”இருக்கு ஆனா இல்ல” – மோதல் இருந்தாலும் காத்ரீனாவிற்கு உதவும் சல்மான்!

மும்பை: கன்னபின்னாவென்று மோதல் இருந்தாலும் காத்ரீனா கைபுக்கு தேவையான நேரத்தில் கை கொடுக்கத் தவறுவதில்லை சல்மான் கான். தற்போது கூட ஒரு மேக்கப் மேன் விஷயத்தில் உதவி புரிந்துள்ளார் நடிகர் சல்மான் கான்.

சல்மான் கானுக்கும், காத்ரீனா கைபுக்கும் இடையே மோதல், ஊடல் என்றாலும் கூட காத்ரீனாவுக்கு ஏதாவது என்றால் உடனே ஓடி வந்து விடுகிறார் சல்மான்.

”இருக்கு ஆனா இல்ல” –  மோதல் இருந்தாலும் காத்ரீனாவிற்கு உதவும் சல்மான்!

இப்படித்தான் முன்பு ஒரு படத்தை புக் செய்வது குறித்து காத்ரீனாவுக்கு குழப்பம் வந்தது. உடனே சல்மானிடம் ஆலோசனை கேட்டார். அவரும் உடனடியாக அதைப் பரிசீலித்து இந்தப் படம் வேண்டாம் என்று கூறி விட்டார்.

மேக்கப் மேன் பிரச்சனை:

அதேபோல சமீபத்தில் மும்பையில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் காத்ரீனா. அவருக்கு மேக்கப் போடுவதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞரான டேனியல் பியூர் வந்திருந்தார்.

எதிர்த்த மும்பை சங்கம்:

அவர் மும்பை மேக்கப் மேன்கள் சங்கத்தில் பதிவு செய்யாதவர் என்பதால் அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் போராட்டத்தில் குதித்தனர்.

டேனியல் பியூர்:

இந்த டேனியல் பியூர் மேக்கப் துறையில் மிகவும் பிரபலமானவர். பல புகழ் பெற்ற நிறுவனங்களுக்காக மேக்கப் ஆலோசகராக பணியாற்றுகிறார். பாலிவுட்டிலும் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்களுக்கு மேக்கப்பில் ஈடுபடுகிறார்.

சல்மானால் நின்ற போராட்டம்:

காத்ரீனாவுக்கு டேனியலை விட மனமில்லை. இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் உடனே சல்மானுக்குப் போனைப் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் சல்மான் தரப்பிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேக்கப் கலைஞர்களுக்கு போன் வந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை உடனே கைவிட்டுவிட்டார்கள்.

இன்னும் காதல் இருக்குய்யா:

மோதல் இருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் காத்ரீனா மீது சல்மான் பாசமாகத்தான் இருக்கிறார். காத்ரீனாவும் கூட சல்மானை விட்டு விடாமல் அன்புடன்தான் இருக்கின்றார் என்பதுதான் இந்த நிகழ்வின் மூலம் தெரியவந்துள்ளது என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள்.

 

கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: "ரமணா" ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை: கட்டிட கட்டுமானப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டவேண்டும் என்று ரமணா திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை:

இந்த விபத்து நடந்த உடனேயே கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடித்து இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படம்தான் அனைவரின் நினைவுக்கு வந்தது.

தற்போது 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்தும் கருத்து கூறியுள்ள இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய பாதிப்பில்தான் அந்தக் காட்சியை ரமணா படத்தில் வைத்தேன் என்றார்.

இந்தியாவில் இதுபோன்று நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில்கூட மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பொதுவாகவே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும்போது, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

2 அல்லது 3 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடக்கும் நிலையில், அங்கு வேலை செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெரும்பாலானோர் ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வருபவர்கள். அவர்களுக்கு கொடுக்கும் ஊதியமும் மிகவும் குறைவானது. எனவே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார்.

 

குடும்ப விழான்னா தான் வருவீங்களோ... நம்பர் நடிகைகள் மீது கடுப்பில் தயாரிப்பாளர்கள் !

சென்னை: முன்பெல்லாம் தான் நடிக்கிற படங்கள் சம்பந்தப்பட்ட விழாவுக்கு கட்டாயம் ஆஜராகி விடுவார் நம்பர் நடிகை. ஆனால், சமீபகாலமாக மற்றொரு நம்பர் விழாக்களை புறக்கணிப்பதைக் கேள்விப்பட்டு தானும் அதே பாணியை பின்பற்றத் தொடங்கினார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்கப் ட்ராப் நடிகர் நடத்திய ஆடியோ ரிலீசில் இரண்டு நம்பர் நடிகைகளும் கலந்து கொண்டனர். இவர்கள் இரண்டு பேருக்குமே எந்த விதத்தில் சம்பந்தம் இல்லாத அந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டதோடு, அது எங்கள் குடும்ப விழா என்றும் மார்தட்டிக்கொண்டனர். இது தயாரிப்பாளர்களை கடுப்பாக்கியுள்ளது.

இந்தநிலையில், பூமி பெயரில் நம்பர் நடிகை நடித்துள்ள படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நாயகி மட்டும் மிஸ்ஸிங். இது தொடர்பாக நாயகனிடம் கேட்டதற்கு, ‘அவர் அமெரிக்காவில் உள்ளார். அதனால் தான் கலந்து கொள்ளவில்லை' என சமாளித்தார்.

ஆனபோது, நம்பர் நடிகையின் இந்த அலட்சியப் போக்கு கோடம்பாக்கத்தில் அவருக்கான எதிர்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.