அஸ்ஸாம் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் ரூ80 லட்சம்!! மணிப்பூரில் ரூ8 லட்சம்!!

குவஹாத்தி/இம்பால்: நூறு கோடி ரூபாயைத் தாண்டி பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இந்தியாவின் பாலிவுட்டும் கோலிவுட்டும் தயாரிக்க ரூ1 கோடியை கூட எட்டாமலே அஸ்ஸாமிய சினிமாவும் ரூ10 லட்சத்தைத் தொடாமலே மணிப்பூர் சினிமாவும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் அதாவது அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், மேகாலயா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள்தான் சினிமாவின் தாக்கத்தை எதிர்கொள்ளாதவகைகளாக இருக்கின்றன.

அஸ்ஸாம் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் ரூ80 லட்சம்!! மணிப்பூரில் ரூ8 லட்சம்!!

அஸ்ஸாம்- மணிப்பூர் சினிமா

ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அஸ்ஸாமிய சினிமாவும் மணிப்பூரி சினிமாவும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் நம்ம தமிழ் சினிமாவைப் போல நூற்றுக் கணக்கில் வெளியாகி நூற்றுக்கணக்கில் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் கதையெல்லாம் இங்கு இல்லை.

ஆண்டுக்கு 20 படம்

அஸ்ஸாமிய சினிமா உலகம் என்பது ஆண்டுக்கு அதிகபட்சம் 20 படங்களை வெளியிடுகிறது.

அதிக பட்ஜெட் ரூ80 லட்சம்

அஸ்ஸாமிய சினிம உலகத்தின் மிக அதிகமான பட்ஜெட் என்பது ரூ70 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரை. இது பாலிவுட் படத்தில் கதாநாயகியின் காஸ்ட்யூமுக்கான செலவை விட குறைவுதான்.

70 படங்கள்

அதே நேரத்தில் மணிப்பூர் சினிமாவோ ஆண்டுக்கு 60 முதல் 70 படங்களை வெளியிடுகிறது.

ரூ7 முதல் ரூ8 லட்சம்

ஆனால் மணிப்பூர் சினிமாவின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? ரூ7 லட்சம் முதல் ரூ8 லட்சம்தான் வரை.

லாபம் இல்லையே

இப்படி சிக்கனத்தில் படமெடுத்தாலும் சினிமா வர்த்தகம் என்பது செழிப்புக்குரியதாக இல்லை என்பது அந்த மண்ணின் திரை உலகக் கலைஞர்களின் கவலை. அங்கெல்லாம் நம்ம ஊர்களைப் போல பிரம்மாண்ட திரையரங்குகள் இல்லை என்பதுதான் முதன்மை பிரச்சனை. அந்த பிராந்திய முழுவதுமே மொத்தமே 70 திரையரங்குகளே அதிகம்.

இப்படித்தான் திரையிடல்

பொதுவாக சமூகநலக் கூடங்களை படத்தை திரையிட பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் கிராமங்களுக்கு போய் படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கிற நிலையும் இருக்கிறது.

மகா கலைஞர்கள்

ஆனாலும் அவ்வப்போது தேசிய விருதுகளை தட்டிவிட்டுச் செல்கிற மகா கலைஞர்களும் அம்மண்ணில் இருக்கிறார்கள். அவர்களது கவலையெல்லாம் சினிமாவிற்கான பயிற்சி நிறுவனங்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் அதிகம் கொண்டுவரப்பட வேண்டும்; சினிமாக்களை திரையிடுவதற்கான அரங்குகள்; சினிமாவுக்கான நிதி உதவிகள் தேவை என்பதாக இருக்கிறது.

கண்டுகொள்ளுமா அரசு

அவர்களும் பாலிவுட் போல, கோலிவுட் போல அல்லாது போனாலும் "இந்திய சினிமா" என்கிற நீரோட்டத்துக்குள் இணைகிற அளவாவது மத்திய அரசு அப்பிராந்தியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அந்த மண்ணின் கலைஞர்களின் ஆதங்கம்.

 

லிங்கா படப்பிடிப்பை ரத்து செய்து 'ரீல்'களை பறிமுதல் செய்யணும்: கர்நாடக முதல்வரிடம் புகார்

ஷிமோகா: ஷிமோகாவில் உள்ள லிங்கனமக்கி அணை அருகே லிங்கா படப்பிடிப்பை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஷிமோகா மாவட்டத்தில் உள்ள

லிங்கா படப்பிடிப்பை ரத்து செய்து 'ரீல்'களை பறிமுதல் செய்யணும்: கர்நாடக முதல்வரிடம் புகார்

லிங்கனமக்கி அணை அருகே நடந்து வருகிறது. நாட்டின் முக்கிய நீர்மின் உற்பத்தி மையமான அந்த அணை அருகே படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்றும், அதை உடனே

ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சித்தராமையாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

ஆசியா கண்டத்திலேயே மிக குறைந்த செலவில் நீர்மின் உற்பத்தி செய்யும் பெருமை லிங்கனமக்கி அணைக்கு உள்ளது. இந்த அணையின் மீது இப்போது அனைவரின்

பார்வையும் பதிந்துள்ளது.

இந்த அணையின் சுற்றுப்பகுதிகளில் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை செய்யப்பட்ட இடத்தில் ரஜினிகாந்த்

நடிக்கும் "லிங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்திருப்பது விவேகமற்ற செயலாகும்.

