பாண்டியராஜன் மகன் காதல் திருமணம்... கேரள மாணவியை மணக்கிறார்!

நடிகர் - இயக்குநர் பாண்டியராஜன் மகனும் நடிகருமான ப்ரித்வி கேரள மாணவியை காதலித்து மணக்கிறார்.

‘கைவந்த கலை', ‘நாளைய பொழுதும் உன்னோடு', ‘பதினெட்டாம் குடி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ப்ரித்வி. இவர் நடிகர் பாண்டியராஜனின் மூத்த மகன். இவருக்கும், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அக்ஷயாவுக்கும் காதல் ஏற்பட்டது.

Actor Prithvi - Akshaya engagement

கொச்சியை சேர்ந்த பிரேம்நாத் - ஷீலா தம்பதிகளின் மகள் அக்ஷயா. கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வருகிறார். ப்ரித்வி-அக்ஷயா காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது.

Actor Prithvi - Akshaya engagement

கல்லூரி மாணவி அக்ஷயாவுடன் காதல் மலர்ந்தது பற்றி ப்ரித்வி கூறுகையில், "நானும் அக்ஷயாவும் சென்னையில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன் முதலாக சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, ‘பதினெட்டாம் குடி' படப்பிடிப்புக்காக நான் கொச்சி சென்றேன். அப்போது அக்ஷயா மீண்டும் என்னை சந்தித்தார். எங்கள் நட்பு காதலாக மலர்ந்தது. எங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்," என்றார்.

 

கத்தி பட பிரச்சினை... அக் 15-ல் விஜய் நேரில் ஆஜராக தஞ்சை நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை: கத்தி திரைப்பட வழக்கு தொடர்பாக நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்பட 7 பேரை அக்டோபர் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. ராஜசேகர். இவர், 'தாகபூமி' என்கிற தன்னுடைய குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிடக் காத்திருந்த நிலையில், அதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் 'கத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி உரிமையியல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Kaththi story theft case: Tanjore court's order to Vijay

இந்த நிலையில், இதே பிரச்னைக்காக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அன்பு. ராஜசேகர் தனது வழக்குரைஞர்கள் கே. சுகுமாரன், எஸ். மகா சண்முகம் மூலம் ஜூன் 4-ஆம் தேதி புதிய வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

இதுதொடர்பாக, பட நிறுவன நிர்வாக இயக்குநர் நீலகண்ட் நாராயணபூர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் உள்பட 7 பேரை அக்டோபர் 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடுவர் சி. சிவகுமார் செப்டம்பர் 3-ஆம் தேதி உத்தரவிட்டார்.

 

திருமதியானார் நடிகை சரண்யா மோகன்... சினிமாவை விட்டு விலக முடிவு

சென்னை: நடிகை சரண்யா மோகன் திருமணம் நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆலப்புழாவில் நிகழ்ந்தது, பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை கரம்பிடித்து திருமதி சரண்யா மோகனாக மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் சரண்யா மோகன்.

‘வெண்ணிலா கபடிக்குழு', ‘ஈரம்', ‘வேலாயுதம்', ‘யாரடி நீ மோகினி' போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்த சரண்யா மோகன், தமிழ் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

Actress Saranya Mohan Enters into Wedlock

இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் கடந்த ஜூலை மாதம் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி, இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். நிச்சயம் செய்து சரியாக 2 மாதங்களில் திருமணத்தை முடிவு செய்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை ஆலப்புழாவில் சரண்யா மோகன் - அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் நடைபெற்றது, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Actress Saranya Mohan Enters into Wedlock

திருமணத்துக்கு பின், சரண்யா மோகன் சினிமா உலகை விட்டு விலகுகிறார். ‘‘இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன்'', என்று அவர் கூறியிருக்கிறார்.

அடிப்படையில் நடிகை சரண்யா மோகன் முறையாக பரதநாட்டியம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க பல்லாண்டு...

 

தனி ஒருவன் வெற்றி... மேடையில் கண்கலங்கிய ஜெயம் பிரதர்ஸ்!

