சினிமாவுக்கு ஷில்பா குட்பை

Tags:



சினிமாவுக்கு ஒரு வழியாக குட்பை சொல்லியுள்ளார் ஷில்பாஷெட்டி. இனி்மேல் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டவர் ஷில்பா. திருமணத்திற்குப் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். சினிமாவில் நடிக்க முன்பு போல இப்போது அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஷில்பா மறுத்திருந்தார்.

இந்த நிலையில் நடிப்புக்கு குட்பை சொல்லியுள்ளார் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், இதுதான் நடிப்புக்கு டாடா சொல்ல சரியான நேரம். திருமணத்திற்குப் பின்னர் என்னால் பல பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் ஷில்பா.

தற்போது தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் ஷில்பா. ஷில்பாவைத் தேடி ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையாம். குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கும், கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கும்தான் நிறைய வாய்ப்பு வருகிறதாம்.

இப்போது சினிமாவை விட்டு முழுமையாக விலகி விட முடிவு செய்துள்ள ஷில்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திலும், தான் மேற்கொண்டு வரும் பிற தொழில்களிலும் முழுக் கவனத்தை செலுத்தப் போகிறாராம்.

 

விருதுக்காக படமெடுக்கவில்லை, பணத்துக்காகத்தான் இயக்குகிறேன்-வெற்றி மாறன்

Tags:


நான் பணத்துக்காகத்தான் படம் எடுக்கிறேன், விருது பெற வேண்டும் என்பதற்காகவெல்லாம் படம் எடுக்கவில்லை. இனி தனுஷை வைத்துப் படம் எடுக்க மாட்டேன் என்று இயக்குநர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.

ஆடுகளம் படத்தை இயக்கியவர் வெற்றி மாறன். இந்தப் படத்திற்காக ஏகப்பட்ட தேசிய விருதுகள் கிடைத்தபோது மகிழ்ச்சி அடைந்தவர்களை விட, சந்தோஷப்பட்டவர்களை விட அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தவர்கள்தான் மிக மிக அதிகம்.

இவர் ஏற்கனவே தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கிவர். பின்னர் ஆடுகளம் படத்தை இயக்கினார். அடுத்து தனுஷை வைத்துப் படம் இயக்கும் எண்ணம் இல்லை என்கிறார் வெற்றிமாறன்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மாற்றத்தில் நம்பிக்கை உடையவன். திரும்பத் திரும்ப ஒரே மனிதர்களுடன் பணியாற்றுவது இருதரப்பினருக்குமே போரடிக்கும். மாற்றம் அவசியம். தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கமாட்டேன் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், விருது வாங்க வேண்டும் என்பதற்காக நான் படம் எடுப்பதில்லை. பணம் சம்பாதிக்கத்தான் படங்களை இயக்குகிறேன் என்றார் வெற்றி்மாறன்.

ஓஹோ, ஒருவேளை இதனால்தானோ என்னவோ, நார்வே பட விழாவில் ஆடுகளம் படத்திற்குக் கொடுத்த விருதை வாங்கி தூக்கி கீழே போட்டு மிதித்து விட்டு வந்தாரோ என்னவோ வெற்றிமாறன். ஒருவேளை பணமாக கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்திருப்பார் போலும்!
 

இன்றுடன் ஓய்கிறது அக்னி நட்சத்திரம்- இனி வெயில் குறையலாம்

Tags:


சென்னை: கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இனி வரும் நாட்களில் கடும் வெப்பம் இருக்காது, சற்று குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த கத்திரி பருவக்காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவாக திருத்தணியில்தான் 111 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது. ஆரம்பத்தில் சென்னையில்தான் வெயில் மண்டையைப் பிளந்தது. பின்னர் அது வேலூருக்கு ஷிப்ட் ஆகி விட்டது.

தற்போது தென் மேற்குப் பருவ மழை கேரளாவிலும், தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும் தொடங்கவுள்ளதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளுமை நிலவும் சூழல் அதிகரித்துள்ளது.
 

சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினிக்கு டயாலிசிஸ்

Tags:


சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

அவருக்கான சிகிச்சை முறைகள் குறித்து ரஜினியுடன் சென்றுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், எலிசபெத் மருத்துவமனை டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை காலை சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டார் ரஜினிகாந்த். அவர் சிங்கப்பூர் சிறுநீரக கழக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அவர் ஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ரஜினிக்கு மீண்டும் டயாலிசிஸ் தரப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகள் தொடங்கியுள்ளன. அவருக்கு மேற்கொண்டு என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ரஜினிகாந்த் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பரவியதும் சிங்கப்பூரில் வசிக்கும் ரஜினியின் ரசிகர்கள் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, ரஜினிக்கான சிகிச்சைகள் குறித்த விவரங்களை மெளன்ட் எலிசபெத் மருத்துவமனை வெளியிடவில்லை.
 

மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்

Tags:


சென்னை: என் மகன் விஜய ஸ்ரீஹரியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்று முதல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவுக்கும், அவரது மூத்த கணவர் ஆகாஷுக்கும் தங்கள் மகன் விஜயஸ்ரீஹரி குறித்து பல மாதங்களாக தகராறு நடந்து கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை விஜயஸ்ரீஹரி ஆகாஷுடனும், வார இறுதி நாட்களில் தாய் வனிதாவுடனும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சில மாதங்களாக வனிதா சத்தம் இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் மகனுக்காக போராட வந்துவிட்டார்.

இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

எனது மகன் விஜயஸ்ரீஹரியை மீட்டுத் தருமாறு கமிஷனர் திரிபாதியிடம் கடந்த வாரம் புகார் கொடுத்தேன். அவரும் இணை கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டார். எனினும் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை.

சட்டப்படி, நியாயப்படி எனது மகன் என்னுடன் தான் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நான் கடந்த 7 மாத காலமாக போராடிக் கொண்டிருக்கிறேன். தற்போதைய அரசு என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என்று நம்புகிறேன்.

எனது மகனை அழைத்துவருவதற்காக நேற்றிரவு நான் ஆகாஷ் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் நான் குடித்துவிட்டு தகராறு செய்ததாக சில போலீசார் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மகனுக்காக ஏங்கும் என்மீது இப்படியெல்லாமா பழி சுமத்துவது.

நான் கமிஷரிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டேன். அவரும் எனது மகனை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விஜயஸ்ரீஹரியை அழைத்து வருவதற்காக கடந்த மாதம் விருகம்பாக்கம் சென்றேன். அப்போது ஆகாஷ் என்னை நடுத்தெருவில் வைத்து அடித்தார். இது குறித்து நான் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றியும் கமிஷனரிடம் கூறினேன்.

எனது மகனை மீட்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை நான் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன். இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமடைவார்-ஏ.ஆர்.ரஹ்மான்

Tags:


சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம் விரைவில் குணமடையும். அவர் மீண்டும் தனது நடிப்பைத் தொடருவார் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில்,நான் ரஜினி சாரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். திரையுலகம் குறித்து எனக்கு அவர் நிறைய சொல்லியுள்ளார். அவை எனக்கு பெரும் உதவியாக இருந்துள்ளன.

ராணா படத்திற்கும் நான் இசையமைத்து வருகிறேன். இன்னும் 2 பாடல்கள்தான் அதில் பாக்கி உள்ளன. ரஜினிகாந்த் சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் அதை முடித்துக் கொடுப்பேன் என்றார் ரஹ்மான்.
 

கலக்க வரும் சுஷ்மிதா சென் சிஷ்யை!

Tags:


சுஷ்மிதா சென்னை தனது மானசீக குருவாக வசீகரித்துள்ள ஷீனா சோஹன் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

2010ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக தேர்வானவர் ஷீனா. அப்போது ஷீனாவைத் தேர்வு செய்தவர் சுஷ்மிதா. இதனால் சுஷ்மீதா மீது ஷீனாவுக்கு அதிக பாசம் ஏற்பட்டு விட்டது. சுஷ்மிதாவை தனது குருவாகவே வசீகரித்துக் கொண்டார் ஷீனா. இன்று அவரும் சுஷ்மிதா பாணியில் ஹீரோயினாகியுள்ளார்.

சுஷ்மிதா தமிழ்ப் படம் மூலமாக ஹீரோயினானார். ஆனால் ஷீனா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் ஷீனா. படத்தின் பெயர் தி டிரெயின். ஜெயராஜ் படத்தை இயக்குகிறார்.

ஷீனாவுக்கு கவர்ச்சிகரமான, குத்துப் பாடல்களின் நாயகியாக உலா வர விருப்பம் இல்லையாம். நல்ல நடிகையாக தான் அறியப்பட வேண்டும் என்கிறார் ஷீனா. இவருக்குப் பிடித்த நடிகைகள் மாதுரிதீட்சித், ஸ்ரீதேவி, ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரசிகர்களை எனது நடிப்புதான் கவர வேண்டும். எனது உடலோ அல்லது கவர்ச்சியோ கவரக் கூடாது. எனவேதான் நான் நடிப்பில் அதிக கவனம்செலுத்துகிறேன். கவர்ச்சிக்கு நான் எப்போதும் ரெட்தான் என்கிறார் ஷீனா.

பார்ப்போம், ஷீனாவின் லட்சியம் வெல்லுமா அல்லது அவரை கவர்ச்சி அலை மூழ்கடிக்குமா என்பதை!