டினார்.

பின்னர் கூட்டத்தினரைப் பார்த்து இதெல்லாம் அரிதான விஷயம். இதைப் பார்த்து நீங்களும் எனக்கு வேண்டும் என்று வந்து விடாதீர்கள் என்று சிரித்தபடி கூறினார்.

பின்னர் சிறுவனைப் பாராட்டியும், அவனுக்கு முத்தம் கொடுத்தது குறித்தும் தனது மகிழ்ச்சியை டிவிட்டரிலும் போட்டு வைத்தார் கேரி.

நம்ம ஊரில் பரவை முனியம்மாதான் அடிக்கடி கச்சேரி பண்ணுறாங்க... என்ன பண்ணுறது...!!!
 

என்னை கன்னடர்கள்தான் அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும்.. லட்சுமி ராய்


I Want Kannada Audience See Me More Than Anybody Else   
பெங்களூர்: பெல்காம் பைங்கிளி லட்சுமி ராய் கை நிறையப் படங்களுடன் இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் கூட பயங்கர பிசியாகத்தான் இருக்கிறார். விக்ரமுடன் தாண்டவம் படத்தை முடித்துள்ள லட்சுமி ராய் இப்போது தாய் மொழியான கன்னடத்தில் 2 படங்களில் நடித்து வருகிறாராம். தன்னை மற்ற மொழி ரசிகர்களை விட கன்னடத்து ரசிகர்கள்தான் அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் மொழிப் பற்றுடன் பேசுகிறார் லட்சுமி.

லட்சுமி ராய் நடித்து வந்த படங்களை விட அவரை வைத்து வந்த வதந்திகள்தான் ஏகம். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், தான் உண்டு, தனது வேலையுண்டு என்று பிசியாகத்தான் இருந்து வருகிறார் லட்சுமி.

கன்னடத்திலிருந்து ஆரம்பித்த அவரது திரை வாழ்க்கை இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எங்கெங்கோ போய் விட்டது. இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் அட்டகாசா மற்றும் கல்பனா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கன்னடத்தில் நடிப்பதை எப்போதுமே வெறுத்ததில்லை. உண்மையில் இங்குதான் எனது வாழ்க்கை தொடங்கியது. மற்ற மொழி ரசிகர்களை விட கன்னட ரசிகர்கள்தான் என்னை அதிகம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்றார் அவர்.

தமிழில் ஹிட்டடித்த காஞ்சனா படம்தான் கன்னடத்தில் கல்பனா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் நடித்த அதே வேடத்தில்தான் கல்பனாவிலும் லட்சுமி ராய் நடிக்கிறார்.

மேலும் லட்சுமி கூறுகையில், நான் நடிக்க வந்து 13 வருடங்களாகி விட்டது. இன்னும் அலுப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. பாலிவுட்டுக்கும் போவேன். எனக்கு வயது இருப்பதால் அதற்கேற்ப கவர்ச்சியுடனும் நான் நடித்து வருகிறேன் என்றார்.
 

கர்ப்பமாகக் கூடாது: கரீனாவுக்கு கன்டஷன் போட்ட பன்சாலி

Kareena Kapoor Lost Ram Leela Over   

மும்பை: தனது படமான ராம் லீலாவில் நடித்து முடிக்கும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கன்டிஷன் போட்டதால் தான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கரீனா கபூர் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எடுக்கும் படமான ராம் லீலாவில் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்தபோதிலும் அவர் கரீனா கபூரை ஒப்பந்தம் செய்யவே விரும்பினார். பன்சாலி படத்தில் நடிப்பது என்பது பல இந்தி நடிகைகளின் கனவாகும். அப்படி இருக்கையில் இந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததில் கரீனாவுக்கு ஏக மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் கரீனா தனக்கும், சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். உடனே பன்சாலி தனது படம் முடியும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ளாராம். அவரது கன்டிஷனை ஏற்க மறுத்ததால் கரீனா இந்த பட வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக மாதுர் பண்டர்கரின் ஹீரோயின் படத்தில் ஒப்பந்தமான பிறகு ஐஸ்வர்யா ராய் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார். அதன் பிறகு படத்தை பரண் மேல் வைக்கலாமா என்று யோசித்த இயக்குனர் இறுதியில் கரீனாவை வைத்து படத்தை எடுத்து ரிலீஸும் செய்துவிட்டார். மாதுரின் நிலைமை தனக்கும் வரக் கூடாது என்பதில் பன்சாலி தெளிவாக உள்ளார் போலும்.

 

கோலிவுட்டுக்கு வரும் புத்தம் புது கவர்ச்சிப் பாவை ஷாலினி... முமைத்தின் தோஸ்த்!

Shalini Naidu From Mumbai With Glamour

சென்னை: தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு.

பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

நாளைய மனிதன் என்ற திரைப்படம் மூலம் நாயகியாகும் ஷாலினி நாயுடு, கவர்ச்சிதான் தனது முதல் இலக்கு என்கிறார். கதையை விட கவர்ச்சிதான் எப்போதும் பேசப்படும், என்றென்றும் மனதில் நிற்கும் என்பது இவரது தத்துவம். இவரின் இன்னொரு கொள்கை, குறைந்த அளவிலான உடைகளை மட்டுமே அணிவது என்பதாம்.

