ஜெயமாலா மீது சபரி மலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி சிலையை நடிகை ஜெயமாலா தொட்டதாக கூறியது உண்மையல்ல, நாடகம் என்று ஜெயமாலா மீது கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் பி.உன்னிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ஏ.என்.ரகுபதி ஆகியோரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சபரிமலையில் தேவ பிரசன்னம் பார்த்த ஜோதிடர் பி. உன்னிகிருஷ்ண பணிக்கர், கோயில் கருவறைக்குள் பெண் ஒருவர் நுழைந்து சுவாமி சிலையை தொட்டுவிட்டதாகக் கூறினார். அந்தப் பெண் ஒரு நடிகை என்றும், நடனம் தெரிந்தவர் என்றும் கூறினார். சபரிமலை கோயிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இத்தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது எனப் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், சபரிமலைக்கு வந்திருந்தபோது சுவாமி சிலையை தொட்டதாக நடிகை ஜெயமாலா, கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து, நாடகத்தை நடத்தியதாக போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து ஜெயமாலா உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், கூட்டுச் சதி செய்து தவறான தகவலைப் பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி

ஜெயமாலா உள்ளிட்ட மூவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சதீஷ் சந்திரன் விசாரித்தார்.

அவர் அளித்த தீர்ப்பில், "பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் ஜெயமாலா, உன்னிகிருஷ்ண பணிக்கர், ரகுபதி ஆகியோர் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கையை தொடர முடியாது. எனவே அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது; வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இனி பிரைவேட் விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது! - பிலிம்சேம்பர் உத்தரவால் கேரள நடிகர்கள் ஷாக்!

Kerala Film Chamber Bans Actors Att

திருவனந்தபுரம்: கேரள படங்களின் தொடர் தோல்வி காரணமாக, இனி நடிகர், நடிகைகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முக்கிய வருவாய் ஆதாரமாக இந்த தனியார் விழாக்கள் இருப்பதால், அடுத்து என்ன செய்வதென ஆலோசனையைத் தொடங்கியுள்ளனர் கேரள நடிகர் சங்கத்தினர்.

கேரளாவில் சமீப காலமாக திரையிடப்படும் சினிமாக்கள் குறிப்பிட்ட வசூலும் பெறாமல் தோல்வி அடைந்து வந்தன. முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் தோல்வியை தழுவின. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்குள்ளானார்கள்.

இந்நிலையில் கேரளா பிலிம் சேம்பர் கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் மலையாள சினிமா நடிகர்கள் பல்வேறு விழாக்களில் கலந்து கொள்வதால் சினிமா வசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று புகார் எழுப்பப்பட்டது. எனவே அரசு விருது விழாக்களை தவிர மற்ற தனியார் விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்த தடை அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை மலையாள நடிகர் சங்கத்துக்கு அனுப்பவும் தடையை மீறி யாராவது விழாக்களில் கலந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள பிலிம் சேம்பர் முடிவு செய்துள்ளது.

பிலிம் சேம்பரின் இந்த முடிவால் மலையாள நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓரளவு பிரபல நடிகைகளாக இருந்தால் கூட, ஒரு தனியார் விழாவில் பங்கேற்க ரூ 3 லட்சம் வரையிலும், மேடையில் ஆட, பாட வேண்டுமானாலும் ரூ 8 லட்சம் வரையிலும் தரப்படுகிறது. முன்னணி நடிகர் - நடிகைகளுக்கு இதைவிட மூன்று மடங்கு வரை தருகிறார்கள்.

விளம்பரப் படங்களில் நடிக்க இன்னும் அதிக சம்பளம் வாங்குகிறார்கள்.

சினிமாவில் தருவதைவிட இது அதிகம் என்பதால், தனியார் விழாக்கள், விளம்பரங்களுக்கு முன்னுரிமை தருகின்றனர் நடிகர் நடிகைகள்.

 

உறவுகள் 800 : களைகட்டிய கொண்டாட்டம்

Uravugal Seriyal 800 Episode

சன் டிவியில் ஒளிபரப்பாகும் உறவுகள் தொடர் 800 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளதை ஒட்டி சென்னையில் பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களப்படுத்தினர்.