தனி ஒருவன் தந்திருக்கும் வெற்றி இயக்குநர் மோகன் ராஜாவுக்கும் அவர் தம்பி ஜெயம் ரவிக்கும் தந்திருக்கும் தன்னம்பிக்கையும் பெருமையும் கொஞ்சமல்ல.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து அரங்குகளிலுமே ஹவுஸ்புல்.

வசூல், தரம் என அனைத்திலுமே இந்தப் படம் தனி சரித்திரம் படைத்து வருகிறது. இந்த பிரமாண்ட வெற்றிக்கு நன்றி சொல்ல மீடியாவைச் சந்தித்தபோது அண்ணன், தம்பி இருவருமே பேச முடியாமல் நா தழுதழுத்தனர்.

Jayam Brothers' tearful thanks for the success of Thani Oruvan

மோகன் ராஜா பேசுகையில், "என்னிடம் வரும் ஹீரோக்கள் அனைவருமே ரீமேக் படம் எடுக்குறீங்க என்றால் நடிக்கத் தயார் என்றே கூறினார்கள். இத்தனை படங்கள் எடுத்தும் இயக்குநராக என்னை யாரும் நம்பவில்லை. ஒரு கட்டத்தில் நான் யார்? இந்த சினிமாவில் இருக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் அளவுக்கு மனநெருக்கடிக்கு ஆளானேன்.

நான் புத்திசாலியெல்லாம் கிடையாது. என்னுடைய உழைப்பை மட்டும்தான் இந்தப் படத்திற்கு விதைத்தேன். அதன் அறுவடையாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றிக்கு இரு முக்கிய காரணங்கள். ஒன்று கல்பாத்தி அகோரம் என் மேல் நம்பிக்கை வைத்து என் ஒரிஜினல் கதையைத்தான் படமாக்குவேன் என்று உறுதியாக நின்றது.

அடுத்து என் தம்பி ரவி என்னை நம்பி, கதை கூட கேட்காமல் முழுசாய் என்னிடம் ஒப்படைத்தது. அவன் இல்லாவிட்டால் இந்தப் படம் இல்லை. நன்றி ரவி," என்றபோது, அண்ணனும் தம்பியும் நெகிழ்ந்து கலங்கி, பார்வையாளர்களையும் கலங்க வைத்தனர்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ஜெயம்ரவி, "என்னோட வெற்றியைப் பார்த்து தான் அண்ணன் சந்தோஷப்பட்டிருக்கிறார். இப்போ அவரோட வெற்றியைப் பார்த்து நான் சந்தோசப்படுகிறேன்.

ஜெயம் படம் என்னுடைய நுழைவுச் சீட்டு மாதிரி. தனி ஒருவன் என் நெஞ்சில் குத்திய பச்சை மாதிரி. என் உயிர், உடல் உள்ளவரைக்கும் என் நெஞ்சிலேயே இருக்கும். என் அண்ணன் ரொம்ப சீரியஸான பட இயக்குநர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். அவரை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.

இந்தப் படத்தில் உடன் நடித்த நடிகர்கள் முதல் படத்திற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி," என்றார்.

 

தீபாவளி ரேஸ்: 4 நாட்களுக்கு முன்பாகவே "பட்டாசு வெடிக்கப் போகும்" கமல்

சென்னை: தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தூங்காவனம் திரைப்படம் 4 தினங்களுக்கு முன்பாகவே திரையரங்குகளில் வெளியாகும் என்று செய்திகள் கசிந்துள்ளன.

கமலின் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

தீபாவளிக்கு முதல்நாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தூங்காவனத்தை எந்தவித பரபரப்புக்கும் உள்ளாக்காமல் வழக்கம் போல வெள்ளிக்கிழமையில் வெளியிட இருக்கின்றனர் படக்குழுவினர்.

Kamal Haasan's 'Thoongaa Vanam' to Come four days before Diwali?

தீபாவளிக்கு சுமார் 4 தினங்கள் முன்னதாக நவம்பர் 6 ம் தேதியில் தூங்காவனம் வெளியாகிறது, படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தில் தூங்காவனம் நுழைந்திருக்கிறது.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை வரும் செப்டம்பர் 16 ம் தேதியில் படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக தூங்காவனம் படத்தின் டிரெய்லர் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

படம் வந்தாலே தீபாவளி தான்...

