இந்தியில் நயன்தாரா!

Nayanthara in hindi அறிமுகமான லீடர் தவிர்த்து ராணா நடித்த எந்தப் படமும் வெற்றிபெறவில்லை. ஒன்றிரண்டு இந்திப் படங்களில் நடித்து அதுவும் தேறவில்லை. குறிப்பாக ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட்.

நவம்பர் 30 அதாவது இன்று ராணாவின் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஆந்திரா முழுவதும். காரணம் படத்தை இயக்கியிருக்கும் க்‌ரிஷ். இவ‌ரின் முந்தையப் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். இதுவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தமிழில் இந்தப் படத்தை ஓங்காரம் என்ற பெய‌ரில் வெளியிடுகின்றனர்.

இந்தியில் ராணாவுக்கு ஓரளவு அறிமுகம் இருப்பதால்.... வெயிட். இந்த கதைக்கும் நயன்தாராவுக்கு என்ன சம்பந்தம் என்று சொல்லவில்லையே. இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயின். நெருக்கமாகவும் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். படத்தில் இவர் ஒரு ஜர்னலிஸ்ட்.

பேக் டு தி பாயிண்ட். ராணாவுக்கு இந்தியில் ஓரளவு அறிமுகம் இருப்பதால் இந்தியிலும் படத்தை டப் செய்து வெளியிட உள்ளனர். இந்தியில் வெளியாகவுள்ள நயன்தாராவின் முதல் படம் இது என்பது முக்கியமானது.
 

கிசு கிசு - காமெடி பலப்பரிட்சை

Kodambakkam  Kodangi நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

சந்தன காமெடி நடிகர் சோலோவா ஜெட் வேகத்துல போய்ட்டிருந்தாராம்... இருந்தாராம்... அதுக்கு கட்டய போட்றாப்ள 'மெரினா' சிவ ஹீரோ குறுக்க வந்திருக்காராம். டோலிவுட்ல 'ஐ ஈ' படத்த இயக்குன ராஜ் இயக்கத்தோட படம் ஒண்ணு கோலிவுட்ல மரியாதையான பேர்ல ரீமேக் பண்றாங்களாம். இதுல காமெடி நடிகருக்குத்தான் மெயின்ரோலாம். சந்தன காமெடிய போடலாம்னு சொன்னப்ப சிலர் சிவ நடிகர சிபாரிசு பண்ணாங்களாம். இவரா? அவரா?னு பலப்பரிட்ச நடத்துனதுல கூடுதலா பேமென்ட் இருந்தாலும் சந்தன காமெடிக்கு மெஜாரிட்டி கெடச்சிடுச்சாம்... கெடச்சிடுச்சாம்...

ரிச்சான ஹீரோயினுக்கு இந்த வருஷம் லக்காக அமையலயாம்... அமையலயாம்.. கைக்கு வந்த வாய்ப்பெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால தட்டிப்போச்சாம். அதுமட்டுமில்லாம நட்பு நடிகரோட காதல், மோதல்னு தகவல் பரவி ஷாக் கொடுத்துச்சாம். இன்னும் ஒரு மாசத்துல புதுவருஷம் பொறக்குது. அத ஆவலா எதிர்பாத்துட்டிருக்காராம். இந்த வருஷம்   சொல்லிக்கற மாதிரில்லன்னாலும் வர்ற வருஷம் டாப் லிஸ்ட்ல பேர பதிக்கறளவுக்கு சான்ஸ் கைகூடி வந்திருக்காம். அடுத்தவருஷம் நான் யாருன்னு காட்றேனு தோழிங்ககிட்ட பந்தயம் கட்டியிருக்காராம்... இருக்காராம்...

