சென்னை: நாளை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம்சேம்பரில் நாளை காலை இந்த தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், கலைப்புலி தாணு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
கோவைத்தம்பி, எடிட்டர் மோகன், பட்டியல் சேகர், வி. சேகர், அமுதா துரைராஜ், ராதாரவி, பவித்ரன், ஆர்.கே. செல்வமணி, மாதேஷ், சங்கிலிமுருகன், கருணாஸ், பி.டி. செல்வக்குமார் உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
கேயார் அணியில் துணை தலைவர் பதவிக்கு சத்யஜோதி தியாகராஜன், டி. சிவா ஆகியோரும் செயலாளர் பதவிக்கு முரளிதரன், ஏ.எம். ரத்னம் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், கபார், எஸ்.எஸ். துரைராஜ், கமீலா நாசர், எச்.முரளி, கெட்டப் ராஜேந்திரன், ருக்மாங்கதன், விஜயமுரளி உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த முறை தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளுமே அதிமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம்சேம்பரில் நாளை காலை இந்த தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், கலைப்புலி தாணு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
கோவைத்தம்பி, எடிட்டர் மோகன், பட்டியல் சேகர், வி. சேகர், அமுதா துரைராஜ், ராதாரவி, பவித்ரன், ஆர்.கே. செல்வமணி, மாதேஷ், சங்கிலிமுருகன், கருணாஸ், பி.டி. செல்வக்குமார் உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
கேயார் அணியில் துணை தலைவர் பதவிக்கு சத்யஜோதி தியாகராஜன், டி. சிவா ஆகியோரும் செயலாளர் பதவிக்கு முரளிதரன், ஏ.எம். ரத்னம் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், கபார், எஸ்.எஸ். துரைராஜ், கமீலா நாசர், எச்.முரளி, கெட்டப் ராஜேந்திரன், ருக்மாங்கதன், விஜயமுரளி உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த முறை தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளுமே அதிமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.