இலங்கைக்கு எதிராக பேரணி: முதல்வரிடம் அனுமதி கோரிய நடிகர் நடிகைகள்


சென்னை: இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்துகின்றனர் தமிழ் நடிகர் நடிகைகள். இதற்கு முதல்வர் ஜெயலலிதாவைச் ந்தித்து இன்று அனுமதி கோரிப் பெற்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி,ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம்.

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டுள்ளோம். அவரும் தருவதாகக் கூறியுள்ளார்.

பாராட்டு விழா... அப்புறம் பார்க்கலாம்

மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

'இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் சென்னையை அடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த இடத்தில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட முன்பணம் தர மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே எங்களுக்கு நிலம் தர வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்றார்.
 

'கொஞ்சம் தள்ளு... அங்கே கிள்ளு....' ரசிகர்களிடம் சிக்கிய ஸ்ரேயா!


ரசிகர்களிடம் சிக்கி நடிகைகள் படாத பாடுபட்டதாக பல நேரங்களில் செய்தி பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில உண்மையாகவே நடந்திருக்கும். சில பப்ளிசிட்டிக்காக உருவாக்கப்பட்டிருக்கும்.

இப்போது நீங்கள் படிப்பது எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நடிகை ஸ்ரேயா கடந்த சில தினங்களாக தொடர்ந்து மீடியா செய்திகளில் முதலிடம் பிடித்து வருகிறார். முன்பு புகைப்படக்கார்களிடம் தகராறு, பின்னர் 25 வயதுக்குட்பட்டோர் குடிக்க ஆதரவு கொடுத்ததற்காக சமூக அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது... இப்படி எல்லாமே வில்லங்க விவகாரங்கள்.

இந்த வரிசையில், இப்போது ரசிகர்களிடம் ஸ்ரேயா சிக்கிக் கொண்டு அவதிப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜீவா - ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் படம் ரவுத்திரம். கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது.

அங்குள்ள பாரதி பூங்காவில் ஜீவா ஸ்ரேயா நடித்த காட்சிகளை படமாக்கினர். அதை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து நின்று பார்த்தனர். திடீரென்று கூட்டம் அதிகமாகியது. எல்லோரும் பூங்காவுக்குள் நுழைந்தனர்.

படப்பிடிப்பு குழுவினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் முண்டியடித்து போய் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். சிலர் கைகளை பிடித்து இழுத்தனர். சிலர் இடுப்பில், கழுத்தில் என வாய்ப்பு கிடைத்த இடங்களில் தொட்டனராம். சில குறும்புக்கார இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவதுபோல ஸ்ரேயா மீது விழுந்து கிள்ளினார்களாம்.

பாதுகாப்புக்கு சில போலீசாரே நின்றதால் தடுக்க முடியவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சில நிமிடங்களில் ஏராளமான போலீசார் வேன்களில் வந்து இறங்கினார்கள். கூட்டத்தினரை அடித்து விரட்டி ஸ்ரேயாவை மீட்டார்களாம்!
 

புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது! - நடிகர் கரண்


இன்றைக்கு புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது என்றார் நடிகர் கரண்.

உதயா நடிக்கும் "ரா ரா" படத்தின் இசை வெளியீட்டு விழா எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் கரண் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் கரண் பேசுகையில், "ரா ரா" படத்தில் திருக்குறளை வைத்து ஒரு பாடல் எடுத்திருப்பது புதுமையான விஷயம். ஒரு குறளை வைத்தே பாடல் எடுப்பது கஷ்டம். ஆனால் இப்படத்தில் நிறைய குறள்களை வைத்து ஒரு பாடலை எடுத்துள்ளனர்.

இது வரலாற்றில் இடம் பெறத்தக்க படமாக இருக்கும். திரைப்படங்களுக்கு டைட்டிலை புரியாத மாதிரி வைப்பது பேஷனாகி விட்டது. அப்போதுதான் படத்தை திரும்பிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் "ரா ரா" விஷயமுள்ள டைட்டிலாக உள்ளது. தெலுங்கிலும் இதை பயன்படுத்தலாம். உதயா எனது நெருங்கிய நண்பர். 90 ரூபாய், 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருக்குமா? என்று யோசிக்கின்றனர். அவர்களை திருப்தி செய்யும் படமாக இது இருக்கும்," என்றார்.

விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பங்கேற்றார். சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்ற அவரை படக்குழுவினர் மேடையில் கவுரவித்தனர்.

பாடல் சிடியை இயக்குநர் எஸ்பி முத்துராமன் வெளியிட, ஏசி சண்முகம், இயக்குநர்கள் அகத்தியன், பிரபு சாலமன் மற்றும் விஜய் பெற்றுக் கொண்டனர்.
 

திருச்செந்தூரில் ரஜினிக்காக தங்கத் தேரிழுத்த ரசிகர்கள்


திருச்செந்தூர்: உடல் நலம் பாதி்க்கப்பட்டு குணமடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் திருச்செந்தூர் கோயிலில் தங்கத் தேர் இழுத்தனர்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. நோய்த் தொற்று பரவாமல் இருக்க அவரைச் சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் பெற 15 தினங்களாவது ஆகும் என்கிறார்கள். அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்.

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே அவர் பூரண குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவர் விரைவில் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ஏ எம் ஸ்டாலின் தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ரசிகர்கள் தங்கத் தேர் இழுத்து பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் டக்ளஸ், மாவட்ட பொருளாளர் லட்சுமண ராஜா உள்பட திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
 

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இத் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.
 

கத்ரீனாவுக்கு பிரச்சனையான பிகினி!


மும்பை: தூம் 3 படத்தில் நடிக்க வேண்டும் என்றால் கத்ரீனா கைப் பிகினியில் வர வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் புரொடக்ஷன்ஸ் தூம் 3 படத்தை எடுக்கிறது. இதில் கத்ரீனா தான் நாயகியாக தேர்வாகியுள்ளார். ஆனால் ஆரம்பமே வில்லங்கமாக இருக்கிறது கத்ரீனாவுக்கு. தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் 2 பிகினி காட்சிகள் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

கவர்ச்சியாய் குத்தாட்டம் போட்டாலும் கத்ரீனா பிகினி மட்டும் அணிவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர்களும் பிகினியில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் கத்ரீனா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இரண்டே சாய்ஸ் தான். ஒன்று பிகினியில் வருவது அல்லது படத்தை விட்டு வெளியேறுவது. பாலிவுட்டின் முன்னணி நாயகிகளான கரீனா, பிரியங்கா சோப்ரா எல்லாம் பிகினியில் நடித்துள்ளனர்.

ஏன் கத்ரீனாவும் கூட தனது முதல் படமான பூம்-ல் பிகினியில் வந்தார். அதன் பிறகு தான் பிகினிக்கு நோ சொல்லியுள்ளார்.

யாஷ் ராஜ் நிறுவனப் படத்தில் நடிக்க அனைத்து நடிகைகளும் ஆர்வம் காட்டும் நிலையில் வந்த பெரிய வாய்ப்பை விட மனசில்லாமல் இருக்கிறார் கத்ரீனா.

கத்ரீனா பின்வாங்கினால் வேறொரு நடிகைகயை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்து ஒரு புதுமுகத்திற்கு பயிற்சியும் அளித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 

ஹீரோயின் படத்திலிருந்து நீக்கினால் வழக்கு! - ஐஸ்வர்யா ராய் முடிவு


நான் கர்ப்பமானதால் என்னை ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது தவறானது. திருமணமான ஒரு நடிகை கர்ப்பமாவது அத்தனை பெரிய தவறா... என்னா நீக்கினால் வழக்கு தொடருவேன், என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்

ஐஸ்வர்யாராய் கர்ப்பமாகியுள்ளதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

ஆனால் இன்னொரு புறம் கர்ப்பத்தை காரணம் காட்டி ஐஸ்வர்யாவின் திரையுலக மார்க்கெட் சரிகிறது. இந்திப் பட இயக்குனர் மதுர் பண்டார்கர் ஹீரோயின் என்ற பெயரில் தான் எடுத்துவரும் படத்துக்கு ஐஸ்வர்யாராயை கதா நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

அடுத்த மாதம் இந்த படத்தின் படிப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமான தகவல் அவரை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் ஐஸ்வர்யா ராயை நீக்கி விட்டு கத்ரீனா கபூர் அல்லது பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இதில் கோபமடைந்த ஐஸ்வர்யா ராய், தன்னை நீக்கப்போவதாக இயக்குநர் கூறியுள்ளதைக் கண்டித்து நெருக்கமானவர்களிடம் காரசாரமாக பேசி திட்டி வருகிறார்.

