சினிமா விழாவில் மிரட்டி ஆட வைக்கப்பட்ட நடிகைகள்?

சென்னை: சென்னையில் நடந்த சினிமா விழாவில் நடனமாட மாட்டேன் என்று கூறிய சில நடிகைகள் மிரட்டி ஆட வைக்கப்பட்டார்களாம்.

சென்னையில் சினிமா விழா ஒன்று கோலாகலமாக நடந்தது. விழாவில் எனக்கு அழைப்பு வரவில்லை, உனக்கு அழைப்பு வரவில்லை என்று பலர் அலுத்துக் கொண்டனர். இந்நிலையில் விழாவில் நடனமாட சில முன்னணி நடிகைகள் மறுத்துவிட்டார்களாம்.

வழக்கமாக மேடை நிகழ்ச்சிகளில் ஆட நடிகைகளுக்கு பெரும் தொகை அளிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் ஆட பெரிய தொகை எல்லாம் கொடுக்கவில்லையாம். இதனால் பல நடிகைகளை நடனமாட மறுத்தார்களாம்.

அவ்வாறு மறுத்த நடிகைகளை மிரட்டி ஆட வைத்தார்களாம். அதிலும் ஆட மாட்டேன் என்று அடம்பிடித்த மங்கலகரமான ராய் நடிகையை மிரட்டி ஆட வைத்தார்களாம். மேலும் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து சொல்லும் நாட்டாமையின் மகளையும் கூட மிரட்டி ஆட வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு: ஜெய் நடிக்கும் சரஸ்வதி சபதம் பெயர் மாற்றம்

சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பினை அடுத்து ஜெய் நடித்த திரைப்படம் நவீன சரஸ்வதி சபதமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சரஸ்வதி சபதம்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இப்படத்தின் தலைப்புக்கான பிரச்சினையும் தொடங்கிவிட்டது. மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ‘சரஸ்வதி சபதம்' பக்தி திரைப்படத்தின் தலைப்பில் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக விளம்பரத்தோடு புதிதாக ‘சரஸ்வதி சபதம்' பெயரில் படம் எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று சிவாஜி கணேசனின் ரசிகர் மன்றங்கள் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பின் அவர்களுடோடு பேச்சுவார்த்தை நடித்தி சுமூகமாக பேசித் தீர்த்த படக்குழு தற்போது இந்த படத்திற்கு ‘நவீன சரஸ்வதி சபதம்' என்று பெயரிட்டுள்ளனர்.

சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு: ஜெய் நடிக்கும் சரஸ்வதி சபதம் பெயர் மாற்றம்

முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சந்துரு இயக்குகிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பிரேம்குமார் என்பவர் இசையமைக்கிறார். இவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது, எவரது மனத்தையும் புண்படுத்தாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்றார்.

 

தலைமறைவான ‘அண்டங்காக்கா’ நடிகை...தேடித் திரியும் தயாரிப்பாளர்கள்

பிரச்சினையில் சிக்கி ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வரும் ராஜா படத்தில் ஒரே ஒரு குத்துக்கு ஆடியுள்ளார் அந்நியி நடிகை.

படம் குறித்து நாயகனிடம் கேட்கப்பட்ட போது கூட, ‘ படத்தில் நடித்த இருநாயகிகளை விட தன் மனம் கவர்ந்தவர் கொண்டக்காரி நடிகை தான்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து அதே போன்று ஐயிட்டம் பாடல் வாய்ப்புகளாக வருவதால், மன்முடைந்த நாயகி தற்போது தலைமறைவாகி விட்டாராம்.

அடப்பாவிகளா, இனி என் கதாநாயகி கனவு அவ்வளவு தானா என சிங், மணி`நடிகைகள் வரிசையில் தற்போது இவரும் புலம்ப ஆரம்பித்து விட்டாராம்.