பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்

பொங்கலுக்கு எத்தனை பெரிய படம் வந்தாலும் கவலையில்லை. எவனா இருந்தாலும் வெட்டுவேன் என விஷால் கூறியதாக நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆர்யா பேசுகையில், "விஷாலிடம் என்ன மச்சான் படம் எப்போ வெளியாகிறது என்றேன்.

பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்

பொங்கலுக்கு என்றார்.

பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன். அதப்பத்தி எனக்கு கவலையில்ல... எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது,'' என்றார்.

பொங்கலுக்கு எந்தப் படம் வந்தாலும் கவலையில்லை.. எவனா இருந்தாலும் வெட்டுவேன் - விஷால்

'ஆம்பள' இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, " இது ஒரு பேமிலி எண்டர்டெய்னர். படமே திருவிழா போன்ற உணர்வு தரும். நான் வேகமாக ஓடுபவன். என்னையே விரட்டி விரட்டி வேலை வாங்கியவர் விஷால்,'' என்றார்.

 

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய 'ஃபாரின் குழந்தைகள்'..- இயக்குநர் வீ சேகர் கமென்ட்

தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளிநாட்டுப் படங்களின் காப்பியாக இருப்பதைக் குறிக்கும் வகையில், 'தமிழ் சினிமாவில் இப்போது நிறைய ஃபாரீன் குழந்தைகளைப் பார்க்கிறேன்," என சீனியர் இயக்குநர் வீ சேகர் கமெண்ட் அடித்தார்.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள கங்காரு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வி.சேகர், "நிச்சயம் இது நல்ல படமாகத் தெரிகிறது. நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய 'ஃபாரின் குழந்தைகள்'..- இயக்குநர் வீ சேகர் கமென்ட்

இப்போதைய படங்களைப் பார்க்கும் போது டெக்னிக்கலாக வளர்ந்திருப்பது தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து எவ்வளவோ டெக்னிக்கலாகப் பெறலாம். ஆனால் திரைக்கதை, கருத்து கலாச்சாரம் நமதாக இருக்க வேண்டும். பண்பாட்டை நம்மிடமிருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு சட்டை வெளிநாட்டில் எடுக்கலாம். ஆனால் குழந்தை நமதாக இருக்க வேண்டும். சட்டை பாரின்ல எடுக்கலாம்... குழந்தையே பாரின்ல வாங்க முடியுமா? சினிமாவும் அப்படித்தான். சினிமாவில் இப்போது நிறைய ஃபாரின் குழந்தைகளை அப்படிப் பார்க்கிறேன்.

போக்குவரத்தில் சிறிய பெரிய வாகனங்கள் ஒரே நேரத்தில் போனால் வாகன நெரிசலில் டிராபிக் ஜாம்தான் ஏற்படும். அதைக் கட்டுப்படுத்த டிராபிக் சிக்னல், டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல ஒரே நேரத்தில் பல படங்கள் வருவதைக் கட்டுப் படுத்த தயாரிப்பளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

 

அஜீத்துக்கு புத்தாண்டு அன்று சர்பிரைஸ் கொடுக்கும் ரசிகர்கள்

சென்னை: அஜீத் ரசிகர்கள் புத்தாண்டு அன்று தங்கள் 'தல'க்கு சர்பிரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் முதன்முறையாக நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் நாளை மறுநாள் நள்ளிரவில் எளிமையான முறையில் வெளியிடப்படுகிறது. இது தல ரசிகர்களுக்கு அளிக்கப்படும் புத்தாண்டு பரிசாகும். அந்த பரிசை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தாண்டு அன்று அஜீத்தை அசத்தப் போகும் ரசிகர்கள்

இந்நிலையில் ரசிகர்கள் அஜீத்துக்கு புத்தாண்டு அன்று சர்பிரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதாவது புத்தாண்டு அன்று சென்னையில் உள்ள ரிட்சி தெருவில் என்னை அறிந்தால் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாட உள்ளனர். மேலும் இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி அசத்த ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸாகும் என்னை அறிந்தால் படத்தின் டீஸரே யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது. இந்நிலையில் தான் ட்ரெய்லர் புத்தாண்டு ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு மட்டும் எப்படி?: நம்பர் நடிகையை பார்த்து வயிறு எரியும் நடிகைகள்

சென்னை: நம்பர் நடிகைக்கு மட்டும் அவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் மறுபேச்சு பேசாமல் கொடுப்பதால் சில முன்னணி நடிகைகள் கடுப்பாகி உள்ளார்களாம்.