மாதவ ஹீரோவ 'மேடி'னு செல்லமா கோலிவுட்ல கூப்பிட்றாப்பள மல்லுவுட்ல லால் நடிகர 'லாலேட்டன்'னு கூப்பிட்றாங்களாம். சமீபத்துல லால் நடிகர் மேக்னமான நடிகய கூப்பிட்டு தன்னோட புதுபடத்துல நடிக்கணும்னு சொன்னாராம். கைவசம் நெறய படங்க இருந்தாலும் லாலேட்டன் படத்துக்கு மறுப்பே சொல்லாம ஒகே சொல்லிட்டாராம். இந்த படத்த காரணம் காட்டி ஏற்கனவே ஒப்புக்கிட்ட படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்ட கேன்சல் பண்ணிட்டு அந்த கால்ஷீட்ட இவர் படத்துக்கு தர்றாராம். அதோட பாக்கறவங்க கிட்டயெல்லாம் லால்லேட்டன வாய்வலிக்க நடிகை புகழ்றாராம்... புகழ்றாராம்...
 

நீர்ப்பறவை - சிறப்பு விமர்சனம்


Rating:
2.5/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள்
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன்
இசை: என் ஆர் ரகுநந்தன்
மக்கள் தொடர்பு: நிகில்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின்
எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி

அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்..

neerparavai review   

-கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க!

கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால் அல்ல... குடிக்கக் காசு கேட்டு அவன் கொடுக்கும் உபத்திரத்தால். ஊரே சேர்ந்து வெறுத்து, அடித்து, விரட்டுகிறது. ஆனால் அவன் அம்மாவைத் தவிர. அப்போதுதான் எஸ்தரைச் சந்திக்கிறான் அருளப்பசாமி. காதல் கொள்கிறான். ஆனால் குடியை விடமுடியவில்லை.

பாசத்தின் சொரூபமாக நிற்கும் அவன் தாயும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கண்டிக்கும் தந்தையும், சர்ச் பாதிரியார் உதவியுடன் மகனை குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் பாதியில் ஓடி வந்துவிடுகிறான் அருளப்பசாமி. அன்று திருவிழா. போதையில் வரும் அருளப்பசாமி, சர்ச் வாசலில் படுத்திருக்கும் சுனைனா பக்கத்தில் நிலை மறந்து படுத்துவிடுகிறான்.

ஊரே அடிக்கிறது. தந்தை தாறுமாறாக அடிக்க, இப்போது குடியை மறக்க விரும்பி தானே மறுவாழ்வு மையத்துக்குப் போகிறான்.

திருந்தி வருகிறான். ஊர் மதிக்க ஆரம்பிக்கிறது. சொந்தமாக மீன் பிடிக்க முயற்சிக்கும்போது, மீனவன் அல்லாத அருளப்பசாமி, மீன் பிடிக்கக் கூடாது என லோக்கல் புள்ளிகள் எதிர்க்கின்றனர். போட் தர மறுக்கின்றனர். சொந்தமாக போட் வாங்கி தொழில் செய்வேன் என சபதமெடுத்து, காசு சேர்த்து, சின்ன எதிர்ப்புக்கிடையில் சுனைனாவை திருமணம் செய்து... வாழ்க்கையில் செட்டிலாகிற அருளப்பசாமி.... சிங்கள கடற்படையால் சுடப்படுகிறான்!

-இதுதான் கதை. என்னடா இது முழுக் கதையும் சொல்லிவிட்டார்களே என திட்டுவதற்கு முன்... இயக்குநர்தான் ஒளித்து மறைத்து எழுத எதையும் திரையில் வைக்கவில்லையே. எந்தத் திருப்பமும் இல்லாத திரைக்கதை. அது தெரிந்ததாலோ என்னமோ, நந்திதா தாஸை வலிந்து திணித்து, ஒரு செயற்கைத்தனமான ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்.

கிறிஸ்தவ தமிழ் மக்கள் பின்னணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும் படம் நீர்ப்பறவை. பின்னணியையும் கதை மாந்தர்களையும் நேர்த்தியாக தேர்வு செய்த சீனு ராமசாமி, அதை நெஞ்சைத் தொடும் அளவுக்கு சொல்லாமல் கோட்டைவிட்டதுதான் சோகம்.

படத்தின் முதல் பாதிக்கு, நான் குடித்துக் கொண்டே இருப்பேன் என தலைப்பிட்டிருக்கலாம். குடிக்கும் காட்சிகள் ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களுக்கு குமட்டலைத் தருகின்றன.

