பெங்களூரில் ரஜினி.. அதிகாலை 6 மணிக்கே பார்க்க குவிந்த மக்களுக்கு பறக்கும் முத்தம் தந்தார்!

பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி.

தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார்.

பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின் வீடு. இரு தினங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்றுதான் அவர் பெங்களூரில் இருக்கும் தகவல் பரவியது, உடனே அதிகாலையிலேயே அவரைச் சந்திக்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் வீட்டுக்கு முன் திரண்டனர்.

பெங்களூரில் ரஜினி.. அதிகாலை 6 மணிக்கே பார்க்க குவிந்த மக்களுக்கு பறக்கும் முத்தம் தந்தார்!

உடனே வெளியில் வந்த ரஜினி, பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவர், தலைவா தலைவா என்று வந்த கோஷத்தைப் பார்த்து ஒரு பறக்கம் முத்தம் அனுப்ப, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

பின்னர் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக, பத்திரமாகச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

கீழே இறங்கி வாசலுக்கு வந்த ரஜினியிடம் மீடியாக்காரர்கள் பேட்டி கேட்க, 'அதெல்லாம் வேண்டாமே. ச்சும்மா மக்களப் பார்க்க வந்தேன். பேட்டி வேண்டாம்,' என்றார். ரஜினியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் உடனிருந்தனர்.

 

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷாதான் வேணும்னு அடம் பிடிச்சாங்க!- பிரஸ் மீட்டில் விஷால்

எத்தனையோ கவர்ச்சி நடிகை பீல்டில் இருந்தாலும், த்ரிஷாவின் அழகும் சிக்கென்ற தோற்றமும்தான் வேண்டும் என்று கோடம்பாக்கத்தில் இன்னும் ஒரு பெருங்கூட்டம் அடம் பிடிப்பதைப் பார்க்க முடிகிறது.

அதில் பெருசுங்க மட்டுமல்ல.. இளசுங்களும் சேர்த்திதான் (இதுவே த்ரிஷாவின் பெரிய சாதனைதான்)!

நட்சத்திர கிரிக்கெட் தூதராக நியமிக்க ஏராளமான நடிகைகள் பெயர்களை பரிசீலித்து கடைசியில் எல்லோரும் ஒரு மனதாக த்ரிஷாதான் வேண்டும் என்று முடிவு செய்து நியமித்துவிட்டார்கள்.

நட்சத்திர கிரிக்கெட் தூதராக த்ரிஷாதான் வேணும்னு அடம் பிடிச்சாங்க!- பிரஸ் மீட்டில் விஷால்

அதை தனது சென்னை ரைனோஸ் அணி வீரர்களுடன் வந்து பிரஸ் மீட்டில் அறிவித்தார் அந்த அணி கேப்டனான நடிகர் விஷால் (நோட் யுவர் ஆனர்... வரலட்சுமி வரல!)

அது ஏன் த்ரிஷா? என்று கேட்டதற்கு, "நானும் என் அணியும் மட்டுமல்ல.. ஸ்பான்சர்களும் த்ரிஷாவைத்தான் கேட்கிறாங்க... அதான்," என்று வெளிப்படையாகப் பேசினார் விஷால்.

சரி, எல்லாருமே புரஃபஷனலா விளையாட ஆரம்பிச்சிட்டீங்க.. உங்க டீம்லருந்து நம்ம இந்திய கிரிக்கெட் டீமுக்கு யாரை அனுப்பலாம் என்றதற்கு, "விக்ராந்த்" என்றார் கொஞ்சமும் யோசிக்காமல்.

 

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

பொதுவாக பத்திரிகையில் எழுதுகிறவர்கள் அல்லது பெரிய விமர்சகர்கள் ஒரு சினிமா இயக்குநராக ஜெயிப்பது இங்கு ரொம்ப கஷ்டம். ஓரிரு விதிவிலக்குகள் தவிர.

இணைய உலகில் வலைப்பூ ஆரம்பித்து சினிமா விமர்சனம் எழுதி வந்த கேபிள் சங்கர் என்பவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்துக்கு தொட்டால் தொடரும் என தலைப்பிட்டுள்ளார்.

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

இந்தப் படத்தை எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரித்துள்ளார். வீரசேகரன் படம் மூலம் அமலா பாலை தமிழ் திரையுலகுக்கு தந்த பெருமை இவருக்குத்தான் உண்டு.

தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை -பி.சி சிவன்.

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

"ஐடி.யில் எச்ஆராக இருக்கும் ஒருவனுக்கும் கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் காதல், அதிலுள்ள பிரச்சினைகள்தான் கதை.

விமர்சகர்கள் படம் எடுத்து வெற்றி பெற முடியுமா ? என்ற கேள்வி உள்ளது.

"எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டு விட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்து இருக்கிறார்கள்.

அட, பத்திரிகையாளர்களுக்கும் பட வாய்ப்பு தரத் தயாரா இருக்காருப்பா ஒரு தயாரிப்பாளர்!!

நான் வெறும் விமர்சகன் என்று மட்டும் என்று சொல்லி விடவேண்டாம். நான் சினிமாவில் 15 ஆண்டுகள் இருக்கிறேன். நான் இதற்குத்தான் ஆசைப்பட்டேன். அனுபவமில்லாமல் இறங்கலாமா என்று என்னிடம் கேள்வி கேட்க முடியாது. எனக்கு எல்லா அனுபவங்களும் உண்டு.

எல்லாப் படங்களையும் விமர்சனம் செய்த என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும்.அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பல விஷயங்கள் விமர்சிக்க முடியாதபடி என் படம் இருக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகர் பேசுகையில், "ஐந்து படங்கள் தயாரிக்கிறேன். தகுதியான திறமையுள்ள பத்திரிகையாளர்களுக்குப் படவாய்ப்பு தருவேன்," என்றார்.