நடிகர் விஷ்ணுவுக்கு அஜீத் தந்த இன்ப அதிர்ச்சி

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நடிகர் விஷ்ணுவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் அஜீத்.

வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு. தொடர்ந்து ‘குள்ளநரி கூட்டம்', ‘நீர்ப்பறவை', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜீவா' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் திறமையான கிரிக்கெட் வீரரும் கூட.

நடிகர் விஷ்ணுவுக்கு அஜீத் தந்த இன்ப அதிர்ச்சி

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் போது விஷ்ணுவுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதற்கு சிக்ச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணுவுக்கு வலது கையில் உலோகத் தகடு பொருத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த கையோடு 2014ம் ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், விஷ்ணுவின் வலது கையில் எலும்பு கூடிவிட்டதால், பொருத்தப்பட்ட உலோகத் தகடு மருத்துவமனையில் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.

விஷ்ணுவிற்கு சிகிச்சை பார்த்த அதே மருத்துவமனையில்தான் ஷாலினிக்கு சில தினங்களுக்கு முன் இரண்டாவது குழந்தையின் பிரசவம் நடைபெற்றது.

இதனிடையே விஷ்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அஜித், உடனே அவரை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஷ்ணுவிடம் உடல் நலம் குறித்தும் விசாரித்துள்ளார். இதுபற்றி விஷ்ணு கூறும்போது, அஜித் வந்து என்னை பார்த்தது நலம் விசாரித்தது எனக்கும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அஜித் ஒரு எளிமையான இனிமையான மனிதர்,' என்றார்.

 

தேசிய விருது பெற்ற இளம் சாதனையாளர் எடிட்டர் கிஷோர் மரணம்.. உறுப்புகள் தானம்!

கடந்த வாரம் வெள்ளியன்று திடீரென மயங்கி விழுந்து சுயநினைவிழந்த இளம் படத் தொகுப்பாளர் கிஷோர், 6 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

கிஷோர் இன்றைய பரபரப்பான படத் தொகுப்பாளர்களில் ஒருவர்.

தேசிய விருது பெற்ற இளம் சாதனையாளர் எடிட்டர் கிஷோர் மரணம்.. உறுப்புகள் தானம்!

ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில் படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியவர் கிஷோர்.

ஆடுகளம் படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றவர் கிஷோர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிமாறனின் புதிய படமான விசாரணை-யின் படத்தொகுப்பு வேலைகளில் தீவிரமாக இருந்தார். அன்று மாலை படத் தொகுப்பு நடந்த இடத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் யாரென்றோ, அவரது முக்கியத்துவம் என்னவென்றோ கூறாமல் சாதாரணமாக சேர்த்துவிட்டுச் சென்றதால், மருத்துவர்கள் முதலில் சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்பட்டது. 7 மணி நேரங்களுக்குப் பிறகுதான் கிஷோருக்கு எஆர்ஐ செய்து பார்த்தார்களாம்.

இதில் அவரது மூளையில் ரத்தம் கசிந்ததும், மூளை செயலிழந்துவிட்டதும் தெரிய வந்தது.

இதனால் மேற்கொண்டு சிகிச்சை சாத்தியமில்லை, அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

இருந்தாலும் இந்த ஒரு வாரம் வரை அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வந்தனர். இன்று அவர் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இன்னும் திருமணமாகவில்லை. அடுத்த மாதம்தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர் பெற்றோர்.

36 வயதில் அவர் மரணித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினி மரியாதைக்குரியவர்.. என் அரசியலில் அவர் பெயரை இழுக்க வேண்டாம் - கஸ்தூரி ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினி மரியாதைக்குரியவர். நான் அரசியலில் இணைந்ததற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பெயரை இழுக்க வேண்டாம் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரி ராஜா திடீரென பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கோவை வந்த அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அக்கட்சியில் சேர்ந்தார்.

