கவர்ச்சியில் புது வரலாறு படைத்த சன்னி லியோன்!

மும்பை: சன்னி லியோன்.. வர்ணிக்கவே தேவையில்லை. வார்த்தையும் இல்லை. இவரைப் பற்றி எதைச் சொன்னாலும் ஏ கிளாஸாக மட்டுமே இருக்கும். ஆனால் ஏக் பஹேலி லீலா படத்தில் கவர்ச்சியிலும், காமத்திலும் புது வரலாறு படைத்து விட்டார் சன்னி.

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்து பலரும் மிரண்டு போயுள்ளனர். இப்படி ஒரு பிணைப்பா என்று அவரையும், படத்தின் நாயகன் ஜெய் பனுசாலியையும் பார்த்து மிரண்டு போயிருக்கிறது பாலிவுட்.

கவர்ச்சியில் புது வரலாறு படைத்த சன்னி லியோன்!

படத்தில் இதுவரை எந்த முன்னணி நாயகியும் நடித்திராந்த அளவுக்கு கூடுதல் உராய்வுடன் ஹீரோவுடன் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறாராம் சன்னி.

உடலுறவு முறைகளை சித்தரிக்கும் வகையிலான போஸ்கள் டிரெய்லரை சூடாக்கியுள்ளன. தியேட்டர்களில் இ்ந்தக் காட்சிகள் ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் என்கிறார்கள்.

படத்தில் சத்யம் சிவம் சுந்தரம் படத்தில் வந்த ஜீனத் அமனை அப்படியே உரித்து வைத்தது போல ஒரு காட்சியில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட வருகிறார் சன்னி.

கவர்ச்சியில் புது வரலாறு படைத்த சன்னி லியோன்!

டி சீரிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியை நம்பித்தான் படத்தின் வசூலே உள்ளது. இப்படத்தில் இளவரசி வேடத்தில் நடித்துள்ளார் சன்னி. அது மட்டுமல்லாமல் பல்வேறு கெட்டப்களிலும் வருகிறாராம் சன்னி. படம் முழுக்க சன்னியின் கவர்ச்சி மழைதானாம்.

ஏப்ரல் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

டிரெய்லரே இப்படி இருந்தால் மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ....!

 

'படப்பிடிப்பில் பணம் கேட்டு ப்ளாக்மெயில்'!: நடிகர் வினய் மீது தயாரிப்பாளர் புகார்

சென்னை: படப்பிடிப்பில் தொல்லை கொடுப்பதாக நடிகர் வினய் மீது சேர்ந்து போலாமா படத் தயாரிப்பாளர் சசி நம்பீசன் புகார் கொடுத்துள்ளார்.

உன்னாலே உன்னாலே படத்தில் அறிமுகமானவர் வினய். இவர் தற்போது அனில்குமார் இயக்கும் ‘சேர்ந்து போலாமா' படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக மதுரிமா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்தது. படம் முடிந்து, வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வினய் மீது புகார் கொடுத்துள்ளார்.

'படப்பிடிப்பில் பணம் கேட்டு ப்ளாக்மெயில்'!: நடிகர் வினய் மீது தயாரிப்பாளர் புகார்

அந்தப் புகாரில், "சேர்ந்து போலாமா' படத்தின் முழு படப்பிடிப்பும் நியூசிலாந்தில் நடந்தது. இதற்காக வினய், மதுரிமா மற்றும் படக் குழுவினரை நியூசிலாந்து அழைத்துச் சென்றிருந்தேன். பேசியபடி சம்பளத்தின் ஒரு பகுதியை வினைக்குக் கொடுத்து விட்டேன். மீதித் தொகையை படப்பிடிப்பு இறுதி நாளில் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில் வினய் திடீரென தனக்கு ரூ.17 லட்சம் வேண்டும் என்றார். எனது வங்கி கணக்கில் உடனடியாக இந்த பணத்தை போட்டால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என பிளாக்மெயில் செய்தார். ஒன்றரை நாட்கள் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவாவிடம் இதுபற்றி புகார் செய்தேன். அவர் தலையிட்டதன் பேரில் மீண்டும் நடித்தார். சிவா தலையிடாவிட்டால் இந்த படமே வந்து இருக்காது. வளரும் நடிகரான வினய் தயாரிப்பாளருக்கு இதுபோல் தொல்லை கொடுப்பது சரியல்ல.

