நடிகை கல்யாணிக்கு டிச. 12ம் தேதி கல்யாணம்-சென்னை ஹோட்டலில் நடக்கிறது!

நடிகை கல்யாணிக்கு டிச. 12ம் தேதி கல்யாணம்-சென்னை ஹோட்டலில் நடக்கிறது!

சென்னை: சின்னத் திரையில் அறிமுகமாகி வெள்ளித் திரையிலும் நடித்த கல்யாணி என்கிற பூர்ணிதாவுக்கு திருமணம் முடிவாகியிருப்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம். தற்போது டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கல்யாணி, சினிமாவில் ‘அள்ளித்தந்த வானம்' படத்தில் அறிமுகமானார். ‘ஸ்ரீ', ‘ரமணா', ‘ஜெயம்' உள்ளிட்ட பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர், ‘மறந்தேன் மெய்மறந்தேன்' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கல்யாணி என்ற தனது பெயரை பூர்ணிதா என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து 'பிரதி ஞாயிறு 9.30 to 10.00', ‘இன்பா', ‘இளம்புயல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சின்னத்திரையில் இப்போதும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவருக்கும் மும்பையைச் சேர்ந்த டாக்டர் ரோஹித்துக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

வருகிற டிசம்பர் 12-ந் தேதி கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 15-ல் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

விஜய்யின் சைவம்... ஹீரோ ஹீரோயின்கள் கிடையாது!

ஏ எல் விஜய் அடுத்து இயக்கும் படத்துக்கு சைவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என யாரும் இல்லை. குழந்தை நட்சத்திரமான சாராவைச் சுற்றித்தான் கதையே நடக்கிறதாம்.

பெரிய சிக்கலுக்குப் பிறகு வெளியான தலைவா படத்தை ஊரே அக்கு வேறு ஆணி வேறாக அலசி தொங்கப் போட்டுவிட்டார்கள். அது எத்தனைப் படங்களின் உல்டா என்பதையும் கூறிவிட்டார்கள்.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தை பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் என யாருமில்லாமல் துவங்குகிறார் இயக்குநர் விஜய்.

விஜய்யின் சைவம்... ஹீரோ ஹீரோயின்கள் கிடையாது!

இந்தப் படத்துக்கு சைவம் என்று தலைப்பு வைத்துள்ளார் விஜய்.

அசைவமயமாக இருக்கும் கிராமத்தை, ஒரு குழந்தை எப்படி சுத்த சைவமாக மாற்றுகிறாள் என்பதுதான் கதையாம் (இந்தக் கதைக்கான டிவிடி எது என எப்போது செய்தி வெளியாகப் போகிறதோ)

இந்தக் கதையில் நாயகன், நாயகி என யாருமே இல்லையாம். தெய்வத் திருமகளில் நடித்த பேபி சாராதான் கதையின் மைய பாத்திரமாக நடிக்கிறார்.

நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து உதவ ஒப்புக் கொண்டுள்ளாராம்.

 

நரேந்திர மோடி வாழ்க்கை ரூ 40 கோடி செலவில் சினிமாவாகிறது!

டெல்லி: குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ரூ 40 கோடி செலவில் திரைப்படமாகிறது.

இந்தப் படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி வாழ்க்கை ரூ 40 கோடி செலவில் சினிமாவாகிறது!

பரேஷ் ராவல் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஓ மை காட்' என்ற படத்தை தயாரித்தவர். சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'சர்தார்' என்ற படத்திலும் நடித்தவர்.

பரேஷ் ராவல் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும், குஜராத்தில் நடந்த சென்ற சட்டப்பேரவை தேர்தலில் மோடிக்காக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றியவர் என்பதும் நினைவிருக்கலாம்.

சமீபத்தில் மோடியைச் சந்தித்த பரேஷ் ராவல், இந்த திரைப்பட தயாரிப்பு குறித்து அவரிடம் விரிவாகப் பேசினார்.

 

நய்யாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் நஸ்ரியா

சென்னை: இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் மீது கொடுத்த புகாரை இன்று வாபஸ் பெற்றார் நடிகை நஸ்ரியா.

