முதலில் அக்கா, இப்போ தங்கச்சியுடன் ஜீவாவுக்கு காதல்

Jiiva Romance Karthika S Sister

சென்னை: ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுடன் நடித்த ஜீவா தற்போது அவருடைய இளைய மகள் துளசியுடன் நடிக்கவிருக்கிறார்.

தெலுங்கு, மலையாளத்தில் தோல்விப் படங்களில் நடித்த கார்த்திகாவுக்கு தமிழில் ஜீவாவின் ஜோடியாக கோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரும் இயக்குனர் கூறியபடி சமத்தாக நடித்துக் கொடுத்தார். படமும் ஹிட்டானது. இது தான் கார்த்திகாவின் முதல் ஹிட் படம். அப்பாடா ஒரு வகையா தோல்வி நடிகை என்ற பெயர் போச்சு என்று அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இந்நிலையில் கார்த்திகாவின் தங்கை துளசி கடல் படத்தில் நடித்து முடித்த கையோடு ஜீவாவோடு யான் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரவி கே. சந்திரன் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஜீவா ஏற்கனவே ஹைதராபாத் சென்றுவிட்டார்.

இந்த வாரம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகிறோம் ஜீவா, அதனால் கடினமாக உழைக்கத் தயாராக இருங்கள் என்று இயக்குனர் ஹீரோவிடம் தெரிவித்துள்ளார். நீ எடுங்க சார், ஜமாய்ச்சிடலாம் என்று ஜீவா கூறியுள்ளார். யான் படத்தை ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் தயாரிக்கிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த நீ தானே என் பொன்வசந்தம் கடந்த 14ம் தேதி தான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எத்தனைவாட்டிதாங்க ரகசிய கல்யாணம் பண்ணிக்கிறது!! - லட்சுமிராய் சலிப்பு

No Truth Secret Marriage Says Lakshmi Rai   

எத்தனை முறைதான் மீடியாக்காரர்கள் எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பார்களோ, அதுவும் ரகசியமாக என சலித்துக் கொள்கிறார் லட்சுமி ராய்.

நடிகை லட்சுமிராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததாக பரபரப்பாக தகவல் வெளியாகி வருகிறது.

தொழில் அதிபர் ஒருவரை யாருக்கும் தெரியாமல் திருமணம், செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து லட்சுமிராயிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி தவறான வதந்திகளை யாரோ பரப்பி வருகிறார். எத்தனை முறைதான் எனக்கு ரகசியமாக திருமணம் செய்து பார்ப்பார்களோ தெரியவில்லை.

உண்மையில் இப்போது எனது சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அதற்காக திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறேன். அதை வைத்து எனக்கு திருமணம் என்று புரளி கிளப்பியுள்ளார்கள் போலிருக்கிறது," என்றார்.

 

படத்தயாரிப்பாளர் ஆகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்

G V Prakash Kumar Turn Producer

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது படத்தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் வெற்றிகரமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகனும் ஆவர். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷன்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் படம் தயாரிக்க இருக்கிறார்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்ரம் சுகுமார் இயக்கும் படத்தை முதன் முதலில் தயாரிக்கிறார். ‘ஆடுகளம்‘ படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார் விக்ரம் சுகுமார். அவர் கூறிய கதை பிடித்துப் போகவே தானே தயாரிக்க களம் இறங்கிவிட்டார் பிரகாஷ்குமார்.

படத்தயாரிப்பு பற்றி கூறிய பிரகாஷ்குமார், ‘‘படம் தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேறும் என நினைக்கவில்லை. இந்த கதையை கேட்டதும் நானே தயாரிக்க முடிவு செய்தேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எனது அசிஸ்டென்ட் ஒருவர் இசை அமைக்கிறார்'' என்றார்.

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்துவரும் நிலையில் பிரகாஷ்குமார் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கும்கி - விமர்சனம்

Kumki Review   

நடிகர்கள்: விக்ரம் பிரபு, தம்பி ராமையா, லட்சுமி மேனன்

இசை: டி இமான்

பிஆர்ஓ: ஜான்சன்

ஒளிப்பதிவு: எம் சுகுமார்

தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்

இயக்கம்: பிரபு சாலமன்


ஒரு மெகா கொம்பன் யானை, அதை சமாளிக்க ஒரு டூப்ளிகேட் கும்கி யானை, இரு ஒரிஜினல் காதலர்கள்.... நெஞ்சை அள்ளும் அருவியும் அழகிய மலைச் சாரலும் பின்னணியாக... படிக்கும்போதே இதமாக இருக்கிறதல்லவா... பார்க்கும்போதும் சில காட்சிகள் அப்படித்தான் உள்ளன. ஆனால்...? மீதியையும் படிச்சு முடிங்க!

