சவாலே சமாளி... எம்எல்ஏ அருண்பாண்டியன் தயாரிக்கும் புதுப் படம்!

நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறி பின்னர் அரசியலுக்கும் வந்துவிட்ட அருண்பாண்டியன், மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

தனது ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பாக சவாலே சமாளி என்ற படத்தைத் தயாரிக்கிறார். அசோக் செல்வன், பிந்து மாதவி நடிக்கும் இந்தப் படத்தை சத்ய சிவா இயக்குகிறார்.

MLA Arunpandian's Savale Samali

முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

உடல்நலமில்லாமல் இருந்து அரசின் உதவி பெற்று குணமடைந்துள்ள பரவை முனியம்மா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

எஸ்எஸ் தமன் இசையமைக்க, பி செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்....

பக்கா கமர்ஷியல் படம் சவாலே சமாளி. ஒவ்வொரு நடிகர், நடிகையுமே கேரக்டராகவே மாறி காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

இந்த படத்திற்காக பதிவு செய்த பாடலான "நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத் தான் தவிக்கிறாடா பொம்பள " என்ற பாடலைக் கேட்ட எஸ்.ஜே.சூர்யா இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கே நடந்தாலும் சொல்லுங்க நான் வந்து பார்க்கணும் என்றார்.

அதே மாதிரி அசோக்செல்வன் - ஜெகன் - ஐஸ்வர்யா நடித்த அந்த பாடல் மகாபலிபுரம் அருகே எடுக்கப் பட்ட போது எஸ்.ஜே.சூர்யா வந்திருந்து படப்பிடிப்பை பார்த்து பாடலையும், படமாக்கப்பட்ட விதத்தையும் பாராட்டிச் சென்றார்.

MLA Arunpandian's Savale Samali

நடிகை லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா முதன் முதலாக இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கிறார். செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது," என்றார் இயக்குநர் சத்யசிவா.

சவாலே சமாளி என்பது ஏற்கெனவே அறுபதுகளில் சிவாஜி, ஜெயலலிதா நடிப்பில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தல நடிகரின் படத்திற்கு தண்ணி காட்டும் வாரிசு நடிகை

சென்னை: தமிழ் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கும் அந்த வாரிசு நடிகையைப் பற்றி அரசல்புரசலாக எழுந்த தகவல்கள் தற்போது காட்டுத்தீ வேகத்தில் பரவிவருகின்றது.

இரவு பகல் என்று மாறிமாறி இந்தியா முழுவதும் பறந்து பறந்து நடித்த அந்த நடிகை தற்போது ஏகத்திற்கும் கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டு வருகிறாராம். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடிகை ஒப்பந்தமாகியிருக்கிறார்.

நடிகை நடித்து இந்த வருடம் வெளிவந்த படங்கள் அனைத்தும் ஹிட்டடிக்க விளைவு நடிகையின் காட்டில் அடைமழை பொழிகிறது, ஆனால் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள மறுக்கிறார் நடிகை.

ஏகப்பட்ட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தாலும் கொடுத்த கால்ஷீட் படி நடிக்காமல் தனது இஷ்டத்திற்கு நடித்து வருகிறாராம், இது தவிர சைடு கேப்பில் நண்பர்களுடன் பார்ட்டி, பங்க்ஷன் மற்றும் ஊர்சுற்றல் என்று ஏகத்திற்கும் லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறாராம்.

நடிகையின் இந்த கால்ஷீட் சொதப்பலில் அதிகமாக பாதிக்கப்படுவது கோட்சூட் நடிகரின் படம் தானாம், தீபாவளி தினத்தில் படம் வெளியாகும் என்று அறிவித்திருப்பதால் சிறுத்தையான இயக்குநர் சீறிப் பாய்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் நடிகையின் கால்ஷீட் சொதப்பலைப் பார்த்தால் படம் தீபாவளிக்கு என்ன பொங்கலுக்கு கூட வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இதனால் கலங்கிப் போன நடிகரும், தயாரிப்பாளரும் கோட்சூட் நடிகரிடம் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் நடிகை தட்ட மாட்டார் என்று கேட்டிருக்கின்றனர்.

ஆனால் நான் அடுத்தவர்களின் சொந்தப் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்று நடிகர் மறுத்து விட்டாராம், இதனால் தீபாவளிக்கு திட்டமிட்டபடி படம் வெளியாகுமா? என்று கதிகலங்கிப் போயிருக்கின்றனர் ஒட்டுமொத்த படக்குழுவினரும்.

அந்த நடிப்பு தெய்வத்தின் மகளா நீ? அப்படின்னு நான் கேட்கல பாஸ்...

