தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 'நலன் காக்கும் அணி' சார்பில் கேயார் போட்டி!

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: 'நலன் காக்கும் அணி' சார்பில் கேயார் போட்டி!

சென்னை: அடுத்த வாரம் நடக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் கேயார் தலைமையில் 27 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 824 உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியில் கேயார் தலைவராகப் போட்டியிடுகிறார். இந்த அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

நடிகர் சரத்குமார், மூத்த தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஆகியோர் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தனர்.

துணைத் தலைவர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ் (லிங்குசாமி சகோதரர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் கௌரவச் செயலாளர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, செயற்குழுவுக்கு ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோரின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெறுகிறது.

 

தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள்

சென்னை: யு சான்றிதழோடு வரும் படங்களுக்கு மட்டுமே இனி முன்னுரிமை. ஏ மற்றும் யு ஏவுடன் படங்களை தீபாவளிக்கு திரையிட மாட்டோம், என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அல்லது பிரச்சினைக்குரிய படங்களைத் திரையிடுவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

தீபாவளிப் படங்கள்... யு சான்றிதழ் இல்லாவிட்டால் திரையிட மாட்டோம்!- திரையரங்குகள்

அரசியல் ரீதியான அல்லது பாதுகாப்புக் காரணங்களால் உலகெங்கும் ரிலீசாகிற படங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும் வெளியாகாமல் போகின்றன.

வருகிற தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் 5 முதல் 7 வரை வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தப் படங்களுக்கு தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையை இப்போதே ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இப்போது சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே படத்தைத் திரையிட முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

அதில் முதல் நிபந்தனை, படத்தில் எந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் - வசனங்கள் இருக்கக் கூடாது.

இரண்டாவது, இந்த தீபாவளிக்கு வரும் படங்களில் சென்சாரில் யு சான்றுடன் வரும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிப்போம். யுஏ, ஏ சான்றுள்ள படங்களுக்கு தியேட்டர்கள் தர மாட்டோம்.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே படங்களின் சென்சார் சான்றிதழை தயாரிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்கள் தந்தாக வேண்டும்.

-இந்த தீபாவளிக்கு வரும் எல்லாப் படங்களும் யு சான்றிழ் பெற்றுவிடுமா... பார்க்கலாம்!

 

சோறு, கறியை கண்ணால பார்த்தே பல மாசமாச்சே: ஏங்கும் நடிகர்

சென்னை: படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட மெனக்கெடும் நடிகர் தற்போது தான் நடித்து வரும் படத்திற்காக அரிசி சாதம், கறி வகைகளை தவிர்த்துள்ளாராம்.

இந்த நடிகரின் பெரைக் கூறினாலே நம் நினைவுக்கு வருவது அவரது வித்தியாசமான கெட்டப்புகள் தான். மனிதர் இப்படி நினைத்த நேரம் உடம்பை சட்டென ஏத்தி, படால் என்று குறைத்து விடுகிறாரே. இவரால் மட்டும் எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது என்று பலர் வியப்பதுண்டு.
அண்மை காலமாக அவர் நடித்த படங்கள் ஓடாத நிலையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த இயக்குனர் படம் எடுத்தாலே ஹிட் தான் என்ற நிலை உள்ளதால் இப்படம் தனக்கு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் நடிகர்.

படத்தின் ஒருபாதியில் அவர் ஒல்லிக்குச்சியாக
வர வேண்டுமாம். அதற்காக கடும் டயட் செய்து 10 கிலோவுக்கு மேல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளாராம். படம் முடியும் வரை உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதால் அவர் பல மாதங்களாக அரிசி சாதம், அசைவ உணவுகளை தவிர்த்து வெறும் பழம், காய்கறிகளை சாப்பிட்டு வருகிறாராம்.

கால் வயிறும், அரை வயிறுமாய் சாப்பிட்டு உடல் எடையை மெயின்டெய்ன் பண்ணுகிறாராம்.

