அய்யயோ, ஹோட்டல் ரூமா.. கேமரா வச்சிருப்பாங்களே.. அலறி ஓடும் நடிகைகள்!

சென்னை: குளியலறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், ஹோட்டல்களில் தங்கவே நடிகைகள் பயப்படுகிறார்களாம்.

இண்டர்நெட், வாட்ஸ் அப் போன்றவற்றில் சமீபகாலமாக நடிகைகள் சிலரின் அந்தரங்கப் படங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இப்படங்கள் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா வைத்து படமாக்கப் பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அதிலும், சமீபத்தில் சின்ன பிளவர் நடிகையின் நிர்வாணக் குளியல் காட்சி வாட்ஸ் அப்களில் வேகமாகப் பரவி வருகிறது. அது மார்பிங் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அவரது வளர்ச்சி பிடிக்காமலேயே சில விஷமிகள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

இதனால், மற்ற நடிகைகள் மனதில் அச்சம் உண்டாகியுள்ளதாம். இந்த ஆபாச படங்களை பார்த்த பிறகு ஹோட்டல்களில் தங்குவதற்கு நடிகைகள் தயங்குவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

படப்பிடிப்புகளில் கேரவன்களிலோ அல்லது அங்குள்ள ஏதேனும் ஒரு வீட்டிலோ தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி படக்குழுவினரிடம் நடிகைகள் வற்புறுத்துகிறார்களாம்.

 

இனி உளறக் கூடாது, சரியா.. முடிவெடுத்தார் "பவர்"!

சென்னை: இனி விழாக்களில் பேசும்போது எதையாவது உளறி பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று பவர்ஸ்டார் முடிவு செய்துள்ளாராம்.

பவர்ஸ்டார் சீனிவாசன் படங்களை விட அதிகமாக படம் தொடர்பான விழாக்களில் தான் கலந்து கொள்கிறார். மேடையில் பேசுகையில் காமடெியாக பேசி கைத்தட்டல் வாங்குகிறேன் என்ற பெயரில் எதையாவது உளறிவிடுகிறார். முக்கியமாக மேடைதோறும் தயாரிப்பாளர்களை கண்டமேனிக்கு தாக்கிப் பேசி வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பவர் மீது கொலவெறியில் உள்ளனர்.

இனி உளறக் கூடாது, சரியா.. முடிவெடுத்தார்

அண்மையில் கலந்து கொண்ட விழா மேடையில் தயாரிப்பாளர்களை தாக்கிப் பேசினார் பவர். அவரை அடுத்து பேசியவர்கள் பவரை காய்ச்சி எடுத்துவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஆடிப்போய்விட்டாராம்.

இனியும் மேடைகளில் உளறிக் கொட்டி யாரிடமும் வசை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் பவர். பவருக்கு யாரும் முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இயக்குனர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனாலும் தான் அடக்கி வாசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் பவர்.

 

டி ராமாநாயுடுவுக்கு தெலுங்கு திரையுலகம் அஞ்சலி.. படப்பிடிப்புகள் ரத்து

ஹைதராபாத்: இந்திய சினிமாவின் சாதனை தயாரிப்பாளர் டி ராமாநாயுடுவின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகம் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது.

அவர் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன.

டி ராமாநாயுடுவுக்கு தெலுங்கு திரையுலகம் அஞ்சலி.. படப்பிடிப்புகள் ரத்து

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட 13 படங்களில் 150 படங்களுக்கு மேல் தயாரித்தவர் டி.ராமாநாயுடு. 78 வயதான இவர் கடந்த சில மாதங்களாக கேன்சர் பாதிக்கப்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டில் மரணம் அடைந்தார். ஹைதராபாத் பிலிம்சிட்டியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த ராமா நாயுடு உடலுக்கு ஏராளமான நடிகர்-நடிகைகள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி, என்.டி.ராமராவின் மகள் புரந்தேஷ்வரி, நடிகர்கள் நாகார்ஜூனா, ராஜசேகர், பிரகாஷ்ராஜ், தருண், என்.டி.ஆர்.ஹரி கிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர். கல்யாண்ராம், அல்லு அரவிந்த், அல்லு அர்ஜூன், சாய்குமார் ரவிதேஜா, பழம் பெரும் நடிகர் ராஜேந்திர பிரசாத், நடிகைகள் கே.ஆர்.விஜயா, ஜமுனா, சாரதா, வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி மற்றும் ஏராளமான டைரக்டர்கள், இசை அமைப்பாளர்கள், முன்னணி திரைக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், என்.டி.ஆர். மனைவி லட்சுமி சிவபார்வதி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

ராமா நாயுடு மறைவுக்கு தமிழக கவர்னர் கே.ரோசய்யா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ராமாநாயுடு உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஐதராபாத் ஜூப்ளிஹில்சில் உள்ள அவருக்கு சொந்தமான ராமாநாயுடு ஸ்டூடியோவில் வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. ஸ்டூடியோ வளாகத்திலேயே ராமாநாயுடு உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் தெலுங்கு திரை உலகினர் கலந்து கொள்கின்றனர்.

