விஸ்வரூபம் படத்தில் இயேசுவை இழிபடுத்தியதாக வழக்கு... டிஸ்மிஸ்

Hc Dismisses Case Against Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் இயேசுநாதரை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரி வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் எதிரான, இழிவுபடுத்தக் கூடிய காட்சிகள் இருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் தமிழக அரசு படத்தையே தடை செய்தது. தற்போது பிரச்சினை சரியாகி சுமூக நிலை ஏற்பட்டு படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், கிறிஸ்தவர்கள் சார்பில் ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெபக்குமார் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், விஸ்வரூபம் படத்தில் இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் உள்ளன. எனவே இப்படத்தை நாடு முழுவதும் திரையிடக் கூடாது என்று ஜார்ஜ் கோரியிருந்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பே தர்மாராவ் மற்றும் வேணுகோபாலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

இம்சை அரசனாகக் கலக்கிய வடிவேலுவின் அடுத்த அவதாரம் 'தெனாலிராமன்'!

Vadivelu Play As Tenalirama

ஏஜிஎஸ் படம் மூலம் வைகைப் புயல் வடிவேலுவின் மறுபிரவேசம் பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா... இதோ இப்போது அவரது அடுத்த படம் குறித்த புதிய தகவல்கள்.

இந்தப் புதிய படமும் சரித்திர சம்பவங்களை வைத்துதான் எடுக்கப்படுகிறது. இதில் அவர் ஏற்கும் வேடம் எவர்கிரீன் தெனாலிராமன். தெனாலிராமன் இருந்தால், கிருஷ்ணதேவராயரும் இருக்க வேண்டுமல்லவா... அந்த வேடத்திலும் வடிவேலுதான் நடிக்கிறார்.

இதன் மூலம் இரண்டாண்டு இடைவெளியை வட்டியும் முதலுமாக சேர்த்து சரிகட்டப் போகிறார் வடிவேலு.

படத்தை இயக்குபவர் யுவராஜ். சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட்டை மையமாக வைத்து போட்டா போட்டி என்ற படத்தை காமெடியாகத் தந்த அதே யுவராஜ்தான்.

இம்சை அரசனைப் போல புத்திசாலித்தனமான சடையர் ஆக உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கதையைக் கேட்டு வடிவேலு மகிழ்ந்துபோய், இவரை இயக்குநராக சிபாரிசு செய்தாராம்!

 

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் விரைவில்... தலைப்பு 'மூ'!

Kamal Starts Campaign Moo   

விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை 'மூ' என்ற தலைப்பில் வெளியிடப் போகிறாராம் கமல்ஹாஸன்ய

விஸ்வரூபம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி என கமல் கூறிவருகிறார்.

ஆனால் உண்மை வேறு. விஸ்வரூபத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த மே மாதத்திலேயே முடிந்துவிட்டதாக கமல் முன்பு தெரிவித்திருந்தார். அதே மாதத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவுக்குக் கூட அனுப்பியதாகக் கூறினார்கள்.

ஆனால் அதன்பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்கள் கமல் செய்து கொண்டிருந்த வேலை, விஸ்வரூபத்தின் இரண்டாம் பகுதியை எடுத்ததுதான். இன்னும் இரண்டு வார பணிகள்தான் இந்த இரண்டாம் பாகத்துக்கு பாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்த 100 கோடி என்பது ஒரு படத்துக்கான பட்ஜெட் அல்ல!!

இந்த நிலையில், தான் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருவதை கமலே ஒருபேட்டியில் ஒப்புக் கொண்டார். மேலும் அந்தப் படத்துக்கு மூ என்ற தலைப்பைப் பதிவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இரண்டாம் பாகத்தில் கமல் மூன்று வேடங்களில் நடித்துள்ளாராம். அதைக் குறிப்பிடும் வகையில்தான் மூ என்று தலைப்பு வைக்கிறாராம்.

தீவிரவாதி முல்லா உமர் அமெரிக்காவிலிருந்து தப்புவதுபோல் ‘விஸ்வரூபம்' படத்தை கமல் முடித்துள்ளார். இரண்டாம் பகுதியில் முல்லா உமர் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிடுவது போன்றும் அதனை கமல் முறியடிப்பது போன்றும் திரைக்கதை உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆங்கிலத்திலும் ரிலீஸ் செய்யப் போகிறாராம்.