ரப்பர் பாடி இயக்குனருடன் காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்த நம்பர் நடிகை விட்ட இடத்தை பிடிக்க மாட்டார் என்று பலர் நினைத்தனர். ஆனால் அவர் விட்ட இடத்தை பிடித்ததுடன் இளம் ஹீரோக்கள், தயாரிப்பாளர்களின் பிரிய நடிகையாக உள்ளார்.

இவருக்கு மட்டும் எப்படி?: நம்பர் நடிகையை பார்த்து வயிறு எரியும் நடிகைகள்

அம்மணி தற்போது ரூ.1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று இரண்டு ஹிட்டானால் சம்பளத்தை ரூ.2 கோடியாக்க திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் நம்பர் நடிகை சம்பளம் கேட்டால் மட்டும் தயாரிப்பாளர்கள் பேரம் பேசாமல் கொடுக்கிறார்களாம். இது முட்டை கண்ணழகி நடிகை, சமத்து மற்றும் செவத்த பொண்ணு ஆகிய நடிகைகளை கடுப்பாக்கியுள்ளதாம்.

நாம் கோடிகளில் கேட்டால் மட்டும் முக்கி முணங்குகிறார்கள், ஆனால் நம்பர் நடிகை கேட்டால் மட்டும் சிரித்த முகத்துடன் கொடுக்கிறார்களே, அதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என நடிகைகள் ரூம் போட்டு யோசிக்கிறார்களாம்.

 

சாஹசம் படத்தின் நட்சத்திர பாடகர்கள் பட்டியலில் சிம்பு

பிரபலங்களை பின்னணி பாட வைத்தே தனி சாதனைப் படைத்து விடுவார்கள் போலிருக்கிறது பிரசாந்தும் அவர் தந்தை தியாகராஜனும்.

சாஹஸம் படத்துக்காக பின்னணி பாடியவர்கள் பற்றி அவர்கள் வெளியிடும் தகவல்கள் அப்படி.

பிரசாந்த் தற்போது ‘சாஹசம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்துள்ளது. ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.

சாஹசம் படத்தின் நட்சத்திர பாடகர்கள் பட்டியலில் சிம்பு

தமன் இசையில் 5 பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதில் ‘தேசி தேசி தேசி கேர்ள்...' எனத் தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார். ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும் நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து இப்பாடலை பாடியுள்ளார்.

ஏற்கனவே பிரசாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்திற்கும் சிம்பு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படத்தில் லட்சுமி மேனன், அனிருத், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவுஹான், ஹனிசிங், அர்ஜித் சிங், ஆன்ட்ரியா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

சிம்பு பாடியதோடு சாஹசம் படத்தின் அனைத்து பாடல்களின் பதிவும் முடிந்துவிட்டது. இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சாஹசம் படத்தில் பாடியுள்ள அனிருத், சிம்பு, மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் தோன்றி சாஹசம் படத்தின் பாடல்களை நேரில் பாடவுள்ளார்கள்.

 

'குழந்தைசாமி'யை கிண்டலடிக்கும் 'தி இன்டர்வியூ'... ஆன்லைன் ரிலீஸ் மூலமாக 15 மில்லியன் டாலர் வசூல்!

தி இன்டர்வியூ திரைப்படம் ஆன்லைனில் வெளியாகி, 15 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது.

இதன் மூலம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய வசூல் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

வட கொரிய அதிபரை கிண்டலடித்து எடுக்கப்பட்ட படம் தி இன்டர்வியூ. இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட அமெரிக்காவின் முன்னணி திரையரங்குகள் தயக்கம் காட்டின.

'குழந்தைசாமி'யை கிண்டலடிக்கும் 'தி இன்டர்வியூ'... ஆன்லைன் ரிலீஸ் மூலமாக 15 மில்லியன் டாலர் வசூல்!

