தலைப்பு பெரிய விஷயமே இல்லை... நானே விட்டுக் கொடுக்கிறேன்! - எஸ்பி ஜனநாதன்

தலைப்பு பெரிய விஷயமே இல்லை... நானே விட்டுக் கொடுக்கிறேன்! - எஸ்பி ஜனநாதன்

சென்னை: தலைப்பு ஒரு பிரச்சினையே அல்ல. புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் வேண்டும் என்று கேட்டால், நானே விட்டுக் கொடுத்து விடுகிறேன். என்னால் இதுபோல ஏராளமான தலைப்புகளைச் சொல்ல முடியும், என்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.

இயற்கை, ஈ, பேராண்மை என வித்தியாசமான படங்கள் தந்த எஸ்பி ஜனநாதன் அடுத்து புறம்போக்கு என்ற தலைப்பில் ஆர்யா - விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தை யுடிவி தயாரிக்கிறது.

அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இந்தத் தலைப்பு தனக்கே சொந்தம் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் அறிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் எஸ்பி ஜனநாதனிடம் கருத்து கேட்டபோது, "நட்ராஜ் அப்படிக் கூறியதை மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் இருவரும் போனில் பேசினோம்.

தலைப்பு ஒரு பிரச்சினை இல்லை. எந்தத் தலைப்பாக இருந்தால் என்ன, கதைதான் முக்கியம். புறம்போக்கு தலைப்பை நட்ராஜ் எனக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் சொன்னார். எனக்கும் இதில் பெரிய பிரச்சினை இல்லை. அவருக்கு இதே தலைப்பு வேண்டும் என்றால் நானே விட்டுக் கொடுத்துவிடுகிறேன்.

என்னால் இதுபோல பல தலைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனும்போது எதற்காக வீண் பிரச்சினை?

இனி இதுபோன்ற தலைப்புப் பிரச்சினையே வராத அளவுக்கு, ஒரு புதிய நடைமுறையை தமிழ் சினிமாவில் உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்றார்.

 

டிவி நடிகையை சரமாரியாக தாக்கிய திருடர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள்

மும்பை: மும்பையில் டிவி நடிகை லவ்லீன் கெளர் என்பவரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கியது. ஆனால் இதைத் தடுக்காமல் மக்கள் வேடிக்கை பார்த்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை லவ்லீன் கெளர் நேற்று ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பிக்பாக்கெட் திருடன், அவர் வைத்திருந்த பர்ஸைப் பறித்துக் கொண்டு ஓட முயன்றான்.

இதையடுத்து ஆட்டோவிலிருந்து குதித்த லவ்லீன் அந்த திருடனை துரத்திக் கொண்டு ஓடினார். அந்த சமயத்தில் திடீரென அந்தத் திருடனுக்கு ஆதரவாக 2 பேர் திரண்டனர். மூன்று பேரும் லவ்லீனை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கினர். இதை நடிகை எதிர்பார்க்கவில்லை. அங்கு கூட்டமும் கூடியது.

டிவி நடிகையை சரமாரியாக தாக்கிய திருடர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள்

ஆனால் தனி ஆளாக திருடர்களுடன் போராடிக் கொண்டிருந்த லவ்லீனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்று பேரும் சேர்ந்து தாக்கியதில் லவ்லீனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அருகில் இருந்த போலீஸ் பூத்தில் இருந்து சில போலீஸார் விரைந்து வந்து நடிகையைக் காப்பாற்றி அந்த மூன்று பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவன் தப்பி விட்டான். 2 பேர் மட்டும் சிக்கினர்.

மக்களே, இப்படியா பொறுப்பில்லாமல் இருப்பீங்க..!

 

கிருஷ்ணஜெயந்தி உரியடி விழாவில் பங்கேற்கும் ஷாருக்கான்

கிருஷ்ணஜெயந்தி உரியடி விழாவில் பங்கேற்கும் ஷாருக்கான்

மும்பை: மும்பையில் நடைபெறும் ஜென்மாஷ்டமி உரியடித் திருவிழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜென்மாஷ்டமி திருவிழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மிகவும் ஆரவாரமாகக் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.

