கிசு கிசு - சென்சாருடன் இயக்குனர் சண்டை

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…

நல்ல காலம் பொறக்குது…

ஒச்சி படத்தோட வசனத்துல நிறைய கெட்ட வார்த்தைகள பயன்படுத்தி இருந்தாங்களாம்… இருந்தாங்களாம்… அதுக்கு சென்சார் ஆபிஸருங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம்… தெரிவிச்சாங்களாம்… Ôஏற்கனவே சில படங்கள்ல இந்த மாதிரி வசனமெல்லாம் வந்திருக்கு. யதார்த்தமா பேசுற வார்த்தைங்கதான். அப்படியே அனுமதிக்கணும்Õனு பட இயக்கம் சண்டை போட்டாராம்… போட்டாராம்… முடியாதுன்னு சொல்லி, அந்த வார்த்தையெல்லாம் கேட்க முடியாதபடி பீப் சவுண்டு கொடுத்துட்டாங்களாம்… கொடுத்துட்டாங்களாம்…

கவுரவமானவங்க படத்துல நடிச்ச பலருக்கு தயாரிப்பு சம்பள பாக்கி வச்சிருக்காராம்… வச்சிருக்காராம்… மோனிக ஹீரோயினை தொடர்ந்து, துணை நடிகருங்க நிறைய பேர் சங்கத்துல புகார் கொடுத்திருக்காங்களாம்… கொடுத்திருக்காங்களாம்… ஆக்டர் சங்கம் தயாரிப்பை பிடிச்சு விசாரிக்குதாம்… விசாரிக்குதாம்…

கேப்டன் படத்தோட ஷூட்டிங் இழுத்துட்டே போகுதாம்… போகுதாம்… நினைக்கிறப்போ திடீர்னு ஷூட்டிங்கை நடத்துறாராம் கேப்டன். திடீர்னு ஷூட்டிங் நின்னு போயிடுதாம்… போயிடுதாம்… படம் எப்போ முடியும்னு தெரியாம டெக்னீஷியனுங்க முழிச்சிட்டு இருக்காங்களாம்… இருக்காங்களாம்…


Source: Dinakaran
 

10 பேர் பற்றி ஜனநாதன் கமென்ட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் சேதுபதி, வசுந்தரா நடித்துள்ள 'தென்மேற்கு பருவக்காற்று’ பட கேசட் விழாவில் பங்கேற்றார் இயக்குனர் ஜனநாதன். அப்போது அவர் பேசியது: இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, 'பட கேசட் ரிலீஸுக்கு வர வேண்டும். முன்னதாக பாடல்களை போட்டுக் காட்டுகிறேன்Õ என்றார். 'பாடலை போட்டுக் காட்டாதீர்கள். என் படமாக இருந்தாலும் யாருக்கும் போட்டுக் காட்ட மாட்டேன்Õ என்றேன். இதை கூறுவதற்கு காரணம் உண்டு. 10 பேருக்கு படத்தை காட்டினால் அதில் 5 பேர், 'படமா எடுத்திருக்கிறான். தண்டம், ஊத்திக்கும்Õ என்பார்கள். இன்னும் 5 பேர், சாதாரண காட்சியைக்கூட 'தலைவா சூப்பர். ஆஹா, ஓஹோÕ என்று புகழ்வார்கள். அதை நம்ப முடியாது. 'ஈÕ படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஒவ்வொரு காட்சியையும் கைதட்டி ரசித்தார். 'படம் நீளமாக இருக்கிறது. குறைக்கப் போகிறேன்Õ என்றபோது 'வேண்டாம்Õ என்றார். பிறகுதான் நினைவுக்கு வந்தது, அது அவரது மகன் ஜீவா நடித்த படம் என்பது. அவருக்கு எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டார். பின் நீளத்தை குறைத்தேன். இவ்வாறு ஜனநாதன் பேசினார்.


Source: Dinakaran
 

ரூ.1கோடி சம்பளம் கேட்டேனா? : தமன்னா ஆவேசம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என தகவல் வெளியானது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியது: தமிழில் கார்த்தியுடன் 'சிறுத்தை’, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3 படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள¢ளன. இந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. மொத்தம் 6 படங்களில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. இதற்கிடையில் சிலர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய சூழலை சொன்னேன். 'ஜனவரியிலாவது கால்ஷீட் கொடுங்கள்Õ என்றனர். 'அதுவும் முடியாதுÕ என்றேன். இதை மனதில் வைத்துக்கொண்டு 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள். நான் யாரைப் பற்றியும் தவறாக கூற விரும்பவில்லை. ஒரே நாள் இரவில் நான் ஹீரோயின் ஆகிவிடவில்லை. கஷ்டப்பட்டு நடித்து, படிப்படியாக முன்னேறிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.


Source: Dinakaran
 

மாமனார் படத்தை 2தடவை பார்த்த தனுஷ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ் எந்திரன் படத்தை இரண்டாவது முறையாக பார்த்து மகிழ்ந்தார். படத்தை வி.ஐ.பி காட்சியில் பார்த்த தனுஷ், ஒரு வாரம் கழித்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். எந்திரன் படத்தை மீண்டும் பார்த்த தனுஷ், அந்த அனுபவம் குறித்து கூறுகையில், “ஒரு வாரம் கழித்து மீண்டும் எந்திரன் பார்த்தேன். படத்தை ரசிகர்கள் ரசிக்கும் விதம், ரசிகரல்லாதவர்களும் தரும் வரவேற்பு என்னை அதிசயிக்க வைத்தது. என் மாமனார் அவர் என்பதால் நான் இப்படிச் சொல்லவில்லை. நான் என்ன சொன்னாலும் அவர் விஷயத்தில் அது கொஞ்சம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் அவர் இந்த அளவு உழைக்கக் காரணம், சினிமா மீதுள்ள அவரது காதல்தான் என்றார்.


Source: Dinakaran
 

காவலன் வெளிநாட்டு உரிமை ரூ 6கோடிக்கு விற்பனை!

Asin and Vijay
அசின் நடித்துள்ள விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்துக் கொண்டிருக்க, காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ 6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்.

மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

தமிழகத்தில் இந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

 

ஓவர் ஸ்பீடாக பைக் ஓட்டிய நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15நாள் சிறை

John Abraham
மும்பை: முன்னணி இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனையும் ரூ 1500 அபராதமும் விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிவேகமாக பைக் ஓட்டி இருவரை காயப்படுத்திய குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் (வயது 37), கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி, சைக்கிள்களில் சென்ற இருவர் மீது மோதி காயம் ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் ஜான் ஆபிரகாமுக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை 9-வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு எஸ்.பி.குல்கர்னி, ஜான் ஆபிரகாமுக்கு 15 நாள் சிறைத் தண்டனையும். ரூ.1,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

ஆனாலும் இந்த வழக்கில் அப்பீல் செய்வதற்கு ஜானுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கால கட்டத்துக்குள் அப்பீல் செய்யாவிடில் அவர் கைது செய்யப்படுவார்!