 

டேவிட்- சினிமா விமர்சனம்

David Film Review   
Rating:
1.5/5

நடிப்பு: விக்ரம், ஜீவா, லாரா தத்தா, தபு, இஷா ஷர்வாணி

இசை: அனிருத், மாடர்ன் மாஃபியா, பிரசாந்த் பிள்ளை, மாட்டி பாணி, ரெமோ, ப்ராம் பதூரா

ஒளிப்பதிவு: ரத்னவேலு, பி.எஸ். வினோத்

மக்கள் தொடர்பு: நிகில்

தயாரிப்பு: ரிலையன்ஸ்

இயக்கம்: பிஜாய் நம்பியார்

நாட்டில் படம் எடுக்க எவ்வளவோ கதைகள், சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி இதுபோன்ற கதைகளை எல்லாம் சினிமாவாக எடுக்கிறார்கள், அதற்கும் தயாரிப்பாளர்கள்.. அதுவும் கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

மணிரத்னம் சிஷ்யரான பிஜாய் நம்பியார் இயக்கியுள்ள முதல் தமிழ்ப் படம் இந்த David - Film review

இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில் இன்னொரு கதையும் இருக்கிறதாம். நல்ல வேளை.. தமிழில் இவ்வளவுதான் தாங்குவார்கள் என்ற பெருங்கருணையின் அடிப்படையில் அந்தக் கதையை நீக்கியிருக்கிறார் இயக்குநர்.

விக்ரம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நல்ல கலைஞன்தான்... ஆனால் பத்தாண்டுகளாக வீணாகிக் கொண்டிருக்கிறார். அவரது திறமையை அவமதிக்கும் படம் இது என்று வேண்டுமானால் சொல்லலாம். படத்தின் தயாரிப்பாளர்களுள் அவரும் ஒருவராம். சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ள ஆசைப்படுபவர் மீது இரக்கப்பட்டு என்ன ஆகப் போகிறது. நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு கதை ஞானம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லையே!!

ஜீவாவும் அப்படியே. தான் நடிப்பது என்ன கேரக்டர் என்றே தெரியாமல் மாய்ந்து மாய்ந்து நடித்திருக்கிறார் மனிதர்!

லாரா தத்தா, தபுவெல்லாம் இன்னும் ஹீரோயினா..? யப்பா... அவங்கல்லாம் ஆண்ட்டியாக ரொம்ப நாளாச்சுப்பா!.

மூன்றாவதாக வருபவர் இஷா ஷர்வாணி. அசரடிக்கிற ஹீரோயின்களையெல்லாம் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு இவர் ரொம்ப சாதா!

அனிருத் உட்பட 6 மியூசிக் டைரக்டர்கள் இருந்தும் மனசுல எந்தப் பாட்டும் நிக்கல. ''அறுக்க வக்கத்தவன் இடுப்புல ஆறு அருவா'' எதுக்குன்னு ஊர்ல சொல்ற பழமொழிதான் நினைவுக்கு வருது!

கோவாவின் இயற்கை அழகை அள்ளி வந்திருக்கும் ரத்னவேலுவுக்கும், வினோத்துக்கும் பாராட்டுகள். ஆனால் சில காட்சிகளின் வண்ணம் கண்களுக்கு உறுத்தலாக உள்ளது.

குரு எட்டடி என்றால்.. சிஷ்யன் பதினாறு அடி பாய வேண்டும் அல்லவா... அதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார் பிஜாய் நம்பியார்... அதாவது மொக்கைப் படம் கொடுப்பதில்!!

-எஸ்எஸ்

 

குணச்சித்திர நடிகை பானுமதி மரணம்: இன்று இறுதிச் சடங்கு

Actress Bhanumathi Is No More

சென்னை: குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது வயதில் மரணம் அடைந்தார்.

காதல் ஜோதி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்து வந்தார்.

சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இதனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமானது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.50 மணிக்கு காலமானார். அவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.

 

விஸ்வரூபம்... ரிசர்வேஷன் தொடங்கியது.. ஒரு வாரத்திற்கு டிக்கெட் இல்லை

Advance Booking Viswaroopam Begins Tn

சென்னை கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கான முன்பதிவு தியேட்டர்களில் இன்று தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவாகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

விஸ்வரூபம் பெரும் இடியாப்பச் சிக்கலில் சிக்கி வருமா, வராதா என்ற கேள்விகளில் உழன்று ஒரு வழியாக வியாழக்கிழமை திரைக்கு வருகிறது. கமல்ஹாசன் சென்டிமென்ட்டை நம்புவதில்லை என்பதால் வெள்ளிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமையே படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார் என்று கூறுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுகிறது. இதையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் படம் பார்க்கத் தயாராகி வருகின்றனர்.

இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு செய்வதில் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் ...

