மினிமம் கியாரண்டி முக்கியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் தயாரிப்பாளர் போடும் பணத்துக்கு மினிமம் கியாரண்டி முக்கியம் என்று விஜய் கூறினார். சென்னையில் நிருபர்களை சந்தித்த விஜய் கூறியதாவது: ஒரே மாதிரியான ஆக்ஷன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில படங்கள் ஓவர் ஆக்ஷன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். என்னை வித்தியாசமான கதையில் பார்க்க வேண்டும் என்று நானே விரும்பினேன். புதிய முயற்சியில் நடித்தாலும் படத்தின் வருமானத்துக்கு மினிமம் கியாரண்டி வேண்டும் என்று நினைத்தேன். இந்தியில் வெற்றி பெற்ற கதை, பெரிய இயக்குனர், ஷங்கர் கூட்டணி அமைந்ததால் மினிமம் கியாரண்டிக்கு நம்பிக்கை வந்தது. 'நண்பன்' படத்தில் நடித்தேன். பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் பணம் போடும் தயாரிப்பாளருக்கு மனிமம் கியாரண்டி கட்டாயம் வேண்டும் என்பது என் கருத்து.
நல்ல கதைகள் அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். வித்தியாசமான கதைகளில் புதுமையான கேரக்டர்களில் நடிக்க, நல்ல இயக்குனர்கள் முக்கியம். இவை இரண்டும் அமைந்தால் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பேன். 'நண்பன்' தெலுங்கில் வெளிவந்தாலும் பிறமொழி படங்களில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப் படங்களில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. 'நண்பன்' ஷங்கர் படம் என்பதை போல எனது அடுத்த படமான 'துப்பாக்கி' ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.


 

மருத்துவமனையில்சாயா சிங் அனுமதி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சாயா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்தார் சாயா சிங். பின்னர் பெங்களூர் திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் 'புட் பாய்சன்' ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து பெங்களூர் கிறிஸ்டல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நிலையில் முன்றேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாயாசிங்கிடம் கேட்டபோது, ''சாதாரண காய்ச்சலாக நினைத்து சிகிச்சை எடுத்தேன். திடீரென நடக்க முடியாமல் போனபோதுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தீவிர சிகிச்சைப் பிரியில் மூன்று நாள் சிகிச்சை எடுத்தேன். இப்போது உடல் தேறிவருகிறது. இன்னும் சில நாட்களில் வீட்டுக்கு திரும்புவேன்'' என்றார்.


 

இரண்டு தம்பதிகளின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சரவணராஜ் மூவி கம்பைன்ஸ் சார்பில் எத்திராஜ், டாக்டர் சரவணன் தயாரிக்கும் படம், 'சட்டென்று மாறுது வானிலை'. சஞ்ஜெய், அமீத் ஹீரோக்கள். ரோஸ் மிண்டா ஹீரோயின். நாசர், ஷியாம், எத்திராஜ், பூந்தமிழ், ரமணி, சவுதாமினி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, ஷியாம் மோகன். பாடல்கள்: ஏகாதசி, வினுப்பிரியா, துரைபாரதி. எழுதி இயக்கி, இணைந்து தயாரிக்கும் சி.எஸ்.ரவி பெருமாள் கூறியதாவது: தனது காதலி மனைவியாகும்போது, காதலிக்கத் தயங்குகிறான் ஆண். காதலன் கணவனாக வரும்போது, அதே காதலுடன் வாழ்வது இல்லை பெண். இப்படி மாறுபட்ட மனநிலையுடன் வாழும் தம்பதிகளைப் பற்றிய கதையாக படம் உருவாகிறது. மலேசியா, சிங்கப்பூர், மும்பை, ஐதராபாத், கோவா பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.


 

இந்தி ரீமேக்கில் மன்சூர் அலிகான்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
புவியரசி சினி பிளானர் சார்பில் ரவி சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்து தயாரிக்கும் படம், 'லொள்ளு தாதா பராக் பராக்'. மன்சூர் அலிகான் தாதாவாக நடிக்கிறார். அவரே பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். ஜோடியாக புதுமுகம் ஷில்பா நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் வியாசன் கூறியதாவது: இந்தியில் வெளிவந்த பிரபல காமெடி படமான 'குல்லுதாதா ரிட்டன்ஸ்' என்ற படத்தின் ரீமேக் இது. கடனை கொடுத்து விட்டு அதைத் திருப்பி வாங்க படாதபாடுபடும் காமெடி தாதாவின் கதை. அந்த வேடத்தில் மன்சூர் அலிகான் நடிக்கிறார். அவர் தவிர, இளம் ஹீரோ, ஹீரோயினும் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள் ஊட்டியிலும் மற்ற காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பாடல் காட்சியில் நடித்தபோது மன்சூர் அலிகான் கையெலும்பு உடைந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறோம். படத்தில் பத்துக்கும் மேற்பட்ட காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.


 

சினேகாவுடன் திருமணம் எப்போது?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினேகா-பிரசன்னா திருமணம் ஜூன் மாதம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பிரசன்னாவிடம் கேட்டபோது கூறியதாவது: திருமண விஷயம் பற்றி ஆளாளுக்கு ஏதோ சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. எல்லா மீடியாவையும் முறைப்படி அழைத்து திருமண தேதி பற்றி அறிவிப்பேன். பிப்ரவரி முதல் வாரத்தில் நானும், சினேகாவும் இணைந்து அறிவிக்க இருக்கிறோம். தற்போது ரஜினியுடன் 'கோச்சடையான்', சரத்குமாருடன் 'விடியல்' படங்களில் நடிக்கும் சினேகா, விரைவில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். திறமையான நடிகைகளில் சினேகாவும் ஒருவர். வித்தியாசமான கேரக்டரில் மட்டுமே நடிக்க விரும்புகிறார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், நடிப்புக்கு முழுக்கு போட நான் சொல்லவில்லை. இவ்வாறு பிரசன்னா கூறினார்.


