ஷூட்டிங்கிற்கு லேட்டா வந்து திட்டு வாங்கிய தீபிகா படுகோனே

ஷூட்டிங்கிற்கு லேட்டா வந்து திட்டு வாங்கிய தீபிகா படுகோனே

மும்பை: ராம் லீலா படப்பிடிப்புக்கு லேட்டாக வந்த தீபிகா படுகோனே இயக்குனரிடம் திட்டு வாங்கியுள்ளார்.

தீபிகா படுகோனே ரன்வீர் சிங் ஜோடியாக சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றிக்களிப்பில் உள்ளார் தீபிகா.

பன்சாலிக்கு ஷூட்டிங் என்றால் நடிகர், நடிகைகள் டான் என்று வந்துவிட வேண்டும். இந்நிலையில் தீபிகா 3 நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு ஹாயாக ஷூட்டிங்கு லேட்டாக சென்றுள்ளார்.

இதைப் பார்த்து கடுப்பான பன்சாலி ஷூட்டிங்ஸ்பாட்டிலேயே தீபிகாவை திட்டித் தீர்த்துவிட்டாராம். தான் தவறு செய்ததால் தீபிகா மறுமொழி பேசாமல் அமைதியாக திட்டை வாங்கிக் கொண்டாராம்.

 

செக் மோசடி வழக்கில் கஸ்தூரி ராஜாவின் மனு தள்ளுபடி: ஹைகோர்ட் அதிரடி

செக் மோசடி வழக்கில் கஸ்தூரி ராஜாவின் மனு தள்ளுபடி: ஹைகோர்ட் அதிரடி

சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர். சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் பவர் ஏஜெண்ட்டுகள் மனுதாரராக இருக்க முடியும் என்று கூறி கஸ்தூரி ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

ஷாம் நடித்த 6... செப்டம்பர் 13-ல் பிரமாண்ட ரிலீஸ்!

சென்னை: ஷாம் நடித்த '6' படம் வரும் செப்டம்பர் 13-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

தெலுங்கில் கிக் என்ற ஹிட் கொடுத்த பிறகு, ஒரு இடைவெளி விட்டு விஇஸட் துரை இயக்கத்தில் ஷாம் நடித்த படம் 6.அவருக்கு ஜோடியாக பூனம் கவுர் நடித்துள்ளார். மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தன் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய படமாகக் கருதி, சிரத்தையெடுத்து நடித்துள்ளார் ஷாம். வாட்ட சாட்டமான வாலிபராக இருந்தவர், இந்தப் படத்துக்காக 20 கிலோவுக்கு மேல் உடல் மெலிந்து, கண்களின் கீழ்ப் பகுதிகளை வீங்க வைத்தெல்லாம் உருவிலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.

படத்தில் 6 வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார் ஷாம். மேலும் இந்தியா முழுவதிலும் இந்தப் படத்துக்காக ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

ஷாம் நடித்த 6... செப்டம்பர் 13-ல் பிரமாண்ட ரிலீஸ்!

சில மாதங்களுக்கு முன்புதான் படத்தின் இசை வெளியிடப்பட்டது. இதன் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் சில மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், தியேட்டர்கள் கிடைப்பது, பொருத்தமான நேரம் என பல விஷயங்கள் தள்ளிப் போட்டன.

இப்போது படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் வாங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதிலும் வெளியாகிறது.

ஷாம் நடித்த 6... செப்டம்பர் 13-ல் பிரமாண்ட ரிலீஸ்!
 

ரயிலில் டிக்கெட் பரிசோதகரை திட்டி, தாக்கிய மலையாள வில்லன் நடிகர் கைது

சென்னை: ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியதற்காக மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார் கைது செய்யப்பட்டார்.