நிறைய தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டதால்தான் முன்கூட்டி பணத்தை கேட்கிறேன் என்று சொல்லி ஆடம்பிடித்தார். நியூசிலாந்தில் அவருக்கு ‘பிஎம்டபிள்யூ' கார் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதில் தினமும் ஜாலியாக சுற்றினார். படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார்," என்றார்.

 

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் விஜய்யின் புலி படப்பிடிப்பு

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘புலி' படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே படமாகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகள் சமீபத்தில்தான் ஆந்திராவின் வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இப்போது அதிரப்பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். இந்த நீர்வீழ்ச்சியை ‘இந்தியாவின் நயாகரா' என்பார்கள். எப்போதும் பெரும் வேகத்துடன் தண்ணீர் விழும் அருவி இது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் விஜய்யின் புலி படப்பிடிப்பு

இங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ‘புலி' படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.

‘புலி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது. விஜய் பிறந்த நாளில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

இனி இளையராஜாவின் பாடல்களை அகி மியூசிக், எக்கோ நிறுவனங்கள் விற்க நிரந்தரத் தடை!!

சென்னை: இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் எதையுமே இனி அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்கள் விற்பனை செய்ய அல்லது பயன்படுத்த நிரந்தரத் தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இளையராஜா, இன்றும் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இனி இளையராஜாவின் பாடல்களை அகி மியூசிக், எக்கோ நிறுவனங்கள் விற்க நிரந்தரத் தடை!!

இவரது பாடல்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு விற்பனை செய்து வந்தன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிறுவனம் அந்த உரிமையைப் பெற்று விற்று வந்தது.

அவரது பெருமளவு பாடல்களை வெளியிட்ட எக்கோ நிறுவனம், இளையராஜாவுக்கு தரவேண்டிய பல கோடி ரூபாய் ராயல்டியை இன்னும் தரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தனது படங்களின் இசை வெளியீட்டு உரிமையை மலேசியாவைச் சேர்ந்த அகி மியூசிக் என்ற நிறுவனத்துக்குத் தந்தார் இளையராஜா. ஒரு பைசா கூட முன்பணமோ, வேறு தொகையோ பெறாமல் இலவசமாகவே இந்த உரிமையைக் கொடுத்தார் இளையராஜா.

அப்படிப் பெற்ற பாடல்களை கடந்த சில ஆண்டுகளாக ஐட்யூன், சிடிகள் வழியாக விற்பனை செய்து பெரும் வருவாய் ஈட்டியது அகி மியூசிக் நிறுவனம்.

ஆனால் தனக்குத் தரவேண்டிய காப்புரிமைத் தொகையை முறையாகத் தராமல் மோசடி செய்ததாக இளையராஜா குற்றம் சாட்டினார். எனவே அகி மியூசிக் நிறுவனத்துக்கு கொடுத்த விற்பனை உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தார்.

ஆனால் இளையராஜாவின் முடிவுக்கு எதிராக அவரது பாடல்களை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் ஆல்பங்களாக்கி வெளியிடுவதில் மும்முரம் காட்டியது அகி மியூசிக்.

இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் இளையராஜா. தனது பாடல்களை அகி மியூசிக்கோ, எக்கோ நிறுவனமோ, இவர்களின் சார்பில் மறைமுகமாக வேறு நிறுவனங்களோ விற்பனை செய்ய தடை கோரினார்.

பல மாதங்களாக நடந்து வந்த வழக்கில், சில வாரங்களுக்கு முன்பு இளையராஜா பாடல்களை விற்பனை செய்ய அகி மியூசிக் மற்றும் எக்கோ நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், "இனி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களை விற்பனை செய்யவோ, எந்த வகையிலும் பயன்படுத்தவோ அகி மியூசிக் மற்றும் எக்கோ ரிகார்டிங் உள்ள நிறுவனங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இளையராஜாவின் இசையில் வெளியாகியுள்ள 6500-க்கும் மேற்பட்ட பாடல்கள், 28-க்கும் மேற்பட்ட தனி ஆல்பங்கள் போன்றவற்றை மறு வெளியீடு செய்யும் உரிமை முழுவதுமாக அவற்றை உருவாக்கிய இளையராஜாவுக்கே சொந்தமாகியுள்ளது.