 

கபாலி: ரஜினி நல்லவரா? கெட்டவரா?

சென்னை: ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்க விருக்கிறது.

படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் அனைவரும் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றிய புதிய குழப்பம் ஒன்று ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Kabali: Rajini Playing on International  Police?

அதாவது இதுவரை படத்தில் ரஜினி தாதாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின, படத்தின் இயக்குனரான ரஞ்சித்தும் இதனை உறுதி செய்தார்.

இந்நிலையில், ரஜினி மலேசிய போலீஸ் உடை அணிந்து தோன்றுவது போன்று ஒருசில புகைப்படங்களை படக்குழுவினர் ஷூட் செய்ததாக படப்பிடிப்புத் தளத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், ரஜினியின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும்? என்கிற குழப்பம் நீடிக்கிறது.

இந்தக் குழப்பமானது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. படத்துக்கான பிரம்மாண்ட செட்கள் சென்னை ஈ.சி.ஆர்.-ல் உள்ள பனையூரின் ‘ஆதித்யாராம் ஸ்டுடியோவில்' அமைக்கப்பட உள்ளது.

இந்த அரங்கில் சென்னையில் நடக்கும் காட்சிகளும், மலேசியாவின் பகுதியில் உள்ள உட்புற காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.

எனவே படம் அடுத்த வருடத்தின் ஆரம்பம் அல்லது பொங்கல் விருந்தாக திரைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன.

 

கவுண்டர் கவுண்டர்தான்யா... கலக்கிட்டாருல்ல 49ஓ விழாவில்!!

கவுண்டமணி நகைச்சுவை நாயகனாகவும், தனி நாயகனாகவும் நடித்த நாட்களில் கூட கிடைக்காத வரவேற்பும் மரியாதையும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்து வருகிறது.

காரணம் காலத்தை வென்ற பல பிரமாதமான காமெடி வசனங்கள்... அடுத்த பல ஆண்டுகள் கழித்து வரப் போகும் அரசியல் நிலைமைகளை முன்னுணர்ந்த மாதிரி அமைக்கப்பட்ட அவரது நகைச்சுவைக் காட்சிகள்...

இன்று அத்தனை பேரின் காமெடியும் பார்க்கும்போது சற்று சலிப்பு தோன்றினாலும், கவுண்டமணியின் காமெடி என்றதும் தொலைக்காட்சி சேனலை மாற்றுவதற்கு மனசே வருவதில்லை.

Return of Goundamani

அந்த எவர்கிரீன் காமெடி மன்னன் மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்கியிருக்கிறார் 49 ஓ படம் மூலம். படம் வெளியாக சற்று தாமதமானாலும், அதன் ட்ரெயிலர் மற்றும் பாடல்களுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நேற்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

சிவகார்த்திகேயன், சத்யராஜ், கலைப்புலி தாணு, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு கவுண்டமணியை வாழ்த்தினார்கள்.

விழாவில் கவுண்டமணி பேசும்போது, "இந்தப் படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்கிட்ட வந்து கதை சொன்னார். ஒரு வருஷமா அலைஞ்சார். நான் ஒரு நாள் அவர்கிட்ட, ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க'ன்னு சொன்னேன். ‘ஆறடி தாய் மண்ணு' ன்னு சொன்னார். அதைக் கேட்டுட்டு நான் ஒத்துக்கிட்டேன்.

Return of Goundamani

இந்த படத்தில் என்னை டான்ஸ் ஆட வைத்திருக்கிறார்கள். நான் ஆடும்போது பக்கத்தில் ஆடுற பொம்பள புள்ளங்களோட காலை மிதிச்சி வெச்சிடுவேன். ஆனாலும் அவங்க பொறுத்துக்கிட்டாங்க. எப்படியோ என்னை விடாமல் டான்ஸ் ஆட வெச்சிருக்காங்க.