இதனால் படத்தின் பிரிமியர் காட்சிகளை ரத்து செய்த சோனி நிறுவனம், படத்தை ஆன்லைனில் வெளியிடப் போவதாக அறிவித்து, அதை செயல்படுத்தவும் செய்தது. கடந்த வெள்ளியன்று ஆன்லைனில் வெளியான தி இன்டர்வியூ.

27-ம் தேதி சனிக்கிழமை மட்டுமே இந்தப் படத்தை 2 மில்லியன் முறை ஆன்லைனில் வாங்கிப் பார்த்துள்ளனர் பார்வையாளர்கள்.

'குழந்தைசாமி'யை கிண்டலடிக்கும் 'தி இன்டர்வியூ'... ஆன்லைன் ரிலீஸ் மூலமாக 15 மில்லியன் டாலர் வசூல்!

ஆன்லைனில் வெளியிட்ட பிறகு படத்தை நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளும் திரையிட்டன.

இதன் மூலம் இந்தப் படத்துக்கு 15 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. ஆன்லைனில் அதிக வருமானம் ஈட்டிய படம் என்ற பெருமையும் தி இன்டர்வியூவுக்கு கிடைத்துள்ளது.

தியேட்டர்களிலும் படத்தைக் காண நல்ல கூட்டம் வருவதால், ஹேக்கர்களால் பெரும் பாதிப்புக்குள்ளான சோனி நிறுவனம் ஆறுதலடைந்துள்ளது.

 

8 நாட்களில் ரூ 198 கோடி குவித்த பீகே.. புதிய வசூல் சாதனை

ஆமீர் கான் நடித்த பீகே படம் வசூலில் புதிய சாதனைப் படைத்துள்ளது. வெளியான எட்டு தினங்களில் ரூ 198 கோடியைக் குவித்து, முந்தைய 3 இடியட்ஸ், தூம் 3 படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது பீகே. முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூலில் சாதனை எதுவும் நிகழவில்லை. ஆனால் மூன்றாம் நாளில் ரூ 38 கோடியைக் குவித்தது. நான்காம் நாள் இந்தப் படம் ரூ 100 வசூல் பட பட்டியலில் இணைந்தது.

8 நாட்களில் ரூ 198 கோடி குவித்த பீகே.. புதிய வசூல் சாதனை

வெளியான எட்டாவது நாளில் மொத்தம் ரூ 198 கோடியைக் குவித்து முந்தைய ஆமீர்கான் படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

படம் குறித்து வாய் வழியாகப் பரவும் சாதகமான தகவல்கள் காரணமாக, இரண்டாவது வாரமும் படத்தை மீண்டும் பார்க்க மக்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்தப் படம் 3 இடியட்ஸ், எந்திரன், ஹேப்பி நியூ இயர் போன்ற படங்களின் மொத்த வசூல் சாதனைகளை சீக்கிரமே மிஞ்சும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாகும் சமந்தா, எமி ஜாக்சன்!

முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் சமந்தாவும் எமி ஜாக்சனும். வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக் கூட்டணியான வேல்ராஜ், தனுஷ், அனிருத் மீண்டும் இணைகிறார்கள்.

முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாகும் சமந்தா, எமி ஜாக்சன்!

இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்,ன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இப்படத்தில் சமந்தாவும் நடிக்க இருப்பதாக தனுஷே அறிவித்துள்ளார்.

தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பது இதுவே முதல் முறை. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

பாலாஜி மோகன் இயக்கிவரும் ‘மாரி' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தியில் பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்து வருகிறார். இரு படங்களுமே முடியும் கட்டத்தில் உள்ளன.

 

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்வேதா பாசு.. இந்திப் படத்தில் குத்தாட்டம்!

விபச்சார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு, மீண்டும் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சிறையிலிருந்து வந்த பிறகு அவர் முதல் முறையாக ஒரு இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

இந்தப் பாடலில் அதிகபட்ச கவர்ச்சி காட்டவும் சம்மதித்துள்ளாராம் ஸ்வேதா. இந்தப் பாடலுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.

மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்வேதா பாசு.. இந்திப் படத்தில் குத்தாட்டம்!

இது தவிர ஒரு இந்திப் படத்தில் நாயகியாக நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாம்.

தெலுங்கில் சில வாய்ப்புகள் வந்தாலும், அவற்றை இப்போதைக்கு ஒப்புக் கொள்ளாத ஸ்வேதாபாசு, இந்தி வாய்ப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். மேலும் தனது நண்பர் நடத்தும் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பை கவனித்து வருகிறார்.

