அமைதிதான் நிரந்தரம்.. ஆன்மீகத்தையே நாடுகிறேன்! - ரஜினி

அமைதிதான் நிரந்தரம்.. ஆன்மீகத்தையே நாடுகிறேன்!  - ரஜினி

என்னைப் பொறுத்தவரை அமைதிதான் நிரந்தரம். ஆன்மீகத்தையே நாடுகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சமீபத்தில் தொடங்கிய சென்னை தின கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக ரஜினி குறித்த சிறப்புரையை வழங்கினார் நடிகர் மோகன்ராம்.

அவர் இரண்டு மணி நேரம் ரஜினி பற்றி பேசினார். ரஜினி குறித்த இடையிடையே ஆடியோ விஷூவல்கள் காட்டப்பட்டன.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது, மோகன் ராமுக்காக ரஜினி அளித்த சிறிய ஆடியோ பைட்.

அந்த ஆடியோ பேட்டியில் ரஜினி கூறுகையில், "இளம் வயதில் நான் எதையும் ஆர்வமாகவே கற்றுக்கொண்டிருந்தேன்.

எந்த விஷயமாக இருந்தாலும் நான் விரும்பி கற்றுக்கொண்டிருந்த நேரம். ‘இன்னும் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?' என்கிறார்கள். கற்றுக் கொள்வது முடிவற்ற விஷயம்.

ஆனால் நான் ஆன்மிகத்தை நாடுகிறேன். அமைதியை தேடுகிறேன். சந்தோஷம் வரும், போகும். ஆனால் நிரந்தரமாக இருப்பது அமைதி மட்டும்தான்,' என்றார்.

 

டோலிவுட்டில் 'அதகளம்' செய்ய ஹரிக்கு ரூ.5 கோடி சம்பளம்

டோலிவுட்டில் 'அதகளம்' செய்ய ஹரிக்கு ரூ.5 கோடி சம்பளம்

சென்னை: இயக்குனர் ஹரி ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் படம் இயக்க ரூ.5 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

ஹரியின் மார்க்கெட் சிங்கத்தால் எகிறிக் கிடக்கிறது என்று தான் கூற வேண்டும். ஹரி சிங்கம் 2 படத்தை முடித்த கையோடு கார்த்தியை வைத்து அருவா என்ற படத்தை எடுப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் சில பல காரணங்களால் அருவா டிராப்பாகி ஹரியும், கார்த்தியும் நண்பர்களாக பிரிந்துவிட்டனர் என்று செய்தி வந்தது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கிலும் ஒரு ஆக்ஷன் படத்தை எடுக்க ஹரியை அழைத்தார்களாம். சும்மா இல்லை ரூ.5 கோடி சம்பளம் தருகிறோம் வாருங்கள் என்றார்களாம்.

உடனே ஹரி தெலுங்கிலும் அதகளம் பண்ண தயாராகிவிட்டாராம். இந்த கேப்பில் தான் கார்த்தி படம் கைவிடப்பட்டதாம்.

 

மதகஜராஜா... ஜெமினியிடமிருந்து வாங்கி சொந்தமாக வெளியிடும் விஷால்!

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் தான் நடித்து வெளியாகாமலிருக்கவம் மதகஜராஜா (எம்ஜிஆர்) படத்தை ஜெமினி நிறுவனத்திடமிருந்து தானே வாங்கி சொந்தமாக வெளியிடுகிறார் ஹீரோ விஷால்.

விஷால் - அஞ்சலி - வரலட்சுமி - சந்தானம் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய படம் மதகஜராஜா. இந்தப் படம் கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை.

இந்தப் படம் முடிந்த பிறகு, விஷால் நடித்த சமர், பட்டத்து யானை போன்ற படங்கள் வெளியாகிவிட்டன.

மதகஜராஜா... ஜெமினியிடமிருந்து வாங்கி சொந்தமாக வெளியிடும் விஷால்!

அடுத்து வரும் தீபாவளிக்கு விஷால் நடித்த பாண்டிய நாடு படம் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் அதற்கு முன் மதகஜராஜாவை வெளியிட விரும்பிய விஷால், அந்தப் படத்தை தனது சொந்தப் பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டர் மூலம் வெளியிடுகிறார்.

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் விஷால்.

 

கடல் நண்பர்களை அடக்குவார் இல்லையா?: புலம்பும் தயாரிப்பாளர்கள்

சென்னை: சீ பட நாயகனின் நண்பர்கள் ஷூட்டிங்ஸ்பாட்டில் செய்யும் அலப்பறையை தாங்க முடியவில்லையாம்.

நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்த நாயகன் சீ படத்தில் நடித்தார். ஆனால் படம் ஊத்திக் கொண்டது. இதனால் கவலையில் உட்கார்ந்திருந்த அவருக்கு பல வாய்ப்புகள் வந்துள்ளன. இதனால் குஷியாகி படங்களில் நடித்து வருகிறார்.

நாயகன் ஷூட்டிங்கிற்கு வருகையில் அவருடன் படித்தவர்கள், நண்பர்கள் என்று தினமும் 4 முதல் 5 பேர் வருகிறார்களாம். அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டம் போடுகிறார்களாம். தயாரிப்பு ஆட்களை ஓவராக வேலை வாங்குகிறார்களாம். தினசரி செலவை எகுற விட்டுவிடுகிறார்களாம். இதையெல்லாம் பார்த்து தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கிறார்களாம்.

இது நாயகனின் அப்பாவுக்கு தெரியுமா?

