காதலில் தோல்வி : கிரண்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலில் தோல்வி : கிரண்!

4/28/2011 3:11:44 PM

ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவரை பிரிந்துவிட்டேன். இது எனது மனதை பெரிதும் பாதித்தது என்கிறார் கிரண். இது பற்றி அவர் கூறியதாவது: ஓரிரு ஆண்டுகளுக்கு முன் மும்பையை சேர்ந்த ஒருவரை காதலித்தேன். அவர்தான் வாழ்க்கை என இருந்தேன். திடீரென எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரிந்துவிட்டேன். இது எனது மனதை மிகவும் பாதித்தது. பல நாட்கள் சோகமாக இருந்தேன். இப்போது முழுமையாக அதிலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன். இப்போது எனது கவனம் எல்லாம் சினிமாவில் மட்டும்தான். இந்நிலையில் எனக்கு திருமணம் ஆகிவிட¢டது என்றும் எனது பாய்பிரெண்டை நான் கரம் பிடித்ததாகவும் தகவல் பரப்புகிறார்கள். இதில் சற்றும் உண்மை கிடையாது. ஒரு முறைதான் காதல் வந்தது. அதுவும் தோல்வி. மீண்டும் காதலில் விழவில்லை. காதலிக்கும் எண்ணமும் கிடையாது. இந்தியில் Ôபி கேர்ஃபுல்Õ, Ôஅதா பதா லாபதாÕ படங்களில் நடிக்கிறேன். தமிழில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்.


Source: Dinakaran
 

சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத் பூரிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத் பூரிப்பு

4/28/2011 3:13:54 PM

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் தெலுங்கில் ஹிட்டான 'ரிங்கா… ரிங்கா…' பாடல், இப்போது இந்தியில் ஒலிக்கப்போகிறது. சல்மான் கான், அசின் நடித்து வரும் 'ரெடி' படத்துக்காக. சமீபத்தில் இந்த பாடலை கேட்ட சல்மான், இதன் மெட்டிலும் இசையிலும் மயங்கிப்போனாராம். உடனே இப்பாடலின் உரிமையை வாங்க தயாரிப்பாளருக்கு உத்தரவு போட்டிருக்கிறார் சல்மான். சமீபத்தில் 'ரெடி' படத்தின் விழா மும்பையில் நடந்தபோது, அதில் தேவிஸ்ரீ பிரசாத்தும் கலந்துகொண்டார்.  இது பற்றி அவர் கூறும்போது, “விழாவில் என்னை பார்த்ததும் சல்மான் கான் ஓடிவந்து, கட்டியணைத்தார். அவரது அன்பை கண்டு நெகிழ்ந்து போனேன். “சூப்பரா பாட்டு போட்டிருக்கே. இத்தனை நாள் எங்கிருந்தே? உன்னை இந்தி சினிமா பயன்படுத்திக்கணும்” என சல்மான் சொன்னது எனக்கு பெருமையா இருந்தது” என்றார்.


Source: Dinakaran
 

நடிகர் கார்த்தி திருமணம் ஈரோடு ரஞ்சனியை மணக்கிறார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் கார்த்தி திருமணம் ஈரோடு ரஞ்சனியை மணக்கிறார்!

4/28/2011 9:58:00 AM

நடிகர் கார்த்தி -  ஈரோடு ரஞ்சனி திருமணம் ஜூலை 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. நடிகர் சிவகுமார் - லட்சுமி தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள். மூத்த மகன் நடிகர் சூர்யா. அவர் நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார். அவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.சூர்யாவின் தம்பி 'பருத்தி வீரன்' கார்த்தி. சென்னை கிரசன்ட் கல்லூரியில் பி.இ முடித்தார். அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிப்பில் எம்.எஸ் பட்டம் பெற்றார். சினிமா ஆர்வம் காரணமாக மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் அமீர் படத்தில் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். கார்த்தி பெற்றோர் அவருக்கு பெண் தேடி வந்தனர். ரஞ்சனி என்பவரை தேர்வு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தனர். ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி - ஜோதி மீனாட்சி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ரஞ்சனி சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். திருமணம் ஜூலை 3ம் தேதி  சென்னையில் நடக்கிறது. வருங்கால மனைவி குறித்து தினகரன் நிருபர் கேட்டபோது கார்த்தி சொன்னார்: கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார். முதல்முறை ரஞ்சனியை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு போகலாம் என்று நினைத்திருக்கிறோம். இவ்வாறு கார்த்தி கூறினார்.





Source: Dinakaran