தமிழ் சினிமாவில் மேலும் ஒரு இசையமைப்பாளர் நடிகராக அவதாரமெடுக்கிறார். அவர் மிஷ்கினின் அறிமுகமான கே.
மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜே வடிவேல் இயக்கத்தில், ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் கள்ளப்படம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் கே.
இது சினிமாவைப் பற்றிய கதைதான். நான்கு இளைஞர்களையும், திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர்ப்பார்த்து நிற்கும் அவர்களின் எதிர்கால கனவுகளையும் பற்றிய படம்தான் இந்த கள்ளப்படம்.
அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே. வடிவேலுவுடன், இசையமைப்பாளர் கே, இந்த படத்தின் ஒளிபதிவாளர் மற்றும் படதொகுப்பாளர் ஆகியோர் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர்.
படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்களே படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி ப்ரியா.
படத்தின் இசையையும் கே கவனித்துக் கொள்கிறார். பெண்களை கவுரவிக்கும் வகையில் மகிழினி மணிமாறன் குரலில் ஒரு பாடலை மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அவர் பதிவு செய்தார்.
பெண்களை கௌரவிக்கும் இந்த பாடலின் ஆசியோ என்னவோ, தயாரிபாளர்களின் சீரிய முயற்சியால் அடுத்த கட்ட இசை அமைப்பு பணியை ஆஸ்திரேலியாவில் தொடர உள்ளார் கே. ஆஸ்திரேலியாவில் இசை பதிவு செய்யும் முதல் இந்திய இசை அமைப்பாளர் என்ற பெருமை கே-வுக்கு கிடைத்துள்ளது.