தமிழில் ஏற்கெனவே ராரா, சந்தமாமா ஆகிய படங்களில் ஸ்வேதா பாசு நடித்துள்ளார்.

 

சூர்யா நல்லா சந்தோஷமா இருக்கார்.. ஏம்பா வதந்தி பரப்புறீங்க! - வெங்கட் பிரபு

நடிகர் சூர்யாவுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதாக வந்த செய்திகளை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘அஞ்சான்' படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யா நல்லா சந்தோஷமா இருக்கார்.. ஏம்பா வதந்தி பரப்புறீங்க! - வெங்கட் பிரபு

இந்தப் படத்திலும் சூர்யாவுக்கு இரண்டு கெட்டப்புகள். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொங்கலுக்கு இதன் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

இதனை மறுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, "சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக வந்தவை வதந்திகளே. அவர் நலமாக உள்ளார். வதந்தி பரப்பும் நண்பர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்... நாங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறோம். அனைவருக்கும் ஹாப்பி மாஸ் நியூ இயர்," என்று கூறியுள்ளார்.

 

என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!

'தயாரிப்பாளர் விழா நடத்தாவிட்டால் என்ன... எங்க தலயோட படத்தின் இசை வெளியீட்டை நாங்களே விழா எடுத்து கொண்டாடிக் கொள்கிறோம்' என்று களத்தில் குதித்துள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு வெளியாகிறது. இதற்காக விழா எதுவும் நடத்தப்போவதில்லை. இப்படிப்பட்ட விழாக்களை அஜீத்தும் ஆதரிப்பதில்லை.

என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!

எனவே ஒரு சின்ன அறிவிப்போடு 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு என்னை அறிந்தால் பாடல்கள் வெளியாகின்றன. ட்ரைலரையும் அன்றே வெளியிடவிருக்கிறார்கள்.

ஆனால் அஜீத்தின் ரசிகர்களோ, ஜனவரி 1-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போகிறார்களாம். இதற்காக அவர்கள் தேர்வு செய்துள்ள இடம் அண்ணா சாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெரு (ரேடியோ மார்க்கெட்).

இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலிமிருந்து ரசிகர்களைத் திரட்டிவருகிறார்கள்.

 

நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு... - ஹன்சிகாவை வர்ணித்த விஷால்

ஹன்சிகாவுடன் ஜோடி சேர பயமாகத்தான் இருந்தது. காரணம் அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு, என்றார் விஷால்.

ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசுகையில், "'' முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர்சியுடன் இணைந்து நடித்த 'மத கஜ ராஜா' .படம் இன்னமும் வெளிவரவில்லை. சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம்.அதனால் பலரும் கேட்டார்கள். ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர் சியுடனா படம் பண்ணப்போறே? என்று பலபேர் கேட்டார்கள்.

நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு... - ஹன்சிகாவை வர்ணித்த விஷால்

இருந்தாலும் நான் தெளிவாக முடிவாக இருந்தேன். இந்த 'ஆம்பள' லைன் முன்பே சொல்லப்பட்டதுதான். சுந்தர்.சிக்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது.

செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப் படமும் முடித்தோம் எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.

நெருக்கடியில் பதற்றத்துடன் டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப்படுத்துவது இது கடைசிப் படமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச் செய்வது நல்லதல்ல. ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார் .

படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு. ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா ஆதி செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்...

முதன்முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார். ஹன்சிகா ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை. நான் அட்டகறுப்பு. கேமரா மேனுக்கு கஷ்டம் என்று நினைத்தேன். 'நீ லண்டன் லட்டு நான் மதுரை புட்டு' என்று பாட்டே வரும். இருந்தாலும் அவர் சமாளித்து எடுத்தார். சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன்," என்றார்.

 

என்ன கொடுமை இது? ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? - சுரேஷ் காமாட்சி குமுறல்

ஒரு நாள் பேட்டாவுக்காக கங்காரு படத்தின் ஷூட்டிங்கை ஒரு லைட்மேன் நிறுத்தினார். இது என்ன கொடுமை.. இதற்கு விடிவுகாலம் என்ன? என குமுறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அமைதிப்படை 2 படத்துக்குப் பிறகு, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் கங்காரு. மிருகம், உயிர், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ளார்.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்கேவி தியேட்டரில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்துக்காக தான் பட்ட பாடுகளைச் சொன்னார்.

