மனீஷாவுக்கு பதில் விஜய் சேதுபதி ஜோடியானார் நந்திதா!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியின் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நந்திதா.

சீனு ராமசாமி இயக்கத்தில் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு நடிப்பில் உருவாகும் படம் 'இடம் பொருள் ஏவல்'.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக முதலில் ஒப்பந்தமானவர் மனீஷா யாதவ். ஆனால் இவர் அந்த வேடத்துக்குப் பொருத்தமில்லை என்று கூறி நீக்கினார் சீனு ராமசாமி.

ஆனால் தனக்கு சீனி ராமசாமி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மனீஷா செய்தி பரப்பினார். பின்னர் நடிகர் சங்கத்துக்குப் புகார் போனது. அவர்கள் விசாரித்ததில் மனீஷா கூறியது பொய் என்பது அம்பலமானது.

மனீஷாவுக்கு பதில் விஜய் சேதுபதி ஜோடியானார் நந்திதா!

உடனே கொடைக்கானல் குளிர் ஒத்துக் கொள்ளாததால் படப்பிடிப்பிலிருந்து வந்துவிட்டதாக மனீஷா தெரிவித்தார்.

இதற்கிடையில், மனீஷாவுக்கு பதில் அந்த மலை கிராம பெண் வேடத்துக்கு நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இவர், ஏற்கெனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இருவரும் இரண்டாவது முறையாக இணையும் படம் இது.

அதேசமயம் மனிஷா படத்தில் வரும் இன்னொரு கதாபாத்திரத்தில் மனீஷா விரும்பினால் நடிக்கலாம் என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதன்முறையாக இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

டாக்கா: வங்கதேசத் தலைநகரில் நாளை மறு நாள் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த விழாவில் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகானும் கலந்து கொள்கிறார்.

20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சி டாக்காவின் பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது. விழா தொடர்பாக ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.

 

ஏப்ரல் 14-ல் விஜய் - ஏ ஆர் முருகதாஸ் பட டீசர்!

விஜய் - ஏ ஆர் முருகதாஸ் மீண்டும் இணையும் பெயரிடப்படாத படத்தின் முதல் தோற்றம் மற்றும் முன்னோட்டப் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

துப்பாக்கி' படத்திற்குப் பிறகு விஜய், சமந்தா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

ஏப்ரல் 14-ல் விஜய் - ஏ ஆர் முருகதாஸ் பட டீசர்!

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், அனிருத். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஐங்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் ஏப்ரல் 14ல் வெளியாகிறது.

ஜில்லா படத்தால் நஷ்டம் என்று தயாரிப்பாளர் சங்கமே அறிவித்த நிலையில், இப்போது இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

 

மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! - ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி

சென்னை: என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன், என்று ரஜினியுடனான தன் சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

தன் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியுடன் இன்று காலை போயஸ் கார்டன் சென்ற தயாநிதி அழகிரி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! - ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி

முக அழகிரியுடன் நீண்ட நேரம் ரஜினி பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி, ரஜினியுடன் பேசியது மனதுக்கு நிம்மதியாக இருந்தது என்றார். மேலும் தன் மகனுக்கு ரஜினியின் ஆசியைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த தயாநிதி அழகிரி, "என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன். இவரைப் போன்ற ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்க," என்று கூறியுள்ளார்.

மேலும், தான் சிறுவனாக இருந்தபோது, இதே போல தந்தை அழகிரியுடன் போய் ரஜினியைச் சந்தித்த படத்தை வெளியிட்டு, "அன்று.. இன்று.. என்றும் அதே இனிமையான சூப்பர் ஸ்டார்," என்று கூறியுள்ளார்.

 

நான் சிகப்பு மனிதன் இசை- வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

சென்னை: விஷால் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் புதிய படத்தின் இசைத் தட்டை நேற்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி நடித்து 1985-ல் வெளியான படம் நான் சிகப்பு மனிதன். இந்தத் தலைப்பை விஷால் தன் படத்துக்கு ரஜினி மற்றும் தயாரிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்திக் கொண்டார்.