'மீனவர்களுக்கென்று ஒரு 30 தொகுதி இருந்தா, நம்ம குரலும் எடுபடும்' போன்ற அரசியல் எல்லாம் பேஸ்புக், ட்விட்டரில் ஸ்டேடஸ் போடுபவர்களுக்கு மட்டுமே உதவும். மீனவர் பிரச்சினை, ஈழப் பிரச்சினையையெல்லாம் ஏதோ சரக்குக்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் மாதிரி தமிழ் சினிமா இயக்குநர்கள் பயன்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஒரு நேர்மையான படைப்பாக அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் நெஞ்சுரமில்லாதவர்கள், தேசிய விருதுகளுக்காக இந்த உயிர்ப் பிரச்சினைகளை தடவிக் கொடுப்பவர்கள்... ப்ளீஸ் விட்டுவிடுங்கள்.

படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால்... மேரியாக வரும் அம்மா சரண்யா, அவர் கணவராக வரும் பூ ராம். இயல்பான நடிப்பைக் கொட்டும் கலைஞர்கள்.

விஷ்ணுவும் சுனைனாவும் அந்த கடற்கரையோர நிஜ காதலர்களாகவே தெரிகிறார்கள். ஆனால் சுனைனாவின் வசன உச்சரிப்பு அவரை காட்டிக் கொடுத்துவிடுகிறது. விஷ்ணுவும் அப்படித்தான். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டத்தில் கேட்ட அதே ஸ்லாங்தான் இதிலும்!

சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், தம்பி ராமையா, பிளாக் பாண்டி, சுனைனாவின் வளர்ப்புத் தாயாக வரும் பெண் என அனைவருமே கொடுத்த வேலையை மிகையின்றிச் செய்திருக்கிறார்கள்.

சாத்தானே அப்பாலே போ காட்சி செம சுவாரஸ்யம். இந்த மாதிரி சில காட்சிகள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

ஆமா... அதென்ன, 'உப்பளக்காரி' நிகு நிகுன்னு செவப்பா ஜொலிக்கிறார்.. மீனவக் குப்பத்து சுனைனா மட்டும் கறுப்பு மசியுடன் திரிகிறார்?

படத்தில் இரண்டு முக்கியமான மைனஸ்கள்... பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு மற்றும் ரகுநந்தனின் இசை.

கடல்புறத்து எளிய மனிதர்களின் சாதாரண வாழ்க்கையைச் சொல்லும் கதைக்கு எதற்கு இத்தனை வண்ணமயமான படமாக்கம்... செயற்கை கோணங்கள்? அந்த சர்ச்சை எதற்கு அத்தனை பயங்கரமாகக் காட்ட முயற்சிக்கிறார் சில காட்சிகளில்.. இதென்ன பேய்ப் படமா?

பின்னணி இசை தெரியாவிட்டால்கூட பரவாயில்லை.. ஆனால் ஏதோ 'கேப்'பை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரே கார்டை நிமிண்டிக் கொண்டிருப்பது கேட்க கஷ்டமாக இருக்கிறது. மீனவர் வாழ்க்கையை மையமாக வைத்து இதற்குமுன் வந்த படங்களில் அதிஅற்புதமான இசையைக் கேட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் என்பதை இயக்குநர்களும் புதிய இசையமைப்பாளக்களும் மறந்து போனது துரதிருஷ்டம்!

'பேச்சைக் குறை.. கலையில் நேர்த்தி செய்'... சீனு ராமசாமிகளுக்கு புதிய ஆத்திச் சூடி இது!

 

நீதானே என் பொன் வசந்தம்... பட ரிலீசுக்கு முன்பே முக்கிய காட்சிகள் வெளியீடு!

நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை யு ட்யூப் மற்றும் தொலைக்காட்சி மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

படம் குறித்து ரசிகர்கள் மனதில் பதிய வைக்க இந்த உத்தியைப் பயன்படுத்தப் போகிறார்களாம்.

goutham menon s new publicity techn
இந்தப் படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் இரண்டாவது காதலர் தினம் என்று இளைஞர்கள் கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக வெளியிடவிருக்கிறார்களாம்.