ஆதிக்காடு... அற்புதமாக வளங்கள் நிறைந்த மழைக் காடு. வெளிக் காற்று படாமல் தாங்களுண்டு தங்கள் காடுண்டு என்று அமைதியாய் வாழும் மக்கள். ஆனால் அறுவடை நெருங்கும்போதெல்லாம் கொம்பனின் அட்டகாசம் தாங்காது. கொம்பன்? அந்த மலையை அடிக்கடி அதகளப்படுத்தும் காட்டு யானை.

இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க, ஒரு கும்கி யானையை வரவழைத்து கொம்பனை விரட்டலாம் என முடிவு செய்கிறார்கள் ஊர்க்காரர்கள். சந்தர்ப்ப சூழல் காரணமாக, மாணிக்கம் என்ற டூப்ளிகேட் கும்கி, அதன் பாகன் விக்ரம் பிரபுவுடன் ஊருக்குள் நுழைகிறது. தங்களை காக்க வந்த தெய்வமாய் ஊர்மக்கள் அவர்களை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் வந்த இடத்தில் விக்ரம் பிரபுவுக்கும் ஊர்த் தலைவர் மகள் லட்சுமி மேனனுக்கும் காதல் அரும்புகிறது. காதல் வெளியில் தெரிந்தால் ஊரே ஒன்று சேர்ந்து கொன்றுவிடும். இந்த யானை ஒரிஜினல் கும்கி இல்லை... கோயில் யானை என்பது தெரிந்தாலும் நிலைமை அதேதான். இந்த சூழலை எப்படி சமாளிக்கிறான் ஹீரோ, கொம்பனை எப்படி விரட்டியடிக்கிறது மாணிக்கம் என்பதெல்லாம் க்ளைமாக்ஸில்.

கதை என்று பிரதானமாக எதுவும் இல்லை. ஆனால் அந்த சூழல் கதையை உருவாக்கியிருக்கிறது. காட்சியமைப்பில்தான் இன்னும் சிரத்தை காட்டாமல், யானை மற்றும் காட்டருவிகளின் பிரமாண்டத்திலேயே மயங்கிப் போய்விட்டார் இயக்குநர்.

விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். அந்தத் தடுமாற்றம் கொஞ்சம் தெரிந்தாலும், பல காட்சிகளில் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடையாளம் மறைந்து, பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை.

லட்சுமி மேனன் ஒரு மலைகிராமப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அந்தக் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன!

தம்பி ராமையாவும் அவருக்கு எடுபிடியாக வரும் அந்த தம்பியும் இல்லாமல் போயிருந்தால் ரொம்ப 'ராவாக' இருந்திருக்கும் இந்தப் படம்.

ஜோ மல்லூரி, ஜூனியர் பாலையா, அந்த பாரஸ்ட் ரேஞ்சர்கள், மாணிக்கம் யானை... குறையில்லாத நடிப்பு.

க்ளைமாக்ஸில் வந்து அந்த யானை சண்டைக் காட்சியில் கிராபிக்ஸை இன்னும் பக்காவாக செய்திருக்கலாம். எளிதில் அவை கிராபிக்ஸ் என்று தெரிந்துவிடுவதால், ஒரு முழுமை கிடைக்காமல் போகிறது படத்துக்கு.

படத்தின் நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் எம் சுகுமார். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த அருவி காட்சிதான். ஆதிக்காடு கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் சுகுமாரை கேட்டுத் துளைக்கக் கூடும்.

இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பழைய பாடல்கள் அல்லது ட்யூன்களை நினைவூட்டினாலும் பின்னணி இசையும் ஓகே.

படம் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாய் எதையோ எதிர்ப்பார்க்க வைத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர். விளைவு, க்ளாமாக்ஸ் நெருங்கும்போதுகூட, ஏதாவது ஒரு அதிர்வை எதிர்நோக்குகிறது மனசு. ஆனால் டைட்டில் ஓட ஆரம்பித்துவிட, அபாரமான ஏமாற்றத்தோடு சீட்டைவிட்டு எழுந்திருக்க வேண்டியதாகிறது. அங்குதான் சறுக்கிவிட்டது கும்கி!

-எஸ். ஷங்கர்

 

சிகரெட்டை சாலையில் போட்டுக் கொளுத்திய ரஜினி ரசிகர்கள்!!