என்ன கொடுமை இது? ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? - சுரேஷ் காமாட்சி குமுறல்

அவர் பேசுகையில், "இந்தக் கங்காருவை ரொம்ப நாள் சுமந்திருந்தேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது.

இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. ஒரு கசப்பான அனுபவம், இதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்க வில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார்.

அவர் யாரு? பெப்ஸி தலைவர் அமீரா..? ஆனால் அவரோ, செல்வமணியா விக்ரமனா யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று திமிராக மிரட்டுகிறார்.

எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப் படுத்துகிறார்கள். சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள் முதல் போட்ட முதலாளிகளைக் கட்டுப் படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை? இதற்கு விடிவு காலம் என்ன? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?,'' என்று குமுறினார்.

தயாரிப்பாளர்களுக்கு திமிர் இருக்கவேண்டும்!

சுரேஷ் காமாட்சிக்குப் பதில் அளிக்கும் விதத்தில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசினார். அவர் கூறுகையில், "இது மாதிரி முன்பும் நடந்துள்ளன.'திருமதி பழனிச்சாமி' படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி.அவுட்டோரில் எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம் அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ் சொன்னார்.. 'டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல' என்றார். 'உனக்காக நடித்தவன் அவன். குதித்தவன் அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ' என்றேன்.

ஒரு முறை இளையராஜா ஏழு பாடல்களைப் போட்டு வைத்துக் கொண்டு, கொடுத்தால் 7 பாடல்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன் என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும் தன் படத்தில் நாலு சீக் வென்ஸ்தான் உள்ளன. 4 பாடல் போதும் என்று கேட்டார்கள். அவர் கொடுக்க மறுத்தார்.

இசையமைப்பாள​ருக்கே இவ்வளவு திமிர் இருந்தால் எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.. அப்படி என்ன பாட்டு என்று நினைத்து போய் கேட்டேன்.. நானே அந்த ஏழையும் வாங்கினேன். பயன்படுத்தினேன். அந்தப் படம்தான் 'வைதேகி காத்திருந்தாள்'. இதுதான் வித்தை திமிர். தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும். தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால், ஒற்றுமை இல்லா விட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். காப்பாற்ற முடியாது," என்றார்.

 

என்னை அறிந்தால் இசை வெளியாகும்போதே ட்ரைலரும் ரிலீஸாகிறது!

என்னை அறிந்தால் படத்தின் இசை வெளியாகும் அன்றே படத்தின் ட்ரைலரும் வெளியாகவிருக்கிறது.

அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை - பாடல்கள் நாளை மறுநாள் நள்ளிரவு வெளியாகவிருக்கின்றன. இதற்காக அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

என்னை அறிந்தால் இசை வெளியாகும்போதே ட்ரைலரும் ரிலீஸாகிறது!

இந்த நிலையில் அதே நேரத்தில் படத்தின் ட்ரைலரையும் வெளியிடுகிறார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

என்னை அறிந்தால் டீசர் வெளியாகி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இந்திய அளவில் சாதனைப் படைத்துள்ளது.

இப்போது ட்ரைலரும் அதே போன்ற சாதனையைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

 

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்! - இயக்குநர் சாமி

சினிமாவில் தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டு விடுகிறார்கள் என்றார் இயக்குநர் சாமி.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்து, சாமி இயக்கியுள்ள படம் 'கங்காரு'. இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டப் படம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் 'கங்காரு' படத்தின் இயக்குநர் சாமி பேசும்போது, "நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி இருந்ததற்கு நான் மட்டும் காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம் ஒரு படம் எந்தமாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிக்கும் தயாரிப்பாளர், நடிக்கும் நடிகர் எல்லாரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது.