சேன் மீடியா நிறுவனம் அகல்யா தொடங்கி உறவுகள் வரை பல்வேறு தொடர்களை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளது. இதில் உறவுகள் தொடர் 800 எபிசோடுகளை கடந்துள்ளது. இதில் ஸ்ரீகுமார், ராஜ்காந்த், பீலிசிவம், சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதற்காக நடைபெற்ற சிறப்பு விழாவில். நட்சத்திரங்களுக்கு மியூசிகல் சேர் போட்டி நடைபெற்றது. மேடையில் சில குத்தாட்டப் பாடல்களை ஒலிபரப்பி அதற்கு நட்சத்திரங்களை ஆடச் சொன்னார்கள். பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த் உள்ளிட்ட சிலர் ஆடினார்கள். ஏற்கனவே `மானாட மயிலாட' என இவர்கள் ஆடியிருந்ததால் ஸ்டெப்களிலும் அசத்தினார்கள்.

விழா நடந்த தினம் தான் நடிகர் ராஜ்காந்துக்கும் பிறந்த நாள். அதற்காக திடீர் சஸ்பென்சாய் ஒரு பெரிய கேக்கை மேடைக்கு வரச்செய்து, ராஜ்காந்தையும் அழைத்து கேக் வெட்டச் செய்தார்கள். இதில் ராஜ்காந்திற்கு ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது.

சேன் மீடியா நிறுவனத்தின் முதல் தொடரான `அகல்யா' தொடரில் நடித்த மஞ்சரி சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இப்போது முத்தாரம் தொடரில் நடித்து வரும் தகவலை சொன்ன மஞ்சரி, `இது குடும்ப உறவுகள். அதனால் தான் முதல் சீரியலில் நடித்த என்னையும் மறக்காமல் அழைத்திருக்கிறார்கள்' என்று நெகிழ்ந்தார்.

சேன் மீடியாவின் ஆஸ்தான கதாசிரியர் குமரேசன் விருதுக்காக மேடையேறியபோது கைத்தட்டல் அதிர்ந்தது. இந்த நிறுவனத்தின் தொடர்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர்கள் சிவா, ஹரி, பாலாஜியாதவ் மூவரையும் ஒரேநேரத்தில் மேடையேற்றி விருது கொடுத்தனர்.

விழாவில் உறவுகள் தொடரில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமின்றி நட்பு முறையிலான நட்சத்திரங்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் சேன் மீடியா ஏற்கனவே தயாரித்த அகல்யா, பந்தம் தொடர்களில் நடித்த கலைஞர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சம்.

 

யார் இந்த அஜீத்? - அரபியர்கள் கேட்டாங்களாம்!

Ajith Makes Arabs Wonder About Him

அஜீத் குமாரின் பில்லா 2 படத்துக்கு முதல் நாள் காட்சிக்கு கத்தாரில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து யார் இந்த அஜீ்த் குமார் என்று அரபிக்காரர்கள் கேட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அஜீத் குமாரின் பில்லா 2 நேற்று தமிழகம் மட்டுமின்றி உலகின் சில பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது. கத்தாரில் உள்ள தமிழர்களுக்கு அஜீத்தின் படத்தை கடந்த வியாழக்கிழமையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. படம் ரிலீஸான முதல் நாள், ஏகப்பட்ட கூட்டம் திரண்டுவிட்டதாம்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவிட்டார்களாம். தியேட்டர் இருக்கும் பக்கமாகச் சென்ற அரபுக்காரர்கள் சிலர் 'யார் இந்த அஜீத் குமார்?' என்று தங்களைக் கேட்டதாக, அஜீத்தின் ரசிகர்கள் சிலர் 'பெருமை'யுடன் கூறியுள்ளனர்.

நாம என்ன கத்தார்ல போயி பாத்தமா.. சொன்னா கேட்டு வைக்க வேண்டியதுதான்!

 

நாங்கள்லாம் மியூசிக் டைரக்டர்கள்... ஆனா அப்பா ஒருத்தர்தான் மியூசிக் கம்போஸர்! - யுவன்

We Are Music Directors But My Dad I

திரையுலகில் என்னைப் போன்றவர்கள் இசை இயக்குநர்களாக இருக்கலாம். ஆனால் இசையை உருவாக்கும் கம்போஸர் என்ற அந்தஸ்துள்ள ஒருவர் அப்பா மட்டுமே (இசைஞானி இளையராஜா), என்று கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

இளையராஜா இசையமைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். சாய்ந்து சாய்ந்து என்று தொடங்கும் அந்தப் பாடலின் பைனல் மிக்ஸிங் முடிந்த பிறகு, பாட்டைக் கேட்டுள்ளார் யுவன்.