இந்த விழாவின் ஒரு அங்கமாக, மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஜம்போரி மைதானத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் உறியடித் திருவிழாவைக் காணக்கூடுவார்கள். இதில் உயரமான மூங்கில் குச்சிகளை இணைத்து தயிர் நிறைந்த பானை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இதனை உடைப்பவருக்கு பரிசு கிடைக்கும்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியினை ஸ்ரீ சங்கல்ப் பிரதிஸ்தான் நன்கொடை அமைப்பைச் சேர்ந்த சச்சின் மற்றும் சங்கீத அஹிர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆண்டுதோறும் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள். இந்த முறை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை அழைக்க என்ற முடிவில் இவர்கள் சென்றபோது, அவர் சம்மதிப்பாரா என்ற சந்தேகத்துடனே சென்றுள்ளனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஷாருக்கான் உடனே சம்மதித்து விட்டாராம்.

ஷாருக்கான் உரியை உடைப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக சங்கீதா கூறினார். மகாராஷ்டிரா பாணியில் ஷாருக்கானுக்கு டர்பன் அணிவித்து போர்வாளுடன், நாதம் முழங்க வரவேற்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்துள்ள ஷாருக்கான், இவர்களின் கோவிந்தாக்களை சந்திக்க வேண்டும் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டாராம்.

சமீபத்தில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் ஷாருக்கான் பேசும் சாதாரண மனிதனின் சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்ற வசனம் மிகவும் பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மெட்ராஸ் கபேயை பாராட்டிய நீத்து சந்திராவுக்கு கண்டனம்!

சென்னை: 'மெட்ராஸ் கபே' படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தி நடிகையான நீத்து சந்திரா, பாலிவுட்டை விட தமிழில்தான் அதிக வாய்ப்புகள் பெற்றார். ‘யாவரும் நலம்' படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்தார்.

மெட்ராஸ் கபேயை பாராட்டிய நீத்து சந்திராவுக்கு கண்டனம்!

தமிழரையும் விடுதலைப் புலிகளையும் இழிவாகச் சித்தரிக்கும் படம் என சர்ச்சைக்குள்ளாகி, தமிழகத்தில் வெளியாகாமல் போன ‘மெட்ராஸ் கபே' படத்தை சமீபத்தில் புகழ்ந்து பேசியுள்ளார் நீத்து சந்திரா.

இதனால் தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.

சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், " மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம் இலங்கையில் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் இழிவு படுத்தப்பட்டு உள்ளனர். தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் படம் வெளியிடப் படவில்லை.

இந்த நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

நோ சொன்ன கையோடு பிகினியில் நடிக்கப் போகும் நடிகை

சென்னை: காதலுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கம் நடிகை மீண்டும் பிகினியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அந்த நடிகையின் காதல் இரண்டு முறை தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு கவலையில் இருந்த அவர் தற்போது தான் சற்று தேறி உள்ளார். அம்மணி ஒரு பெரிய நடிகரின் படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடித்தார். ஆனால் என்னவோ அதன் பிறகு பிகினியில் நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் பிகினியில் எந்த நடிகை நன்றாக இருக்கிறார் என்று இணையதளம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் அம்மணிக்கு தான் முதலிடம். பாலிவுட் நடிகைகள் எல்லாம் அவருக்கு பின்னால் தான். இந்த தகவல் அம்மணிக்கு தெரிந்தவுடன் அடடா நம்மை பிகினியில் ரசிகர்களுக்கு இவ்வளவு பிடித்துள்ளதா என்று ஒரே பெருமையாம்.

இதையடுத்து மீண்டும் பிகினியில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

 

அவங்க கெமிஸ்ட்ரியை பாருங்க, நிச்சயமாக லவ் தான்

சென்னை: சித்து நடிகரும், மேனனின் மனம் கவர்ந்த நாயகியும் காதலிப்பது உண்மை தான் என்று டோலிவுட் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சித்துவும் சரி, அந்த நாயகியும் சரி காதல் விவகாரம் பற்றி கேள்வி கேட்டால் திடீர் திடீர் என்று பல்டி அடித்து விடுகின்றனர். ஒரு சமயம் ஆமாம் காதலிக்கிறோம், திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்கிறார்கள். ஒரு சமயம் நடிப்பில் கவனம் செலுத்துகிறோம் திரைத்துறையைச் சேர்ந்த யாரையும் மணக்க மாட்டோம் என்கின்றனர்.

