'இந்த கிழட்டு ஆன்ட்டிகள் இம்சை தாங்க முடியலப்பா!'

தமிழ் சினிமா உலகில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகளை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு முன்னாள் நடிகைகள் சிலர் படுத்தும் பாடு இருக்கிறதே... நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிழட்டு ஆன்ட்டிகள்.

திரைப்பட விழாக்கள், மராத்தான்கள், நடன நாட்டியங்கள் அல்லது நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகள்.. இப்படி எதிலும் நிறைந்து இருப்பவர்கள் இந்த ரிடர்யர்டு நடிகைகள்தான்.

தொழிலில் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து டாப் நடிகர் - நடிகைகளை நிகழ்ச்சிகளுக்கு வரவைத்துவிடும் இவர்கள், அதற்கும் கணிசமாக ஒரு அமவுன்ட் பாரத்துவிடுகிறார்கள்.

சரி அதோடு நிற்கிறார்களா என்றால்... ம்ஹும்... விழா அல்லது நிகழ்ச்சியில் நானும் பர்பார்ம் பண்ணுகிறேன் பேர்வழி என போடுகிற ஆட்டமும் பண்ணுகிற அலட்டலும், அப்படியே செவிட்டில் நாலு வைக்கலாமா என எண்ணுமளவுக்கு பார்வையாளர்களை கடுப்பேற்றும்.

குறிப்பாக, பெரிய டைரக்டர் என்ற பெருங்காய டப்பா வாசனையோடு வலம் வரும் ஒருவரின் முன்னாள் நடிகை மனைவியும் அவரது தோழிமார்களும் பண்ணும் அளப்பறை தாங்கவில்லை. பார்ட்டிகளில் கலந்து கொள்வதில், வெங்கட் பிரபுவையும் அவர் தம்பி பிரேம்ஜியையும் மிஞ்சிவிட்டார்கள் இவர்கள். சரக்குப் பார்ட்டி, குத்தாட்ட பார்ட்டி, திரைப்பட விழா என்ற பெயரில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை.

'யார் வீட்டுல விசேஷம்னாலும் இவளுங்க ரவுசு தாங்கலடா சாமி' என கவுண்டர் ஒரு படத்தில் சொல்வாரே.. அப்படித்தான் ஆகிவிட்டது, இவர்களின் போக்கு. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவர்களின் ஆட்டமும் ஓவராகிவிட்டது.

கோலிவுட் நிகழ்ச்சிகள்தான் இப்படி என்று சின்னத் திரையைப் பார்த்தால், அங்கும் இவங்க ராஜ்யம்தான். டாக் ஷோக்கள், காமெடி நிகழ்ச்சிகள், இளம் திறமையாளர்களை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என நடுவர் நாற்காலிகளில் உட்கார்ந்து பண்ணும் அழிச்சாட்டியங்கள்...

திரையில் பார்க்க சகிக்காமல்தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் ரசிகர்கள். இருந்தும், நான் ஆடித்தான் தீருவேன்.. பாடிக் கொல்வேன்.. நீங்கள் பார்த்தே தீர வேண்டும் என பிடிவாதமாக வரும் இந்த இம்சை அரசிகளின் பிடியிலிருந்து சினிமாவை மீட்பது யாரோ!

 

என்னாது ஜூனியர் கேப்டனுக்கு ஜோடி மயிலு மகளா?

சென்னை: கேப்டனின் மகன் நடிக்கும் படத்திற்கு அவருக்கு ஜோடியாக நம்ம ஊர் மயிலின் மூத்த மகள் நடிக்கப் போவதாக பேச்சாக கிடக்கிறது.

கேப்டனின் இளைய மகன் அப்பா போன்று ஹீரோவாகிறார். படத்தின் பூஜை கேப்டனின் வீட்டிலேயே நடந்தது. விழாவில் அவரின் காலத்து ஹீரோக்கள் முதல் தற்போதுள்ள இளம் ஹீரோக்கள் வரை பலர் கலந்து கொண்டனர்.

படத்தில் 2 ஹீரோயின்களாம். ஆனால் அவர்கள் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நம்ம மயிலின் மூத்த மகளை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் ஆமாம் பேச்சுவார்த்தை நடக்கிறது, ஆனால் இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர். மயிலின் மூத்த மகளுக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய பாடகர்கள் வியாபாரிங்க.. உணர்ச்சியே இல்லாம பாடறாங்க! - இசையமைப்பாளர் அலி மிர்சா

இன்றைய பாடகர்கள் வியாபாரிங்க.. உணர்ச்சியே இல்லாம பாடறாங்க! - இசையமைப்பாளர் அலி மிர்சா

இன்றைய பாடகர்கள் வெறும் வியாபாரிகளாக உள்ளனர். யாரும் உணர்ச்சியுடன் பாடுவதில்லை, என்று குற்றம்சாட்டியுள்ளார் இசையமைப்பாளர் அலி மிர்சா.

சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் டிரைலரும் பாடல்களும் திரையிடப்பட்டன.

வளரும் கலைஞர்களை ஊக்கு விக்கும் விதமாக அரபிக்குதிரை, கஜல் மழை ஆகிய பாடல்களுக்கு ஜான் & பீட்டர் குழுவினர் மேடையில் நடனமாடினர். பாடகி பத்மலதா அன்பும் அறிவும் என்கிற பாடலை மேடையில் பாடினார். பாடல்களை படத்தின் கஸாலி, சாரதி ஆகியோர் எழுத இசையமைத்திருக்கிறார் அலி மிர்சா.