 

இசையை காப்பியடிப்பதில் கில்லாடி ரங்கனாக இருக்கிறாரே

சென்னை: கோலிவுட்டில் சென்சுரி அடித்துள்ள இசையமைப்பாளர் டியூன்களை சுடுவதில் பலே கில்லாடியாம்.

டியூன்களை பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து நமக்கு பிரஷ்ஷாக கொடுக்கும் ஒரு இசையமைப்பாளரை பற்றி மக்கள் ஃபேஸ்புக்கில் போட்டுள்ள தகவலால் அவர் கடுப்பில் உள்ளார் என்று செய்தி வெளியானது. இந்நிலையில் கோலிவுட்டின் மற்றொரு இளம் இசையமைப்பாளர் டியூன்களை சுடுவதில் முன்பு கூறப்பட்ட இசையமைப்பாளரை விட கில்லாடியாம்.

பெரிய இசைக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அவர் ஆங்கில பட பாடல்கள், பாப் பாடல்கள், இந்தி பாடல்கள் என்று பல்வேறு இடங்களில் இசையை திருடி நமக்கு கொடுத்து அது ஹிட் வேறு ஆகிவிட்டது. அவர் படம், பாப் பாடல்கள் தவிர கனீர் குரலுக்கு சொந்தமான பாடகியின் பிரபல இந்து கடவுளைப் பற்றிய பாடலின் இசையைக் கூட சுட்டு படத்தில் பாட்டு போட்டுள்ளார். அந்த பாடலை விடலைப் பசங்கள் எல்லாம் பல காலம் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

அவர் எந்தெந்த பாடல்களுக்கு எங்கெங்கிருந்து இசையை திருடினார் என்ற பட்டியல் இணையதளத்தில் உள்ளது. அந்த கில்லாடியின் கில்லாடித்தனத்தை நீங்களும் தேடிப்பிடித்து படித்துப் பாருங்கள்.

 

ஸ்வீட் நடிகையின் ‘வெள்ளை’ செண்டிமெண்ட்...

சென்னை: கிராமத்து ராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்ட ஸ்வீட் நடிகைக்கு வெள்ளை உடை செண்டிமெண்ட் உள்ளதாம். குருநாதரின் படத்தில் கட்டாயம் வெள்ளை உடை தேவதைகள் ‘லா...லா..' பாடுவார்களே, அதேபோல தனது படத்திலும் ஒரு காட்சியிலாவது வெள்ளை உடையில் வந்து விட வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் வாழ்கிறாராம்.

அதன் படி, தான் நடித்த 'தீரா' படமொன்றில் அறிமுகக் காட்சீயில் வெள்ளை உடையில் தோன்றியதே படத்தின் வெற்றிக்கு மூலக் காரணம் என நம்புகிறாராம் நடிகை. அந்தப் படம் மூலமாகவே, லட்சத்திலிருந்த நடிகையின் சம்பளம் கோடியில் போய் உச்சத்தைத் தொட்டதாம்.

அதனால், வரும் தற்போது நடித்து வரும் படங்களிலும் கட்டாயம் வெள்ளை உடைக் காட்சியை கட்டாயம் வைக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாராம் நடிகை.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானு வடிவேல் டயலாக் மாதிரி, வெள்ளை ட்ரஸ் போட்டவங்க பொய் சொல்லமாட்டாங்கனு உங்க படத்துல ஏதாவது டயலாக் வைங்களேன் மேடம்....

 

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!
சென்னை: முத்தக் காட்சி லீக் ஆனதால் முறுக்கிக் கொண்டு பிரிந்த ஆன்ட்ரியாவும் அனிருத்தும் மீண்டும் இணக்கமாகி விட்டனர்.

மூன்று படங்களில் முன்னணி இசையமைப்பாளராகிவிட்ட அனிருத்தும், பிரபல நடிகை ஆன்ட்ரியாவும் நெருக்கமாகப் பழகி வந்தனர். இருவரும் உதட்டோடு உதடு கவ்விக் கொண்ட காட்சி, புகைப்படங்களாக மீடியாவில் வெளியானது.