ரஜினி மரியாதைக்குரியவர்.. என் அரசியலில் அவர் பெயரை இழுக்க வேண்டாம் - கஸ்தூரி ராஜா

கஸ்தூரிராஜா ரஜினியின் சம்பந்தி என்பதால், ரஜினி ஆலோசனைப்படி அவர் பாஜகவில் சேர்ந்ததாக சிலர் கூறினர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தது குறித்து கஸ்தூரி ராஜா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வரும் திட்டங்களில் ஈர்க்கப்பட்டு பாரதீய ஜனதாவில் இணைந்தேன். அவர் இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

என் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதே நேரம் இந்தியா என்பது உயிர் போன்றது. நாட்டை சிறப்பாக வழி நடத்தும் நரேந்திர மோடி பின்னால் அணிவகுப்பது எனது கடமை என கருதுகிறேன். கட்சி மேலிடத்தின் முடிவுகளை ஏற்று இனி செயல்படுவேன்.

ரஜினி தூண்டுதல் பேரில் பாரதீய ஜனதாவில் நான் சேர்ந்ததாக வரும் தகவல்களில் உண்மையில்லை. பாரதீய ஜனதாவில் சேர வேண்டும் என்பது நானாக எடுத்த முடிவு ரஜினி மரியாதைக்குரியவர். இதில் அவரை இழுக்க வேண்டாம்.. அவருக்கும் என் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்றார்.

 

தெலுங்கில் ஜெயிக்குமா ஜில்லா?

மோகன் லால் - விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஜில்லா படம், விரைவில் தெலுங்கில் தயாராகிறது.

இதில் வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா நடிக்கின்றனர்.

தெலுங்கில் ஜெயிக்குமா ஜில்லா?

விஜய், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான படம் ஜில்லா. ஆர்டி நேசன் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். மதுரையை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஞ

இதன் ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜா ஆகியோர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் வீரூ போட்லா இயக்கவுள்ளார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

ஜில்லா படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத் மாரார் வைத்துள்ளார்.

முன்னதாக 'ஜில்லா'வின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேறொரு முன்னணி நடிகருடன்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவருக்கு கதையில் திருப்தி ஏற்படாததால் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது அந்த வாய்ப்பு வெங்கடேஷ் மற்றும் ரவி தேஜாவுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஊட்டி வீட்டு வரியைச் செலுத்தினர் நயன்தாரா, ஜெயராம்!

ஊட்டி நகராட்சியால் ஜப்தி நோட்டீஸ் விடப்பட்ட தங்கள் வீடுகளுக்கு சொத்து வரி கட்டினர் நடிகை நயன்தாராவும் நடிகர் ஜெயராமும்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதியில் உள்ள 142 வீடுகள் கொண்ட பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் சில வீடுகளுக்கு சொத்து வரி பாக்கி வைத்திருந்தனர் அவற்றின் உரிமையாளர்கள்.

ஊட்டி வீட்டு வரியைச் செலுத்தினர் நயன்தாரா, ஜெயராம்!

அவர்களுள் திரைப்பட நடிகர் ஜெயராம், நடிகை நயன்தாராவும் இருந்தனர்.

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வரி கட்டாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் அந்த வீடுகளில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது வீட்டுக்கு கட்ட வேண்டிய கடந்த ஆண்டு வரி பாக்கி மற்றும் இந்த ஆண்டு வரி பாக்கி ஆகியவற்றை சேர்த்து ரூ.10 ஆயிரத்தை நகராட்சியில் கட்டினார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சிவக்குமார் கூறுகையில், "லவ்டேல் பகுதியில் உள்ள சில அபார்ட்மென்ட்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி வைத்திருப்பது தெரிய வந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பினோம்.

இதையடுத்து நடிகர் ஜெயராம் வீட்டுக்கான நிலுவை வரி புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.

நயன்தாரா வீட்டுக்கு கடந்த நிதியாண்டுக்கும் மற்றும் இந்த நிதி ஆண்டுக்கும் அந்த தொகையை சேர்த்து ரூ.6 ஆயிரம் பாக்கி இருந்தது. அவர் சார்பில் வீட்டை பராமரிக்கும் நபர் கட்டிச்சென்றார்," என்றார்.

