அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அஜீத் ரசிகர்கள் ஆலோசனை?

அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோசடி நடந்துள்ளது என்று கூறி நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளனர் அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுக்க அஜீத் ரசிகர்கள் ஆலோசனை?  

இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்பது எப்படி எம்ஜிஆரைக் குறிக்குமோ, அப்படி சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை மட்டுமே குறிக்கும் இதை அடுத்தவருக்கு பறித்துக் கொடுக்க முனைவது தவறு என்று கண்டித்தனர். குறித்த பத்திரிக்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த கருத்துக் கணிப்பே மோசடியானது என்றும், இதில் உண்மையில் வென்றவர் அஜீத்தான், ஆனால் அவரை அணுக முடியாத கோபத்தில் விஜய்க்கு இப்படி ஒரு பட்டம் தந்ததாகவும், அதற்கு விஜய்யும் உடந்தை என்றும் அஜீத் ரசிகர்கள் கொதிக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து முன்னணி நாளிதழும் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் இந்த விஷயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிலு செய்துள்ளனர்.

சென்னையில் இன்று கூடிய அஜீத் ரசிகர்கள் (முன்னாள் மன்றப் பொறுப்பாளர்கள்), இதுகுறித்து ஆலோசனை செய்தனர். இறுதியில், நீதிமன்றத்தில் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செயதுள்ளனர்.

சரி, இதெல்லாம் அஜீத்துக்கு தெரியுமா ரசிகர்களே..!

 

ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த விஜய்யின் கத்தி ட்ரைலர்!

சென்னை: விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் முதல் ட்ரைலரை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, விஜய்-சமந்தா நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி. இதன் படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.

ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த விஜய்யின் கத்தி ட்ரைலர்!

சில தினங்களுக்கு முன் படத்தின் முன்னோட்டமும், முதல் விளம்பர சுவரொட்டிகளும் வெளியாகின. இவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 22-ம் தேதி விஜய் பிறந்த நாளன்று வெளியான இந்த முன்னோட்ட காணொளிக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் கிடைக்காத அளவுக்கு 10 லட்சம் பார்வையாளர்கள கிடைத்துள்ளனர்.

இந்த முன்னோட்டப் படமும், சுவரொட்டி வடிவமைப்பும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டிவி விளம்பரத்தை முழுவதுமாக தழுவி எடுக்கப்பட்டது என்பது அம்பலமான போதும், விஜய் ரசிகர்கள் தந்த உற்சாகமான ஆதரவே இதற்குக் காரணம் எனப்படுகிறது.

இந்தப் படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் என்ற வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.

 

கமல் கோபம்... மன்னிப்பு கேட்ட சந்தானம்!

வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டுக்கு வராத அதன் ஹீரோ சந்தானம் மீது கமல் கோபம் கொண்டதால், அவருக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம்.

சமீபத்தில் சந்தானம் நடித்த வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கில் நடந்தது.

விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கமல் வந்திருந்தார். சந்தானமே நேரில் வந்து அழைத்ததால் அவர் வந்திருந்தார்.

கமல் கோபம்... மன்னிப்பு கேட்ட சந்தானம்!

ஆனால் விழாவின் நாயகனான சந்தானமோ நிகழ்ச்சிக்கே வரவில்லை. லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்ததாகக் காரணம் கூறினாராம்.

இது கமலுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சந்தானம் குறித்து ஒரு வார்த்தை பேசாத கமல், விழா முடிந்ததும் தன் கோபத்தை நேரடியாகவே காட்டிவிட்டுச் சென்றாராம், தயாரிப்பாளரிடம். 'சந்தானம் நேரில் வந்து கேட்டுக் கொண்டதால் நான் வந்தேன். அவரோ தன் ஷூட்டிங்தான் முக்கியம் என்று நின்றுவிட்டாரே'என்றாராம்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சந்தானம், உடனே கமலுக்கு ஹைதராபாதிலிருந்து போன் செய்து பேசியுள்ளார். தன் நிலைமையைச் சொல்லி, மன்னிப்புக் கேட்ட பிறகே, கமல் கொஞ்சம் அமைதியானாராம்!

 

பிஆர்ஓ யூனியன் தேர்தல்.. தலைவராக விஜயமுரளி, பொதுச் செயலராக பெருதுளசி தேர்வு

சினிமா பிஆர்ஓ யூனியன் தேர்தலில் தலைவராக விஜயமுரளியும், பொதுச் செயலராக பெருதுளசி பழனிவேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்னிந்திய சினிமா பிஆர்ஓக்கள் யூனியனின் தேர்தல் நேற்று நடந்தது.

இதில் தலைவராக விஜயமுரளி ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளர் பதவிக்கு மௌனம் ரவி தேர்வு செய்யப்பட்டார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்.. தலைவராக விஜயமுரளி, பொதுச் செயலராக பெருதுளசி தேர்வு

9 செயற்குழு உறுப்பினர்களாக நிகில் முருகன், வி.எம்.ஆறுமுகம், இனியன் ராஜன், மேஜர்தாசன், கிளாமர் சத்யா, ரியாஸ் கே.அகமது, துரைப்பாண்டி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரு.துளசிபழனிவேல் செயலாளராகவும், கோவிந்தராஜ், என்.சங்கரலிங்கம் இருவரும் துணைத் தலைவர்களாகவும், கணேஷ்குமார் மற்றும் வெங்கட் இருவரும் இணைச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சங்கத்தினர் அறிக்கையை வெளியுட்டுள்ளனர்.