கொஞ்சம் புதுமையாக, படமாக்கப்பட்டு, படத்தில் இடம் பெறாத சுவாரஸ்யமான சில காட்சிகளை இணையதளம், தொலைகாட்சி மற்றும் திரையரங்குகளில் முன்கூட்டியே வெளியிடப் போகிறார்களாம்.

'இப்படத்தின் காதலர்கள் நித்யா மற்றும் வருணின் 30 வருட காதல் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மறக்கமுடியாட தருணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் 2 மணி நேர படத்தில் பதிவு செய்ய முடியாது என்பதனால் இந்த முடிவு," என்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன்

தமிழ் சினிமாவில் இதற்கு முன் யாரும் முயற்சிக்காதது இது என்கிறார்கள் நீஎபொ படக்குழுவினர்.

பப்ளிசிட்டிதானே... பண்ணுங்க பண்ணுங்க.. படம் வெளியாகும்போது பாத்துக்குவோம்!

 

'விளம்பரத்'தில் ஹீரோவானார் சாவித்ரி பேரன்!

Savithri S Grand Son Makes Debut Vilambaram

மறைந்த நடிகர் ஜெமினிகணேசன்-சாவித்திரியின் மகள் வயிற்று பேரன் அபிநய், 'விளம்பரம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைகிறார்.

அபிநய், டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தவர். இவரை, 'யங் இண்டியா' என்ற தெலுங்கு படத்தில் டைரக்டர் தாசரி நாராயணராவ் அறிமுகம் செய்தார். தமிழில் 'விளம்பரம்' படத்தின் மூலம் அபிநய் கதாநாயகன் ஆகிறார்.

இந்த படத்தில் அவருடன் ஐரா, 'அட்டகத்தி' ஐஸ்வர்யா, தம்பி ராமய்யா, சுனில் ஷெட்டி, சோனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்பவர், சூரியநிதி. தயாரிப்பு: ஜெம் புரொடக்ஷன்ஸ்.

படம் முழுவதும் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், புத்திர ஜெயா ஆகிய இடங்களில் வளர்ந்து வருகிறது.

 

ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் படம்

Jallikattu players starring film ஜல்லிகட்டு வீரர்கள் நடிக்கும் கதை படமாகிறது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு வீரர்கள் பற்றிய கதை 'பூர்வகுடி' என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் இப்ராகிம் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிகட்டு விளையாட்டை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தலாமா? கூடாதா? என்பதற்காக கோர்ட் வரை விவகாரம் சென்றது. தற்போது மிகுந்த பாதுகாப்புடன் நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்காக தேனி பகுதியில் பிரத்யேக செட் அமைத்து நூற்றுக்கும் அதிகமான நிஜ மாடுபிடி வீரர்களை அழைத்து வந்து விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு காட்சி 7 நாட்கள் படமாக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க ஜல்லிகட்டு விளையாட்டு எவ்வளவு உன்னதமானது என்பதை 50க்கும் அதிகமான புதுமுகங்களை வைத்து தேனி வட்டார வழக்கு பேசும் மக்களோடு படப்பிடிப்பு நடந்தது. ஈஸ்வர் ஹீரோ. மதுஸ்ரீ ஹீரோயின். அருண் ஒளிப்பதிவு. புரூஸ் இசை. எம்.குமார் தயாரிப்பு.
 

மனிஷா கொய்ராலாவுக்கு கேன்சர் : மும்பை மருத்துவமனையில் அட்மிட்

Cancer to Manisha Koirala : admitted in hospital மனிஷா கொய்ராலா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தமிழில் கமலுடன் 'இந்தியன்', ரஜினியுடன் 'பாபா', அர்ஜூனுடன் 'முதல்வன்' தனுஷுடன் 'மாப்பிள்ளை' உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனிஷா கொய்ராலா. இவர் கடந்த 2010ம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தலால் என்பவரை மணந்தார். திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தார்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்ததுடன் ராம் கோபால் வர்மா இயக்கிய 'பூத் ரிட்டர்ன்' என்ற இந்தி படத்தில் நடித்தார். நேபாளத்தை சேர்ந்த இவர் அங்கு புதுவீடு கட்டி வருகிறார். நவம்பர் முதல்வாரம் அவர் வீட்டு பணிகளை கவனிக்க சென்றார். கடந்த புதன்கிழமை திடீரென்று அவர் மயக்கம் அடைந்தார். புட் பாய்சன் காரணமாக அவர் மயக்கம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் சுயநினைவு இழந்தார். இதையடுத்து அவரை மும்பை அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது கேன்சர் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காவிட்டாலும் மனிஷாவின் நண்பர்கள் அவரது பாதிப்பு குறித்து தகவல் தெரிவித்தனர். 'கேன்சர் தாக்கி இருப்பது தெரிந்ததும் அதுபற்றி மனிஷா கவலைப்படவில்லை. அதை துணிச்சலாக எதிர்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைவேன்' என்று கூறினாராம். மனிஷாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக நேபாளத்தில் இருக்கும் அவரது தந்தை பிரகாஷ், சகோதரர் சித்தார்த் மும்பை வருகின்றனர்.
 

கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயினாக நடிக்க கூடாதா? : சினேகா கோபம்

Why should act as heroine after marriage : Sneha angry 'கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயினாக நடிக்க கூடாதா?' என்றார் சினேகா. கிஷோர், சினேகா நடிக்கும் படம் 'ஹரிதாஸ்'. ஜிஎன்ஆர்.குமாரவேலன் எழுதி இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். வி.ராமதாஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதுபற்றி சினேகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: திருமணத்துக்கு முன்பே ஹரிதாஸ் பட கதையை என்னிடம் சொல்ல வந்தார் இயக்குனர் குமாரவேலன். அப்போதே அவரிடம், சீக்கிரமே எனக்கு திருமணம் நடக்க உள்ளது. உங்கள் பட ரிலீசுக்கு முன்பே திருமணம் ஆகிவிடும். திருமணம் ஆன நடிகை ஹீரோயினாக நடிக்ககூடாது என்ற நிலைதான் கோலிவுட்டில் இருக்கிறது.

அதனால் இப்படத்தில் நான் நடிப்பதுபற்றி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று  அவரிடம் கூறினேன். அதைக்கேட்ட அவர் அதுபோன்ற சென்டிமென்ட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார். பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்று யார் சொன்ன விதியோ தெரியவில்லை. இப்பட ஹீரோ கிஷோர் தன்னைப்பற்றி  குறிப்பிடும்போது 'பேட் ஆக்டர்' என்று சொல்லிக்கொண்டார். அதை ஏற்க முடியவில்லை. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இதில் நன்றாக நடித்திருக்கிறார். தன்னை பேட் ஆக்டர் என்று அவர் குறைத்து மதிப்பிடக்கூடாது. பிருத்விராஜ்தாஸ் என்ற சிறுவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
 

காதல் ஜோடியில் கணவன் கவுரவக் கொலை: ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்

Man Featured Aamir Khan S Show On Honour Killing Murder

புதுடெல்லி: மேற்கு உத்தரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக இளம் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமீர்கான் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

தனியார் டிவியில் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கி வந்த 'சத்யமேவ் ஜெயதே' நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்பவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி பேசப்பட்டது. அதில் கவுரவக் கொலைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 28 வயதான அப்துல் ஹக்கீம், 26 வயதான மெவிஷ் ஆகிய திருமண தம்பதியினர் தமது பெற்றோரின் அனுமதியின்றி இரகசிய திருமணம் செய்து கொண்டதால் தமது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறியிருந்தனர்.

இவர்கள், கடந்த மே மாதம் முதல் தனியார் தொண்டு நிறுவனம் à®'ன்றின் பாதுகாப்பின் கீழ் இருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர், உத்தரபிரதேசத்தின் புலாந்த்ஷாஹ்ர் மாவட்டத்திற்கு ஹக்கீமின் தாயை பார்ப்பதற்காக இருவரும் வந்திருந்தனர். ஹகீமின் மனைவி 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு à®'ன்றரை வயதில் à®'ர் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காவல்நிலையத்திலிருந்து திரும்பிய போது ஹகீம் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஹகீம் தாழ்ந்த ஃபகீர் சமூகத்திலிருந்து வந்தவர் எனக்கூறி அவரை மெவிஷின் குடும்பத்தினர் வெறுத்திருந்தனர். இதனால் மெவிஷின் சகோதரர்களே ஹகீமை சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் வலுப் பெற்றிருக்கிறது. முன்னதாக ஹகீமின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெட்கக்கேடானது - அமீர்கான்

ஹகீமின் கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் அமீர் கான், இந்த படுகொலைச் சம்பவம் மிக வெட்கக்கேடானதுடன், துரதிஷ்டவ சமானது என்று கூறியுள்ளார். சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே இந்த தம்பதியினர் தமக்கு உயிராபத்து இருப்பதாக அச்சம் வெளியிட்டிருந்தனர். இதனை உத்தரபிரதேச அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன்.