அத்துடன் ஹீரோயின் படத்தில் இருந்து நீக்கப்பட்டால் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் இந்தக் கோபத்தைப் பார்த்த பிறகுதான், படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கப்படவில்லை என தயாரிப்பாளர்களான யுடிவி நிறுவனத்தினர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
 

கார்த்தியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்தியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா

6/28/2011 1:01:03 PM

சகுனி படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் முதல் சிறுத்தை வரை நடித்த எல்லா படமே சுப்பர் ஹிட்டாகி முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்து விட்ட கார்த்திக்கு அடுத்த வாரம் ஜூலை 3ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். திருமணம் நாள் நெருங்கிவிட்டதால் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி, புதுமுக இயக்குநர் சங்கர்தயால் இயக்கும் சகுனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சகுனி படத்திற்கு அடுத்து கார்த்தி, தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. கார்த்திக்காக அருமையான கதை ஒன்றை தயார் செய்து  வைத்திருக்கிறாராம் சுராஜ். மேலும் இந்தபடத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

 

படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராத படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராத படம்

6/28/2011 12:58:44 PM

களவாடிய பொழுதுகள்” படத்தை முடித்து பல ஆண்டுகள் ஆகியும்  வெளிவராமல் இருப்பதை நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் என்று இதுவரை மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுத்த டைரக்டர் தங்கர் பச்சான், மீண்டும் ஒரு உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதி, இயக்கி இருக்கும் படம் தான் “களவாடிய பொழுதுகள்”. பிரபுதேவா, பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தபடம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், வெளியிட முடியாமல்இருக்கிறது. படத்தை இயக்கிய தங்கர் பச்சனோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த படவேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்.

இதுகுறித்து தங்கர் கூறியதாவது : ஒரு படத்தை முடித்துவிட்டு பல வருடங்களாக அந்த படத்தை வெளியிட முடியாமல் படைப்பாளி காத்திருப்பது மிக கொடுமையான விஷயம். என்னுடைய முந்தய படங்களை எல்லாம் 90நாட்களில் கூட முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். ஆனால் “களவாடிய பொழுதுகளை” முடித்து ஆண்டுகள் பல ஆகியும், இவ்வளவு காலம் காத்திருப்பது வருந்தத்தக்கது. “களவாடிய பொழுதுகள்” மனித உறவுகளை, உணர்வுகளை பேசும் என்றும் அந்த நாளுக்காக நான் காத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

 

முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணி

6/28/2011 12:53:59 PM

ஹிந்தி "கஜினி" யின் மாபெரும் வெற்றிக்குப் பின் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. "கஜினி" க்குப் பின் ஷாரூக்கானை அவர் இயக்குவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், "ரா ஒன்" படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ஷாரூக்கான். அந்த இடைவெளியில் தமிழில் "ஏழாம் அறிவு" படத்தை தொடங்கி விட்டார் முருகதாஸ்.
இதற்கிடையே அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோரை விட சல்மான்கானின் மார்கெட் பாலிவுட்டில் உச்சம் தொட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் முருகதாஸ் - சல்மான்கான் இணையும் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளார்கள். அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலர் முயற்ச்சிக்கிறார்கள். இதையடுத்து 'சிங்கம்' ரீமேக்கில் நடித்து வரும் அஜய் தேவகனும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் யாரை இயக்குவது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்கிறது முருகதாஸ் தரப்பு.




 

சண்டை காட்சிகளில் நடிக்கக் கூடாது ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சண்டை காட்சிகளில் நடிக்கக் கூடாது ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை!

6/28/2011 12:51:04 PM

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சரியாகியுள்ள நிலையில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்குமாறு ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம். தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூரிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் அவர் வருவார் என்று அவரது மருமகன் தனுஷ் கூறியுள்ளார்.  இந்த நிலையில் மீண்டும் "ராணா" பட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். ரஜினிகாந்த் திரும்பியதும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறுகிறார்கள். அதேசமயம், "ராணா" படத்தில் சண்டைக் காட்சிகளில் ரஜினி நடிக்கக் கூடாது என்று சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம். பழையபடி சண்டைக் காட்சிகளில் நடித்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் டூப் போட்டு சண்டைக் காட்சிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனராம்.