சென்னையைப் பொறுத்தவரை, சத்யம், சாந்தம், தேவி, சாந்தி, உட்லண்ட்ஸ், எஸ்கேப், அபிராமி, ஸ்வர்ணசக்தி, சங்கம், உதயம், மினி உதயம், ஏ.ஜி.எஸ்., கமலா, பைலட், மோட்சம், சைதை ராஜ், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம், பெரம்பூர் எஸ்.2, பாரத், ஸ்ரீபிருந்தா, மகாராணி, எம்.எம். தியேட்டர், மாயாஜால், பிரார்த்தனா, ரோகிணி, திருவான்மியூர் எஸ்.2, கணபதிராம், வெற்றி, கொளத்தூர் கங்கா, மூலக்கடை சண்முகா, ராக்கி, முருகன், பூந்தமல்லி சுந்தர் உள்ளிட்ட பல்வேறு தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. புறநகர்களிலும் ஏராளமான தியேட்டர்களில் வி்ஸ்வரூபம் திரையிடப்படவுள்ளது.

இங்கு அதிகாலை முதலே பெரும் திராளானோர் கூடி முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்து போய் விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

 

எக்ஸ்ட்ரா பணத்திற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை: விக்ரம்

I Am Not Doing Hindi Films More Money Vikram

சென்னை: கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா நடித்துள்ள டேவிட் படம் இந்தியிலும் ரிலீஸாகி உள்ளது. இந்தியில் கதையை சேலாக மாற்றி விக்ரம், நீல் நிதின் முகேஷ், வினய் விர்மானி, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி ஆகியோர் நடித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராவணன் படம் இந்தியிலும் வெளியானது. அப்படத்தின் மூலம் தான் பாலிவுட் சென்றார் விக்ரம்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இந்தி படங்கள் பண்ண அவசரத்தில் இல்லை. பணத்திற்காக பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்றார்.

 

விஸ்வரூபம் தடை எதிரொலி - சினிமா சட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைத்தது மத்திய அரசு

Vishwaroopam Row Centre Forms Committee To Review

டெல்லி: விஸ்வரூபம் பட விவகாரத்தைத் தொடர்ந்து சினிமா சட்டத்தை மறுஆய்வு செய்ய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

விஸ்வரூபம் படம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதையும் பெரும் பரபரப்பாக்கி விட்டது. இஸ்லாமியர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இப்படத்திற்கு தமிழக அரசு இரண்டு வார கால தடை விதித்தது.இது பெரும் பிரச்சினையாக மாறி கோர்ட்டுகளையும் சூடாக்கியது.

இறுதியில் கமல்ஹாசன், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தமிழக அரசு ஆகிய முத்தரப்பினரும் இறங்கி வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக சில காட்சிகளை நீக்க கமல்ஹாசன் ஒத்துக் கொ்ண்டார், இஸ்லாமிய அமைப்புகளும் இதை ஏற்றன, தமிழக அரசும் இதை ஏற்றது. இதையடுத்து படத்துக்கான தடை நீங்கியது. 7ம் தேதி திரைக்கு வருகிறது.

விஸ்வரூபம் படத்திற்குத் தடை விதித்த தமிழக அரசின் செயல் தவறு என்று மத்திய அரசு கூறியது. மேலும் மத்திய தணிக்கை வாரியமும், தான் அளித்த சான்றிதழ் சரியானதே என்றும் விளக்கியது. இருப்பினும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசின் இந்தப் பேச்சு அதன் அறியாமையை வெளிப்படுத்துவதாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மத்திய சினிமாட்டோகிராபி சட்டத்தை மறு ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்காக ஒரு குழுவையும் அது அமைத்துள்ளது. ஒரு நீதிக் கமிஷனாகவே இந்தக் குழுவை அது அமைத்துள்ளது.

இந்த சினிமாட்டோகிராபி சட்டத்தின் படிதான் மத்திய தணிக்கை வாரியம் திரைப்படங்களைப் பார்த்து அனுமதி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகுல் முன்ட்கல் தலைமையிலான இக்குழுவில் எட்டு பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், முன்னாள் நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரும் அடக்கம்.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், இந்த சட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றார்.

 

இந்தி: வார இறுதி வசூலில் ரஜினியின் ரோபோவை முந்திய விஸ்வரூப்

 

அமீரின் 'ஆதிபகவன்'... படத்தை போட்டுக் காட்ட இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

Third Complaint Against Aadhi Bhagavan

அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்துக்கு எதிராக மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் படத்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தை முன்கூட்டியே எங்களுக்குக் காட்ட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தனசிங் சென்னை கோட்டையில் முதல்வரின் தனிப்பிரிவில் கொடுத்துள்ள புகார் மனுவில், "ஆதிபகவன்' படத்தில் இந்து சமய நம்பிக்கையை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிரான காட்சிகளை அனுமதிக்கக் கூடாது. எனவே பட ரிலீசுக்கு முன் இந்து அமைப்புகளுக்கு இந்தப் படத்தை திரையிட்டு காட்டவேண்டும்," என்று கோரியுள்ளார்.

அமீர் இயக்கியுள்ள ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடித்துள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு எதிராக வந்துள்ள மூன்றாவது புகார் இது. எனவே பதட்டத்தில் உள்ளது ஆதிபகவன் குழு.