 

லிங்கா விவகாரத்தில் விஜய்யை ஏன் இழுக்கிறீர்கள்? - விநியோகஸ்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம்

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க விடாமல் ரஜினியை இரு முன்னணி நடிகர்கள் தடுப்பதாக அதன் விநியோகஸ்தர்கள் சிலர் பிரஸ் மீட் வைத்து நிருபர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கூறினர் அல்லவா..

அந்த நடிகர்கள் யார் யார் என்று மீடியாக்காரர்கள் திரும்ப கேட்டதற்கு அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினர் விநியோகஸ்தர்கள்.

லிங்கா விவகாரத்தில் விஜய்யை ஏன் இழுக்கிறீர்கள்? - விநியோகஸ்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம்

ஆனால் ஆப் த ரெக்கார்டாக, அந்த நடிகர்கள் விஜய் மற்றும் சரத் குமார்தான் என்று கூறியதாக தகவல் பரவியது. சில மீடியாக்களில் செய்திகளும் வெளியானது.

இந்த தகவல் கேள்விப்பட்டதும் விஜய்யின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

யார் வம்புக்கும் போகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய்யை இந்த விநியோகஸ்தர்கள் எதற்காக வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

'லிங்கா விவகாரத்தில் விஜய்க்கு துளியும் சம்பந்தமில்லை. இந்த நிலையில் அவர் ரஜினியிடம் போய், லிங்காவுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறியிருப்பது விஷமத்தனமானது.

போகிற போக்கில் அத்தனை பேர் பெயரையும் இழுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இவர்கள்.

இதுபோன்ற விஷமப் பிரச்சாரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

 

தம்மாத்துண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தான்ட நான் ரொம்ப நல்லவன், அந்தான்ட நான் ரொம்ப கெட்டவன்!

சென்னை: என்னை அறிந்தால் படத்தில் அஜீத் பேசும் வசனம் ஸ்டைலில் தண்ணில கண்டம் படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஒரு வசனம் பேசியுள்ளார்.

எஸ்.என்.சக்திவேல் இயக்கியுள்ள இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. டீஸரில் மொட்டை ராஜேந்திரன் தனது ஜிம் பாடியை காட்டி மிரட்டுகிறார்.

தம்மாத்துண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தான்ட நான் ரொம்ப நல்லவன், அந்தான்ட நான் ரொம்ப கெட்டவன்!

மேலும் என்னை அறிந்தால் படத்தில் அஜீத் கூறும் ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன் என்ற வசனத்தை சற்று மாற்றி பேசுகிறார் ராஜேந்திரன்.

ஒரு தம்மாத்தூண்டு ரோடு, ரோட்டுக்கு இந்தாண்ட நான் ரொம்ப நல்லவன் குட் பாய், ரோட்டுக்கு அந்தாண்ட நான் ரொம்ப கெட்டவன் என்று ராஜேந்திரன் வசனம் பேசுகிறார். இந்த டீஸரை யூடியூப்பில் இதுவரை 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ராஜேந்திரன் நகைச்சுவை வேடங்கள் முதல் வில்லன் வேடம் வரை பலவகை கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார். திருடன் போலீஸ் படத்தில் ராஜேந்திரன் பெண் வேடம் போட்டு ரசிகர்களை அசத்தினார்.

எந்த வேடமாக இருந்தாலும் நச்சென்று நடித்து வருகிறார் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் நகுலுக்கு திருமணம்... சமையல் கலை பட்டதாரியை மணக்கிறார்!

நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் காதல் திருமணம் செய்கிறார்.

சமையல் படிப்பில் 'எம்.பி.ஏ.' படித்த பட்டதாரி பெண் அவர். ஆனால் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார் நகுல்.

நடிகர் நகுலுக்கு திருமணம்... சமையல் கலை பட்டதாரியை மணக்கிறார்!

நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். மயூர் ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்தார்.

இளைய தம்பி நகுல், 'காதலில் விழுந்தேன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். 'மாசிலாமணி,' 'கந்த கோட்டை,' 'வல்லினம்' போன்ற படங்களில் நடித்த அவர், மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் நாளை வெளியாகவிருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நகுல், "நான், கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை. அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். 'எம்.பி.ஏ.' படித்து இருக்கிறார்.

எனது நண்பர் ஒருவரின் பக்கத்து வீட்டில் என் காதலி வசித்து வருகிறார். நண்பர் மூலம் அவர் அறிமுகமானார். நட்பு காதலாகி, திருமணத்தில் முடிய இருக்கிறது. எங்கள் காதலை அக்கா தேவயானி உள்பட என் பெற்றோர்களும், காதலியின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்," என்றார்.

 

ஏப்ரல் மாதம் மணிரத்னத்தின் ஓகே கண்மணி!

‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ.கே.கண்மணி' படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓகே கண்மணி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்-நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏப்ரல் மாதம் மணிரத்னத்தின் ஓகே கண்மணி!

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மத்தியில் படத்தின் இசையை வெளியிடவிருக்கிறார்களாம்.

மௌன ராகம், அலைபாயுதே பாணியிலான காதல் கதையாக இந்த ஓகே கண்மணி உருவாகி வருகிறது.