தன் வாழ்நாளில் அத்தனை சிறப்பான இசையைக் கேட்டதில்லை என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த, யுவன் இந்த வாய்ப்புக்காக இசைஞானிக்கும் இயக்குநர் கவுதமுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ளது:

சாய்ந்து சாய்ந்து பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன். ஒரு பைத்தியம் மாதிரி அதிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாடலில் ஒரு பகுதியாக நான் இருந்தது ஆசீர்வாதம். கற்பனைக்கெட்டாத இசை. அப்பா கிரேட்!

அந்தப் பாடலின் இறுதி வடிவம் கேட்டதும், பேச்சற்றுப் போனேன். தூய்மையான இசையென்றால் என்னவென்று தெரிந்து கொண்டேன். இந்தப் பாடலை பாடச் செய்த கவுதமுக்கு நன்றி.

நாங்கள் எல்லோரும் இசையமைப்பாளர்கள் (மியூசிக் டைரக்டர்ஸ்)... ஆனால் அப்பா (இளையராஜா) ஒருவர்தான் மியூசிக் கம்போஸர்!

 

தலையை மொட்டையடித்து சந்நியாசினியாய் போன கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ!

Thanushree Dutta Tuns Sanyasi

தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, திடீரென சந்நியாசினியாக மாறிவிட்டார்.

10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார்.

ஒரு சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன்.

ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமையானவை. இரக்கமற்ற மனிதர்கள், இதயத்தை நொறுங்க வைத்தவர்களால் நான் பட்ட மன அழுத்தங்கள் கொஞ்சமல்ல. எனக்கு ஆதரவு தரக்கூட நண்பர்கள் இல்லை. நான் இந்த முடிவை எடுக்கக் காரணம் இவைதான்..

ஒரு மாதத்துக்கு முன்புதான் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் ஒரு குறை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனவே லடாக் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே என் தலைமுடியை மொட்டை அடித்துவிட்டேன். இதற்கு காரணம் என்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான்," என்றார்.

தனுஸ்ரீ தத்தாவின் இந்த முடிவும் அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணங்களும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

முதல் சந்திப்பிலேயே இம்ரானுடன் 1 மணிநேரம் கடலை போட்ட சோனாக்ஷி

When Imran Sonakshi Bonded With Eac

பாலிவுட் நடிகை சோனாக்ஷி நடிகர் இம்ரான் கானை முதன்முதலாக சந்தித்தபோதே சுமார் 1 மணி நேரமாக நீண்ட கால நண்பர்களைப் போல பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இளம் நடிகர் இம்ரான் கானுடன் சேர்ந்து ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை அடுத்த பாகத்தில் நடிக்கிறார். முந்தைய பாகத்தில் அஜய் தேவ்கன், பிராச்சி தேசாய், கங்கனா ரனவ்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது எடுக்கும் படத்தில் அக்ஷய் குமார், சோனாலி பிந்த்ரே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சோனாக்ஷி இம்ரான் கானை முதன்முதலாக சந்தித்தார். ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக அவர்கள் இருவரும் நீண்டகாலம் பழகியவர்களைப் போல அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

கடைசியில் யாரோ ஒருவர் வந்து நீங்கள் இரண்டு பேரும் ஒரு மணிநேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்ன பிறகு தான் 1 மணிநேரம் ஓடியதையே அவர்கள் உணர்ந்துள்ளனர்.

இம்ரான் அண்மையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணம் குறித்து அவர் கூறியதாகவும், ஐரோப்பாவில் உள்ள இடங்கள் பற்றி சோனாக்ஷி கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

பேசியதை விட அதிக கேட்டு மலையாள இயக்குநருடன் நடிகை பத்மப்ரியா மோதல்!

Padmapriya Starts New Fight With Di   

கூடுதல் சம்பளம் கேட்டு தன்னுடன் தகராறு செய்கிறார், படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் நடிகை பத்மப்ரியா என மலையாள இயக்குநர் நிஷாந்த் புகார் கூறியுள்ளார்.

நடிகை பத்மபிரியாவுக்கும் மலையாள இயக்குனர் நிஷாந்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் இயக்கும் நம்பர் 66 மதுரை பஸ் என்ற படத்தில் பத்மபிரியாதான் கதாநாயகி.

தனது மானேஜருக்கு சம்பளம் தர வேண்டும் என்று இயக்குனரிடம் பத்மபிரியா நச்சரித்து உள்ளார். மலையாள நடிகர், நடிகைகள் தங்களுக்கு மானேஜர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேரள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து உள்ளது. அதனை காரணம் காட்டி மானேஜருக்கு சம்பளம் தர நிஷாந்த் மறுத்து விட்டார்.

