வடிவேலு நடிக்கும் படத்தின் தலைப்பு... கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்!

Ags Produce 6 Films A Row

கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளது. வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படமும் இதில் அடங்கும்.

தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏஜிஎஸ்.

இந்த நிறுவனம் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஆனால் மாற்றான் படத்தின் சறுக்கல் காரணமாக, சில மாதங்கள் புதிய படம் அறிவிக்கவில்லை.

இப்போது ஒரே நேரத்தில் ஆறு புதிய படங்களை அறிவித்துள்ளார் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி.

தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டிருப்பதாவது:

கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்

வடிவேலு நடிக்க, யுவராஜ் இயக்கும் படத்துக்கு கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார்.

சந்துரு இயக்கத்தில் முழுநீள காமெடி படமாக உருவாகிறது சரஸ்வதி சபதம். ஜெய், விடிவி கணேஷ், மனோபாலா நடிக்கின்றனர்.

அடுத்து ஜெயம் ராஜா - ஜெயம் ரவியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறோம்.

அதர்வா முரளி நடிக்கும் ஒரு விறுவிறுப்பான படமும் தயாராகிறது. புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்குகிறார்.

ஆறாவதாக, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படம் செய்கிறோம். இதில் ஹீரோ கார்த்திக் கவுதம்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு பெரிய பட்ஜெட் படமும் தயாராகிறது. அதன் விவரம் இப்போது சொல்வதற்கில்லை," என்று தெரிவித்துள்ளார்.

 

செந்திலுக்கு வயசு 60... திருக்கடையூரில் கொண்டாடினார்!

நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 60 - வது பிறந்தநாளை சத்தமே இல்லாமல், திருக்கடையூரில் உள்ள கோவிலில் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் செந்தில். பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமானார் செந்தில். அவரை பெரிய நடிகராக்கியது தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் படம்.

actor senthil celebrates his 60th birthday   
காமெடி கிங் கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த அத்தனைப் படங்களிலும் நகைச்சுவை சூப்பர் ஹிட்டானது.

கவுண்டர் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியதும், செந்திலுக்கும் கட்டாய ஓய்வு ஏற்பட்டது. ஆனாலும் அவரது காமெடி தொலைக்காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளது. அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று செந்தில் தன் 60 வது ஆண்டு பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். திருக்கடையூரில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் செந்திலும் அவர் மனைவி கலைச்செல்வியும் மாலை மாற்றிக் கொண்டனர்.

 

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2வில் கமல்ஹாசன்

Kamal Hassan Appear On Neengalum Vellalam Oru Kodi

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பிரகாஷ்ராஜ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2. இந்த நிகழ்ச்சி இம்மாதம் 11ம் தேதி தொடங்கியது. நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களை கவரும் வகையில் தொகுத்து வழங்கிவருகிறார்.

பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அதற்காக மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கமல்.

நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியபோது கமல் மகள் ஸ்ருதி பங்கேற்றார். நடிகர் கமல் போன் மூலம் மகளுக்கு உதவி செய்தார். சீசன் 2ல் கமலுக்கு அவரது மகள் போன் மூலம் உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த எபிசோட் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

 

சினேகா கர்ப்பமெல்லாம் இல்லீங்க... குழந்தை ஆசையை தள்ளி வச்சிருக்கோம்- பிரசன்னா!

Prasanna Refuses Sneha Pregnancy

சினேகா கர்ப்பமாக உள்ளார் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைத்துள்ளோம் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

சினேகா, பிரசன்னா திருமணம் கடந்த வருடம் மே மாதம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சினேகா தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ஹரிதாஸ் படம் அவருக்கு இன்னொரு திருப்பத்தைத் தந்துள்ளது.

இப்போது தமிழில் இரு படங்களும், தெலுங்கில் இரு படங்களும் கைவசம் உள்ளன.

இந்த நிலையில் சினேகா கர்ப்பமாக இருப்பதாக சிலர் ஆர்வக்கோளாறில் அடித்துவிட்டனர். இதைப் படித்த திரையுலகினர் சினேகா - பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் சினேகா கர்ப்பமாக இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் பிரசன்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "சினேகா கர்ப்பமாக இருப்பதாக தவறான தகவல் பரவி உள்ளது. இதனால் நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர் கர்ப்பமாக இல்லை. குழந்தை பெறும் ஆசையை கொஞ்ச நாள் தள்ளிப் போட்டுள்ளோம்," என்றார்.

சினேகாவின் அம்மா மற்றும் அக்காவும் சினேகா கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். அடுத்து பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் சினேகா.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று புதிய படம் தொடங்கினார் ஐஸ்வர்யா!

