மானை வேட்டையாடிய வழக்கு: சல்மானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: மானை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் திரைப்படத்தின் படப்படிப்பின் போது, ஜோத்பூர் சென்றிருந்த அவர் இரண்டு மான்களை வேட்டையாடி கொன்றதாக குற்றசாட்டு எழுந்தது.

மானை வேட்டையாடிய வழக்கு: சல்மானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.இதற்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதன் மீது இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மான்வேட்டையாடிய வழக்கில் சையிப் அலி கான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆக்ஷன் கதை இருக்கா, நடிக்கிறேன்: பண மூட்டையுடன் கோடம்பாக்கத்தில் சுற்றும் மீசைக்கார நடிகர்

சென்னை: கோலிவுட்டில் அதிரடியாக நுழைந்து பண பலத்தால் ரசிகர்களை அசர வைத்த மீசைக்கார நடிகர் அரசியலில் குதித்து தற்போது மீண்டும் கோடம்பாக்கத்திற்கே வந்துவிட்டாராம்.

திடீர் என்று கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து நான் எல்லாம் ஆக்ஷன் ஹீரோ என்று கூறிக் கொண்டு வலம் வந்தார் அந்த மீசைக்கார நடிகர். நடிக்க வந்த அதே வேகத்தில் அரசியலிலும் குதித்தார். அவர் நேரம் எம்.பி.யாக ஆனார். நாடாளுமன்றம் சென்றார். அடடே அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறாரே என்று பலரும் வியந்தனர்.

அந்த நேரத்தில் தான் அவர் இருந்த கட்சியில் குடும்ப பிரச்சனை ஏற்பட அவர் கட்சிக்கு டாட்டா பை பை சொல்லிவிட்டு அப்படியே எதிர் அணியில் போய் சரண் அடைந்தார். அந்த அதிகாரமிக்க கட்சியில் சேர்ந்த பிறகு மீசைக்காரர் என்ன செய்கிறார் என்று விசாரித்தால் மனிதர் மீண்டும் நடிக்க கிளம்பியது தெரிய வந்துள்ளது.

பை நிறைய பணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு ஆக்ஷன் கதை சொல்கிறீர்களாக, படம் பண்ணலாம் என்று கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். மீசைக்காரர் பசை உள்ள பார்ட்டி என்பதை அறிந்த துணை இயக்குனர்கள் அவருக்கு நச்சுன்னு ஒரு கதையை சொல்லி இயக்குனராகிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

 

இஸ்லாம் மதத்திற்கு மாறிய மலேசிய கவர்ச்சி நடிகை

பிரபல மலேசிய கவர்ச்சி நடிகை பெலிசிய ஏப் இஸ்லாம் மதத்திற்கு மாறி உள்ளார். இதுபற்றி தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெலிசிய ஏப் பிறப்பால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் சிறிது காலம் புத்த மதத்தை பின்பற்றி வந்தார். இந்நிலையில் தற்போது திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

'தான் இன்றுமுதல் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும், இதனால் தான் மறுபிறவி எடுத்தது போன்ற ஒரு உணர்வு தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்கங்களில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய மலேசிய கவர்ச்சி நடிகை

நடிகைக்கு வாழ்த்து

நடிகை பெலிசிய ஏப்பின் சமூகவலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் 835,000 பாலோயர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மறுபிறவி எடுத்தேன்

பேஸ்புக்கில் அறிவித்துள்ள மற்றொரு அறிவிப்பில் இன்று தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் என்றும், நான் மறுபிறவி எடுத்த நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார் அந்த நடிகை.

கவர்ச்சி போஸ்

பிரபலமாக உள்ள பிளே பாய் புத்தகத்தில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன

புத்த மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதன் காரணத்தை பெலிசியா ஏப் தெரிவிக்கவில்லை.