மலையாள வில்லன் நடிகர் மனோஜ் குமார்(50). அவர் நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயிலில் பயணித்தார். அவர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் பயணம் செய்தார். அப்போது அந்த பெட்டியில் டிக்கெட்டை முன்பதிவு செய்யாமல் சிலர் ஏறினார்களாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் முன்பதிவு செய்யாமல் ஏறியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அறிந்து அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் கிருஷ்ணமூர்த்தி பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது மனோஜ் கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினாராம். இதையடுத்து ரயில் நள்ளிரவு 1 மணிக்கு ஈரோடு வந்தபோது கிருஷ்ணமூர்த்தி நடந்த சம்பவம் குறித்து ரயில் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் மனோஜ் குமார் கைது செய்யப்பட்டார்.

 

படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்

படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்

சென்னை: தலைவா படத் தயாரிப்பாளர் தன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

நான் உளவுத்துறை, ஜனனம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது சத்யராஜ் கதாநாயகனாக வைத்து ‘கலவரம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார். அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்துவிடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய படம் கலவரம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது.

எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்துவிட்டார். படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து செள்ளுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

ஏங்க, கோச்சடையான் வருமா, வராதா?

ஏங்க, கோச்சடையான் வருமா, வராதா?

சென்னை: ரஜினியின் கோச்சடையான் வருமா, வராதா என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

கோச்சடையான் ஷூட்டிங் துவங்கி, முடிந்துவிட்டது. அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு தீபிகாவும் இந்தி படங்களில் படுபிசியாகிவிட்டார். கோச்சடையானில் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

இசை வேலையை முடித்துவிட்டேன் என்று ரஹ்மானும் கூறினார். இந்நிலையில் கோச்சடையான் தெலுங்கில் விக்ரமசிம்ஹா என்ற பெயரில் ரிலீஸாவதாகவும், அதற்கான டப்பிங் நேற்று துவங்கியதாகவும் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி, இசை வெளியீடு எப்பொழுது, படம் எப்பொழுது தான் ரிலீ்ஸ் ஆகும் என்பது குறித்து மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவே மாட்டேன் என்கிறார்கள். இதற்கிடையே கோச்சடையான் ரிலீஸாகாது என்று ஒரு வதந்தி வேறு கிளம்பியுள்ளது.

கோச்சடையான் பற்றி செய்தி வெளியிட்டால் ரசிகர்கள் வராத படத்திற்கு எதற்கு பில்ட்அப் என்று கேட்கின்றனர். அதனால் தயவு செய்து இசை வெளியீடு குறித்தாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு படம் நிச்சயம் வரும் என்று ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை கூறுங்கள்.

 

படம் ஓடாவிட்டாலும் நடிகரின் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சலில்லை

சென்னை: விரலை சுழட்டி சுழட்டி வித்தை செய்யும் நடிகரின் படங்கள் ஓடாவிட்டாலும் அவர் செய்யும் பந்தாவுக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம்.

விரலை சுழட்டுவதற்கு பெயர் போன அந்த நடிகர் 2 படங்களில் பலகாலமாக நடித்து வருகிறார். அந்த படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்து விட்டது போன்று. மற்றொன்றின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் அந்த நடிகர் மெரினா இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தை நடிகரே தயாரிக்கவும் செய்கிறார். அவர் தயாரிக்க முன் வந்தாலும் கையில் இருந்து காசு வெளியே வரமாட்டேன் என்கிறதாம். நான் எல்லாம்... என் படத்திற்கு செம கிராக்கி உள்ளது ஈசியாக ரூ.40 கோடி வரை வியாபாரம் நடக்கும். அதனால் டிவி சேனல்களுக்கு உரிமையை வழங்கி அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே படத்தை எடுக்கலாம் என்கிறாராம்.

இதையடுத்து வினியோகஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்தால் நடிகரின் கடைசி 3 படங்களும் பப்படமான நிலையில் இது வேறாக்கும் என்று யாரும் வர மாட்டேன் என்கிறார்களாம்.