படத்தில் இவர் நாயகியாக நடித்தாலும் கூட கவர்ச்சி கதகளிதான் ஜாஸ்தி இருக்கிறதாம். கவர்ச்சியாக நடிப்பதையே தனது பாலிசியாக வைத்துள்ளதால் படம் முழுக்க இவரது கவர்ச்சி மழைதானாம். படம் ஒருதிரி்ல்லர் படமாம். கூடவே கவர்ச்சியும் முக்கியமானதாக இருக்கிறதாம். எனவே இரண்டையும் சேர்த்து கலந்து பிசைந்து மிரட்டலாக கொடுத்துள்ளாராம் ஷாலு.

 

வாத்ஸாயனா, வாத்ஸாயனா வருகை தருவாயா...!

Oduthalam Hit Screens Soon   

சென்னை: மலையாளத்தில் 25 படங்களை இயக்கியுள்ள திணேஷன் என்ற இயக்குநர் இயக்கத்தில் முதல் தமிழ்ப் படமாக ஓடுதளம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

மலையாளத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித், ரூபிகா இணையில் உருவாகியுள்ள இப்படத்தில், பெரும்பாலும் மலையாள முகங்களே நிரம்பியுள்ளன. இருப்பினும் இயக்குநர் ரவி மரியா, தேனி முருகன் ஆகிய தமிழ் முகங்களையும் போட்டு இதை ஒரு தமிழ்ப் படமாக மாற்றியுள்ளார் திணேஷன்.

இப்படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ஆனால் படத்தில் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை என்று தெரிகிறது. இப்படத்தில் அனுராதா ஸ்ரீராம், மகதி, கல்பனா மற்றும் நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் இணைந்து ஒரு கலக்கலான பாடலைப் பாடியுள்ளனர்.

வாத்யாஸனா, வாத்ஸாயனா வருகை தருவாயா

ஒரு வரியில் என்னை எழுதி உரைகள் தருவாயா என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை இவர்கள் நால்வரும் இணைந்து பாடியுள்ளனராம். இந்தப் பாடலை மிகு்த ரசனையோடு காமம் பெரிதாகத் தெரியாத வகையில் படமாக்கியுள்ளாராம் திணேஷன். யார் கண்ணன் இப்பாடலை எழுதியுள்ளார்.

படம் வரட்டும், எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்...

 

கவர்ச்சிப் படத்துக்கேற்ற 'கன கச்சிதமான' கதையுடன்... சொல்ல மாட்டேன்!

Solla Matten Another Horror Movie

சென்னை: தமிழில் படத் தலைப்புகளை எதை அடிப்படையாக வைத்து சூட்டுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் படத்தின் கதையை மட்டும் கவர்ச்சிக்கேற்றார் போல செலக்ட் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார்கள்.

அப்படித்தான் ஒரு படம் இப்போது உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பு சொல்ல மாட்டேன். எதைச் சொல்ல மாட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் கதையை மட்டும் படு சூப்பராக அமைத்துள்ளனர்.

அதாவது ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது.. நீங்கள் நினைப்பது சரிதான், அது ஒரு மலைப் பாங்கான பிரதேசம். அங்கு சுற்றுலாவுக்கு வரும் - நீங்கள் மறுபடியும் கெஸ் செய்தது சரிதான் - பெண்கள் மட்டும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

அப்படிக் கொல்லப்பட்ட ஒரு கல்லூரி மாணவி ஆவியாக மாறி எதிரிகளைப் பழிவாங்கக் கிளம்புகிறாள். இதுதான் படத்தின் கதையாம். இப்படிப்பட்ட கதைகளை நிறைய நாம் கேள்விப்பட்டிருந்தாலும், இந்தப் படத்தில் அதை வித்தியாசமாக காட்டியுள்ளனராம் - இந்த வித்தியாசம் என்ற வார்த்தை கூட மாறாமல் ஒவ்வொருவரிடமிருந்தும் தவறாமல் வருவதையும் நாம் தொடர்ந்து பார்த்துதான் வருகிறோம்.

படத்தில் திரில்லும், கவர்ச்சியும் சம விகித சரிமானத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாம். படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஜிஸ்மி. படப்பிடிப்பை பாலக்காட்டுக்குப் பக்கத்தில் படு குளிரான ஒரு காட்டுப் பகுதியில் வைத்து நடத்தியுள்ளனர். படப்பிடிப்பின்போது கடும் குளிர் தாங்க முடியாமல் அவ்வப்போது ஜிஸ்மி மயங்கி விழுந்து விடுவாராம்... அவரைத் தெளிய வைத்து தெளிய வைத்து படப்பிடிப்பை நடத்தினார்களாம்.

அனேகமாக படம் வந்த பிறகு ஜிஸ்மியைப் பார்த்து ரசிகர்கள் மயங்கி விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!