மலையாளத்தில் எவ்வளவோ இயக்குநர்கள் காத்திருந்தாலும், தொடர்ந்து நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் நடிகர் மோகன்லால்.
சமீபத்தில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்துவரும் அவர், அடுத்து வெற்றிமாறன் என்ற படத்தில் நடிக்கிறார்.
மோகன்லால் மலையாளத்தில் முன்னணியில் இருந்தாலும், வசிப்பது சென்னையில்தான்.
அவர் தமிழில் நடித்த முதல் படம் மணிரத்னம் இயக்கிய இருவர். அடுத்து நாசர் இயக்கிய பாப்கார்ன் படத்தில் நடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிவிட்டு கமலுடன் உன்னைப் போல் ஒருவனில் நடித்தார்.
இப்போது விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்து வரும் மோகன்லால் அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை மேஜர் ரவி இயக்குகிறார் ஏற்கெனவே இவர் ஜீவா-மோகன்லாலை வைத்து அரண் படத்தை இயக்கி இருக்கிறார்.
மாணவிகளை கடத்தும் மாஃபியா கும்பலை பற்றி கதையாக இது உருவாகிறது. தூத்துக்குடி துறைமுகப் பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.