இதனால் அப்செட்டான ஆன்ட்ரியா, 'அனிருத்தும் நானும் எப்போதோ ஒரு விருந்தில் நெருக்கமாக இருந்த ஒரு தருணத்தில் எடுத்த படம் அது. இதைப் போய் பெரிசுபடுத்தறாங்க. இது கேவலமான செயல். இப்போது அனிருத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் வயதுக்கு ஏற்றவர் அல்ல அவர்,' என்று பேட்டி கொடுத்தார்.

ஆன்ட்ரியாவுடன் மீண்டும் நெருக்கம்... தொடர்ந்து வாய்ப்பு தரும் அனிருத்!

இருவரும் அதன் பிறகு சில மாதங்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

இப்போது இருவரும் சமாதானமாகிவிட்டார்கள். அந்த முத்தப் படம் வெளியானதற்கு அனிருத் மன்னிப்புக் கேட்டதால், மீண்டும் நண்பர்களாகிவிட்டார்களாம். அனிருத் தனது வணக்கம் சென்னை படத்தில் பாட ஆன்ட்ரியாவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

தொடர்ந்து தன் படங்களில் பாட ஆன்ட்ரியாவுக்கு வாய்ப்பளிப்பேன் என்றும், நல்ல குரல் வளம் கொண்ட அவரைப் பயன்படுத்துவதில் தவறில்லையே என்றும் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.

 

பத்தாண்டு நடிப்புக்காக த்ரிஷாவுக்கு சிமா விழாவில் விருது!

சென்னை: பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷாவை கவுரவிக்க, சிமா விருது வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

தென்னிந்திய சர்வதேச சினிமா விருது (சிமா - SIIMA) வழங்கும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடக்கிறது.

பத்தாண்டு நடிப்புக்காக த்ரிஷாவுக்கு சிமா விழாவில் விருது!  

இந்திய சினிமா தனது 100-வது ஆண்டைக் கொண்டாடும் இந்த தருணத்தில், சினிமாவில் சிறப்பான பங்காற்றிய கலைஞர்களை கவுரவிக்கிறது இந்த விழா.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வரும் த்ரிஷாவை கவுரவிக்க முடிவு செய்துள்ளது விழாக் குழு.

இந்த விழாவில் நேரில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொள்கிறார் த்ரிஷா.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த த்ரிஷா கூறுகையில், "இதை மிகவும் உயர்ந்த கவுரவமாக கருதுகிறேன். வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு எனக்குத் தரப்படும் விருது இது. நிச்சயம் நேரில் சென்று பெற்றுக் கொள்வோம். இந்த நேரத்தில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

தேனிலவு.. வசனத்தில் கலக்குறாங்களேய்யா!

சென்னை: சன் டிவியில் ராத்திரி பத்து மணிக்கு தேனிலவு என்ற செமையான சீரியல் ஒளிபரப்பாகிறது...

திருமுருகன் நடிப்பில் அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சீரியல், ஈர்ப்பதாக உள்ளது. காரணம், அதில் வரும் வசனம். செமையாக இருக்கிறது வசனங்கள் எல்லாம்.

எதிர்பாராத இடத்தில் வரும் காமெடி வசனத்தால் வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார் இயக்குநர் விக்கிரமாதித்தன்.

{photo-feature}

 

கலைக்குடும்பம் என்பது பால், சர்க்கரை, காபித்தூள் கலந்த காபி போன்று இருக்க வேண்டும்: சரத்குமார்

சென்னை: கலைக் குடும்பம் என்பது பால், சர்க்கரை மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலந்த காபி போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2013-15 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் வேட்பாளர்களை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

கலைக்குடும்பம் என்பது பால், சர்க்கரை, காபித்தூள் கலந்த காபி போன்று இருக்க வேண்டும்: சரத்குமார்

அப்போது அவர் பேசுகையில்,

எந்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 2 ஆண்டுகளாக அவ்வாறு இல்லாததால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. நான் இங்கு வந்து உரை நிகழ்த்துவதால் பிறருக்கு எதிரி இல்லை. நாம் எல்லாம் எதற்காக கூடி இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்.

