வரலாற்று சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ‘கிரந்தி யாத்ரா’

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "கிரந்தி யாத்ரா" வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Sankara TV new program Kranthi Yathra

யாத்ரா என்றால் நம் மனதில் நினைவுக்கு வருவது தீர்த்த யாத்ரா தான் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் தீர்த்தயாத்திரையை நிகழ்சிகளாக வழங்குவர்கள். ஆனால் கிரந்தி யாத்ரா ஒரு தனித்துவமான நிகழ்ச்சி ஆகும். ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திர இந்தியா என்பது கனவாகவே இருந்தது. சுதந்திர இந்தியாவிற்கு முன் தென் இந்தியவில் சில பகுதிகள் சுதந்திரத்திற்காக முக்கிய பங்காற்றினார்.

Sankara TV new program Kranthi Yathra

தென்னிந்தியாவில் சுதந்திர போராட்டமானது எழுச்சியுடன் துவக்கப்பட்டது. அப்படிப்பட்ட இடங்களின் வரலாறு மிகவும் சிறப்பானது, இன்றும் அது பலருக்கு சுதந்திர வேட்கையை துண்டும் வண்ணம் அமைகிறது.

Sankara TV new program Kranthi Yathra

அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்குச்சென்று தியாகிகளின் வரலாற்றை தோண்டியெடுப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். கிரந்தி யாத்ரா நிகழ்ச்சியின் மூலம் சுதந்திர போராட்டம் பற்றி வெளிவராத உண்மைகளை வாசகர்களுக்கு தெரிவிப்பதே நோக்கமாகும். சக்கரவர்த்தி சுளிபெலே அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி ஒவ்வொருவாரமும் சனிக்கிழமையன்று ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

 

யாவாரம் நல்லா நடக்குது.. செம சந்தோஷத்தில் தமன்னா

சென்னை: நடிகைகள் முன்பெல்லாம் சம்பாதிக்கும் பணத்தை நிலம், வீடு போன்றவற்றில் முதலீடு செய்வர். ஆனால் இப்பொழுது தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபர்களாக மாறி வருகின்றனர்.

நடிகை நமீதா கட்டுமானத் தொழிலிலும் , நடிகை டாப்ஸி வெட்டிங் பிளானர் தொழிலும் காலூன்றி உள்ளனர். இதே போன்று நடிகை தமன்னாவும் நகைக் கடை தொழிலில் குதித்து உள்ளார்.

Jewelry Business  Now Going Well - Tamanna

இவரிடம் பல பிரபலமான நடிகைகளும் நகைகள் செய்ய ஆர்டர் கொடுத்து வருகின்றனர், பிஸியான நடிகையாக இருந்தாலும் கடைக்கு போன் செய்து கடையின் நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறார்.

கையிலும் கைநிறைய படங்கள் மற்றும் நகைக்கடைத் தொழில் நன்றாகப் போவது இந்த இரண்டும் சேர்ந்து உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம் தமன்னாவை.

 

ட்விட்டரில் மோசடி.. கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் ஹரி புகார்!

தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டரிலே மோசடி நடந்திருப்பதாக இயக்குநர் ஹரி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது உதவி இயக்குநர் மூலம் ஹரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்தப் புகார் மனு:

Directot Hari lodges complaint againt fake twitter ID

சாமி, சிங்கம் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களை நான் இயக்கி உள்ளேன். ட்விட்டர் இணையதளத்தில் எனது பெயரில் போலி பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அவதூறான தகவல்கள் எனது பெயரில் பரப்பப்படுகிறது.

இது தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது சினிமா இயக்குநர் தொழிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி இணையதள முகவரியை முடக்கி, இதை எனது பெயரில் தொடங்கியவர் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கையை தொடங்கினார்கள். உடனடியாக ஹரி பெயரில் டுவிட்டரில் உள்ள போலி இணையதள முகவரி முடக்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

 

விஜய் படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்!

தமிழ் சினிமாவில் பல புதுமைகள், சாதனைகளைப் படைத்த இயக்குநர் மகேந்திரன் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார்.

அட்லீ இயக்கும் விஜய்யின் 59வது படம் நேற்று தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்கிறார்கள், பிரபு, ராதிகா, ராஜேந்திரன், காளி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.

Director Mahendiran turns actor

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன். அவர் திரையில் நடிகராக வருவது இதுதான் முதல் முறை.

இதுகுறித்து அவரை இயக்கும் அட்லீ கூறுகையில், "மகேந்திரன் சார் முதல்முறையாக நடிக்கிறார். என் தலைவருக்கு (ரஜினி) பிடிச்ச இயக்குநர் அவர். அவரை நான் இயக்குவதை நினைத்தால் பெருமையாக உள்ளது," என்றார்.

இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் 50வது படம் இது.

 

வீரப்பன் பாத்திரத்துக்கு 'கோமாளி' போல ஒரு நடிகரைப் பிடித்த ராம்கோபால் வர்மா!

கில்லிங் வீரப்பன் படத்தில், சந்தனக் காட்டு வீரப்பனை மிகக் கேவலமாகச் சித்தரிப்பது என முடிவு செய்துவிட்ட ராம் கோபால் வர்மா, அந்தப் பாத்திரத்துக்கு கோமாளி மாதிரி ஒரு நாடக நடிகரை தேர்வு செய்துள்ளார்.

சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கை ஏற்கெனவே பல முறை படமாக்கப்பட்டுவிட்டது. இப்போது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் ராம் கோபால் வர்மா.

RGV selects a buffoon like actor for Veerappan role

காட்டு பங்களாவில் இருந்த ராஜ்குமாரை வீரப்பன் துப்பாக்கிமுனையில் கடத்தியது. அவரை மீட்க அரசு அடுத்த நடவடிக்கைகள் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை. இறுதியில் வீரப்பன் என் கவுண்டரில் கொல்லப்பட்டது போன்றவைதான் இந்தப் படத்தின் கரு.

இதில் வீரப்பனை மோசமானவனாக சித்தரிக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. வீரப்பனை அவதூறாக காட்டினால் வழக்கு தொடர்வேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமி அறிவித்து உள்ளார். தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு இப்போதே தடை கோர ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் வீரப்பன் கேரக்டரில் நடிக்க சந்தீப் பரத்வாஜ் என்ற நாடக நடிகரை தேர்வு செய்துள்ளார் ராம்கோபால் வர்மா.

இவர் பார்க்க வீரப்பன் மாதிரி இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஒரு கோமாளியைப் போல உடல்மொழியுடன் காட்சி தருகிறார். வீரப்பனை முடிந்தவரை கேவலமாகக் காட்டுவது என முடிவெடுத்து ராம் கோபால் வர்மா இந்தப் படத்தை எடுக்கிறார் போலிருக்கிறது என மீடியாவில் விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது.

 

இயக்குநர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட விக்ரமன்

தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இயக்குநர் விக்ரமன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

Vikraman re elected as Director Association President

2015-17-ம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விக்ரமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த வக்கீல் செந்தில்நாதன் நேற்று அறிவித்தார்.

இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

 

62 வது தென்னிந்திய பிலிம்பேர் – தெலுங்கில் விருதுகளை வாரிக் குவித்த மனம்

ஹைதராபாத்: 62 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளிலும் சிறந்த படங்களைத் தேர்வு செய்து அதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.

தெலுங்கு சினிமாவில் அதிகபட்சமான விருதுகளை மனம் திரைப்படம் அள்ளிச் சென்றது, நாகேஸ்வர ராவ், நாகர்ஜுன், நாக சைதன்யா என தெலுங்கு சினிமாவின் மூன்று தலைமுறை நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

62nd Filmfare Awards South 2015 - Manam Telugu Movie Won 5 Awards

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடகர், சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்தபின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி போன்ற 10 பிரிவுகளில் சிறந்த பின்னணிப்பாடகர் தவிர்த்து மொத்தம் 9 பிரிவுகளில் போட்டியிட்டது மனம் திரைப்படம்.

போட்டியிட்ட 9 பிரிவுகளில் 4 விருதுகளை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் , சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடலாசிரியர் என மொத்தம் 4 விருதுகளை அள்ளிச் சென்றது மனம் திரைப்படம்.

மனம் திரைப்படத்திற்கு அடுத்த இடத்தை( 3 விருதுகள்) அல்லு அர்ஜுனின் ரேஸ் குர்ரம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கும் , சிறந்த நடிகைக்கான விருது சுருதிஹாசனுக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பின்னணிப்பாடகர் விருது ரேஸ் குர்ரம் படத்தில் சினிமா சூபிஸ்டா பாடலைப் பாடியதற்காக பின்னணிப்பாடகர் சிம்ஹா விற்கு வழங்கப்பட்டது.

 

பாபநாசம் சிக்கல் தீர்ந்தது.. 600 அரங்குகளில் வெளியாகிறது!

விநியோகஸ்தர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் பாபநாசம் படம் திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது.

கமல்-கவுதமி நடித்துள்ள பாபநாசம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு ‘யு' சான்று பெற்றது. இப்படத்தை அடுத்த ஜூலை 3-ந்தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.

Papanasam problem sorted out!

