மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் கடுமையான கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறிது காலமாகவே உள்வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் தொடர் படப்பிடிப்பு காரணமாக சிகிச்சையைத் தள்ளிப் போட்டுள்ளார்.
இப்போது வலி அதிகரித்திருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பத்தில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தபோதிலும் தற்போது மருந்துகள் மற்றும் முழு ஒய்வின்மூலம் இதனை குணப்படுத்திவிட முடியும் என்று கூறியிருப்பதால் அவர் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகின்றார்.
மோகன்லாலின் அடுத்த படம் பெருச்சாழி. இதனை இயக்குபவர் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அருண் வைத்தியநாதன்.
படத்தின் தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ் தனது வலைப்பக்கத்தில், "எங்கள் 'பெருச்சாழி'யின் கால் வலி குணமடைந்து இன்னும் நான்கு நாட்களில் அவர் படப்பிடிப்பிற்கு வருவார் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டை அவர் கையால் செய்யவேண்டும் என்று காத்திருக்கின்றோம். கடவுள் அவருக்கு அருள் புரியட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.