 

விபத்தில் சிக்கிய மகன்… உத்தமவில்லன் படப்பிடிப்பு-நெகிழ்ச்சியில் நாசர்

சென்னை: நிறைய படங்களில் நடித்துவிட்டாலும், 'உத்தம வில்லன்' எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார். தன் மகனுக்கு விபத்து ஏற்பட்டபோது, 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டது ஏன் என்பதற்கு அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது

கமல் நடிப்பில் தயாராகி இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் கமல் உடன் நாசர் நடித்திருக்கிறார்.

விபத்தில் சிக்கிய மகன்… உத்தமவில்லன் படப்பிடிப்பு-நெகிழ்ச்சியில் நாசர்

இப்படத்தின் படப்பிடிப்பின்போது தான் நாசரின் மகனுக்கு விபத்து நேரிட்டது. எனினும் நாசர் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனால், நாசரின் மகனுக்கு விபத்து நேரிட்டபோது கூட கமல் விடாமல் படப்பிடிப்பு நடத்தினார் என்று செய்திகள் வெளியானது. இதற்கு நாசர் மறுப்பு தெரிவித்தார். அன்றைக்கு நடந்தது என்ன என்பதை இசை வெளியீட்டு விழாவின் மேடையில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

"ஈ.சி.ஆர் சாலையில் தான் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு நடைபெற்றது. அன்றைய தினம் அதே சாலையில் தான் எனது மகனுக்கும் விபத்து நேரிட்டது. விபத்து நேரிட்ட உடன் நான் எனது காரில் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றேன்.

எனது மகன் ஐ.சி.யூவில் இருந்ததால் பார்க்க முடியவில்லை. எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. உடனே கமலுக்கு போன் பண்ணி "சார்.. நான் நாளைக்கு படப்பிடிப்பிற்கு வருகிறேன்" என்றேன்.

"அதெல்லாம் வேண்டாம். நீங்கள் மகனைப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றவரிடம் "இல்லை சார்.. நான் வர்றேன்" என்றேன்.

ஒரு சிறு மெளனத்திற்குப் பிறகு "சரி வாங்க" என்றார். நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது, நாங்கள் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக போடப்பட்ட செட் எல்லாம் கலைக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் நான் போய் மேக்கப் போட்டேன். மேக்கப் போட 3 மணி நேரமாகும். அப்போது கண்ணை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்.

என் பையனும் இப்படித்தானே மருத்துவமனையில் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். மேக்கப் போட்டு முடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து உட்கார்ந்து விட்டேன். அன்றைக்கு நான் போட்ட மேக்கப்பிற்கு காட்சியே இல்லை. ஆனாலும், என்னை வைத்து ஒரு காட்சியை எடுத்தார்கள். அது தான் கமல்.

மறுநாள் படப்பிடிப்பிற்கு போனேன். திரும்பவும் அதே பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இருந்தது. சினிமாவில் மட்டும் தான் ஒரே நாள் இரவில் கோட்டையை அழிக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும்.

எனது மகனுக்கு விபத்து நேரிட்ட போது எனக்காக சில லட்சங்கள் இழந்து செட்டை போட்டு பிரிந்து என எனக்காக எல்லாமும் செய்தார் கமல். அதே போல, விபத்து நடந்த அன்று காரில் மருத்துவமனைக்கு போய் கொண்டிருக்கிறேன்.

அன்றைய தினம் என்ன காரணம் என்று தெரியவில்லை, ஈ.சி.ஆர் சாலையில் கடும் நெரிசலால் மெதுவாகத் தான் செல்ல முடிந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து, உங்க பையனை இப்போ இங்கே கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள், இப்போது இந்த டெஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது, இப்போ இது பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அப்போது கூட "நாசர்....எந்தொரு காரணத்தைக் கொண்டும் வாட்ஸ்-அப்பில் வரும் விபத்து புகைப்படத்தை நீங்களோ, உங்களது மனைவியோ பார்க்கக் கூடாது." என்றார். இன்று வரை நான் அதை பார்க்கவில்லை. அதற்கு காரணம் கமல்.

விபத்து நடந்த சமயத்தில் நான் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பிற்கு திரும்பாமல் இருந்திருந்தால் இன்று வரை நான் படங்களின் நடித்திருப்பேனா என்று தெரியவில்லை. இதுவரை நிறைய படங்களில் நடித்துவிட்டாலும், 'உத்தம வில்லன்' எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம்" என்று பேசினார் நாசர்.

 

எடிட்டர் கிஷோர் உடல் நிலை... சரத்குமாரின் ட்விட்டர் பதில்!