இதையடுத்து நம்பர் 66 மதுரை பஸ் படப்பிடிப்பை பத்மபிரியா புறக்கணித்து விட்டார். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பத்மபிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தயாரிப்பானர் சங்கத்தில் நிஷாந்த் புகார் அளித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து நிஷாந்த் கூறுகையில், "நடிகர், நடிகைகள் மானேஜர் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மலையாள தயாரிப்பாளர் சங்கம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதையும் மீறி பத்ம பிரியா மானேஜர் ஒருவரை நியமித்து கமிஷன் கேட்கிறார்.

அதாவது பத்மபிரியா சம்பளத்தில் இருந்து 20 முதல் 25 சதவீதம் கமிஷனாக கேட்கிறார். அந்த தொகையை அளிக்கும்படி பத்மபிரியா எங்களை நிர்ப்பந்தம் செய்கிறார். அவரை ரூ.8 லட்சம் சம்பளத்துக்கு தான் ஒப்பந்தம் செய்தேன். படத்தின் டி.வி. உரிமையை விற்றதும் ரூ.10 லட்சம் சம்பளம் வேண்டும் என்கிறார். படப்பிடிப்புக்கும் வர மறுக்கிறார்," என்றார்.

இது குறித்து பத்ம பிரியாவிடம் கேட்டபோது, "இயக்குனர் நிஷாந்த்தக்கும் எனக்கும் இடையே உள்ள சர்ச்சையை ஏன் பெரிது படுத்துகிறார்கள் என்று புரியவில்லை. இந்த விவகாரம் தேசிய அளவிலான பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடுமா? நிஷாந்துக்கும் எனக்குமிடையிலான சர்ச்சையை வெளிப்படையாக பேச நான் விரும்ப வில்லை. என்ன சொல்ல வேண்டுமோ அதை தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்வேன்," என்றார்.

 

'அட கண்றாவியே..திருமணத்துக்குப் பிறகும் படுக்கையறை காட்சியா?' - ரீமா சென் மீது கணவர் கோபம்!

Shiv Karan Angry On Reema Sen

திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண்.

நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து 'அட கண்றாவியே' என தலையிலடித்துக் கொண்டாராம். அவரது குடும்பத்தினரும் உறவினர்களோடு போய் மருமகளின் 'சீனைப்' பார்த்து அவமானப்பட்டுள்ளனர்.

இதனால் ரீமாசென்-ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கவர்ச்சியாக இனி மேல் நடிக்கக் கூடாது என்று ரீமாசென்னுக்கு கணவர் தடை விதித்துள்ளாராம்.

இதனை ரீமாவும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறும்போது, "கேங்க்ஸ் ஆப் வசேபூர் 2 படத்தை எனது கணவர் பார்த்தார். அப்படத்தில் நான் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அவர் மனம் புண்பட்டுள்ளார். ஆனாலும் நடிப்பைத் தொடரப் போகிறேன்," என்றார்.

அதானே.. வீட்டுக்காரருக்காகவெல்லாம் படுக்கையறைக் காட்சியில் நடிக்காமல் இருக்க முடியுமா என்ன!!

 

சல்மான் படத்துக்காக பெல்லி டான்ஸ் கற்ற கத்ரீனா

Katrina Learns Belly Dancing Ek Th

சல்மான் கான் நடிக்கும் ஏக் தா டைகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கத்ரீனா கைப் அந்த படத்திற்காக பெல்லி டான்ஸ் கற்றுள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ஏக் தா டைகர். இந்த படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டதாகப் பேசப்படுகிறது. மேலும் படப்பிடிப்பின்போது கத்ரீனா கைப் அரைகுறை ஆடையில் வந்ததைப் பார்த்து கடுப்பான சல்மான் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டார் என்று ஒரே பேச்சாகக் கிடந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் மாஷா அல்லாஹ் என்ற பாட்டிற்காக கத்ரீனா கைப் பெல்லி டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளாராம். ஏற்கனவே அவர் குத்தாட்டம் போட்டு ஹிட்டான ஷீலா கி ஜவானி மற்றும் சிக்னி சமேலி போன்று மாஷா அல்லாஹ் பாடலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி தடை எதுவும் விதிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

 

தடைகளைப் பற்றி கவலையில்லை – மகாலட்சுமி

Serial Actress Mahalakshmi Intervie

புடவையோ, மாடர்ன் டிரஸ்ஸோ எந்த உடை என்றாலும் அழகாய் பொருந்துகிறார் மகாலட்சுமி. ஆனால் அந்த வில்லத்தனம்தான் இல்லத்தரசிகளின் மனதில் கோபத்தை உண்டுபண்ணுகிறது. அரசியில் தொடங்கி, செல்லமே, உதிரிப்பூக்கள், ஜெயா டிவியில் இருமலர்கள் என தொடர்ந்து வில்லத்தனம் செய்தே வீடுகளில் திட்டுவாங்குகிறார்.

