மாணவி கடத்தல் வழக்கு: நான் எங்கும் ஓடிவிடவில்லை - நடிகை சனா கான்

Sana Khan Denies Kidnap Attempt

மும்பை: 15 வயது மாணவியை தன் உறவுக்கார இளைஞனுக்காக கடத்த முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் எங்கும் ஓடிவிடவில்லை என்றும், தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருவதாகவும் சனாகான் தெரிவித்தார்.

பிரபல நடிகை சனா கான், தன் உறவுக்கார இளைஞன் ஒருவன் காதலிக்கும் மைனர் பெண்ணை கடத்த துணை போனார் என மும்பை போலீசில் அப்பெண்ணின் தாயார் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் சனா கானை தேடுவதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சனா கான் இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "நான் போலீசுக்கு பயந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுவது தவறு. தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறேன்.

பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். மைனர் பெண்ணை நான் கடத்த முயன்றதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அந்த பெண்ணின் தாய் எனது ரசிகை என்றனர். அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது. அவள் பின்னால் வருவதாகச் சொன்னாள். நான் எனது உறவுக்கார இளைஞனை பார்க்க போனபோது அவர்தான் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்த அப்பெண்ணை சந்திக்கும்படி வற்புறுத்தினார்.

உறவுக்காரருக்கும் அந்த பெண்ணுக்கும் பிரச்சினை இருந்திருந்தால் அந்தப் பெண் ஏன் என்னைச் சந்திக்க வரவேண்டும். அந்த கட்டிடத்தில் உள்ள சிசி டி.வி. கேமராவில் இவை எல்லாம் பதிவாகி இருக்கும். இன்னொன்னு, பெண்ணைக் கடத்துவது என் வேலையல்ல.. அதற்கான அவசியமும் இல்லை," என்றார்.

 

காவ்யா மாதவனுக்காக மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தாரா நடிகர் திலீப்?

திருவனந்தபுரம்: தன் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டதாக வந்த செய்திகளை நடிகர் திலீப் மறுத்துள்ளார்.

மஞ்சுவாரியர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர். மஞ்சுவாரியருக்கும் நடிகர் திலீப்புக்கும் காதல் மலர்ந்தது. 1998-ல் திருமணம் செய்து கொண்டனர்.

கொச்சியில் தனிக்குடித்தனம் துவங்கினார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு மஞ்சு வாரியர் முழுமையாக ஒதுங்கிவிட்டார். அமைதியாகப் போன அவர்களின் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களாக திலீப்பும் மஞ்சுவாரியரும் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இருவரும் இப்போது பிரிந்து விட்டதாகவும் தனித்தனி வீடுகளில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. மஞ்சுவாரியரை திலீப் விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்குக் காரணம், கணவனை விவாகரத்து செய்துவிட்டு இப்போது திலீப்புடன் நெருக்கம் காட்டி வரும் காவ்யா மாதவன்தான் என்று கூறப்படுகிறது.

actor dileep divorces wife manju warrior

இதற்கிடையே, நீண்ட நாளாக இருந்து வரும் இந்த வதந்திக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திலீப்.

அவர் கூறுகையில், "மஞ்சுவாரியரை விவகாரத்து செய்ததாக வதந்திகள் பரப்பியுள்ளனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு தம்பதிக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். அதை வைத்து பிரிந்து விட்டதாக கருதக் கூடாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள திலீப், அது நிரந்தர பிரிவல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 

ஐ லவ் யூ, ஐ லவ் யூ: ஹன்சிகாவை துரத்தும் இளம் ஹீரோக்கள்

சென்னை: ஹன்சிகாவுக்கு இளம் ஹீரோக்கள் காதல் தூது அனுப்பி தொல்லை கொடுக்கிறார்களாம்.

அண்மையில் பேட்டி அளித்த ஹன்சிகா தன்னை பலர் காதலிப்பதாகவும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஹன்சிகாவும் பிரபுதேவாவும் நெருக்கமானதால் நயன்தாரா பிரிந்தார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. இந்த இரண்டையுமே ஹன்சிகா மறுத்தார்.

young heroes give love torture hansika

இந்நிலையில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கும் ஹன்சிகாவுக்கு இளம் ஹீரோக்கள் சிலர் காதல் தூது விடுகிறார்களாம். ஆனால் அவற்றையெல்லாம் அம்மணி கண்டுகொள்வதே இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இளவட்டங்கள் விடாமல் முயற்சி செய்து வருகிறார்களாம்.

அப்படி தன்னை காதலிப்பதாக துரத்துபவர்களிடம் சாரி எனக்கு உங்கள் மீது காதலும் வரவில்லை, எனக்கு காதலிக்க நேரமும் இல்லை என்று கூறி நைசாக நழுவிவிடுகிறாராம் ஹன்சிகா. தனக்கு இப்படி காதல் தூது விட்டு தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை வெளியிட்டால் தன்னுடைய மார்க்கெட் அடிபடும் என்பதால் அமைதி காத்து வருகிறாராம்.

 

அந்த அதிசயம் நடந்தே விட்டது... வைரமுத்து மகனுடன் கைகோர்க்கிறார் இசைஞானி!!

Ilayarajaa Join Hands With Vairamuthu Son

சென்னை: எத்தனையோ பேர் இந்த சினிமாவில் பிரிந்திருக்கிறார்கள். சேர்ந்தோ சேராமலோ போயிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இருவரும் மீண்டும் சேர மாட்டார்களா என பல கோடி இசை ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் ஏங்கியது இளையராஜா - வைரமுத்து பிரிவுக்காகத்தான்!

பல நூறு தேன் சுவைப் பாடல்களைத் தந்த இந்த இசைக் கூட்டணியின் பிரிவு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில், இப்போது வேறு வகையில் ஒன்றுகூடியுள்ளது.

வைரமுத்துவோடு இளையராஜா நேரடியாக இணையாவிட்டாலும், வைரமுத்து மகனும் இன்றைய முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவருமான மதன் கார்க்கியுடன் இணைகிறார்.

மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மதன் கார்க்கி.

ஏற்கெனவே யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதும் வாய்ப்பையும் பெற்றுள்ள மதன் கார்க்கிக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த புதிய கூட்டணி, பழைய கூட்டணியை திரும்ப உயிர்ப்பிக்கும் காரணியாக அமைய வாழ்த்துவோம்!