தோல்வி என்றால்  மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்! - இயக்குநர் சாமி

இத்தனைக்கும் பிறகு வெற்றி என்றால் எல்லாரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடி விடுவார்கள். கங்காரு என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதை. சினிமாவில் ஞாபகம் வைக்கிற படமாக இருக்கும். 5 பாடல்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தேசியவிருது கிடைக்கும். படத்தை என் ஞானத் தந்தை தாணு வெளியிடுகிறார். அவரிடம் 2004ல் முன்பணம் வாங்கினேன். படம் இயக்க முடியவில்லை. 2015ல் 'கங்காரு' வை வெளியிடுகிறார்," என்றார்.

அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு!

இயக்குநர் மனோஜ் குமார் பேசும்போது, "இங்கே மூன்று பாடல்கள் போட்டுக் காட்டினார்கள். இதிலேயே மொத்தக் கதையும் தெரிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குச் சென்று என் அக்கா தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு ஏற்படுத்தியது. வீடு சம்பந்தப்பட்ட கதை,உறவு,சம்பந்தப்பட்ட கதை. நிச்சயம் இது வெற்றிபெறும். 'மிருகம்' சாமி இனி 'கங்காரு' சாமியாகிவிடுவார்," என்றார்.

இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன!

இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் பேசும்போது, "கதைப் பிடித்துப் போனதால்தான் இந்தப் படத்துக்கு இசையமைத்தேன். முதலில் தாலாட்டு பாடலை உருவாக்கினோம். அப்படியே வளர்ந்தன பாடல்கள். இப்படத்தில் அர்த்தமில்லாத பரபரப்பு, ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்காது. உண்மையாக இருக்கும். உணர்வு பூர்வமாக இருக்கும். முன்பெல்லாம் நான் பாடிவிட்டுச் சென்று விடுவேன். நான் இசையமைப்பாளர் ஆன பிறகு தயாரிப்பாளரின் சிரமங்கள் புரிகின்றன,'' என்றார்.

'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும்!

கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , "பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் 'பாசமலர்' ,'முள்ளும் மலரும்' வரிசையில் நான் தயாரித்த 'கிழக்குச் சீமையிலே' படமும் அமைந்ததில் பெருமைப் படுகிறேன். அது 275 நாள் ஓடியது. 'கங்காரு' படத்தை முழுதும் பார்த்துதான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர்ப்பார்க்க முடியாத 'கங்காரு' க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும் படமும் வெற்றி பெறும்," என்றார்.

 

அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!

ஹைதராபாத்: சாதனை நடிகர் அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் நினைவு விருது வழங்கப்பட்டது.

இதற்கான விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. அக்கினேனி இன்டர்நேஷனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாக சைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு நாகேஸ்வர ராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விருதை வழங்கினார். விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, ‘‘இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன்,'' என்றார்.

அமிதாப் பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!

பின்னர் அவர் முதல்வர் சந்திரசேகரராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகர ராவ் எடுத்துக்கொண்ட முயற்சியை அமித்தாப்பச்சன் பாராட்டினார்.

ஹைதராபாத் புறநகரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக பிரமாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமிதாப்பிடம் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார்.

 

அகமதாபாத், போபாலில் பீகே படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல்

பீகே படத்தில் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகள் அடங்கியிருப்பதாகக் கூறி, அப்படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது இந்துத்துவா ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போபால், அகமதாபாத் போன்ற நகரங்களில் இரு திரையரங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

ஆமீர் கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான படம் பீகே. கடந்த 19-ம் தேதி வெளியான இந்தப் படம் வட இந்தியாவில் வசூலைக் குவித்து வருகிறது.

அகமதாபாத், போபாலில் பீகே படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல்

அதே நேரம் படத்தில் இந்து மதம் கடுமையாக கிண்டலடிக்கப்படுவதாகக் கூறி, படத்தைத் தடை செய்ய இந்துத்துவா அமைப்புகள் கோரி வருகின்றன.

இந்து மகா சபை என்ற அமைப்பு உடனடியாக படத்துக்கு தடை கோரியுள்ளது.

இந்த நிலையில் படத்தை வெளியிட்ட திரையரங்குகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அகமதாபாதில் உள்ள சிவா மற்றும் சிட்டி கோல்டு ஆகிய இரு மல்டிப்ளெக்ஸ் அரங்குகள் மீதும், போபாலில் ஒரு அரங்கம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் திரையரங்குகளின் கண்ணாடிகள் நொறுங்கின. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.