சின்னத்திரைக்கு வந்து சிறிது காலத்​தி​லேயே தனக்​கென்று ஒரு இடத்​தைத் தக்க வைத்​துக் கொண்​ட​வர் மகாலட்சுமி. இப்போது செல்லமே, இருமலர்கள், உதிரிப்பூக்கள் என தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏகப்​பட்ட தொடர்​களை கைவ​சம் வைத்​துக் கொண்டு,​​ ​படு பிஸி​யாக இருக்​கும் மகாலட்சுமி, தனது சின்னத்திரை பயணம் பற்றி கூறுவதைக் கேட்போம்.

என்னுடைய சின்னத்திரை பயணம் சன் மியூசிக்கில் காலை நேரத்தில் வாழ்த்தலாம் வாங்க நிகழ்ச்சியில் ஆரம்பித்தது இப்போது சீரியல்களில் தொடர்கிறது. நடிக்​க​ணும் என்ற ​ எண்​ணமே கிடை​யாது.​ நிகழ்ச்சி தொகுப்போ,​​ சீரி​யலோ இரண்டுமே தானா​க​வே​தான் அமைந்​தன.​

அம்மா சுபி.​ அப்பா சங்​கர் அவர் சினி​மா​வில் ​ கொரி​யோ​கி​ராபி பண்​ணிக்​கிட்டு இருக்​கார்.​ தம்பி பன்னி​ரெண்​டாம் வகுப்பு படித்து கொண்​டி​ருக்​கி​றான்.​ அம்மா எக்ஸ்​போர்ட் பிஸி​னஸ் பண்​ணிக்​கிட்டு இருந்​தாங்க.​ அவுங்​க​ளுக்கு திடீர்ன்னு உடம்பு சரி​யில்​லாம போன​தால நான்​தான் பிசி​ன​ஸைப் பார்த்​துக்​கிட்டு இருந்​தேன்.​ அப்போ என் பெரி​யம்மா மகள் நீபா​ மூல​மா​கத்​தான் எனக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு வந்தது.

என்​னோட முதல் தொடரே ராதிகா மேடம்​கூட பண்​ணு​கின்ற வாய்ப்பு கிடைச்​சது ரொம்ப சந்​தோ​ஷ​மாக இருந்​தது.​ நடிக்க வரு​வ​தற்கு முன்பே அவுங்​க​ளோட ரசிகை நான்.​ எனக்கு அவுங்​களை ரொம்ப பிடிக்​கும்.​ அவுங்​க​ளோட பழ​கும்​போது அவுங்க கேரக்​டர் ரொம்ப பிடிச்​சது.​ ​ அப்​படி பிடித்​த​வர்​க​ளோட சேர்ந்து நடித்​தது ரொம்ப சந்​தோ​ஷமா இருந்​தது.​

சீரியலில் எனக்கு நெகடிவ் ரோல்தான் அதிகமாக கிடைக்கிறது. சாதரணமாகவே எனக்கு நெகட்​டீவ் ரோல் ரொம்பப் பிடிக்​கும்.​ பாஸிட்​டிவ் ரோல் பண்​ணு​வ​தற்கு நிறைய பேர் வரு​வாங்க.​ ஆனால் ஒரு சிலர்​தான் நெகட்​டீவ் ரோல் பண்​ணு​வார்​கள்.​ நெகட்​டீவ் ரோல் ரொம்ப சேலஞ்​சிங்கா இருக்​கும்.​ பாஸ்ட்​டீவ் ரோலை விட நெகட்​டீவ் ரோல் பண்​ணும் போது மக்​கள்​கிட்ட நல்ல ரீச் கிடைக்​கும்.​