Rajini Fans Quit Smoking

சென்னை: புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதிலிருந்து, புகைப் பிடிப்பதற்கு எதிரான போராட்டங்களில் ரஜினி ரசிகர்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

முதல் கட்டமாக சைதை ரசிகர்கள் சிகரெட்டை சாலையில் கொட்டி எரித்து புகைப் பழக்கத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் உடன் பிறந்த ஸ்டைலாக முன்பு திகழ்ந்தது புகைப் பிடிப்பது. இன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நிலைக்கு மூல காரணமே சிகரெட் பழக்கம்தான் என்று ரஜினி உணர்ந்து, மது மற்றும் சிகரெட் பழங்கங்களை கைவிட்டுவிட்டார்.

சமீபத்தில் நடந்த சென்னை மாவட்ட ரசிகர்கள் விழாவில், "என் உடல்நிலை இவ்வளவு மோசமானதற்குக் காரணம் மது மற்றும் சிகரெட் பழக்கங்கள்தான். கெட்ட சகவாசத்தால் வந்து சேர்ந்த பழக்கங்கள் இவை. என் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதித்தது புகைப் பழக்கம்.

எனவே என் ரசிகர்கள், இன்றே புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். மது அருந்தாமலிருக்க வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார் ரஜினி.

தலைவரின் இந்த வேண்டுகோள் ரசிகர்கள் மத்தியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும், ஆங்காங்கே சிகரரெட் பழக்கத்துக்கு குட்பை சொல்லி, சிகரெட்டுகளை ஒன்றாக சாலையில் கொட்டி எரித்து வருகின்றனர் ரசிகர்கள். இதில் சில பொதுமக்களும் கலந்து கொண்டு, புகைப்பழக்கத்தை விடுவதா சபதம் எடுத்துள்ளனராம்.

இங்கே நீங்கள் பார்ப்பது, சைதை பகுதி ரசிகள் சிகரெட்டை சாலையில் போட்டு எரிக்கும் காட்சியை!

இது மட்டுமல்ல, இனி சிகரெட் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்திலும் தீவிரமாக இறங்கப் போவதாக ரசிகர் மன்றங்கள் அறிவித்துள்ளன.

 

ப்ளூபிலிமை விட மோசமான படத்தைக் காட்டுறாங்களே... மன்சூர் அலிகான் கடும் காட்டம்!

Mansoon Ali Khan Slams Chennai Film

சென்னை சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாவில் ப்ளூ பிலிமை விட மோசமான படங்களைக் காட்டுவதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் கோபமாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.:

சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் புளுபிலிமை விட மோசமான வக்கிரமான திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இது நமது கலாச்சாரத்தை சீர் குலைக்கும்.

கிளிப் என்ற படத்தை பார்த்தேன். அது மோசமான ஆபாச காட்சிகளின் தொகுப்பாக இருந்தது. நம் நாட்டில் தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, மாமனார், சித்தி, சித்தப்பா என கூட்டு குடும்ப உறவு முறைகள் உள்ளன. அவற்றை குழி தோன்டி புதைப்பது போல் இந்த படங்கள் உள்ளன. ஆபாச படங்களை தடுக்க தணிக்கை குழு உள்ளது. இத்தகு மோசமான படங்களை தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிடுவது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே சினிமா மக்களை கெடுக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற ஆபாச படங்களை பார்த்தால் சமுதாயம் குட்டிச் சுவராகி சீர் குலையும். விழாவை முன்னின்று நடத்தும் நடிகை சுகாசினி இது போன்ற கீழ்த்தரமான வக்ரம் நிரம்பிய படங்களை இங்கே கொண்டு வந்து காட்டுவது கண்டனத்துக்குரியது. இப்படங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தப் பட விழாவுக்கு தமிழக அரசு பெரும் நிதியுதவி அளித்து ஊக்கம் வேறு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீதானே பொன்வசந்தம் படம் பெண்கள் படம் - கவுதம் மேனன்

Nep Is Movie Women Says Goutham Menon

'நீதானே என் பொன் வசந்தம்' பெண்களுக்கான படம் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் கூறியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா -சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளி வந்துள்ள படம் ' நீதானே என் பொன் வசந்தம்'. இளையராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

ஆனால் இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கவுதம் மேனன் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "பொதுவாக என் படங்களுக்கு பரவலாக எல்லோருடைய பாராட்டும் கிடைக்கும் , என்னுடைய 12 படங்களையும் இரு பாலினரும் ரசித்தாலும் ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை சற்றே கூடுதலாக இருக்கும.