 

'கவலை வேண்டாம்' ஜீவா!

விண்ணைத்தாண்டி வருவாயா', ‘கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள்', யாமிருக்க பயமே உள்ளிட்ட வித்தியாசமான படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் அடுத்து தயாரிக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு கவலை வேண்டாம் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

'கவலை வேண்டாம்' ஜீவா!

ஏற்கெனவே இந்நிறுவனம் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ', ‘யான்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

இப்படத்தை ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிந்த ‘யான்' படத்தையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. நீண்டகால தயாரிப்பில் இருந்த அப்படம் வெளிவந்து சரிவர வெற்றியடையவில்லை. இயக்குநர் ரவி கே சந்திரன் தங்களை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.

ஜீவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிப் படம் தர, யாமிருக்க பயமே இயக்குநரை நாடியுள்ளது இந்த நிறுவனம்.

 

நடிகர் ஹாரிசன் ஃபோர்டு இயக்கிய விமானம் விபத்து- படுகாயம்!

கலிபோர்னியா: பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு ஓட்டிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டார் வார்ஸ், இந்தியானா ஜோன்ஸ், பிளேட் ரன்னர், விட்னஸ், பேட்ரியாட் கேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஹாரிசன் ஃபோர்டு.

72 வயதாகும் அவர் தொழில்முறை பைலட் ஆவார். விமானங்கள், ஹெலிகாப்டர்களை தானே ஓட்டிச் செல்லும் வழக்கம் உள்ளவர்.

நடிகர் ஹாரிசன் ஃபோர்டு இயக்கிய விமானம் விபத்து- படுகாயம்!

கடந்த 1999-ம் ஆண்டு ஹாரிசன் ஃபோர்டு ஓட்டிச் சென்ற ஹெலிகாப்டர் சான்டா கிளாரிட்டா பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் லேசான காயங்களுடன் அவர் தப்பினார்.

நேற்று ஒரு சிறிய விமானத்தை ஃபோர்டு ஓட்டிச் சென்றார். அந்த விமானம் கலிஃபோர்னியாவின் வெனிஸ் நகர் அருகே வந்தபோது விபத்துக்குள்ளாகி, கோல்ப் மைதானத்தில் விழுந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அபாய கட்டத்தை தாண்டி தற்போது உடல்நிலை தேறி வருகிறார்.
போர்டுக்கு 55 வருட பைலட் அனுபவம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

படப்பிடிப்பில் விபத்து... எமி ஜாக்ஸனின் உயிரைக் காத்த கருணாகரன்

படப்பிடிப்பு தளத்தில் நடிகை எமி ஜாக்ஸனின் உயிரைக் காப்பாற்றினார் காமெடி நடிகர் கருணாகரன்.

ஐ படத்துக்குப் பிறகு அடுத்த உயதநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மான் கரேத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் எமி ஜாக்ஸன்.

படப்பிடிப்பில் விபத்து... எமி ஜாக்ஸனின் உயிரைக் காத்த கருணாகரன்

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது.

கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது, எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்வது போலவும் உதயநிதி ஸ்டாலின் அதை ஓட்டுவது போலவும் காட்சி.

ஆனால் படபிடிப்பு தளத்தில் எமிஜாக்சன் பைக்கை ஸ்டார்ட் செய்தார் எதிர்ப்பாரதவிதமாக பைக் தனது கட்டுபாட்டை இழந்து அருகில் இருக்கும் மலைக்கு விளிம்பில் சென்றது உடனடியாக அருகில் நின்ற காமெடி நடிகர் கருணாகரன் சுதாரித்து கொண்டு பைக்கை நிறுத்தி எமி ஜாக்சனை காப்பாற்றினார். உடனடியாக படிப்பிடிப்பு நிறுத்தபட்டது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள எமி ஜாக்சன், 'என் உயிரை காப்பாற்றிய கருணாவிற்கு நன்றி' ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

அஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா?