 

துபாயில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா: டிக்கெட்டுக்கு முந்துங்கள்

துபாயில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா: டிக்கெட்டுக்கு முந்துங்கள்

துபாய்: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் செப்டம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விழாவில் 200க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள். இசையமைப்பாளர்கள் அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், பாடகி உஷா உதூப்பின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவை கண்டு ரசிக்க விரும்புவோர் +971529719667, +971505865375, +971529719660 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும். அலல்து http://www.synergyutsevents.com/SIIMA2013.asp என்ற இணையதளத்திற்கு சென்றும் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் விவரம் வருமாறு,

விஐபி டிக்கெட்( 2 நாட்களுக்கு) - 1000 திர்ஹம்

ஒரு நாளுக்கு கோல்ட் டிக்கெட் - 150 திர்ஹம்

ஒரு நாளுக்கு சில்வர் டிக்கெட் - 60 திர்ஹம்

 

சுற்றுலா தலமான ஷாரூக்கின் மங்களூர் வீடு!

சுற்றுலா தலமான ஷாரூக்கின் மங்களூர் வீடு!

மங்களூர்: மங்களூரில் உள்ள ஷாரூக்கானின் பங்களா இப்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மங்களூரை ஒட்டிய பனம்பூரில் உள்ளது இந்த ஹார்பர் ஹவுஸ் எனும் இந்த பங்களா.

வட இந்திய நடிகராக அறியப்பட்டாலும், தாய் வழியில் தான் ஒரு தென்னிந்தியர்தான் என்று சொல்வது வழக்கம். சமீபத்தில் கர்நாடக மாநிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷாருக்கான், தனது தாத்தா மங்களூர் துறைமுகத்தில் பணியாற்றியவர் என்றும், தானும் சிறு வயதில் இங்கு வசித்திருந்ததாகவும் கூறினார்.

அவருடைய பேட்டி வெளியானபின்பு, ஷாருக்கானின் பங்களாவைப் பார்வையிடுவதற்காக பள்ளிச் சிறுவர்களும், அவருடைய ரசிகர்களும் அதிக அளவில் வருவதாக அங்கு பணிபுரியும் காவலாளிகள் தெரிவித்தனர்.

1963ஆம் வருடம் ஷிமோகாவிலிருந்து ஷாருக்கானின் தாத்தா இப்திகார் அகமது மங்களூர் வந்ததாகவும், நான்கு ஆண்டுகள் அங்கு அவர் பணிபுரிந்ததாகவும் கூறுகிறார் நாகேஷ் மரோல். இவர் ஷாரூக் தாத்தாவுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அன்றைக்கு ஷாரூக்கான் குடும்பத்துக்கு காரோட்டிய டிரைவரான மெஹ்மூத் என்பவர் இப்போது மங்களூரில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது.

இப்போது ஷாரூக்கானுக்கு மங்களூர்வாசிகள் புதிய கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு முறையாவது மங்களூருக்கு வந்து தன் பங்களாவில் அவர் தங்க வேண்டும், தாத்தா பணியாற்றிய துறைமுகத்தைப் பார்க்க வேண்டும் என்பதும்தான் அது!

 

தந்தையால் ஸ்ருதியிடம் வாய்ப்பை தவறவிட்ட அசின்?

மும்பை: வெல்கம் 2 இந்தி படத்தில் அசினுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு ஸ்ருதி ஹாஸனுக்கு சென்றதற்கு அவரது அப்பா ஜோசப் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாலிவுட்டில் கையில் படங்கள் இல்லாமல் இருந்து வந்தார் அசின். இந்நிலையில் அபிஷேக் பச்சனுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அசினை வைத்து ரெடி படத்தை எடுத்த அனீஸ் பாஸ்மி வெல்கம் 2 என்ற படத்தை எடுக்கிறார். இதற்காக முதலில் சோனாக்ஷி சின்ஹாவிடம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அசினை நாயகியாக்க முடிவு செய்திருந்தார் பாஸ்மி.

தந்தையால் ஸ்ருதியிடம் வாய்ப்பை தவறவிட்ட அசின்?

இந்நிலையில் மார்க்கெட் இல்லாத நிலையில் அசினின் தந்தை ஜோசப் தொட்டும்கல் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டாராம். சம்பளத்தில் சிறிதும் குறைக்க மாட்டேன் என்றும் அடம்பிடித்தாராம்.