சென்னை: தேசிய விருது பெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலைமையைப் பாருங்கள் என்ற தலைப்பில் தட்ஸ்தமிழ் (ஒன்இந்தியா தமிழ்) வெளியிட்ட செய்திக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
எடிட்டர் கிஷோர் கடந்த இரு தினங்களாக கோமா நிலையில் விஜயா மருத்துவமனையில் கிடக்கிறார். வெள்ளிக்கிழமையன்று மயங்கி விழுந்த அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அவர் யார் என்று அடையாளம் தெரியாததால் முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர் அவரது உறவினர்கள்.
இந்த நிலையில் அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, தலை முழுக்கப் பரவி விட்டதால் அவரைக் காப்பாற்றுவது கஷ்டம் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்களாம்,

தேசிய விருது பெற்ற ஒரு முன்னணி திரைப்படக் கலைஞரை கவனிக்கக் கூட ஆளில்லை என்று நமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இந்த செய்தியின் சுட்டி ட்விட்டரில் பகிரப்பட்டிருந்தது. இதனை சிலர் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கு பகிர்ந்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், "கிஷோரின் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளிச்ச உயர் மருத்துவர்களிடம் தொடர்பில் உள்ளோம். கிஷோரின் சகோதரர் மற்றும் இயக்குநர் வெற்றி மாறனிடமும் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
 

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சோனம் கபூர் உடல் நிலையில் முன்னேற்றம்

மும்பை: பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர், நடிகர் சல்மான்கானுடன் பிரேம் ரத்தன் தான் பயோ' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்த கொண்டல் பகுதியில் நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை சோனம் கபூர் திடீரென பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த அவரது தாயார் சுனிதா கபூர் ராஜ்கோட் விரைந்து, சோனம் கபூரை தனி விமானம் மூலம் மும்பை அழைத்து வந்தார். பின்னர், சோனம் கபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சோனம் கபூர் உடல் நிலையில் முன்னேற்றம்

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவார் என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

மேலும், சோனம் கபூர் மீது ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் கொண்டுள்ள அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

 

வாய் பிளக்கும் கோடம்பாக்கம்: 'ரஜினி முருகன்' ரூ 40 கோடிக்கு விற்பனை?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள காக்கி சட்டை கலவையான விமர்சனங்களுடன், ஓட்டத்தில் சற்றே மந்தப்பட்டாலும், அவரது அடுத்த படத்துக்கான வர்த்தகம் குறித்து வெளியாகும் தகவல்கள் கோடம்பாக்கத்தை வாய் பிளக்க வைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்த படம் ரஜினி முருகன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தந்த பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வாய் பிளக்கும் கோடம்பாக்கம்: 'ரஜினி முருகன்' ரூ 40 கோடிக்கு விற்பனை?

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஏகத்துக்கும் சம்பளம் கேட்ட சிவா, கதையைக் கேட்ட பிறகு அமைதியாக ஒப்புக் கொண்டாராம். வெற்றிப் படத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த கதையாம்.

இப்போது ஷூட்டிங்கெல்லாம் முடிந்து, மே மாதம் வெளியாகத் தயாராக உள்ள நிலையில், படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. ரூ 40 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமாவின் பரபரப்பான சமாச்சாரமாகப் பேசப்படுகிறது.

எட்டுப் படங்களில்தான் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்குள் அவரது படம் ஒன்றின் வர்த்தகம் ரூ 40 கோடிக்கு நடந்திருப்பது சாதாரண விஷயமா என்ன?

ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், பரோட்டா சூரி, சமுத்திரக்கனி நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். படத்தை திருப்பதி பிரதர்ஸுடன் இணைந்து ஈராஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

தேசிய விருதுபெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலையைப் பாருங்கள்!

எடிட்டர் கிஷோர்... ஆடுகளம் படத்துக்காக சிறந்த படத் தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்ற 36 வயது இளைஞர்.

இன்று மரணத்தின் விளிம்பில். விஜயா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மிகச் சிறந்த திறமையாளரை நேற்று நள்ளிரவு வரை யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

மருத்துவமனை நிர்வாகமோ, 'இவர் கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலைதான். இனி சிகிச்சையளிப்பதில் பலனில்லை' என்றே கூறிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த வேதனையில் கிஷோரின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விருதுபெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலையைப் பாருங்கள்!

ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில்... இப்படி தமிழ் சினிமாவின் தேர்ந்த 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கிஷோர்.

எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உலகத்தரமான சினிமாவை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு துணை நின்ற இந்த கிஷோரை, கவனிக்கக் கூட நேரமின்றி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் அவருடன் பணியாற்றியவர்கள்.

இயக்குநர் வெற்றிமாறன்தான் கிஷோரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தாராம். அதன் பிறகு யாருமே அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். உடனிருந்து கவனிக்கவும் ஆளில்லையாம்.

தேசிய விருதுபெற்ற ஆடுகளம் எடிட்டர் கிஷோரின் நிலையைப் பாருங்கள்!

சரி, அவரது உடம்புக்கு என்ன?

விசாரித்தால், மூளையில் ரத்தம் கசிந்து, இப்போது பெருமளவு பரவி, அவர் நினைவைப் பறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் அவர் பிழைப்பார்... தயவு செய்து முயற்சி செய்யுங்கள் என்று மருத்துவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் கிஷோரின் பெற்றோரும், நண்பர்களும்.

'திரையுலகினர் ஏதாவது செய்ய வேண்டும்... இவ்வளவு புகழ்பெற்ற, அதுவும் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிற ஒரு கலைஞனுக்கே இந்த நிலையா..' என்று குமுறித் தீர்க்கின்றனர் கிஷோரின் நண்பர்கள்.

 

அருள்நிதிக்கு கெட்டிமேளம்... முன்னாள் நீதிபதி மகளை மணக்கிறார்... நிச்சயதார்த்தம் நடந்தது!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தேறியது.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீதனாவை அருள்நிதி மணக்கிறார்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்பட கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்றனர். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.

அருள்நிதிக்கு கெட்டிமேளம்... முன்னாள் நீதிபதி மகளை மணக்கிறார்... நிச்சயதார்த்தம் நடந்தது!

கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மு.க.அழகிரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த விழாவில் கலந்துகொண்டார். மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரியுடன் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் முக அழகிரி, மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அழகிரியை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் முக தமிழரசு.

கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மீடியா உள்பட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை.

 

புது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா!

வாகை சூட வா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் என பெரிய படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர் இனியா.

ஆனால் நடித்தால் பெரிய நடிகர் அல்லது முன்னணி நடிகருடன்தான் நடிப்பேன் என்ற அடமெல்லாம் இல்லை.

முன்பு 'அந்தக் கால' ராம்கிக்கு ஜோடியாக நடித்தவர், இப்போது புதுமுக ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படம் 'காதல் சொல்ல நேரமில்லை'.

புது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா!

இப்படத்தில் உதய்குமார் நாயகனாக நடிக்கிறார். சி.எச். ராஜ்குமார் ஒளிப்பதிவை கவனிக்க குமார் பாண்டியன் இசையமைக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி தயாரித்து இயக்குகிறார் ஸ்ரீநிவாசன்.

படம் பற்றி இயக்குனர் ஸ்ரீநிவாசனிடம் கேட்டோம்.... 'இது ஒரு ஜாலியான கதை! கதாநாயகன் ஒரு பிளேபாய். பார்க்கிற எல்லா பெண்களையும் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைபவன். உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொலிக்கொண்டிருப்பான்.

அந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்கையைப் பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். நாயகன் புதியவர் என்றாலும், கதைப் பிடித்திருந்ததால் சம்மதித்தார் இனியா.

படப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது," என்றார் இயக்குனர்.

 

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: நகுல், பிந்து மாதவி, தினேஷ், ஐஸ்வர்யா மேனன், சதீஷ், மனோபாலா

ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி

இசை: தமன்

தயாரிப்பு: விஎல்எஸ் ராக் சினிமா

எழுத்து - இயக்கம்: ராம்பிரகாஷ் ராயப்பா


பழகிய காதல் கதையில், கொஞ்சம் மொபைல் போன் தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிதாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.

சென்னையை குண்டு வைத்துத் தகர்க்க கிளம்பி வருகிறான் ஒரு தீவிரவாதி. பெரிய கட்டடம் அருகே ஒரு கால் டாக்சியில் குண்டைப் பொருத்திவிட்டு அவன் கிளம்புகிறான். செல்போனில் மூன்று ரிங் போனால் செல்போன் வெடித்துவிடும். சரியாக இரண்டாவது ரிங் போகும்போது, காந்தப் புயல் தாக்க.. செல்போன் சேவை முற்றாகத் துண்டிக்கப்படுகிறது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - விமர்சனம்

அப்புறம் ரொம்ப நேரத்துக்கு காந்தப் புயல் தாக்கும் குறையவே இல்லை. செல்போன்கள் மரணித்துவிட...