இங்க பேசின சத்யராஜ், சிவகார்த்திகேயன் ரெண்டு பேரும் காமெடியா பேசி கலக்கிட்டாங்க. இதுக்கு மேல நான் காமெடி பண்ணினால் இங்க எடுபடாது. படத்துல வேணா பண்ணிக்கலாம்.

இந்தப் படத்தை இளம் இயக்குநர் ஆரோக்யதாஸ் எழுதியிருக்கார். அதை யுகபாரதி ரெண்டே வரியில் சொல்லிட்டு போய்ட்டார். விவசாயம் இல்லேன்னா ‘உலகேதுடா உயிரேதுடா..பல கட்டடங்க கட்டத்தான் வயக்காட்ட அழிச்சாங்க'-ன்னு.

Return of Goundamani

விவசாயம் நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றது. அந்த விவசாயிங்க அழியக்கூடாது. விவாசாயிங்களுக்கு மண்ணுதான் உயிர், மானம் மரியாதை... அந்த மண்ணை அவங்க விட்றக்கூடாது. அது ஒரு ஏக்கரா இருந்தாலும் சரி அரை ஏக்கரா இருந்தாலும் சரி, முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி அதிலதான் அவன் வாழணும். விடாமல் விவசாயம் பண்ணனும்.

ஒரு வருஷம் மழை இல்லேன்னா அடுத்த வருஷம் விவசாயம் பண்ணுங்க. மழை இல்லேங்கிறதுக்காக நிலத்தை வித்துட்டேன்னு சொல்லக்கூடாது. ஒருதொழில்ல நஷ்டம் வந்தால் இன்னொரு தொழில் செய்து ஜெயிக்கறதில்லையா. அதுபோலத்தான்.. ஒரு பயில் போட முடியலன்னா, அதுக்கு மாத்தா வேறு பயிர்!

இப்பல்லாம் விவசாயிங்கள சந்திக்க மூணு பேரு வந்துகிட்டே இருக்காங்க. ரியல் எஸ்டேட் பண்றவங்க, கார்பரேட் கம்பெனிகாரங்க, தொழிலதிபர்கள்... இவங்கதான் வர்றாங்க. எதுக்கு... துக்கம் விசாரிக்கவா...சொந்தம் கொண்டாடவா..?

இல்ல... கால் ஏக்கராவது வாங்கிடமாட்டோமான்னுதான் வர்றாங்க. அந்த இடத்துலதான் சில விவசாய்ங்க ஏமாந்துடுறாங்க. சில பேரு காசுக்கு ஆசைப்பட்டு இடத்தை வித்துடுறாங்க. இப்படியே எல்லோரும் வித்துட்டா அந்த இடத்தில் கட்டடம்தான் இருக்குமே தவிர விளை நிலம் எங்க இருக்கும். நாம எதை சாப்பிடறது?

விவசாயிங்க விவசாயிங்களாதான் இருக்கணும். இதை சொல்ற படம்தான் இந்த 49ஓ. இது இந்திய விவசாயிங்களுக்கு மட்டுமான படம் இல்லை. அமெரிக்க, ஆப்பிரிக்க இங்கிலாந்து நாட்டுல இருக்கும் விவசாயிங்களுக்கும் சேர்த்து வந்திருக்கும் படம். அமெரிக்காவில் ஜீன்ஸ் போட்டுகிட்டு உழுகிறான். இங்க வேட்டி கட்டிகிட்டு உழுகிறோம். நெல்லு விளையிற நிலமானானும் கோதுமை விளையிற நிலமானாலும், உலகத்துல எந்த மூலையில விவாசாயிங்க இருந்தாலும் சரி... அவன் நிலத்தை காப்பாத்தனும். அப்போதான் மக்கள் வயிறார சாப்பிட முடியும்.

இந்த படம் ஏபிசிடி இசட் என்று எல்லா செண்டர்களிலும் ஓடக்கூடிய படம். நான் மறுக்கா மறுக்கா சொல்றேன் 49-ஓ இஸ் த பெஸ்ட் மூவி," என்று கவுண்டமணி பேச ரசிகர்களும் மீடியாக்களும் கைதட்டி ரசித்து உற்சாகமானார்கள்.