கலைக் குடும்பம் என்பது பால், சர்க்கரை மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலந்த காபி போன்று ஒற்றுமையாக இருக்க வேண்டும். கேயார் சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்தவர், அனுபவசாலி, தயாரிப்பாளர், இயக்குனராக இருந்தவர். அவர் தலைமையிலான அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

 

பாலுமகேந்திரா - இளையராஜா கூட்டணியின் தலைமுறைகள் படத்துக்கு யு!

சென்னை: ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திரா - இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள தலைமுறைகள் படத்துக்கு சென்சார் குழு யு சான்று வழங்கியுள்ளது.

இயக்குனர் சசிகுமார் தயா‌ரிப்பில் ‘தலைமுறைகள்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலுமகேந்திரா. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

2005-ல் தனுஷ் - ப்ரியாமணி நடித்த அது ஒரு கனாக் காலம் படத்துக்குப் பிறகு, ராஜேஷ்வருக்காக ஒரு படம் இயக்கவிருந்தார் பாலு மகேந்திரா. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. உடல் நிலை போன்ற காரணங்களால் அவர் புதுப்படம் இயக்குவதை தள்ளிப் போட்டு வந்தார்.

பாலுமகேந்திரா - இளையராஜா கூட்டணியின் தலைமுறைகள் படத்துக்கு யு!

7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் புதிய படம் இயக்குகிறார் பாலுமகேந்திரா.

இப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கம்போல நிறைய புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளார் பாலு மகேந்திரா.

படப்பிடிப்பு முடிந்து, சான்றிதழுக்காக சென்சாருக்கு படத்தைப் போட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல் இப்படத்துக்கு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

ஏங்க பவர் ஜாமீனில் வந்து ரவசு பேட்டி கொடுத்தாராமே?

ஏங்க பவர் ஜாமீனில் வந்து ரவசு பேட்டி கொடுத்தாராமே?

சென்னை: மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது.

பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக ஃபேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தொப்பையும், தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம்.

பேட்டியில் அவர் கூறுகையில்,

சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்கு பணிபுரியும் தமிழக போலீசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். நான் சிறை சென்ற காலத்தில் கோலிவுட் என்னை மிஸ் பண்ணி இருக்கும். என் படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு ரிலீஸாகும். நான் சிறைக்கு சென்றது சிலர் செய்த சதி. இந்த பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவேன் என்றாராம்.

 

மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி!

சென்னை: மெட்ராஸ் கபே படத்தை தமிழகத்திலும் புதுவையிலும் திரையிடாததால் ரூ 1கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம் அதன் விநியோகஸ்தருக்கு.

ஜான் ஆப்ரஹாம், நர்கிஸ் ஃபக்கிர் ஆகியோர் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ் கபே' திரைப்படம் கடந்த 23-ந் தேதி தமிழகம் - புதுவையைத் தவிர பிற மாநிலங்களில் வெளியானது. இந்த படத்தை ஷூஜித் சர்கார் இயக்கியிருந்தார். ஜான் ஆபிரகாமே தயாரித்திருந்தார்.

இந்தியில் உருவான இப்படம் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் படம் தமிழருக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிப்பதாகவும் உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

மெட்ராஸ் கபே.. தமிழ் விநியோகஸ்தருக்கு நஷ்டம் 1 கோடி!

படத்தை தமிழில் வெளியிட நீதிமன்றம் தடை செய்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுத்தனர்.

தமிழகத்தில் இப்படம் வெளியிட முடியாமல் போனதால், தமிழ்நாட்டில் விநியோக உரிமையை வாங்கியவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிரந்தரமாக வெளியாகாதபட்சத்தில் இந்தப் படத்தின் விநியோகஸ்தருக்கு ஜான் ஆபிரகாம் இந்தத் தொகையைத் தரவேண்டியிருக்கும்.