நான் பரதநாட்​டி​யம் முறைப்​படி கற்​றுக்​கொண்​டேன்.​ அரங்​கேற்​றம் வரும் சம​யத்​துல டென்த் எக்​ஸாம் வந்​தி​டுச்சு.​ அத​னால அப்​ப​டியே நிறுத்​திட்​டேன்.​ அதுக்கு பிறகு தொட​ரு​வ​தற்கு டயம் கிடைக்​கல.​ ஆனா ஸ்கூல்ல,​​ காலேஜ்ல படிக்​கும்​போது நிறைய டான்ஸ் பெர்​பா​மன்ஸ் பண்​ணி​யி​ருக்​கேன்.​ ​ ஆனா ​ அக்கா அள​வுக்கு எல்​லாம் நான் டான்​ஸர் கிடை​யாது.​ அவ ​சூப்​பரா டான்ஸ்ல வெளுத்து வாங்​குவா.​ நான் எப்​படி சொல்லி கொடுக்​கி​றாங்​களோ அப்​ப​டியே ஆடு​வ​தோடு சரி.​

என்னை பொருத்​த​வரை எந்த ஒரு விஷ​யம் எடுத்​துக்​கிட்​டா​லும் அதில் உறு​தியா இருக்​க​னும்.​ அப்​போ​தான் ஜெயிக்க முடி​யும்.​ ஒரு விஷ​யம் பண்ண வேண்​டும் என்று முடிவு செய்​து​விட்​டால் அதில் எவ்​வ​ளவு தடை​கள் வந்​தா​லும் சரி கண்​டிப்​பாக செஞ்சி முடிச்​சு​டு​வேன் என்று கூறிவிட்டு சீரியலில் நடிக்க கிளம்பினார் மகாலட்சுமி.

 

ராஜாவின் இசையை பாலாக தேனாக ஓடவிட்ட கலைஞர் டிவி!

Kalaignar Tv S Thenum Paalum

இன்று காலை கலைஞர் டிவி தேனும் பாலும் நிகழ்ச்சியில் இளையராஜாவின் குரலில் வெளிவந்த, என்றும் இனிமையான பாடல்களாக ஒளிபரப்பி இசை ராஜாங்கம் நடத்தி விட்டனர்.

லட்சுமி படத்தில் தென்ன மரத்தில் தென்றல் அடிக்க, காதல் ஓவியம் வரைந்து பூமாலையே தோள் சேரவா என அழைத்து, விழியில் விழுந்து, வள்ளி வள்ளி என வந்தான் என துள்ளிப்பாடி, சின்னப்பொண்ணு சேலையில் மயங்கி, அந்த நிலாவத்தான் கையிலே புடிச்சு, இந்த மான் என் சொந்த மான் என சொந்தம் கொண்டாடி, ஒரு ஜீவன் அழைத்தது என காவியம் பாடி, சிறு பொன்மணி அசையும் அது தெரிக்கும் புது இசையில் என கல்லுக்குள் ஈரத்தைத் கண்டு புடிச்சு, செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நெனைச்சு... ஒரு மணி நேரத்திற்கு ரசிகர்களை கிறங்கடித்து விட்டனர்.

பாடல்களின் வரிசை, அடுத்து என்ன பாடல் வரப்போகிறது என்ற ஆர்வத்தையும் தூண்டிவிட்டு விட்டது. பாடல்களை தவற விடக்கூடாது என இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தைக்கூட முழுமையாக பார்த்திருக்கும் வாய்ப்பு அதிகம்.

இளையராஜாவின் இசையால் வெற்றி பெற்ற பெரும்பான்மையான இந்த பாடல்களில் கார்த்திக் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய ஹீரோக்கள் தியாகராஜன், முரளி, ராமராஜன் போன்றவர்களுக்கும் ராஜாவின் பாடல்கள் தான் வெற்றியை தேடித்தந்தன. தவிர மற்ற ஹீரோக்கள் பிரபலமாகாத நிலையில் கூட பாடல்களும், படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர்களை உயர்த்தின என்பதை மறக்கக் கூடாது.

இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களினால் மட்டுமே மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் வரிசையை கண்முன் நிறுத்தும் வகையிலும் இந்த தேனும் பாலும் நிகழ்ச்சி அமைந்திருந்தது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு கலைஞர் டிவி சானலை திருப்பியவர்களுக்கு இளையராஜாவின் இசை மற்றும் குரலில் இனிய காலையாக விடிந்தது!

 

கமல் என் ரசிகர் : டெல்லி கணேஷ்

Kamal Is My Fan Delhi Ganesh

கமல்ஹாசனுக்கும் எனக்கும் இருக்கும் நட்பு முப்பது ஆண்டுகளுக்கு மேலானது என்று என்று நடிகர் டெல்லிகணேஷ் கூறியுள்ளார்.