குற்றச்சாட்டு

அவர் பேசும்போது, "பழைய பாடல்களைப் போல இல்லையே என பலரும் கேட்கிறார்கள். பாடல் வரிகளில் உணர்ச்சிகள் இல்லாமல் போனதற்கு, இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து திரும்ப திரும்ப பாடகர்கள் ஒத்திகை பார்த்த பழக்கம் மறைந்துவிட்டதே காரணம்.

இன்றைய பாடகர்களிடம் வணிக எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒத்திகையெல்லாம் பார்க்காமல், காகிதத்தைப் பார்த்தே பாடி விடுகிறார்கள். பெரிய பாடகர்களோ சிறிய இசையமைப்பாளர்களிடம் மெட்டுக்களை வாங்கியபிறகுதான் பாடவே வருகிறார்கள்.

இதில் வேறு வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள்... இப்படி எல்லாவற்றையும் போராடி ஜெயித்துதான் புதிய இசையமைப்பாளர்களால் படங்களுக்கு இசையமைக்க முடிகிறது," என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் இசையமைப்பாளர் அலி மிர்சா.

 

அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து 2 மர்ம நபர்கள் ரகளை

சென்னை: அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

நடிகர் அஜீத் குமாரின் வீடு சென்னை திருவான்மியூர் சீ வேர்டு சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 2 மர்ம வாலிபர்கள் கேட் கதவை தட்டி நாங்கள் தலய பார்க்க வேண்டும், அவரை சந்தித்து பேசவே வந்தோம் என்று கூச்சல் போட்டு கலாட்டா செய்துள்ளனர். அதற்கு வீட்டு காவலாளி அஜீத் வீட்டில் இல்லை பகல் நேரத்தில் வந்து சந்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த வாலிபர்களோ குடிபோதையில் இருந்ததால் தாங்கள் கூறியதையே திரும்பத் திரும்ப கூறியுள்ளனர். அந்நேரம் வெளியே சென்ற அஜீத் காரில் வீடு திரும்பினார். அவரை பார்த்த வாலிபர்கள் குஷியாகி தல வந்துவிட்டார் என்று கூறிக் கொண்டே காருக்குப் பின்னால் வீட்டுக்குள் நுழைந்தனர். இதை பார்த்த காவலாளி அந்த இருவரையும் தடுத்து நிறுத்தினார். அஜீத் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அஜீத்தின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து 2 மர்ம நபர்கள் ரகளை

இந்நிலையில் வாலிபர்களின் அட்டகாசம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் போலீசார் அஜீத் வீட்டுக்கு வந்து அந்த 2 பேரையும் பிடித்து திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் தாங்கள் இருவரும் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் என்றும், அஜீத்தை பார்க்கும் ஆசையில் வந்ததாகவும் தெரிவித்தனர்.

ரகளை வாலிபர்கள் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கண்ணன்(29) மற்றும் வெற்றி(31) என்று தெரிய வந்தது. அவர்கள் மீது புகார் கொடுக்கப்படாததாலும், அவர்கள் எந்த தவறான நோக்கத்தோடு வராததாலும் அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 

புறம்போக்கு பட நாயகியாக கார்த்திகா - மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்திய ராதா!

இயற்கை', ‘பேராண்மை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் ‘புறம்போக்கு' என்ற தலைப்பில் புதிய படம் இயக்குகிறார்.

இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனும் தயாரிக்கிறார்.

இரண்டு ஹீரோக்கள் உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ‘கோ' படத்தில் நடித்த நடிகை கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோக்கள் இரண்டானாலும் படத்தின் ஹீரோயின் ஒருவர்தானாம். இதனால் கார்த்திகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம்.

புறம்போக்கு பட நாயகியாக கார்த்திகா - மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்திய ராதா!

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் குல்லுமணாலியில் தொடங்குகிறது. கார்த்திகா தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து ‘டீல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களே இல்லாமல் இருந்தார்.

எனவே திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் கார்த்திகாவின் அம்மா நடிகை ராதா. இப்போது பெரிய பட வாய்ப்பு வந்திருப்பதால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாராம்.

 

நல்லாருக்குடா தம்பி உன் இசை... குறளரசனுக்கு 'குடோஸ் 'சொன்ன சிம்பு!

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன் ஜோடி சேரும் படத்திற்கு சிம்புவின் தம்பியும், விஜய டி.ராஜேந்தரின் இளைய மகனுமான குறளரசன் தான் இசை என்பது ஏற்கனவே நாமறிந்த - நாடறிந்த விஷயம் தான்.

பெயரிடப் படாத அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஒலிப்பதிவு வேலைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாருக்குடா தம்பி உன் இசை... குறளரசனுக்கு 'குடோஸ் 'சொன்ன சிம்பு!

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி குறளரசின் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளதாகவும், பாண்டிராஜ் படத்தின் முதல் பாடல் பதிவு நடைபெற்று வருவதாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு.

அதேபோல், பாண்டிராஜூம் தனது பங்கிற்கு குறளரசைப் பாராட்டியுள்ளார். அதில், நிச்சயமாக மிகவும் அருமையான பாடல். ரொம்ப சந்தோஷம். நன்றி குறள். பிரகாசமான எதிர்காலம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது' என வாழ்த்தியுள்ளார்.

பிறகென்ன, அப்பாவை வச்சு ஒரு பட்டையைக் கிளப்பும் பாாட்டையும் போட்டு்ட்டா.. இன்னும் பிரமாதமா இருக்கும்ய்யா...!