எஞ்ஜினீயரிங் முடித்துவிட்டு, சுய தொழிலாக மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுக்கும் நகுல் - ஐஸ்வர்யா தத்தா காதல், வாயிலேயே வடை சுடும் ரியல் எஸ்டேட் பார்ட்டி தினேஷ் - பிந்து மாதவி காதல், டாக்ஸி ட்ரைவர் சதீஷ் - ஷாலு ஆகியோர் காதல்கள் இந்த செல்போன் குண்டுவெடிப்புக்கு இடையே ஊசலாடுகின்றன.

செல்போன் சேவை சரியானதா? குண்டு வெடித்ததா? காதலர்கள் கதி என்ன? என்பதையெல்லாம் திரையில்...

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - விமர்சனம்

படத்தில் நகுல், தினேஷ், சதீஷ் என மூன்று ஹீரோக்கள்.. மூவருக்கும் தொடர்பில்லை. மூவரின் கதைகளும் கூட ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவை. ஆனால் செல்போன் என்ற ஒரு விஷயம் தவிர. இந்த மூன்று ஜோடி, காந்தப் புயல், வெடி குண்டு, செல்போன் சேவை ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறு திரைக்கதையைத் தந்திருக்கிறார் ராம்பிரகாஷ் ராயப்பா. ஆனால் பல காட்சிகளில் தெளிவின்மையும் அழுத்தமின்மையும்தான் இதன் மைனஸ்கள்.

ஐந்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் ஐந்து லட்சத்துக்கு நடிக்கும் பார்ட்டியான நகுல் இதில் ரொம்ப்ப்ப..வே அடக்கி வாசித்திருக்கிறார். அதனால் இவர்தான் ஹீரோவா என்ற சந்தேகம் எழுகிறது. காதலிக்கு அனுப்ப வேண்டிய எஸ்எம்எஸ்ஸை அம்மா ஊர்வசியை விட்டு அனுப்பும் காட்சியும் அந்த காட்சியில் நகுல் - ஊர்வசியின் யதார்த்தமான நடிப்பும் அட்டகாசம்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - விமர்சனம்

டுபாக்கூர் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் பாத்திரத்துக்கு அச்சு அசலாகப் பொருந்துகிறார் தினேஷ். அவருக்கு ஜோடியாக வரும் பிந்து மாதவியைப் பார்க்கலாம்.. ஆனால் இன்னும் ரசிக்கும் அளவுக்கு அவருக்கு நடிப்பு வரவில்லை.

நகுல் ஜோடியாக வரும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால் அந்த மொட்டை மாடிக் காட்சி ரசிக்க வைக்கிறது.

சதீஷ் - ஷாலு ஜோடி கலகலக்க வைக்கிறது. மொபைல் திருடனாக வரும் அந்த இளைஞனும்தான்.

மனோபாலா பாத்திரம் அத்தனை செயற்கை. இப்படி கேனத்தனமான ஒரு பிரின்ஸியை டுபாக்கூர் எஞ்ஜினியரிங் கல்லூரிகளில் கூட பார்த்ததில்லை.

செல்போன் டவர்களை இணைக்கும் காட்சி அநியாயத்துக்கு நீளமோ நீளம். பொறுமையைச் சோதிக்கும் எபிசோட் அது. நடித்தவர்களுக்கு மட்டுமல்ல, செல்போன் கம்பெனிகளுக்கே கூட இவர்கள் சொன்னது புரிந்திருக்குமா தெரியவில்லை. படத்தில் வரும் செல்போன் கம்பெனி ஓனர் மாதிரி தேமே என்று உட்கார்ந்திருக்க வேண்டியுள்ளது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - விமர்சனம்

அதேமாதிரி பிந்து மாதவி அந்த குழியில் விழுவதும் படு செயற்கை.

செந்தில் குமார் வசனங்கள், தீபக்குமார் வசனங்கள் படத்துக்கு ப்ளஸ். தமனின் இசை, பாடல்கள் இரண்டுமே தேறவில்லை. பின்னணி இசை என்ற பெயரில் ஏகப்பட்ட கருவிகளை உருட்டியிருக்கிறார்.

தலைப்புக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு என்பதை இயக்குநருக்கே வெளிச்சம். ஒரு முறை பார்க்கலாம் ரகப் படப் பட்டியலில் இன்னும் ஒன்று!