ஹகீமின் குடும்பத்திற்கும் மெவிஷிற்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே அந்த இளம் விதவையாகி விட்ட அந்த பெண்ணின் இருப்பிடமான மீரட் போய் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி விட்டு வந்துள்ளேன் என்றார்.

எனது கிராம மக்களே எங்களை கொல்ல ஆயுதம் எடுத்திருக்கிறார்கள்.அநேகமாக நான் தான் அவர்களது அடுத்த இலக்காக இருக்கலாம் என்று ஐந்து மாதங்களுக்கு முன் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் மெவிஷ் கூறியிருந்தார். அந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.

 

முனி - 3... லாரன்ஸின் ஹீரோயின் டாப்ஸி!

Tapsi Signs Muni 3 3

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 3 படத்தில் அவருக்கு ஜோடியாக à®'ப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் டாப்ஸி.

முனி -1, முனி - 2 (காஞ்சனா) வெற்றிப்படங்களுக்கு பிறகு லாரன்ஸ் இயக்கும் புதிய படம் முனி-3.

முனியில் வேதிகாவும், முனி 2-ல் லட்சுமி ராயும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்போது முனி 3 படத்தின் வேலைகளில் மும்முரமாக உள்ளார் லாரன்ஸ். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை டாப்சியிடம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ரஜினி ஆல்பம் முடிந்ததும் ஜனவரி மாதம் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்.

இந்தப் படத்தை அவரது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸே தயாரிக்கிறது. முந்தைய இரு படங்களைவிட மிக பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்குகிறார் லாரன்ஸ்.

 

'வில்லனை' புரமோட் பண்ணுவதில் குறியாக இருக்கும் அமலா பால்!

Amala Recommends Her Boy Friend Vijay Movie

அமலா பால் பற்றிய அடுத்த சர்ச்சை ஆரம்பமாகிவிட்டது. அம்மணியின் இப்போதைய வேலை தன் நெருங்கிய ஆண் நண்பர் à®'ருவருக்காக பிஆர் பண்ணுவதுதானாம்.

அந்த ஆண் நண்பரின் பெயர் ராஜீவ் பிள்ளை. மலையாள வில்லன். சொந்த ஊர்ப் பாசம் à®'ருபக்கம், மாடலிங் காலத்திலிருந்தே நெருக்கமாகிவிட்ட நட்பு மறுபக்கம்... இரண்டும் சேர்ந்து ராஜீவ் பிள்ளைக்கு வாய்ப்பு தேடித் தரும் அளவுக்கு அமலா பாலை மாற்றிவிட்டதாம்.

அதுவும் தனது இன்னொரு நண்பரான இயக்குநர் விஜய் மற்றும் நடிகர் விஜய்யிடம் அமலா பால் மாற்றி மாற்றி ரெகமண்ட் செய்ததில், சரி நம்ம அடுத்த பட வில்லனாக்கிடுவோம் என à®'ப்புக் கொண்டார்களாம்.

இப்போது 'விஜய்கள்' படத்தின் மெயின் வில்லன் ராஜீவ் பிள்ளைதான்!

தனக்கு நெருக்கமான வேறு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடமும் ராஜீவ் பிள்ளைக்காக சிபாரிசு செய்ய, உடனே à®'ர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

ஹீரோயினாச்சே!

 

திரைப்படமாகிறது வைரமுத்துவின் தண்ணீர்தேசம்!

Vairamuthu Thanneer Desam Be Made In Celluloid

வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான தண்ணீர் தேசம் விரைவில் திரைப்படமாக மலர்கிறது.

ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது இந்த நாவல்.

1996 இல் புத்தகமாக வெளியிடப்பட்டு இன்று வரை 18 பதிப்புகள் கண்டு விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறது. கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடக்கும் காதல் கதையினைச் சொல்லும் தண்ணீர் தேசம் அந்தத் தலைப்பிலேயே திரைப்படமாக்கப்படுகிறது.

ரெட் எர்த் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற மலேசிய நிறுவனத்தின் சார்பில் நிவாஸ் ராகவன் -யுவராஜ் செளமா ஆகியோர் தண்ணீர் தேசத்தைத் தயாரிக்கிறார்கள். நாவலை எழுதிய வைரமுத்துவே படத்திற்கு கதை- வசனம் மற்றும் பாடல்களையும் எழுதுகிறார்.

இந்தப் படத்தை ஷிவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வேறு மொழிகளில் சில வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழில் இது இவருக்கு முதலாவது படம். இந்தப் படத்திற்கு பிரபல à®'ளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் இணை à®'ளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வி.தியாகராஜன் à®'ளிப்பதிவு செய்கிறார்.

எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தூத்துக்குடி, அந்தமான் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜனவரி 2013ல் முற்றிலும் புதுமுகங்களோடு தொடங்கவிருக்கும் தண்ணீர் தேசம் படத்திற்கு கதாநாயகன், கதாநாயகி தேர்வு நடக்கிறது.

 

யுவனின் நேரடி இசை நிகழ்ச்சி... கோலாலாம்பூரில் டிச 15-ல் நடக்கிறது!

Yuvan S Kl Concert On Dec 15

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 15ம் தேதி கோலாலம்பூரில் நடக்கிறது.

நூறு படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இப்போது நேரடி இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

தனது 100வது படமான பிரியாணியின் இசையைக் கொண்டாடும் விதத்தில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இந்த முறை இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்கு KLIMF 2012 என்று பெயர் வைத்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான அரங்கு தயாராகி வருகிறது.

இவ்விழாவில் தனுஷ், கார்த்தி, சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, சினேகா, ஜெயம் ரவி, பிரசன்னா, ஜெய், கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.

இளையராஜா

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், யுவனின் அப்பாவுமான இளையராஜா கலந்துகொள்கிறார்.

 

பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில் பல லட்சம் நகை, பணம் திருட்டு

சென்னை: பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.

இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை:

பழம்பெரும் நடிகை சச்சு வீட்டில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, வெள்ளிப்பொருட்கள் திருடுபோயுள்ளன. இதுகுறிந்து வேலைக்கார பெண் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.

இவர் அபிராமபுரம் காவல்நிலையத்தில் வாய்மொழி மூலமாக புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தனது வீட்டு பீரோவில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சுமார் 40 பவுன் நகைகளும், ரொக்கப்பணமும், ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்களும் திருட்டுப்போய்விட்டதாகவும், வேலைக்கார பெண் மீது சந்தேகம் உள்ளதாகவும் நடிகை சச்சு தெரிவித்தார். இது தொடர்பாக, அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால், இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சச்சுவின் வீட்டில் 3 வேலைக்கார பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மனீஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய்

Manisha Koirala Suffering From Canc

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷ் கொய்ராலாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா அண்மை காலமாக அவரது சொந்த ஊரான காத்மாண்டுவில் தான் அதிக நேரம் செலவிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு புட் பாய்சனிங் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தான் அவரது உறவினர்கள் அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பைக்கு அழைத்து வந்து அங்குள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது தாய் சுஷ்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில் உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த மனீஷா திருமணத்திற்கு பிறகு அம்மா வேடத்திற்கு வந்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனீஷா கொய்ராலாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் குடிப் பழக்கத்தை விட்டுவிட்டதாக அறிவித்தார்.

 

இந்தி மங்காத்தாவில் 'ஹீரோ' ஆவாரா அஜீத்?

Venkat Prabhu Wants Ajith Hindi Mangatha Too

சென்னை: மங்காத்தா படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. தமிழில் கலக்கிய அஜீத்தை இந்தியிலும் நடிக்க வைக்க அவர் விரும்புகிறாராம். ஆனால் அர்ஜூன் நடித்த வேடத்தில் அஜீத்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம்.