ஆனால் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் திரையரங்குகளில் திட்டமிட்டபடி டிக்கெட் முன்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உத்தம வில்லன் ரிலீசின் போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி கமல் லிங்குசாமிக்கு படம் பண்ணாமல், சொந்தபப் படம் தயாரிப்பதால் தங்கள் வரவேண்டிய பணம் வராமல் போவதாகக் குற்றம்சாட்டினர் விநியோகஸ்தர்கள். எனவே பாபநாசத்துக்கு ஒத்துழைப்பு இல்லை என அறிவித்தனர்.

இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கும் கமல் தரப்பினருக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Papanasam problem sorted out!

இதையடுத்து பாபநாசம் பட சிக்கல் தீர்ந்து திட்டமிட்டப்படி 3-ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இந்த படத்தை வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ்பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார், தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டும் விருது பெறாத காவியத் தலைவன்!

சென்னை: சோகப் படுவதா அல்லது துக்கப் படுவதா ஆனால் இரண்டில் ஒன்றைப் பட்டே ஆகவேண்டும். அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா நேற்று நடந்த 62 வது பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளாமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.

ஆனால் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட காவியத் தலைவன் படம் ஒரு விருதைக் கூடப் பெறவில்லை. இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை.

Kaaviya thalaivan Most Nominated  In 62 Filmfare Awrds

எப்படியாயினும் தமிழ் நாட்டில் வேகமாக அழிந்துவரும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நாடகக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காவியத் தலைவனை ஒரு பிரிவில் கூட கவுரவிக்காதது குறையே.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப்பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர் போன்ற 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது காவியத் தலைவன் . ஆனால் ஒன்றில் கூட விருதை வெல்லவில்லை.

 

சண்டைக்கோழி பார்ட்- 2வில் விஷாலுக்கு ஜோடி வெள்ளைக் கோழி தமன்னா!!

சென்னை: சண்டைக்கோழி பார்ட் 2 திரைப்படத்தில் நடிகை தமன்னா விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலிவுட்டில் தற்போதைய புதிய டிரெண்ட் பார்ட்-2 படங்கள்தான். காஞ்சனா பார்ட்-2, கோ பார்ட் -2 , விஸ்வரூபம் பார்ட்-2 என்று புதிய குஸ்தியில் குதித்துள்ளது கோலிவுட்.

Vishal's next heroin is Tammannah

ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த "சண்டக்கோழி" படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விஷாலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின், சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் நாயகியாக முதலில் லட்சுமி மேனன் பெயர் அடிப்பட்டது. பிறகு ஸ்ருதி ஹாசன் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நாயகியாக தமன்னாவை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விஷால் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் சண்டக்கோழி பார்ட் 2 படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தல உடன் நடிக்க வாய்ப்பு… மறுத்த சின்னப்பாப்பா...

சினிமாவில் நடிக்க வரும் யாரைக்கேட்டாலும் ஒரு படத்திலாவது தல கூட நடிக்கணும் என்று கூறுவார்கள். அவரு அப்படி இவரு இப்படி என்று 4 பக்கத்துக்கு பிட்டு போடுவார்கள். ஆனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருக்கும் சின்னப்பாப்பாவிற்கு தல கூட நடிக்கும் வாய்ப்பு வந்தும் தயங்காமல் நோ சொல்லி விட்டாராம். காரணம் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லையாம்.

காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அந்த தொகுப்பாளினிக்கு சித்தியின் தயாரிப்பான காமெடி தொடரில் சின்னப்பாப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீனியர் நடிகைகளுடன் போட்டி போட்டு நடிப்பதால் இல்லத்தரசிகளிடம் வரவேற்பு கிடைத்தது.

ஒவ்வொரு டயலாக்கும் ஆடிக்கொண்டே பேசும் பாங்கு... சட் சட் பேசி ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர் சின்னப்பாப்பா. இவரது நடிப்பைப் பார்த்தே தல படத்தில் நடிக்க கூப்பிட்டுள்ளனர். ஆனால் நோ சொல்லிவிட்டாராம். நான் பொழுது போக்கிற்காகத்தான் தொகுப்பாளினியானேன். இதுவே முழு நேர தொழிலாகிவிட்டது. இனி சினிமாவெல்லாம் வேண்டாம் என்று வீட்டில் கூறிவிட்டனர் என்கிறார் சின்னப்பாப்பா.

அது சரி... இப்படி சினிமாவில நடிக்க மாட்டேன்னு சொன்னவங்க எல்லாம், தோழியாகவும், தங்கையாகவும் நடித்துக்கொண்டுதானே இருக்கின்றனர்... சின்னப்பாப்பா சினிமாவுக்கு வராமலா போய்விடுவார் என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.