புறம்போக்கு படத்தின் தலைப்பு எங்களுக்கே சொந்தம், இதில் குழப்பம் தேவையில்லை என்று யுடிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆர்யா - விஜய் சேதுபதியை வைத்து எஸ்பி ஜனநாதன் புதிதாக இயக்கவிருக்கும் படத்துக்கு புறம்போக்கு புறம்போக்கு என தலைப்பிட்டிருந்தனர்.
ஆனால் இந்தத் தலைப்பை தான் முன்பே பதிவு செய்து வைத்துவிட்டதாக, திரைப்பட ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அது உண்மையாக இருந்தால் பேசித் தீர்ப்போம் அல்லது நட்ராஜுக்கு இந்தத் தலைப்பு கட்டாயம் வேண்டுமென்றால் விட்டுக் கொடுப்பேன் என்று எஸ்பி ஜனநாதன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், புறம்போக்கு தலைப்பு எங்களுக்கே சொந்தம் என யுடிவி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று யுடிவி வெளியிட்ட அறிக்கையில், "புறம்போக்கு தலைப்பு யாருக்கு சொந்தம் என்ற குழப்பம் இனியும் தேவையில்லை. இந்தத் தலைப்பு எங்களுக்குதான் சொந்தம் என பிலிம்சேம்பர் மற்றும் தயாரிப்பாளர் கில்ட் ஆகியவை கடிதம் அளித்துள்ளன," என்று தெரிவித்துள்ளது.