மகன் பிறந்த சந்தோஷத்துடன், அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் அஜீத். இது அவருக்கு 56வது படம். இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாததால் வழக்கம்போல 'தல 56' என்று குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படத்தை இயக்குபவர் சிவா. சிறுத்தை, வீரம் படங்களைத் தந்தவர்.

அஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா?

அஜீத்தை வைத்து ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தயாரித்த ஏஎம் ரத்னம்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் (அடுத்த படமும் இவர்தான் என்கிறார்கள்!).

வீரம் படத்தில் அஜீத்துடன் முதல்முறையாக இணைந்த சந்தானத்துக்கு, இந்தப் படத்திலும் பிரதான காமெடியன் வேடம்.

அஜீத்துக்கு ஜோடி யார் என்பதுதான் இப்போது பிரதான கேள்வி. நயன்தாரா மற்றும் ஸ்ருதி ஹாஸனுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

நயன்தாரா ஏற்கெனவே பில்லா, ஆரம்பம் படங்களில் அஜீத்துடன் ஜோடி போட்டுவிட்டார். ஸ்ருதி ஹாஸனுக்கு இதுவே முதல்முறை.

 

சமத்தா இருந்த சமந்தா இப்படி ஆயிட்டாரே... கண் கலங்கும் நண்பர்கள்!

சென்னை: மனம் கவர்ந்தவரைப் பிரிந்ததால் நடிகை சமந்தா எப்போதும் சோகத்துடன் காணப்படுவதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரிஷாவைத் தொடர்ந்து விரைவில் திருமணச் செய்தி சொல்வார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென சமந்தாவின் காதல் உடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்பவர் எனப் பெயர் பெற்றவர் சமந்தா. 'நான் யாரைக் காதலிக்கிறேன்னு உங்களுக்கே தெரியும். அவர் பேரை நானே சொல்லணும்னு ஏன் எதிர்பார்க்கிறீங்க? ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோங்க. காதல்ல இருக்கேன்னு மட்டும் எழுதிக்கோங்க' என தன் காதலைக் கூட வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர் அவர்.

சமத்தா இருந்த சமந்தா இப்படி ஆயிட்டாரே... கண் கலங்கும் நண்பர்கள்!

இருவரும் இணைந்து படவிழாக்கள், கோவில், குளம் என சுற்றியதில் சமந்தாவின் மனம் திருடிய நபர் யார் என்பது அவர் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இடையில் சமந்தா கையில் மின்னிய மோதிரம் கூட நிச்சயதார்த்த மோதிரம் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சமந்தா. தனது படக்குழுவினர் அழைப்புகளைத் தவிர மற்ற அழைப்புகளைத் தவிர்த்து விடுகிறாராம்.

எப்போதும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பவர், அதற்கும் ஓய்வு கொடுத்து விட்டார். பொதுவாக சமந்தா இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். ஆனால், இப்போ ஜோக் சொன்னாக கூட சம்பிரதாயத்திற்கு சிரிக்கிறார் என வருத்தப்படுகிறார்களாம் நண்பர்கள்.

 

சினிமாக்காரன் சாலை 13: 'சற்றென்று மாறிய வானிலை!’

கவிஞர் தாமரை, அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், இன்றோடு ‘தெருவுக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது.

அவர் போராட இறங்கிய முதல் நாள் தொடங்கி நேற்றுவரை, இது குறித்து, ஒரு பத்து வரி எழுத ஆரம்பிப்பதும், பின்னர் தயங்கி, அதை அழித்து விடுவதுமாகவே இருந்தேன். ஒரு கம்பீரமான தமிழ் தேசியவாதியான தியாகு, தாமரையின் பின்னால் எப்போதும் ஒரு பவ்யமான பூனைக்குட்டி போல் திரிந்த காட்சிகளை பல தருணங்களில் காண நேர்ந்ததால் ஏற்பட்ட தயக்கம் அது. ‘சற்றென்று மாறிய வானிலை'யை பாட்டாக கேட்டு மட்டுமே ரசிக்க முடிகிறது. உண்மை நிலையோ ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கிறது.