நான் சிகப்பு மனிதன் இசை- வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் அரங்கில் நடந்தது. அதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டுக்குப் போய் அவர் கையால் இசைத் தட்டை வெளியிட வைத்தனர்.

விஷால், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் திரு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரஜினிக்கு அவர் வீட்டிலேயே போட்டுக் காட்டினர்.

ட்ரைலரைப் பாராட்டிய ரஜினி, தூக்கத்தில் நடக்கும் வியாதியான Narcolepsy பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும், புதிய விஷயங்களை ஆதரிப்பதில் நடிகர் விஷால் காட்டும் அக்கறைக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்றும் வாழ்த்தினார்.

ஜிவி பிரகாஷின் இசை, இதயம் உன்னைத் தேடுதே.. பாடல் படமாக்கப்பட்ட விதம், அதில் லட்சுமி மேனனின் நடிப்பு ஆகியவற்றையும் பாராட்டத் தவறவில்லை.

 

ரஜினியைச் சந்தித்து 'ஆசி கோரிய' முக அழகிரி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி.

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.

தனது மகனும் தயாரிப்பாளருமான துரை தயாநிதியுடன் வந்த அவர் ரஜினியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

ரஜினியைச் சந்தித்து 'ஆசி கோரிய' முக அழகிரி!

இந்த தகவல் பரவியதும் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் மதிமுக பொதுச் செயலர் வைகோ, நேற்று பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் முக அழகிரி.

தான் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோதும் மதுரை மற்றும் தென்னக திமுக பிரமுகர்களை இன்னும் தொடர்பில் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் களத்தில் இன்னும் துடிப்பாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார் அழகிரி.

ரஜினியை சந்தித்துவிட்டு வெளியே வந்த மு.க. அழகிரியிடம், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். நான் அவரது ரசிகனும்கூட.

குடும்பத்தில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அவருடன் கலந்து பேசுவது வழக்கம்.

இன்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். என் மகன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பாகவும் பேசிவிட்டு, அவரது ஆசியைக் கோரினேன்.

ரஜினியின் கோச்சடையான் பட பாடல்களைக் கேட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் பாடலும், குறிப்பாக ரஜினி பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனைச் சொல்லி, அவரிடம் பாராட்டினேன்.

அரசியல் சம்பந்தமாக நாங்கள் எதுவும் பேசவில்லை," என்றார்.

 

இந்த பிக்கப், டிராப்பும், உயர்ந்த நடிகரும் செய்த வேலையை பார்த்தீங்களா?

சென்னை: சிவாஜி நாயகிக்கு பரதேசி இயக்குனர் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு போக ஆர்யமான நடிகர் தான் காரணமாம்.

தளபதி, சூப்பர் ஸ்டார், சீயானோடு ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜி நாயகிக்கு தற்போது கோலிவுட்டில் வாய்ப்பே இல்லை. அவர் நடிப்பில் வெளியான இளவரசி படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் பரதேசி இயக்குனரின் படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன் பிறகு சிவாஜி நாயகி இல்லை நாட்டாமை மகள் தான் கரகாட்டக்காரியாக நடிக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

சிவாஜி நடிகையை நடிக்க வைக்க நினைத்த இயக்குனரை ஆரியமான நடிகர் அதான் பிக்கப்-டிராப்காரர் அணுகி அந்த நடிகையை எடுக்காதீங்க என்று ஒரு பிட்டை போட்டுள்ளார். உடனே நம்ம உயரமான நான் ரெட் மேன் ஹீரோ இயக்குனரிடம் நம்ம நாட்டாமை மகளையே நடிக்க வைக்கலாமே என்று தெரிவித்துள்ளாராம்.

அதன் பிறகே இயக்குனர் நாட்டாமை மகளை ஒப்பந்தம் செய்தாராம். நான் அப்படி என்ன செய்தேன். கோலிவுட்டில் என்னை யாருமே ஆதரிக்க மாட்டேன் என்கிறார்களே என்று சிவாஜி நாயகி புலம்புகிறாராம்.