மாநில அரசு உடனடியாக லிங்கனமக்கி அணை அருகில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, அந்த இடத்தில் நடந்துள்ள படப்பிடிப்பின்

ரீல்களை வசப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளிக்கு 'ஐ' வந்தாலும் 'கத்தி' ரிலீஸாவது உறுதி

சென்னை: தீபாவளிக்கு விக்ரம் நடித்துள்ள ஐ படம் வந்தாலும் கத்தி படம் ரிலீஸாவது உறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு விஜய் நடிக்கும் கத்தி, விஷாலின் பூஜை, கமலின் உத்தம வில்லன், தனுஷின் அனேகன், சிவகார்த்திகேயனின் டாணா என்று பல படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு 'ஐ' வந்தாலும் 'கத்தி' ரிலீஸாவது உறுதி

இந்த அறிவிப்பை அடுத்து தீபாவளி ரேசில் வரவிருந்த சில படங்கள் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கரின் படம் ரிலீஸாவதால் தீபாவளிக்கு தங்களின் படத்தையும் வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து கத்தி படக்குழுவிடம் கேட்டதற்கு அவர்கள் கூறுகையில், கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்றனர்.

இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு வகை வகையான கலை விருந்து உண்டு.

 

சென்னையில் ஷூட்டிங்.. அனுமதி கோரி ஜெ.வுக்கு பெட்டிஷன் போட்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்!

சென்னை: சென்னையில் படப்பிடிப்பு நடத்த மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா, இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் முதல்வர் தனிப்பிரிவில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில்,

நலிந்து கிடந்த தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஊக்கமளிக்க சிறந்த திரைப் படங்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்படுகிறது. கதையின் பின்புலம், ஒருசில தணிக்கை குழு உறுப்பினர்களின் மனோ பாவம் காரணமாக சில நல்ல படங்களுக்கும் ‘யு/ஏ' சான் றிதழ் கிடைக்கிறது. இந்த சான்றிதழ் பெற்ற படங்களை 12 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இதைத் தவிர யு' சான்றிதழ் படங்களுக்கும், ‘யு/ஏ' சான்றிதழ் படங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மத்திய அரசின் விருதுகள் ‘யு/ஏ' சான்றி தழ் படங்களுக்கும் வழங்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள யு/ஏ சான்றிதழ் படங்களுக்கும் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை அனுமதிக்கவேண்டும்.

திருட்டு விசிடி, கேபிள் டிவி மற்றும் தனியார் பஸ்களில் திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை திரையிடுவதை தடுக்க வேண்டும்.

சென்னை மாநகரில் தற்போது படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. பெரிய நடிகர்களை வைத்து எடுக்கும் படங்களுக்கு அண்டை மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். ஆனால், சிறுபட்ஜெட்டில் படங்கள் எடுப்பவர்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஆகவே, சென்னையில் (மெட்ரோ ரயில் பணிகள் நடக் கும் இடங்கள் தவிர்த்து) படப்பிடிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

அண்டாவ காணோம்... மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டி!

திமிரு பட வில்லி ஸ்ரேயா ரெட்டியை நினைவிருக்கிறதா... அந்தப் படத்துக்குப் பிறகு, விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

கணவருடன் தயாரிப்பு வேலைகளில் கொஞ்ச காலம் கவனம் செலுத்தினார். விஷால் நடித்த தோரணை, வெடி ஆகிய படங்களுக்கு இவர்தான் இணை தயாரிப்பாளர். ஆனால் விஷால் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பிறகு அந்த வேலையும் இல்லாமல் போனது.

அண்டாவ காணோம்... மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டி!

ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டிக்கு கிடைத்துள்ள முதல் படம் அண்டாவ காணோம். இயக்குபவர் புது இயக்குநர் வேல். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஸ்ரேயா.

"சுசீந்திரனின் முன்னாள் உதவியாளர் வேலு என்னிடம் வந்து அண்டாவ காணோம் கதையைச் சொன்னார். எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. முழுக்க முழுக்க திறமையைக் காட்ட வேண்டிய பாத்திரம். உடனே ஒப்புக் கொண்டேன். எனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்யும் இந்தப் படம்," என்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற தலைப்புகளில் படமெடுத்த லியோ விஷன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

 

மஹாலை திறந்து வைக்க ரூ.3.5 கோடி கேட்டாரா சல்மான் கான்?

மும்பை: லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பத்தாரின் மஹாலை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.3.5 கோடி கேட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சல்மான் கானுக்கு இந்தியா தவிர வெளிநாடுகளிலும் ரசிகர்கள் அதிகம். அதிலும் இங்கிலாந்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் லண்டனில் வசிக்கும் இந்திய குடும்பம் ஒன்று அங்கு மஹால் ஒன்றை கட்டியுள்ளது. அந்த மஹாலை சல்மான் கான் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

மஹாலை திறந்து வைக்க ரூ.3.5 கோடி கேட்டாரா சல்மான் கான்?

இரண்டு நாட்கள் நடக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் சல்மானிடம் கேட்க அவரும் சரி என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மஹாலை திறந்து வைக்க சல்மான் ரூ.3 கோடி கேட்டாராம். மேலும் தனது ஊழியர்கள் லண்டன் வரும் செலவு மற்றும் அவர்கள் தங்கும் செலவுக்காக ரூ.50 லட்சம் அளிக்குமாறும் அவர் கேட்டாராம்.

இது குறித்து அறிந்த பத்திரிக்கையாளர்கள் உடனே சல்மானை அணுகியுள்ளனர். ஆனால் அவரது செய்தித் தொடர்பாளரோ இந்த செய்தி முற்றிலும் தவறு என்று தெரிவித்துள்ளார்.