Aishwarya Starts Her New Project Today

3 படத்துக்குப் பிறகு கவுதம் கார்த்திக்கை வைத்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா அடுத்த படம் தொடங்குகிறார் என்று கூறியிருந்தோம் அல்லவா... இதோ இன்று தொடங்கிவிட்டார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை எந்தவித ஆசம்பரமும் இல்லாமல், மகா சிம்பிளாக இன்று தொடங்கினார் ஐஸ்வர்யா.

கவுதம் கார்த்தி நடித்த முதல் படமான கடல் படுதோல்வியைத் தழுவியதும், அந்த நஷ்டப் பணத்தை திரும்பப் பெற விநியோகஸ்தர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம்.

ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 யும் வசூல் ரீதியாக பலத்த அடியைத் தந்துவிட்டது விநியோகஸ்தர்களுக்கு.

முதல் படங்களில் தோல்வியைச் சந்தித்த இருவரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பது பெரிய ப்ளஸ்.

3 படத்துக்கு ஏற்பட்ட அசாதாரண எதிர்ப்பார்ப்பு அந்தப் படத்தைக் கவிழ்த்தது. ஆனால் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மகா சாதாரணமாக ஆரம்பித்துள்ள இந்தப் படம் ஐஸ்வர்யா எதிர்ப்பார்க்கும் அந்தஸ்தைத் தருமா? பார்க்கலாம்!

 

மானை சுட்ட வழக்கு: நேரில் ஆஜராக சல்மான், தபு, சோனாலி, நீலம் மற்றும் சாயிஃபுக்கு உத்தரவு

ஜோத்பூர்: அரிய வகை உயிரினமான கறுப்பு மானைச் சுட்ட வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதே வழக்கில் சல்மானுடன் குற்றம்சாட்டப்பட்ட தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்கள் மீது புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன் ஹம் சாத் சாத் ஹெய்ன் பட ஷூட்டிங்கின்போது, மான் வேட்டைக்குப் புறப்பட்டனர் சல்மான் கானும் உடன் நடித்த தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோரும்.

blackbuck case salman others appear in court
அப்போது கருப்பு மான் (Blackbuck) எனும் அரிய வகை மான் இரண்டை சுட்டுக் கொன்றனர். இதனை அந்தப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். சல்மான் மற்றும் உடனிருந்த அனைத்து நடிகர் நடிகையர் மீதும் வழக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த டிசம்பரில் மேலும் கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அனைவரும் ஜோத்பூருக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீதான புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சல்மான் கான் அமெரிக்காவில் இருப்பதால் வரவில்லை. நாளை நிச்சயம் வந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கில் சல்மான் கானின் குற்றம் உறுதியானால் அவர் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவருடன் வேட்டைக்குப் போன தபு, சோனாலி, நீலம் மற்றும் சாயிப்புக்கும் இதுதான் கதி.

இந்த வழக்கில் முக்கிய சாட்சி, சல்மான் உள்ளிட்ட நடிகர்களை ஜீப்பில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்தான். ஆனால் அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார்.

Saif Ali Khan at a court in Jodhpur

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக பிரிவு 148ல் சல்மான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ராஜஸ்தான் நீதிமன்றம் நீக்க முடிவு செய்தது. ஆனால் இதனைத் தடுத்த உச்சநீதிமன்றம், சல்மானை அந்தப் பிரிவின் கீழும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Read in English: Blackbuck case: Saif may face 6-yr jail
 

அஜீத்தின் புதிய படம் தலைப்பு 'வெற்றி கொண்டான்?'

Ajith Next Vetri Kondan

சென்னை: வலை படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அஜீத் படங்களின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற யூகச் செய்திகளை வெளியிடுவதை ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுக்கு மேல் எழுதி வருகின்றன ஊடகங்கள். கடைசியில் போன மாதம்தான் அதற்குப் பெயர் வலை என்று டிசைனை வெளியிட்டார் விஷ்ணுவர்தன்.

இப்போது அதற்கடுத்த படத்துக்கான தலைப்பு குறித்த செய்திகள் உலா வர ஆரம்பித்துவிட்டன. இந்தப் படத்தை சிறுத்தை படம் தந்த சிவா இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் புதிய படத்துக்கு 'வெற்றிகொண்டான்' எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்துக்கும் இந்தத் தலைப்பு பிடித்துவிட்டதாம்.

இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

 

மகர மஞ்சுவில் தாசியாக நடிக்கும் கார்த்திகா!