தனது தொப்புளைக் காட்டும் சீனுக்கு அனுமதியில்லாமல் டூப் போட்டு எடுத்தார் என சற்குணம் மீதும், கதிரேசன் மீதும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறியிருந்தார் நஸ்ரியா.

ஆனால் படத்தின் ட்ரைலரிலிருந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சற்குணத்திடம் மன்னிப்பு கேட்டு, சமரசம் ஆகிவிட்டார் நஸ்ரியா.

நய்யாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் நஸ்ரியா  

இதனை செய்தியாளர்களிடமும் தெரிவித்த நஸ்ரியா, இன்று கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

'இந்த புகாருக்கு இனி வேலையில்லை. படம் பார்க்காமல் நான் புகார் கொடுத்துவிட்டேன். எனவே அதை இப்போது வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்," என்றார்.

மீண்டும் படத்தில் நடிக்க சற்குணம் அழைத்தால் நடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டனர். 'நிச்சயமாக நடிப்பேன்...எனக்கு அவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றார்.

அது சரி!

 

நாங்க காம்ப்ரமைஸ் ஆகிட்டோம்- படம் வெற்றி பெற சப்போர்ட் பண்ணுங்க! -பலே நஸ்ரியா

சென்னை: நய்யாண்டி பட விவகாரத்தில் நாங்கள் சமரசமாகிவிட்டோம். படம் சிறப்பாக வந்துள்ளது. வெற்றி பெற சப்போர்ட் பண்ணுங்க, என்று நடிகை நஸ்ரியா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களாக நய்யாண்டி பட இயக்குநர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் கதிர்வேல் ஆகியோர் மீது, தன் அனுமதி இல்லாமல் தனக்கு பதிலாக டூப் வைத்து தொப்புள் காட்சியை எடுத்துவிட்டதாக புகார் கூறிவந்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.

நாங்க காம்ப்ரமைஸ் ஆகிட்டோம்- படம் வெற்றி பெற சப்போர்ட் பண்ணுங்க! -பலே நஸ்ரியா

இந்த நிலையில், நேற்று திடீரென சமரசமாகிவிட்டதாக அறிவித்தார் நஸ்ரியா. இயக்குநர் சற்குணத்திடமும் நஸ்ரியாவும் அவர் தந்தையும் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்பட்டது.

நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த நஸ்ரியா, "இந்தப் படத்தின் ட்ரைலர் மட்டும் பார்த்துவிட்டுத்தான் நான் புகார் கொடுத்தேன். ஆனால் படத்தை நேற்றுப் பார்த்தேன். மிகச் சிறப்பாக வந்துள்ளது. எந்தக் காட்சியும் ஆட்சேபணைக்குரியதாக இல்லை.

படம் பார்க்காததால்தான் நான் புகார் தரவேண்டியதாகிவிட்டது. ஒரு கம்யூனிகேஷன் காரணமாக இப்படியெல்லாம் ஆகிவிட்டது. என்னிடம் பர்மிஷன் கேட்காமல் டூப் போட்டதுதான் பிரச்சினை. இப்போது அந்தக் காட்சியும் ட்ரைலரில் இல்லை.

எனவே நாங்கள் சமரசமாகிவிட்டோம். அதைச் சொல்லத்தான் உங்களை அழைத்தோம். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். அதனால் எல்லாரும் பார்த்து சப்போர்ட் பண்ணுங்க," என்றார்.

அவருடன் தயாரிப்பாளர் கதிரேசனும் வந்திருந்தார். கூடவே நஸ்ரியாவின் வக்கீலும் வந்தார். இயக்குநர் சற்குணமோ, ஹீரோ தனுஷோ வரவில்லை.

 

மகனுக்காக மீண்டும் சத்யராஜ் தயாரிக்கும் படம் 'நாய்கள் ஜாக்கிரதை'!

மகனுக்காக மீண்டும் சத்யராஜ் தயாரிக்கும் படம் 'நாய்கள் ஜாக்கிரதை'!

சென்னை: மகனுக்காக மீண்டும் தயாரிப்பாளராக மாறியுள்ளார் நடிகர் சத்யராஜ். இந்தப் படத்துக்கு நாய்கள் ஜாக்கிரதை எனத் தலைப்பிட்டுள்ளார்.