நாலு சுவருக்குள் அவர்கள் இருவர் மட்டுமே அமர்ந்து பேசித் தீர்த்திருக்க வேண்டிய சித்திரம் இது. யாரால் அது சாத்தியப்படாமல் போனது என்பது புரியவில்லை.

சினிமாக்காரன் சாலை 13: 'சற்றென்று மாறிய வானிலை!’

ஆனால் இன்று இணையத்தில் தாமரையின் போராட்டம் குறித்து ஆயிரக்கணக்கான பதிவுகளும் லட்சக்கணக்கில் கமெண்டுகளும் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டன.

தாமரை தன் குடும்ப பிரச்சினைக்காக, தனது சின்னஞ்சிறு பாலகனுடன் தெருவில் இறங்கிப் போராடுவதை பெரும்பாலானோர் ஏற்கவில்லை என்பதை அந்தப் பதிவுகளிலும் கமெண்டுகளிலும் புரிந்துகொள்ள முடிகிறது.

அதுவும் குறிப்பாக அவரது ‘தமிழை நேசித்தேன். தெருவுக்கு வந்துவிட்டேன்' பேனர் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. தமிழை நேசித்ததற்கும் தெருவுக்கு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஒருவேளை தியாகுவிற்கு தமிழ் என்றொரு பெயரும் இருக்குமானால் அதையாவது தாமரை பொதுவெளியில் சொல்லியிருக்க வேண்டும்.

'இல்லையில்லை தமிழ் மொழியைத்தான்' என்றால் தாமரை தமிழுக்கு செய்த சேவை என்பது சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது என்பது மட்டுமே.தமிழ் 'ஒருநாள் சிரித்தேன்... மறுநாள் வெறுத்தேன்...உனைக் கொல்லாமல் கொன்று குவித்தேன்..' என்று சினிமா நாயகனும் நாயகியும் உருகி உருகி காதல் வளர்த்துக் கொண்ட பாடல்கள்.

சினிமாக்காரன் சாலை 13: 'சற்றென்று மாறிய வானிலை!’

மற்றவர்கள் போல் இல்லாமல் ஆங்கில வார்த்தைகள் கலப்பின்றி பாடல் எழுதியதென்பது எப்படி தமிழுக்கு செய்த சேவையாகும்? இவர் பாடல்கள் தமிழ் மொழிக்கு சேவை என்கிற தரத்தில் இருந்தது என்று அவர் நம்புவாரானால் உலகின் ஆகச் சிறந்த காவியங்கள் கொண்ட தமிழ் மொழியை இதைவிட யாரும் கொச்சைப்படுத்தி விட முடியாது.

இன்னும் சொல்லப் போனால், 1999-ல் சீமானால் ‘இனியவளே' படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டு கவுதமின் ‘மின்னலே' படம் மூலம் புகழ்பெற்று கடந்த 16 ஆண்டுகளாக சுமார் ஐநூறு பாடல்களுக்கும் மேலாக எழுதி ஒரு பாடலுக்கு ஐந்தாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரை வாங்கி பல லட்சங்கள் சம்பாதித்து தமிழால் உண்டு சொகுசாக வாழ்ந்தவர் தாமரை.

எனவே சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்காக தமிழைக் 'கையைப் புடிச்சி இழுத்து' தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்துவதை தாமரை உடனே நிறுத்த வேண்டும். இந்த பலவீனமான யுக்தி அவருக்கு, அவர் போராட்டத்துக்கு வலு சேர்க்காது என்பது மட்டுமின்றி, அவரை எள்ளி நகையாடவே உதவும்.

சினிமாக்காரன் சாலை 13: 'சற்றென்று மாறிய வானிலை!’