இதனால் அந்த இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதே குழப்பமாக உள்ளது. இந்நிலையில் டோலிவுட் பிரபலம் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்கு நாயகனும், நாயகியும் ஜோடி போட்டு சென்றதுடன், முழு நேரமும் ஒட்டி உறவாடி உள்ளனர். இதை பார்த்த டோலிவுட் நடிகர் ஒருவர் அவர்கள் காதலிக்கிறார்கள் போன்று பாருங்கள் அவர்களுக்குள் உள்ள பிசிக்ஸ், கெமிஸ்டிரியை என்றார்.

மேலும் அந்த காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு வதந்தி வேறு கிளம்பி அடங்கியது.

 

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

சென்னை: விஜய் நடித்த தலைவா படத்தின் கதை கற்பனையானது. எந்த நிஜ மனிதர்களையும் குறிப்பிட்டு அந்தப் படம் எடுக்கவில்லை. எனவே படத்துக்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று இயக்குநர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், "தலைவா' படம் மும்பையில் வாழ்ந்த தனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை பற்றியது. தனது தாத்தாவும், தந்தையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். அதனால் அந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர், இயக்குநர் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

"தலைவா' படத்தை தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தவர் குறிப்பிட்டபடி, அந்தப் படம் யாரையும் மையப்படுத்தி எடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தின் கதாபாத்திரங்கள் உள்பட அனைத்தும் கற்பனைக் கதைதான்.

படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் எந்த தொழிலும் செய்வதாக காட்டப்படவில்லை. மேலும், அவர் எந்த சங்கத்துக்கும் தலைவராக இருக்கவில்லை. அவர் அங்குள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்வதாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

இது தவிர, அந்த கதாபாத்திரம் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மகாராஷ்டிரம், பிகார், தமிழகம் மற்றும் இதர மாநில மக்களுக்காக அவர் உதவுவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் குறிப்பிட்டபடி மும்பை தாராவி பகுதியில் எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. மும்பை கடற்கரை ஓரங்களில்தான் நடத்தப்பட்டது. மனுதாரரின் மனுவில் கூறியவாறு படத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. அதனால் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என இயக்குநர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்

சென்னை: பிந்து மாதவியை காதலிப்பதாக கிளம்பியுள்ள வதந்திகள் வருத்தம் தருகின்றன. நான் உண்மையில் என் மனைவியை மட்டுமே காதலிக்கிறேன், என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது சினிமாவில் வேகமாக வளரும் நடிகராக உள்ளவர் சிவகார்த்திகேயன்.

இவருக்குத் திருமணமாகிவிட்டது. ஆர்த்தி என்ற மனைவி உள்ளார். நேற்று இருவருக்கும் மூன்றாவது திருமண நாள்.

பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்

இந்த நாளில் சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான வதந்தி கிளம்பியது.

அவருக்கும் பிந்து மாதவிக்கும் காதல் என்றும், இந்தக் காதலால் சிவகார்த்திகேயன் வீட்டில் பெரும் சண்டை என்றும், பிரச்சினையிலிருந்து வெளியில் வர மனைவியை விவாகரத்து செய்ய அவர் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் பெற, நடிகர் சிவகார்த்திகேயன், பிந்து மாதவி இருவர் தரப்பையும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் யாருடைய போனையும் எடுக்கவே இல்லை.

எனவே மீடியாவில் இருவரைப் பற்றியும் தீயாய் பரவியது வதந்தி.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இந்த வதந்திகளை மறுத்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "என் திருமண நாளும் அதுவுமாய், இப்படி ஒரு செய்தியைப் பார்த்து வருந்தினேன்.

எனக்கும் அந்த நடிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தேன், அதுவும் ஜோடியாகக் கூட இல்லை. எங்களுக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

பிந்து மாதவியுடன் காதல் இல்லை... மனைவி ஆர்த்தியைத்தான் காதலிக்கிறேன்! - சிவகார்த்திகேயன்

எனக்கும் என் மனைவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சத்தமாக சண்டை போடவும் இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் கூட கேட்டுப் பாருங்கள்.

நாங்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் திருமண வாழ்க்கைப் பற்றி வரும் செய்திகளை நம்ப வேண்டாம். ஷூட்டிங்கில் இருக்கும்போது நான் போன் எடுப்பதில்லை. எனவே என்னிடம் பேச விரும்பும் மீடியா நண்பர்கள் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்," என்றார்.