"ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சம

சென்னை: ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்.. எங்களுக்குள் அந்த புரிதல் உள்ளது, என்றார் கமல்ஹாஸன்.

சினிமா உலகில் இரு சிகரங்களாகத் திகழ்பவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் மதிப்பதிலும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒருவருக்குச் சோதனை என்றாலும் கவுரவம் கிடைத்தாலும் உடனடியாக அதில் பங்கேற்கும் உன்னதமான நண்பர்களாகத் திகழ்கின்றனர்.

கடந்த முறை விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை வந்தபோது, ரூ 100 கோடியைக் கொட்டி படமெடுத்துவிட்டு, அதை வெளியிட முடியாத சூழலில் உள்ள கமலின் தவிப்பை நினைத்து மனம் கலங்குகிறேன், என அறிக்கை வெளியிட்டவர் ரஜினி.

கமல் பிறந்த நாள் அல்லது அவருக்கு விருதுகள் கிடைக்கும்போது முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான் வரும்.

இப்போது கமல் பத்மபூஷண் விருது பெற்றிருப்பதால், அதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தாரா என்று நிருபர்கள் கமலிடம் கேட்டனர்.

அதற்கு கமல் அளித்த பதில், அவருக்கும் ரஜினிக்குமான அற்புதமான நட்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

"ரஜினியை நான் அறிவேன்... என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தினாலும் எனக்கு ஒன்றே. அவருக்கும் நான் அப்படியே. எங்களுக்குள் அந்த புரிதல் இருக்கிறது! அவர் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்," என்றார்.

 

தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் - வைரமுத்து

தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் -  வைரமுத்து

சென்னை: பத்மபூஷண் விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்டுள்ளது.

கலை, இலக்கிய பணிகளுக்காக பத்மபூஷண் விருது எனக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அளவில் ஆளுமைமிக்க ஓர் அங்கீகாரமாகும். இந்த விருது பெறுவதன் மூலம் அது தருகிற மகிழ்ச்சியை நான் மறைக்க விரும்பவில்லை. மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

நீண்ட பயணத்தில் நெல்லிச்சாறு போல இனி ஆற்றவிருக்கும் பணிகளுக்கு இது ஊட்டமும், உற்சாகமும் தரும் என்று நம்புகிறேன்.

இது இட்டுகொள்வதற்கான பட்டம் அல்ல, பெற்றுக்கொள்வதற்கான விருது என்று புரிந்து கொள்கிறேன். விருது என்பது பயணத்தின் முடிவல்ல, பயணப்பாதையில் இளைப்பாறி கொள்ளும் ஒரு பாலைவன சோலை, சற்றே இளைப்பாறிவிட்டு இன்னும் விரைந்து ஓடுவேன்.

கலை இலக்கியத்தின் வழியே மனிதகுல மேம்பாடு என்ற குறிக்கோளை தொடுவேன். இந்த ஆண்டு பத்ம விருது பெற்ற பெருமக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். என்னை இந்த விருதுக்கு முன்னெடுத்து சென்ற தமிழ் சமுதாயத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

 

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

பத்மபூஷண் விருது பெறவிருக்கும் நடிகர் கமல் ஹாஸனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் ராஜராஜ சோழனின் போர்வாள் படக் குழுவினர்.

தமிழ் சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுபவர் கமல் ஹாஸன். விருதுகள் அவருக்குப் புதிதல்ல.

இந்த ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதுமே, கோடம்பாக்கமே கமலுக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

சினேகன் நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற படக் குழு கமலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தது.

கமல் ஹாஸனுக்கு ராஜராஜ சோழனின் போர்வாள் குழு வாழ்த்து

படத்தின் நாயகன் பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஆர் எஸ் அமுதேஸ்வர் ஆகியோர் கமலுக்கு மாலை அணிவித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.