 

‘கோÕ இந்தி ரீமேக்கில் மீண்டும் வில்லன் வேடம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'கோÕ இந்தி ரீமேக்கில் மீண்டும் வில்லன் வேடம்!

6/28/2011 12:23:38 PM

“கோ” படத்தின் மூலம் பிரபலமான அஜ்மலுக்கு, இந்தியில் உருவாகும் “கோ” படத்திலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது 'கோÕ இந்தி ரீமேக்கில் தமிழில் நடித்த வில்லன் வேடத்தை மீண்டும் ஏற்க உள்ளார் அஜ்மல். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், வெளியாகி சுப்பர் ஹிட்டான “கோ” படத்தின் மூலம் பிரபலமானார். “கோ” படத்தில் சிறகுகள் கட்சியின் தலைவராக, வசந்த் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் “கோ” படம் இந்தியிலும் உருவாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் அக்ஷய் குமார் இயக்குகிறார். “கோ” படத்தில் வசந்த் கேரக்டரில் நடித்த அஜ்மலையே, இந்தி “கோ” படத்திலும் நடிக்க வைக்க அக்ஷய் பிரியப்படுவதாகவும், இதற்காக அஜ்மலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

விமானத்தில் ஜோடியாக பறந்த பிரபுதேவா-பியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விமானத்தில் ஜோடியாக பறந்த பிரபுதேவா-பியா

6/28/2011 12:13:13 PM

பிரபு தேவாவும், பியாவும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர். இது குறித்து பியா கூறியது: சிறு வயதிலிருந்தே பிரபுதேவா நடனம் என்றால் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன் 'ஏகன்Õ ஷூட்டிங்கில் சந்தித்தேன். அப்போது நான் சினிமாவுக்கு வந்த புதிது. அவரிடம் பேச பயந்தேன். என்னை அறிமுகம் செய்து கொள்ளக்கூட தயங்கினேன். இம்முறை விமானத்தில் அவர் அருகில் அமர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்தது. 'ஹலோÕ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'கோÕ படத்தில் எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். 'அவர் மிகவும் ரிசர்வ் டைப். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்Õ என்று கூறி இருந்தார்கள். ஆனால் அவர் என்னை பாராட்டியபோது ரொம்பவும் சந்தோஷம் அடைந்தேன். மேலும் எந்த நேரத்திலும் அமைதியாக, பதற்றம் அடையாமல் இருப்பது, நல்ல படங்களை தேர்வு செய்து ஒப்புக்கொள்வது என்பது பற்றி சிறு சிறு டிப்ஸ் கொடுத்தார். அது பயனுள்ளதாக இருந்தது.

 

ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ஐஸ்வர்யா ராய்?


மும்பை: ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ஹீரோயின் படத்தில் அவரை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளது யுடிவி நிறுவனம்.

ஐஸ்வர்யா ராய், அர்ஜுன் ராம்பலை வைத்து ஹீரோயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுர் பண்டார்கர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டில்களும் வெளியாகின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவரை ஒப்பந்தம் செய்த போது, இதுகுறித்து எதுவும் பண்டார்கருக்கு தெரியாது என்பதால், இப்போது படத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை படத்தின் தயாரிப்பாளரான யுடிவி மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரிது. எனவே அவர் நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவருடன் இப்போது பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இருந்தாலும் இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்துவது என நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கு பதில் நாங்கள் நடிக்கிறோம் என பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கால்ஷீட் தர முன்வந்துள்ளனராம். அவர்களில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் யாரையும் இப்போதைக்கு கமிட் செய்வதாக இல்லை என்று அறிவித்துள்ளது யுடிவி.

 

முகமூடியில் வில்லனானார் நரேன்!!


ஜீவாவை ஹீரோவாக வைத்து மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுக்கிறார் நரேன்.

மிஷ்கின் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகமானவர் நரேன். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த அஞ்சாதே மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டார்.

இப்போது தான் அறிமுகப்படுத்திய நாயகனான நரேனுக்கு, மீண்டும் புதிய பரிமாணத்தைத் தருகிறார் மிஷ்கின்.

அடுத்து ஜீவா நாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை இயக்குகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் வரும் பவர்புல் வில்லன் பாத்திரத்துக்கு அவர் நரேனைத் தேர்வு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான வேடம் என்பதாலும், இதுவரை வாங்காத பெரிய சம்பளம் என்பதாலும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் நரேன்.