மகன் சிபிராஜை ஹீரோவாக்கி இவர் முதன் முதலில் லீ என்ற படத்தைத் தயாரித்தார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி என்ற பெயரில் இதற்காக சொந்தப் பட நிறுவனம் தொடங்கினார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை. சிபிராஜும் பெரிய நடிகராக ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறார் சத்யராஜ். அப்படத்திற்கு ‘நாய்கள் ஜாக்கிரதை' என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்திலும் சிபிராஜ்தான் நாயகன்.

இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம்.

இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இவர், பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த ‘நாணயம்' படத்தை இயக்கியவர். தரண்குமார் இசையமைக்கிறார். நிஷார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

 

காதல் கிசுகிசுவை பத்த வச்சதே நான் தான் தெரியும்ல: பெருமை பேசும் இயக்குனர்

சென்னை: புதுமுக லீ இயக்குனர் தனது படத்திற்கு விளம்பரம் தேடிய ரகசியத்தை பார்ட்டிகள் தோறும் பெருமையாகக் கூறி வருகிறாராம்.

லீ இயக்குனர் எடுத்த அந்த 4 எழுத்து படத்திற்கு விளம்பரத்திற்கு ஒன்றும் குறைச்சலே இல்லை என்று தான் கூற வேண்டும். நிஜத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் நம்பர் நடிகையும், நக்கல்ஸ் நாயகனும் படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர். படம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக படத்தை விளம்பரப்படுத்த அதில் வரும் திருமணப் பத்திரிக்கையை வெளியிட்டனர். மேலும் இந்த படத்தில் நடிக்கையில் டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. இத்தனை கிசுகிசுக்களையும் பரப்பிவிட்டு கம்மென்று இருந்தது வேறு யாருமல்ல லீயே தான்.

படத்திற்கு விளம்பரம் தேட நம்பர் நடிகைக்கும், நக்கல்ஸ் நாயகனுக்கும் காதல், டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் என்று நான் கொளுத்திப் போட்டேன். இந்த அப்பாவி மீடியாக்காரங்களும் அதை உண்மை என்று நினைத்து கண்டமேனிக்கு விளம்பரம் கொடுத்துவிட்டார்கள் என்று எந்த பார்ட்டிக்கு சென்றாலும் லீ பெருமை அடிக்கிறராாம்.

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.

 

கார்த்தி படங்களை ரூ.23 கோடி கொடுத்து அள்ளிய சன்டிவி

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களின் சேட்டிலைட் உரிமங்களை ரூ. 23 கொடுத்து வாங்கியுள்ளதாம் சன்டிவி. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளாராம் கார்த்தி.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படங்கள் பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா.

இரண்டு படங்களிலுமே கார்த்திதான் ஹீரோ. பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடி ஹன்சிகா' யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

கார்த்தி படங்களை ரூ.23 கோடி கொடுத்து அள்ளிய சன்டிவி

'ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார், ராஜேஷ் இயக்கி இருக்கிறார்.

'பிரியாணி' தான் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்த கார்த்தி தரப்பினருக்கு அதிருப்தி ஏற்படவே, மீண்டும் சில காட்சிகளை எடுக்கப் போகின்றனர்.

இதனால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வை அவசர அவசரமாக முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இந்த ரெண்டு படங்களையும் ரூ.23 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் சன் டி.வி.

 

கார்த்தி படங்களை ரூ.23 கோடி கொடுத்து அள்ளிய சன்டிவி

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களின் சேட்டிலைட் உரிமங்களை ரூ. 23 கொடுத்து வாங்கியுள்ளதாம் சன்டிவி. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளாராம் கார்த்தி.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கே.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள படங்கள் பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா.

இரண்டு படங்களிலுமே கார்த்திதான் ஹீரோ. பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடி ஹன்சிகா' யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

கார்த்தி படங்களை ரூ.23 கோடி கொடுத்து அள்ளிய சன்டிவி

'ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார், ராஜேஷ் இயக்கி இருக்கிறார்.