 

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் வெளியிடத் தடை!

சென்னை: தமிழருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தமிழ்ப் பதிப்புக்கு இன்றும் சான்றிதழ் தரப்படவில்லை என சென்சார் போர்டு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் வெளியிடத் தடை!

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளது. தமிழ் உணர்வாளர்கள், ஈழப் போர் ஆதரவாளர்கள் இந்தப் படத்தை எதிர்ப்பதால், தமிழகத்தில் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு சென்சார் சான்று வழங்கப்பட்டுவிட்டதா என நீதிமன்றம் விசாரித்தபோது, இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தது சென்சார் போர்டு.

இதைத் தொடர்ந்து படத்தின் தமிழ்ப் பதிப்பு உரிய சான்றிதழ் இல்லாமல் தமிழகத்தில் வெளியாகத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

மெட்ராஸ் கபே படத்தின் தமிழ்ப் பதிப்பை உரிய சான்றிதழ் இல்லாமல் வெளியிடத் தடை!

அதேநேரம் படத்தின் இந்திப் பதிப்பு வெளியாகத் தடை இல்லை என்று கூறிவிட்டது உயர்நீதிமன்றம்.

இந்தப் படத்தின் எந்தப் பதிப்பும் தமிழகத்திலோ தமிழர் வாழும் பகுதிகளிலோ திரையிடப்பட்டால் முற்றுகையிடுவோம் என தமிழ் அமைப்புகள், கட்சிகள் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரூ. 200 கோடியை நெருங்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடித்த சென்னை எஸ்க்பிரஸ் படம் இதுவரை ரூ.192.85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடியைத் தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ஜாலியான படம் சென்னை எக்ஸ்பிரஸ். படம் ரம்ஜான் அன்று ரிலீஸானது. இந்த ரம்ஜான் ஷாருக்கானுக்கு சாதகமாகிவிட்டது என்றே கூற வேண்டும். ரம்ஜானுக்கு ஆந்திராவில் ரிலீஸாகவிருந்த பவன் கல்யாண் படம் தள்ளிப் போனது, தமிழகத்தில் விஜய்யின் தலைவாவுக்கு தடங்கல் வந்தது.

ரூ. 200 கோடியை நெருங்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வசூல்!

இதனால் ஷாருக்கிற்கு தமிழகம் மற்றும் ஆந்திராவில் கூடுதல் ஸ்கிரீன்கள் கிடைத்தன. படம் ரிலீஸான வேகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தது. சென்னை எக்ஸ்பிரஸ் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளியுள்ளது.

இந்நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ.192.85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியைத் தொடும் என்று நம்பப்படுகிறது. 3 இடியட்ஸ், ஏக் தா டைகர் படங்களை அடுத்து இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் சென்னை எக்ஸ்பிரஸ் தான். மேலும் இந்த ஆண்டில் வசூலில் சக்கை போடு போட்ட படமும் சென்னை எக்ஸ்பிரஸே தான்.

 

தலைவா பட்டர் மசால் தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!

தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்

நாயகன் - ஒரு கிலோ

சர்க்கார் - அரை கிலோ

பாம்பே -1 துண்டு

தேவர்மகன் - 6 பல்

இந்திரா - ஒரு தேக்கரண்டி

பில்லா - அரை கப்

புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்

பொல்லாதவன் - தேவையான அளவு

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .

பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.

நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.

 

என்னா ஸ்பீடு, என்னா ஸ்பீடு: முன்னணி நடிகைகளை மிரள வைத்த நடிகை

சென்னை: இளம் நடிகை ஒருவர் கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளது முன்னணி நடிகைகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளதாம்.

டைம் படம் மூலம் தமிழுக்கு வந்த நடிகை வந்த வேகத்தில் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். அட அது ஒரு பக்கம் இருக்க, அவர் வெற்றி நடிகருடன் 2 படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு படத்தில் வெற்றியுடன், கலாய்ப்பு மன்னனும் உள்ளார்.

டைமில் நடிகையின் நடிப்பை பார்த்துவிட்டு தான் இத்தனை வாய்ப்புகளும் வந்துள்ளன. இந்நிலையில் அவர் மாப்பிள்ளை நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மாப்பிள்ளை தற்போது கோலிவுட் தவிர்த்து பாலிவுட்டிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அடடே வந்த வேகத்தில் இத்தனை படங்களா என்று நினைப்பதற்குள் அம்மணி காட்டன் வீரனுடன் ஒரு படத்திலும், ஜீவ நடிகருடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதைப் பார்த்த புஸு புஸு நடிகை, கன் நாயகி, மில்க் உள்ளிட்டோர் இந்த பொண்ணுக்கு மட்டும் எப்படி முன்னணி ஹீரோக்கள் படத்திலா வாய்ப்பு வருகிறது என்று ஆச்சரியத்தில் உள்ளார்களாம்.

 

என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள் இது- சாஷ்டாங்கமாக விழுந்து மீடியாவுக்கு நன்றி சொன்ன சேரன்!

என் பொக்கிஷம் திரும்பி வந்த நாள் இது- சாஷ்டாங்கமாக விழுந்து மீடியாவுக்கு நன்றி சொன்ன சேரன்!

சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி.

தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர்.

தரையில் விழுந்து...

அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்," என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

சேரனின் இந்த செய்கை, வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

பேஸ்புக்கில்..

முன்னதாக இன்று காலை பேஸ்புக்கில் சேரன் இப்படி எழுதியிருந்தார்:

"இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...."