இதுகுறித்து நரேன் கூறுகையில், “இதை வில்லன் வேடமாக நான் பார்க்கவில்லை. எதிர்மறையான இன்னொரு ஹீரோவாகத்தான் பார்க்கிறேன். எனது நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை இந்தப் படம் தரும்,” என்றார்.

 

தனுஷ் - ஸ்ருதி ஜோடி: இயக்குநர் ஐஸ்வர்யா!


கணவர் தனுஷ் – கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் படத்தை ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சில காலம் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பின்னர் தானே கதை வசனம் எழுதி படம் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா தெரிவித்தார். இதனை தனுஷும் பல பேட்டிகளில் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஒரு காதல் கதையை படமாக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சி கைகூடி வந்துள்ளது.

இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஐஸ்வர்யா. ஹீரோவாக அவரது கணவர் தனுஷே நடிக்கிறாராம். கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரிக்கப்போவது, தனுஷின் சொந்தப் பட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வரும் ரஜினி சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

போலிக் கையெழுத்து...! - எஸ்ஏ சந்திரசேகரன் கமிஷனரிடம் புகார்


சென்னை: என் கையெழுத்தை போலியாகப் போட்டு யாரோ சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் கூறியுள்ளார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகரன்.

பின்னர் நிருபர்களிடம் எஸ்ஏ சந்திரசேகரன் பேசுகையில், “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ராம.நாராயணன் இருந்த போது, நான் துணைத் தலைவராக இருந்தேன்.

இப்போது ராம.நாராயணன் பதவி விலகியதால், நான் தற்காலிக தலைவராக உள்ளேன். நான் தற்காலிக தலைவராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் பாபுகணேஷ் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் கையெழுத்து போட்டுள்ளது போல, கையெழுத்து போட்டு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் போடப்பட்டுள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை.

அந்த சுற்றறிக்கையில், ‘கேபிள் டி.வி. நடத்துபவரின் கவனத்துக்கு’ என்ற தலைப்பில் சில தகவல்கள் உள்ளன. 2011 முதல் 2012-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் ஒளிபரப்பு உரிமம், சேலம் ‘வீல் மீடியா’ என்ற நிறுவனத்துக்கும், தஞ்சை ‘சேனல் விஷன்’ என்ற நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பொறுப்புகள் மாறிவிட்டாலும், அந்த ஒளிபரப்பு உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாத சந்தாவை கட்டலாம். இப்படிக்கு, எஸ்.ஏ.சந்திரசேகரன் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை.

இதுபோன்ற போலி கையெழுத்து போட்டு சுற்றறிக்கை அனுப்பியவர்கள் யார்? என்று கண்டறிந்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,” என்றார்.

 

ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் செல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்!


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க விரைவில் சிங்கப்பூருக்குப் பயணமாகிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

சிகிச்சைக்குப் பிறகு ரஜினியைப் பார்க்க அனுமதி பெற்றுள்ள முதல் நபர் ரவிக்குமார்தான். ரஜினி உடல்நிலை, நராணா பட வேலைகள், படத்துக்கு இன்னும் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நடிகர்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் கலந்துரையாடுகிறார் ரவிக்குமார்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. அவரைப் பார்க்க பலரும் அனுமதி கேட்டு வருகின்றனர். சிங்கப்பூரிலும் ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க குவிகின்றனர். ஆனால் அவருக்கு மேற்கொண்டு நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் பூரண ஓய்வுக்காகவும் இதுவரை பார்வையாளர் யாரையும் அனுமதிக்கவில்லை.

சிரஞ்சீவி மற்றும் அம்பரீஷ் ஆகிய இருவர்தான் இதுவரை ரஜினியை நேரில் பார்த்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இதையும் கூட ரஜினி குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தன்னுடன் தங்கியிருந்த மனைவி, மகள்களை சென்னைக்கு அனுப்பிவிட்டார் ரஜினி. அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் பெற 15 தினங்களாவது ஆகும் என்கிறார்கள்.

அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். அவரைச் சந்திக்கும் முதல் நபராக சென்னையிலிருந்து செல்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

சிங்கப்பூர் செல்லும் கே.எஸ்.ரவிகுமார், ரஜினிகாந்துடன் ராணா’ பட வேலைகள் குறித்து பேசுகிறார். ரஜினிகாந்தின் உடல்நிலையை பொருத்து, ‘ராணா’ பட வேலைகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.