 

தோழி கவுதமிக்காக கதை எழுதும் கமல்

சென்னை: கமல் - கவுதமி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்ட படம் பாபநாசம், பாபநாசம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கமல் தற்போது தூங்கா வனம் திரைப்படத்திற்காக தூங்காமல் உழைத்து வருகிறார்.

விரைவில் இந்தப் படம் வெளிவரவிருக்கிறது, இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக தோழி கவுதமிக்காக ஒரு கதையை கையில் எடுத்திருக்கிறார் கமல். பாபநாசம் திரைப்படத்தில் கவுதமியின் நடிப்பைப் பார்த்து அசந்து போன கமல் கவுதமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதை ஒன்றினை தற்போது எழுதி வருகிறாராம்.

Kamal to Write a Story for Gautami

சந்தர்ப்பங்கள் நன்றாக அமையும் பட்சத்தில் இந்தப் படத்தை கமலே இயக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது, படம் முழுவதும் கவுதமியை மையப்படுத்தி வருவது போன்ற ஒரு கதையாக இது இருக்கும் என்று கூறுகின்றனர்.

தமிழில் மாபெரும் ஹிட்டடித்த தேவர்மகன் மற்றும் நம்மவர் போன்ற படங்களில் இணைந்து நடித்த இருவரும் மீண்டும் நீண்ட வருடங்கள் கழித்து பாபநாசம் திரைப்படத்தின் மூலம் திரையில் மீண்டும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் லிங்குசாமிக்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்த கமல் அது முடியாத காரணத்தால் தூங்கா வனம் படத்தின் திரையரங்க உரிமையை லிங்குசாமிக்கு அளிக்கப் போகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

தூங்கா வனத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் சைப் அலிகானுடன் இணைந்து அரசியல் கலந்த ஒரு திரில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்.

 

காசி ஸ்பெஷல் ஷோவில் சிம்பு: 'இளையதளபதி விஜய்க்கு நன்றி' கார்டுடன் தொடங்கியது படம்!

காசி திரையரங்கில் நடக்கும் வாலு படத்தின் சிறப்புக் காட்சி பார்க்க இன்று காலை தியேட்டருக்கு வந்தார் நடிகர் சிம்பு. அவரை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Vaalu (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

சிம்பு நடித்த வாலு திரைப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இன்று வெளியாகிறது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி இன்று காலை 10 மணிக்கு காசி திரையரங்கில் தொடங்கியது.

Simbu watches Vaalu along with fans

காலை 4 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்புக் காட்சி போட இதே திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்களும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கி வந்திருந்தனர். ஆனால் அந்த இரு காட்சிகளும் ரத்தாகிவிட்டன.

இந்த நிலையில் 10 மணிக்கு சிறப்புக் காட்சி நிச்சயம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தின் நாயகன் சிம்பு, உடன் நடித்த ஜெய் உள்ளிட்டோரும் தியேட்டருக்கு வந்தனர்.

சிம்பு வந்த சில நிமிடங்களில் படம் தொடங்கியது. இளையதளபதி விஜய்க்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்க, ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்தபடி பால்கனியில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தார் சிம்பு.

 

காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு... டிவிட்டரில் டிரெண்டானது!

சென்னை: 3 வருடப் போராட்டத்திற்குப் பின் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் வாலு, சிம்பு ஹன்சிகா, சந்தானம், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.

Vaalu (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

வாலு முதல் நாள் சிறப்புக் காட்சி காசி தியேட்டரில் காலை 8.05 மணிக்கு திரையிடப்படும் என்று அறிவித்து இருந்தனர், மேலும் அந்தக் காட்சியில் ரசிகர்களுடன் சிம்பு படம் பார்க்கிறார் என்றும் கூறியிருந்தனர்.

இதனை சிம்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.


ஆனால் திட்டமிட்டபடி சிறப்புக் காட்சி காசி தியேட்டரில் இன்று காலை திரையிடப்படவில்லை, இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்டபோது படத்தை திரையிடுவதற்கான உரிமம் இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறினர்.


இதனைத் தொடர்ந்து முதல் காட்சி சற்று முன்பு 10 மணியளவில் தொடங்கியது, நடிகர் சிம்பு மற்றும் ஜெய் இருவரும் ரசிகர்களுடன் அமர்ந்து வாலு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


படத்தைப் பார்க்க வந்த சிம்புவிற்கு ரசிகர்கள் ஆராவாரமான வரவேற்பு அளித்து உள்ளே கூட்டிச் சென்றனர், வாலு டைட்டில் கார்டில் விஜய் செய்த உதவிக்கு நன்றி என்று கூறுவது போன்று படம் தொடங்குகின்றது.

அஜீத்தின் ரசிகனாகவும் சிம்பு இந்தப் படத்தில் நடித்திருப்பதால் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் வாலு படத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தனது ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதால் தற்போது இந்திய அளவில் காசி தியேட்டர், ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றது.

படம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா? பார்க்கலாம்...