'பிரியாணி' தான் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்த கார்த்தி தரப்பினருக்கு அதிருப்தி ஏற்படவே, மீண்டும் சில காட்சிகளை எடுக்கப் போகின்றனர்.

இதனால், 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வை அவசர அவசரமாக முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இந்த ரெண்டு படங்களையும் ரூ.23 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் சன் டி.வி.

 

காதல் கிசுகிசுவை பத்த வச்சதே நான் தான் தெரியும்ல: பெருமை பேசும் இயக்குனர்

சென்னை: புதுமுக லீ இயக்குனர் தனது படத்திற்கு விளம்பரம் தேடிய ரகசியத்தை பார்ட்டிகள் தோறும் பெருமையாகக் கூறி வருகிறாராம்.

லீ இயக்குனர் எடுத்த அந்த 4 எழுத்து படத்திற்கு விளம்பரத்திற்கு ஒன்றும் குறைச்சலே இல்லை என்று தான் கூற வேண்டும். நிஜத்தில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் நம்பர் நடிகையும், நக்கல்ஸ் நாயகனும் படத்தில் கணவன், மனைவியாக நடித்தனர். படம் ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக படத்தை விளம்பரப்படுத்த அதில் வரும் திருமணப் பத்திரிக்கையை வெளியிட்டனர். மேலும் இந்த படத்தில் நடிக்கையில் டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. இத்தனை கிசுகிசுக்களையும் பரப்பிவிட்டு கம்மென்று இருந்தது வேறு யாருமல்ல லீயே தான்.

படத்திற்கு விளம்பரம் தேட நம்பர் நடிகைக்கும், நக்கல்ஸ் நாயகனுக்கும் காதல், டைம் நடிகைக்கும், 2 எழுத்து நாயகனுக்கும் இடையே காதல் என்று நான் கொளுத்திப் போட்டேன். இந்த அப்பாவி மீடியாக்காரங்களும் அதை உண்மை என்று நினைத்து கண்டமேனிக்கு விளம்பரம் கொடுத்துவிட்டார்கள் என்று எந்த பார்ட்டிக்கு சென்றாலும் லீ பெருமை அடிக்கிறராாம்.

நீங்க எல்லாம் நல்லா வருவீங்க.

 

பிரபுதேவாவின் ஷூட்டிங்கிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த 'சிறுத்தை'

பிரபுதேவாவின் ஷூட்டிங்கிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த 'சிறுத்தை'

மும்பை: பிரபுதேவா இயக்கி வரும் இந்தி படமான ஆர்...ராஜ்குமாரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சிறுத்தை புலி ஒன்று வந்து சென்றுள்ளது.

பிரபுதேவா ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோரை வைத்து ஆர்...ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார். மும்பையில் உள்ள பிலிம் சிட்டி அருகே இருக்கும் ஏரியில் முக்கிய காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது திடீர் என்று சிறுத்தை புலி ஒன்று அங்கு வந்துள்ளது (நம்ம கார்த்தி இல்ல). இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மற்றும் பாதுகாவலர்கள் டம்மி துப்பாக்கிகள், காலி பாட்டில்களைக் கொண்டு சத்தம் எழுப்பி சிறுத்தையை பீதி அடைய வைத்து அதை அங்கிருந்து கிளம்ப வைத்துள்ளனர்.

அதன் பிறகு ஷூட்டிங் தொடர்ந்து பல மணிநேரம் நடந்துள்ளது.

 

‘அரண்மனை’ படப்பிடிப்பு... முதல் முறையாக பதட்டமடைந்த ஹன்சிகா

சென்னை: முதன்முறையாக பதற்றமாக உணர்வதாக தனது அரண்மனைப் படப்பிடிப்பு முதல்நாள் அனுபவம் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

ஏற்கனவே, சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சியின் அடுத்தப் படைப்பான அரண்மனையிலும் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமானார்.

கடந்த 6 ஆம் தேதி அரண்மனை படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. பொதுவாக குடும்பக் காமெடிப் படங்களை இயக்கி ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும் சுந்தர்.சியின் முதல் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் தான் ‘அரண்மனை'.