இதையடுத்து தான் பாஸ்மி மார்க்கெட் இல்லாத அசினுக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது தேவையில்லை என்று நினைத்து ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

 

புறம்போக்கு தலைப்பு என்னுடையது - நடிகர் நட்ராஜ்!

புறம்போக்கு தலைப்பு என்னுடையது - நடிகர் நட்ராஜ்!

சென்னை: புறம்போக்கு தலைப்பு எனக்குத்தான் சொந்தம். அதை நான் முன்பே பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நட்ராஜ் சுப்ரமணியம், கோலிவுட்டில், பாலிவுட்டில் பிரபலமான ஒளிப்பதிவாளர். சமீபத்தில் வெளிவந்த தனுஷின் அமராவதி (ராஞ்சன்னா) படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தமிழில் நாளை, சக்கர வியூகம், மிளகா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யா, விஜய் சேதுபதியை வைத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் பெயர் புறம்போக்கு என்பதைக் கேள்விப்பட்ட நட்ராஜ், இது தன்னுடைய தலைப்பு எனத் தெரிவித்துள்ளார்.

தனது நட்ராஜ் சினி ஆர்ட்ஸ் சார்பாக தாம் கதாநாயகனாக நடிக்க நெத்திலி மற்றும் புறம்போக்கு ஆகிய தலைப்புகளைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தயாரிப்பாளர் சங்கத்திலும், கில்டிலும் இந்தத் தலைப்புகள் தன் பெயரில்தான் உள்ளன என்றும் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுப்பிப்பதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், யூடிவி -டிஸ்னி நிறுவனம் இந்த புறம்போக்கு தலைப்பை அறிவித்திருப்பதாகவும், புறம்போக்கு என்னுடைய தலைப்பாக முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதால் மதிப்பிற்குரிய இயக்குனர் ஜனநாதன் அவர்கள் வேறு தலைப்பை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொள்வதாகவும் நட்ராஜ் தெரிவித்தார்.

 

இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் மேகா ஆடியோவை வெளியிட்ட கமல்!

லண்டன்: இளையராஜா இசையில் உருவான மேகா படத்தின் இசை - பாடல்கள் லண்டனில் நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

நடிகர் கமல்ஹாஸன் மற்றும் இளையராஜா இதனை வெளியிட, அய்ங்கரன் கருணா பெற்றுக் கொண்டார்.

ஜிபி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படம் மேகா. கார்த்திக் ரிஷி இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் மேகா ஆடியோவை வெளியிட்ட கமல்!

இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. 32 ஆண்டுகளுக்கு முன் இளையராஜா இசையமைத்த புத்தம் புதுக்காலை என்ற பாடல் இந்தப் படத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் இசை மற்றும் பாடல்களை லண்டனில் நடந்த ராஜா தி ராஜா இசை நிகழ்ச்சியின்போது வெளியிட்டனர்..

இளையராஜாவும் கமல்ஹாஸனும் இசையை வெளியிட, அய்ங்கரன் கருணா மற்றும் லைக்கா மொபைல் நிறுவனத் தலைவர் பெற்றுக் கொண்டனர்.

இளையராஜாவின் லண்டன் இசை நிகழ்ச்சியில் மேகா ஆடியோவை வெளியிட்ட கமல்!
 

‘சிங்கத்தோட கர்ஜனை 50 நாளைத் தாண்டியும் கலக்குதேப்பா....

சென்னை: சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம்-2 படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

சமீபத்தில் வந்த திரைப்படங்களில் சிங்கம் நல்ல வசூல் தரும் படமாக அமைந்துள்ளதாம். ஏற்கனவே வந்த சிங்கம் படத்தின் வெற்றியை அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதாம் சிங்கம்-2.

‘சிங்கத்தோட கர்ஜனை 50 நாளைத் தாண்டியும் கலக்குதேப்பா....

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்த இப்படமும் துறுதுறு போலீஸ் கதை தான். படம் ரிலீசாகி 50 நாட்களைக் கடந்தும் இன்னும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்.

விரைவிலேயே படத்தின் 100வது நாள் வெற்றி விழா நடந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் சில தியேட்டர் உரிமையாளர்கள்.