பசி திரைப்படத்தில் அப்பாவி ரிக்சாக்காரராக வந்த டெல்லி கணேஷ் இன்றைக்கு செல்லமே சீரியலில் வில்லத்தனம் செய்து வருகிறார். அவரது திரையுலக, சீரியல் பயணம் குறித்து என்டிடிவியில் சந்திப்போமா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் கமல்ஹாசனுடன் ராஜபார்வையில் தொடங்கிய நட்பு இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது அதற்குக் காரணம் கமல்ஹாசன் தன்னுடைய ரசிகர் என்பதால் கூட இருக்கலாம் என்று கூறிய டெல்லி கணேஷ் கமலுடனான தனது நட்பை பகிர்ந்து கொண்டார்.

ராஜபார்வை படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது முதன் முதலாக கமலைப் பார்க்க நேரிட்டது. அவரைப் பார்த்து நான் உங்கள் ரசிகன் என்று கூறிய நேரத்தில் உடனே அவர் நான்தான் உங்கள் ரசிகன் என்று கூறியது பெருமையாக இருந்தது என்று கூறினார் கணேஷ்.

வில்லனோ, காமெடியனோ என்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியவர். அவ்வை சண்முகியில் எனக்காகவே சிறப்பான காமெடி காட்சியை உருவாக்கியவர் கமல் என்று பெருமையாய் கூறினார். இருவருக்கும் இடையே உள்ள அன்டர்ஸ்டான்டிங்தான் இதுவரை நட்பு தொடர்வதற்கு காரணமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சினிமாவிற்கு அடுத்தபடியாக சீரியலில் கவனம் செலுத்தி வருவதாக கூறிய டெல்லி கணேஷ், சினிமாவோ, சீரியலோ கவனம் செலுத்து நடித்தால் மட்டுமே நிலைத்து நிற்கமுடியும் என்று கூறினார். தன்னுடைய 30 வருட சினிமா வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட பாடமும் அதுதான் என்றும் அவர் கூறினார்.

 

ரஜினிக்காக மீண்டும் ஒரு யாத்திரை - சென்னை ரசிகர்கள் பயணம்!

Rajini Fans Thanks Giving Pilgrimag

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மறக்க முடியாத நாள் ஜூலை 13. அன்றுதான் ரஜினி உடல்நலம் பெற்று சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்தார்.

அவர் உடல் நலம் பாதித்த நாளிலிருந்து, நலமுடன் நாடு திரும்பி வரும் வரை நடந்த ரசிகர்களின் பிரார்த்தனைகள் கொஞ்சமல்ல. மன்றத்திலிருப்பவர்கள் என்றில்லாமல், சாதாரண பொதுமக்களும் மனமுருகி வேண்டினர். தாய்மார்கள் பலர் விரதமிருந்தனர். சிலர் முடிகாணிக்கை கூட செலுத்தினர்.

இப்போது ரஜினி நலமுடன் உள்ளார். அவர் நடிப்பில் அடுத்த படமும் வெளிவரவிருக்கிறது.

தங்களை தலைவரின் உடல் நிலை சரியானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக சென்னை மாவட்ட மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வியாழக்கிழமை காலை யாத்திரை புறப்பட்டுள்ளனர். ரஜினி உடல் நலமின்றி இருந்தபோது எந்தெந்த புனிதத் தலங்களுக்குப் போய் வேண்டிக் கொண்டார்களோ, அந்த கோயில்களுக்கெல்லாம் போய் நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறார்கள்.

சென்னை மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், கே ரவி, சூர்யா மற்றும் சைதை ரவி உள்ளிட்டோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

பகல் 11 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து ஒரு மினி பஸ்ஸில் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

யாத்திரையை முடித்துக் கொண்டு ரஜினி வீட்டுக்குப் போன அனைவரும், பிரசாதத்தை அவர் வீட்டில் ஒப்படைத்தனர்.