Karthika Turns Dasi Magara Manju

முன்பெல்லாம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ஓய்ந்த பிறகு வங்காளத்திலோ மலையாளத்திலோ போய் தாசி அல்லது செக்ஸ் தொழிலாளி வேடமேற்று தங்கள் திறமையைக் காட்டுவார்கள் ஹீரோயின்கள்.

இது பாஸ்ட் புட் காலமல்லவா... அதனால் ரொம்பவே வேகமாக தாசி வேடத்துக்கு புரமோட் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.

அந்த வகையில், சமீபத்தில் கோ படத்தில் அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா இப்போது தாசி வேடம் ஏற்றுள்ளார், தாய் மொழியான மலையாளத்தில்.

படத்துக்குப் பெயர் 'மகர மஞ்சு'. இந்தப் படத்தில் கார்த்திகாவுக்கு ஜோடியாக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மனின் வாழ்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் இது.

கார்த்திகா ஏற்றுள்ள தாசி வேடத்தை எப்படி செய்ய வேண்டும் என்றும் அம்மா ராதா ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்து வருகிறாராம். ஏற்கெனவே தாசி வேடத்தில் ஒரிஜினலாக அசத்திக் காட்டிய நடிகைகளின் க்ளிப்பிங்குகளையெல்லாம் போட்டுப் பார்த்து, ஒரு தேர்ந்த தாசிப் பெண்ணாகவே மாறியிருக்கிறாராம் இந்தப் படத்தில்.

தமிழில் அப்சரஸ் என்ற தலைப்பில் வெளியாகிறது மகரமஞ்சு.

என்னமோ போங்க... ஸ்வேதா மேனனுக்குப் போட்டியா ஆகாம இருந்தா சரி!

 

'அதுக்கு இவர் லாயக்கில்லை!' - பிரபல பாடகர் மீது பாடகி புகார்... விவாகரத்து கேட்டு வழக்கு!!

Rajesh Krishnan Ramya Marriage Break

பெங்களூர்: திருமண வாழ்க்கைக்கு உடல் மற்றும் மன ரீதியாக லாயக்கில்லாதவராக இருக்கிறார் என்று கூறி பிரபல பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார் அவரது மனைவியும் பிரபல பாடகியுமான ரம்யா.

தமிழில் வட்டாரம் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடியவர் ராஜேஷ் கிருஷ்ணன். கன்னடத்தில் இவர் முன்னணி பாடகர். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, நந்தி விருது கூட பெற்றுள்ளார். ஏற்கெனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தானவர்.

இவர் மூன்றாவதாக மணந்தவர்தான் பிரபல பாடகி ரம்யா. கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடந்தது. இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர்.

இந்த நிலையில் ரம்யா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கிருஷ்ணன் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார்.

ஜீவி பிரகாஷ் குழுவில் முக்கிய பாடகியாக உள்ளவர் இந்த ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.

 

சஞ்சய் தத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை எனக்கு வேதனையளிக்கிறது... ரஜினிகாந்த்

Why Rajinikanth Disturbed Over Sanj

சென்னை: குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என்று அவரது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

1993 ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு இன்று மகாராஷ்டிரா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். இதில் 1993-ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை மன்னிக்க கோரியிருந்தார்.

1993-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர் நேரடியாக பங்குகொள்ள வில்லை என்பதால் அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இது கொலை போன்ற பெரிய குற்றம் அல்ல. குண்டு வெடிப்புடன் எந்த சம்பந்தமும் இல்லாத போதும் அவர் தீவிரவாதி என கைது செய்யப்பட்டார். கடந்த 20 வருட காலத்தில் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும் போதும் நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். இது போன்ற பல அலைக்கழிப்புகளை சந்தித்து விட்டார். இவரின் பெற்றோர் சமூகத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். இதனால் சஞ்சய் தத்தை மன்னிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து சஞ்சய் தத்தை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட உள்ளதாக ஜெயா பச்சனும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணிஷ் திவாரி, ''ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து கட்ஜு கருத்து தெரிவித்தால், அதனை அரசும் மற்றவர்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். ஆனால் இந்த விசயத்தை பொருத்தமட்டில் பலவற்றை கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. இந்த விசயத்தை கையாளும் அரசின் பல்வேறு அமைப்புகள், இவருடைய கருத்தை கவனத்தில் கொள்ளும். தேவைப்பட்டால் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்''என்று கூறினார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த், சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அன்பான மனிதரான சஞ்சய்தத் என் பாசத்திற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது.

இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்''என தெரிவித்துள்ளார்.

  Read in English: Why Rajini disturbed for Sanjay Dutt