8/19/2011 5:28:12 PM
கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு தொழில் அதிபர் ரபேலுடன் நெருங்கிப் பழகி வருகிறார் திவ்யா. காதல் விஷயத்தில் இந்த ஜோடி ரகசியம் காத்து வந்தது. சமீபத்தில் பெங்களூரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் திவ்யா-ரபேல் ஜோடியாக பங்கேற்றபோது இவர்களின் காதல் அம்பலத்துக்கு வந்தது. ரபேலின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தி இருப்பதுடன், 'ரபேலை தன் வாழ்வில் பெற்றது இறைவன் கொடுத்த வரம்’ என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சமீபகாலமாக இந்த காதல் ஜோடிக்கிடையே பிரச்னை முளைத்திருப்பதாக கூறப்படுகிறது. திவ்யாவை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ரபேல், இப்போதெல்லாம் தொடர்பு கொள்வதில்லையாம். திவ்யா தொடர்பு கொண்டாலும் ரபேல் பதில் அளிப்பதில்லையாம். இந்நிலையில் திவ்யா தோழிகளிடம் பேசும்போது, 'கன்னட படங்களில் பிஸியாக இருக்கிறேன். திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை’ என சொல்கிறாராம்.