 

அம்புலி படத்துக்கு 10 லட்சம் 3டி கண்ணாடிகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கே.வி.டி.ஆர் கிரியேட்டிவ் ரீல்ஸ் சார்பில் லோகநாதன் தயாரிக்கும் 3டி படம் 'அம்புலி'. பார்த்திபன், அஜெய், ஸ்ரீஜித், சனம் உட்பட பலர் நடிக்கிறார்கள். 3டி படம் என்பதால் அதற்கான கண்ணாடி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர்கள் ஹரி ஷங்கர், ஹரீஷ் நாராயணன் கூறியதாவது: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தமிழில் வரும் முதல் 3டி படம் இதுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவ ரையும் கவரும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சில மர்மமான நிகழ்வுகளை அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நினைத்து நடுங்குகிறா£ர்கள். அவற்றில் உள்ள உண்மை என்ன என்று நாயகனும் நாயகியும் கண்டுபிடிப்பது கதை. தமிழ் நாட்டின் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 3டிக்கென்று தனியாக உள்ள தியேட்டர்களில் கண்ணாடி அவர்களே வைத்திருப்பார்கள். பொதுவான தியேட்டர்களுக்காக முதல் கட்டமாக 10 லட்சம் கண்ணாடிகள் தயாரித்து வருகிறோம். படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து 50 லட்சம் கண்ணாடிகள் வரை தயாரிக்க தயார் நிலையில் இருக்கிறோம்.


 

சிம்ரன், ஜோதிகா மாதிரி ஆக சமீரா ரெட்டி ஆசை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கிளாமரைத் தாண்டி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சமீரா ரெட்டி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் நடித்துள்ள 'தேஜ்' படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அனில்கபூர், அஜய்தேவ்கனுடன் நடித்துள்ளேன். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் 'வேட்டை' படத்திலும் மாறி மாறி நடித்தேன். முதல் நாள் மாடர்ன் டிரெஸ் என்றால் மறுநாள் 'வேட்டை'க்காக பாவாடை, தாவணியில் நடித்தது வித்தியாசமாக இருந்தது. இந்தியை விட தென்னிந்திய படங்களில் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன். தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டேன். கன்னடப் படங்களில் நடிக்கவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சிம்ரன், ஜோதிகா பெயர்கள் கிளாமரைத் தாண்டி நடிப்புக்காகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களைப் போல ஆகவேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.


 

மலையாளத்தில் கிஷோர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளத்தில் அறிமுகமாக இருக்கும் கிஷோர் கூறியதாவது: தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளேன். ஏற்கனவே மலையாளத்தில் நிறைய அழைப்பு வந்தது. மொழி தெரியாததால் மறுத்தேன். ஆனால், ஜெயராம் நடிக்கும் 'திருவம்பாடி தம்புரான்' கதையைக் கேட்டபோது, நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இது எனக்கு முதல் மலையாளப் படம். ஷூட்டிங் ஸ்பாட்டில் வசனங்களை மலையாளத்தில் சொல்வதைக் கேட்டு நடித்து வருகிறேன். ஜி.என்.ஆர்.குமரவேலன் தமிழில் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். எனக்கும், ஒரு குழந்தைக்கும் இடையேயான பாசத்தை, சொல்லும் படம். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது.


 

பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் மினிமம் கியாரண்டி முக்கியம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் தயாரிப்பாளர் போடும் பணத்துக்கு மினிமம் கியாரண்டி முக்கியம் என்று விஜய் கூறினார். சென்னையில் நிருபர்களை சந்தித்த விஜய் கூறியதாவது: ஒரே மாதிரியான ஆக்ஷன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில படங்கள் ஓவர் ஆக்ஷன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். என்னை வித்தியாசமான கதையில் பார்க்க வேண்டும் என்று நானே விரும்பினேன். புதிய முயற்சியில் நடித்தாலும் படத்தின் வருமானத்துக்கு மினிமம் கியாரண்டி வேண்டும் என்று நினைத்தேன். இந்தியில் வெற்றி பெற்ற கதை, பெரிய இயக்குனர், ஷங்கர் கூட்டணி அமைந்ததால் மினிமம் கியாரண்டிக்கு நம்பிக்கை வந்தது. 'நண்பன்' படத்தில் நடித்தேன். பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் பணம் போடும் தயாரிப்பாளருக்கு மனிமம் கியாரண்டி கட்டாயம் வேண்டும் என்பது என் கருத்து.
நல்ல கதைகள் அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். வித்தியாசமான கதைகளில் புதுமையான கேரக்டர்களில் நடிக்க, நல்ல இயக்குனர்கள் முக்கியம். இவை இரண்டும் அமைந்தால் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பேன். 'நண்பன்' தெலுங்கில் வெளிவந்தாலும் பிறமொழி படங்களில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப் படங்களில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. 'நண்பன்' ஷங்கர் படம் என்பதை போல எனது அடுத்த படமான 'துப்பாக்கி' ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.


 

லாரா தத்தா, மகேஷ் பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
லாரா தத்தா மற்றும மகேஷ் பூபதி தம்பதியருக்கு ஓர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.மிஸ் யூனிவர்ஸ் லாரா தத்தாவும், பிரபல டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியும் பல மாதங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் எளிமையாக நடைபெற்றது. இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது, இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இருவரும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.