அஜீத்தின் 50வது படம் மங்காத்தா. வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜீத் ஆன்டி ஹீரோ பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். திரிஷா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் படத்தில் கலாய்த்திருந்தனர். லட்சுமி ராய்க்கு கவர்ச்சிகரமான பாத்திரம்.

இப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் வெங்கட் பிரபு. இதிலும் அஜீத்தை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம். இதை அஜீத்திடமே சொல்லி விட்டாராம். அதேசமயம், இந்தி மங்காத்தாவில், தமிழில் அர்ஜூன் நடித்திருந்த அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைக்க விரும்புகிறாராம் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபுவின் விருப்பத்திற்கு அஜீத் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அடுத்து தான் நடிக்கப் போகும் புதிய படத்தை முடித்த பிறகே அஜீத் வர முடியும் என்று தெரிகிறது. வெங்கட் பிரபுவும் பிரியாணி படத்தில் அடுத்து பிசியாகவுள்ளதால் இப்போதைக்கு இந்தி மங்காத்தா வேகம் பிடிக்காது என்றே தெரிகிறது.

ஓ.கேஜி..!

 

குழந்தைகளுக்காக மீண்டும் கமலுடன்? - முதல் முறை மனம் திறக்கும் சரிகா

Sarika S Open Talk On Rejoining Wit

கமல்ஹாஸனை விட்டுப் பிரிந்த பிறகு முதல் முறையாக அவருடன் சேர்வது பற்றி பேசியுள்ளார் கமலின் இரண்டாவது மனைவியான சரிகா.

சரிகாவும் கமலும் சில ஆண்டுகளுக்கு முன் மவுனமாகப் பிரிந்தார்கள். இதில் இருவருக்கும் பிறந்த மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா கமலுடனே இருந்து கொண்டார்கள்.

சரிகா மும்பையில் செட்டிலாகிவிட்டார். சில படங்களில் மீண்டும் தலை காட்டினார்.

கமலைவிட்டுப் பிரிந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகையில் பகிர்ந்து கொண்டார்.

எப்படி இருக்கிறது இப்போதைய வாழ்க்கை?

நன்றாக இருக்கிறது. என் வாழ்வாதாரமும் சிறப்பாகவே இருக்கிறது. கவுரவமாக வாழ்கிறேன். அதுதான் முக்கியம்.

மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவிடம் சினிமா பற்றி பேசுவீர்களா?

பேசுவேன். சினிமா பற்றிய ஆர்வம் உள்ள அத்தனை பேரிடமும் பேசுவேன். ஸ்ருதிக்கு இசையிலும், அக்ஷராவுக்கு நடனத்திலும் ஆர்வம். இருவருமே அவற்றைக் கற்றவர்கள். சினிமாவில் தங்களுக்கான இடத்தை இருவருமே பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட கூடாது.

இப்போது நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். தக்க இடத்தை பெறும் வரையில் மகள்களை விட்டு தள்ளியே இருப்பதுதான் அது. அவர்கள் என் மகள்கள். அவர்கள் எங்கும் போய்விடப்போவதில்லை, நானும் எங்கும் போய்விடப் போவதில்லை. மீண்டும் அவர்களின் கரத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்வேன். அதனால்தான் என் பேட்டிகளில் அவர்களைப்பற்றி விவாதிப்பதில்லை.

அவர்களின் காதல் விவகாரங்கள் பற்றி...

அதில் நான் தலையிடுவதில்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை.

குழந்தைகளுக்காக கமலுடன் மீண்டும் வாழ்க்கையில் இணைவீர்களா?

அப்படியொரு விஷயம் நடக்க முடியாதபோது அது பற்றி ஏன் பேச வேண்டும்? யாரிடமும் நான் பேச தயாராக இல்லை. வாழ்க்கையை இருவிதங்களில் வாழலாம். எதில் தள்ளப்பட்டோமோ அதில் வாழ்வது ஒரு வகை. தினம் தினம் வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக இருப்பது இன்னொரு வகை. நான் இரண்டாவது வகை!