இனி பிரச்சினைக்கு வரலாம். சமூகப்போராளி, புரட்சியாளர், தமிழ் தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் தன் கணவர் தியாகு தனக்கும், தன் குழந்தை சமரனுக்கும் துரோகம் செய்துவிட்டு தலைமறைவாக வாழ்கிறார். அவரைத் தேடி கண்டு பிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் தாமரை. இது முதல் கோரிக்கை. இரண்டாவது தியாகுவின் கடந்த இருபது ஆண்டுகால பொது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது.

முதல் நாள் தியாகுவின் அலுவலகத்தில் துவங்கிய போராட்டத்தை அடுத்த நாள் தியாகுவின் இருப்பிடம் தெரிந்து கொண்டு வேளச்சேரிக்கு மாற்றுகிறார். அடுத்த நாள் தியாகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அறிக்கை வெளியிட்டு விட்டு வள்ளுவர் கோட்டத்துக்கு மாற்றுகிறார்.]

இடையில் தியாகு ஒரு சில ஊடகங்களுக்கு பேட்டியில், ''சேர்ந்து வாழும் சாத்தியம் துளியும் இல்லை. நான் மரணத்தின் விளிம்பில் இருக்கிறேன். என்னை விட்டு விடு'' என்று அளிக்கும் பதிலை தாமரை பொருட்படுத்துவதாயில்லை. குற்றவாளி கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

தியாகு தப்பி ஓடுவதும் தாமரை அவரை விடாமல் துரத்திக் கொண்டு அலைவதுமான அவர்களது விளையாட்டில், இருவருமே வெளியில் பகிர்ந்து கொள்ளாத ஏதோ ஒரு உள்ளடி சமாச்சாரம் இருப்பதாகவே தோன்றுகிறது. அதைப்பற்றி நமக்கு அக்கறை இல்லை.

ஆனால் சந்திக்கவே அஞ்சி ஓடும் ஒருவரை சேர்ந்து வாழ வேண்டும் என்று நிர்பந்தப்படுவது என்ன வகை மனோபாவம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை?

எனக்குத் தெரிந்து கடந்த மூன்றாண்டு காலமாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவ ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே தியாகு வேறு சில பெண்களுடன் 'தொடர்பில்' இருப்பதாகவும், சில பெண்களுக்கு மீடியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி தரக் குறைவாக நடக்க முயன்றதாகவும் தாமரை ஆதரவாளர்கள் இணையங்களில் வெளியிட்ட சில வீடியோக்கள் நடமாடின.

அவற்றிற்கு தியாகு அளித்த விளக்கங்கள் எடுபடவில்லை என்பதும் உண்மை.

இப்போது தியாகுவின் கடந்த இருபதாண்டு கால பொது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற தாமரையின் கோரிக்கை இதை ஒட்டியதுதான் என்றால் மீதி பதினேழு ஆண்டுகால சாட்சியாக தாமரையேதானே இருந்தார்? அதை வெளியிடாமல் எதற்காக காத்திருக்கிறார்?

'என்னை அவலத்தில் தள்ளி விட்டுவிட்டு நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்கலாம்?' என்று தியாகுவைத் துரத்தும் தாமரையின் தியரியை ஒரு மாதிரி புரிந்து கொண்டாலும், ஒன்றும் அறியாத சிறுவன் சமரனை வீதியில் அமர்த்தி வேடிக்கைப் பொருளாக்கும் மனநிலையை எவ்விதமாக யோசித்தாலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இதில் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக் கொள்ளத் தெரியாமல் பயந்து ஓடும் தந்தை தியாகுவை விட, தாய் தாமரை பரிதாபத்துக்குரியவராகவே தெரிகிறார்.

சுயநலவாதிகள் தியாகு, தாமரை இருவரிடமிருந்தும் சமரனுக்கு ஒரு விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ் ஆர்வலர்கள் யாராவது முன்வந்தால் அவர்களுக்கு கோடி புண்ணியம் உண்டு!

(தொடர்வேன்... )