‘அரண்மனை’ படப்பிடிப்பு... முதல் முறையாக பதட்டமடைந்த ஹன்சிகா

இப்படத்தில் சுந்தர் சி., வினய் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஹன்சிகா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா என மூன்று ஹீரோயின்கள். இதில் யார் யாருக்கு ஜோடி என்ற விவரம் இன்னும் ரகசியமாக உள்ளது.

இந்நிலையில் அரண்மனைப் படப்பிடிப்புத் தளத்தில் தனது முதல் நாள் நடிப்பு அனுபவம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹன்சிகா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்தப் படத்தில் நடிப்பதில் முதல்முறையாக பதற்றமாக உணர்கிறேன். இதுவரை நடிக்காத அளவுக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா - அடுத்த பப்ளிசிட்டி அதிரடி

சென்னை: உண்மை தெரியாமல் இயக்குநர் சற்குணம் மீது புகார் கொடுத்துவிட்டேன். நான் ஆட்சேபித்த காட்சி எதுவுமே நய்யாண்டி படத்தில் இல்லாததால் சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் நஸ்ரியா.

'நய்யாண்டி' படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக பெண்ணை வைத்து அவரது தொப்புளை தனுஷ் தடவுவது மாதிரி காட்சி வைத்து விட்டதாக இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது நஸ்ரியா புகார் கூறி வந்தார்.

முதலில் நடிகர் சங்கத்திலும் பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் கூறி பரபரப்பு கிளப்பினார்.

 சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா - அடுத்த பப்ளிசிட்டி அதிரடி

எனக்கு காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த நிலையில் இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் நஸ்ரியா, அவரது அப்பா நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை பார்த்திருக்கிறார்கள்.

சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் சற்குணம் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம்.

அந்த தொப்புள் காட்சி ட்ரைலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம்.

இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம்.

அவசரப்பட்டு சற்குணத்தை அவமானப்படுத்திய குற்றத்துக்காக தானே முன்வந்து பத்திரிகையாளர்கள் முன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவதாக நஸ்ரியா கூறியுள்ளாராம்.

நாளை மறுநாள் ரிலீசாகும் படத்துக்கு இதை விட ஹெவி பப்ளிசிட்டி வேறு கிடைக்குமா என்ன!!

 

மகளை திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றினார்… ரஜினி மீது புகார் கொடுத்தவருக்கு போலீஸ் எச்சரிக்கை

மகளை திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றினார்… ரஜினி மீது புகார் கொடுத்தவருக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் ஒருவர்.

புகார் அளித்த நபரின் பெயர் பி.கே. கருணா. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த இவர் அக்டோபர் 7ம் தேதி காலையில் கமிஷனர் அலுவலகம் வந்து வித்தியாசமான புகார் மனுவைக் கொடுத்தார்.

அதில் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவை தனக்கு திருமணம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். தன்னுடைய படங்களில் முக்கிய வேடம் கொடுப்பதாக கூறிய ரஜினி ஏமாற்றிவிட்டதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

அதைப் படித்துப் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து விட்டனராம். உடனே இந்த புகாரை எக்மோர் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னதில் கருணா கூறுவது பொய் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

 

டிஸ்கோ சாந்தியின் கணவர் நடிகர் ஸ்ரீஹரி மரணம்

டிஸ்கோ சாந்தியின் கணவர் நடிகர் ஸ்ரீஹரி மரணம்

மும்பை: முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவரும், தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி கல்லீரல் பிரச்சனையால் இன்று மரணம் அடைந்தார்.

டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை (49) மணந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. ஸ்ரீஹரி தெலுங்கு பட உலகில் பிரபலமான நடிகர். அவர் பிரபுதேவா இயக்கத்தில் ஆர்...ராஜ்குமார் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இதையடுத்து அவர் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றார். இந்நிலையில் கல்லீரல் பிரச்சனையால் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தாருக்கு திரையுலகினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீஹரி, டிஸ்கோ சாந்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மகள் அக்ஷரா பிறந்த 4 மாத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து மகளின் நினைவில் அக்ஷரா பவுன்டேஷனை ஹரி துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.