 

குத்து பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஐட்டம் நம்பர் எனப்படும் குத்து பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன் என்றார் ஸ்ருதி ஹாசன். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட்டில் நான் அறிமுகமான 'லக்Õ படம் தோல்வி அடைந்தது பற்றி கேட்கிறார்கள். அப்படம் சரியாக ஓடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனபோது ஒருவர்கூட தியேட்டரைவிட்டு பாதியில் எழுந்து செல்லவில்லை. இப்படம் ஓடாததற்கு காரணம் அதன் தலைவிதிதான். ஆனால் 'லக்Õ படத்தில் நடித்ததற்காக நான் வருந்தவில்லை. பெரிய நடிகரின் மகளாக பிறந்ததால் சினிமாவின் கதவு எனக்கு எப்போதுமே திறந்திருந்தது. அது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் நல்லவற்றை தேர்வு செய்து நடிக்கிறேன். என் அப்பாவிடம் படம் பற்றி கருத்து மட்டுமே கேட்பேன். பட வாய்ப்புகள் பெற்றுத்தர வேண்டும் என்று எந்த நேரத்திலும் அவரிடம் வற்புறுத்தியது கிடையாது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரும் என்னை கட்டாயப்படுத்தியதில்லை. குத்து பாடலுக்கு நடனம் ஆடுவீர்களா என்கிறார்கள். எனக்கு நடனம் பிடிக்கும். ஆனால் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பை ஏற்க விரும்பவில்லை. அதுவும் குத்துபாட்டுக்கு கண்டிப்பாக ஆட மாட்டேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 

விஷால் படத்துக்கு பெயர் மாற்றம் ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஷால் படத்துக்கு டைட்டில் விட்டுக்கொடுக்க மறுத்தார் இயக்குனர். விஷால் நடிக்கும் படம் 'சமர். முதலில் இதற்கு 'சமரன்' என்று பெயரிடப்பட்டிருந்தது. தலைப்பை மாற்ற¤யது ஏன் என்பதற்கு பட இயக்குனர் திரு கூறியதாவது: எல்லா செயலும் கடவுள் அருளால் நடக்கிறது என்றும், உழைப்பால்தான் நடக்கிறது என்றும் நம்பும் இருவகை எண்ணம் கொண்டவர் உலகில் இருக்கிறார்கள். ஆனால் இதையும் மீறி வேறுவொரு சக்தி ஒரு வாலிபனை வழிநடத்துகிறது. அதற்கு விடை தேடும் கதைதான் சமர். ஹீரோ விஷால். பாங்காக்கில் வசிக்கும் தமிழ் பெண்ணாக த்ரிஷா. மற்றொரு ஹீரோயின் சுனேனா. தாய்லாந்து, பாங்காக் மற்றும் ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசை. ரிச்சர்டு ஒளிப்பதிவு.
முதலில் இப்படத்துக்கு 'சமரன்' என பெயரிடப்பட்டது. ஆனால் இதே பெயரை மாதவன் உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம் பலமுறை அணுகி தலைப்பை விட்டுக்கொடுக்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். இதையடுத்து பெயரை மாற்றினோம். 'சமர்' என்றால் போர் என்று பொருள்.


 

சாமியார் ஆனார் தமிழ் பட ஹீரோயின்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் நடிகை தனுஸ்ரீ தத்தா திடீர் சாமியார் ஆனார். இது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. 10 வருடம் இந்தி சினிமாவில் நடித்ததில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த தத்தா, திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு சாமியார் ஆகிவிட்டார். பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்களுக்கு புறப்பட்டு சென்றார். இது பற்றி அவர் கூறியதாவது:

என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 வருடம் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் இந்த அனுபவம் என்னை நோகடித்து விட்டது. பாலிவுட்டில் என் மீது தரப்பட்ட அழுத்தங்கள், இரக்கமற்ற மனிதர்கள், இதயத்தை உடைத்தவர்கள், ஊக்கம் தருவதற்கான நண்பர்கள் யாரும் இல்லாதது என பல்வேறு சோதனைகள். இவையெல்லாம் ஒரு கட்டத்தில் என் மனதை வெடித்து சிதறவைத்தது. அன்றைய தினம்தான் நடிப்பிலிருந்து இடைவெளி எடுக்க முடிவு செய்தேன்.

இந்த இடைவெளியில் என்னை நானே சுயசோதனைக்கு உட்படுத்திக்கொண்டேன். ஆனால் ஒரு மாதத்துக்கு முன்புதான் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் ஒரு குறை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனவே லடாக் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே என் தலைமுடியை மொட்டை அடித்துவிட்டேன். இதற்கு காரணம் என்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான்.

இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறினார். சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு இந்த வாரம் அவர் மும்பை திரும்பினார். தொடர்ந்து ஆன்மிகத்தில் மூழ்க அவர் முடிவு செய்துள்ளார். தனுஸ்ரீ தத்தாவின் இந்த முடிவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.