ஆனால் இது வரை ' நீதானே என் பொன் வசந்தம் ' படம் பார்த்து விட்டு என்னையும் என் குழுவினரையும் பாராட்டுவோர் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்... அது இப்படத்தின் கதாநாயகி நித்யாவின் கதாபாத்திரத்தை நான் படைக்கும் போதே வந்த உணர்வுதான் என்றாலும் இந்த ஆதரவு என்னை மிகவும் உற்சாக மூட்டுகிறது.

பொதுவாக காதல் படமென்றால் அது ஆண்களின் கண்ணோட்டத்தை சார்ந்தே இருக்கும் ஆனால் 'நீதானே பொன் வசந்தம் ' படம் ஆண் -பெண் இருவரின் கண்ணோட்டத்தையும் சார்ந்த படமாக உள்ளது. எனவே பெண்கள் பார்க்க வேண்டிய படம் இது. தயவு செய்து பார்த்து விடுங்கள்," என கேட்டுக் கொண்டுள்ளார் கவுதம்.

 

ஜெயித்துவிட்டால் கர்வம் தலைதூக்கும்… நீயா? நானா? சுவையான விவாதம்

Neeya Naana Discussion About Human Characterization

திரை உலகில் பல தோல்வியை தாங்கிக்கொள்ளும் மனிதர்கள் ஒரே வெற்றியை பெற்றுவிட்டால் அவர்களின் சுபாவமே மாறிவிடும் என்று நீயா? நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தம்பி ராமையா தெரிவித்தார்.

மனிதர்களின் சுபாவம் என்பது சிறுவயதில் இருந்தே தொடர்ந்து வருவது. இந்த சுபாவம் ஒருவருக்கு சாதாரணமாக இருக்கும். அதுவே சிலருக்கு விரும்பத்தாக சுபாவமாக இருக்கும். சிலர் தங்களின் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வார்கள். சிலர் தான் அப்படித்தான் அதை தன்னால் மாற்ற முடியாது என்று கூறுவார்கள். இந்த சுபாவம் பற்றிதான் இந்தவாரம் நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்று ஒரு சிலரும், ஒருவருடைய சுபாவம் தங்களை பாதிக்கிறது என்றும் சிலர் விவாதித்தனர். தங்களின் சுபாவம் பற்றியும், பிறருடைய சுபாவம் எவ்வாறு தங்களை பாதிக்கிறது என்பது பற்றியும் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தம்பி ராமையா தன்னுடைய சுபாவம் பற்றி தெரிவித்தார். அதேபோல் திரைத்துறையில் உள்ளவர்களின் சுபாவமான வெற்றி பெற்ற உடன் வரக்கூடிய கர்வம் பற்றியும் தெரிவித்தார்.

"சீசர் கட்டி வாழ்ந்த மாளிகையை விட மாபெரும் மாளிகையை கட்டி வாழ்ந்து கொண்டிரு...

ஆனால் நீ குடிக்கக் கூடிய ஒவ்வொரு குவளை தண்ணீரிலும் பூமியின் வாசம்தான் இருக்கும்" என்ற உமர்கய்யாம் வரிகளை எடுத்துக்காட்டாக கூறினார்.

கர்வம் தோன்றும் பொழுது நமக்கு முன்னாள் வாழ்ந்து போன மனிதர்களைப் பார்த்தால் அந்த கர்வம் வராது என்றும் கூறினார்.

மரணத்திற்காக காத்திருக்கும் குழந்தைகள்தான் முதியவர்கள். அவர்களை பார்த்து பேசுவது என் சுபாவம் என்றார். வயதானவர்களை அரவணைப்பது என் சுபாவம் என்றும் கூறினார் தம்பி ராமையா.

சிக்கனமான கணவரின் சுபாவத்தை மாற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தார் ஒரு மனைவி. தங்களிடம் வசதி இருக்கிறது அப்படி இருந்தும் ஏன் சிக்கனமாக இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார் அவர். ஆனால் சிக்கனமாக இருப்பது தவறொன்றும் இல்லை. அது என் குடும்பத்திற்கு அவசியமானது. இன்றைக்கு பணம் வந்துவிட்டது என்பதற்காக என்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறினார் அந்த கணவர்.

சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் ஒரு கேள்வியை முன் வைத்தார். அதற்கு பல்வேறு விதமான பதில்கள் கிடைத்தன.

மனிதன் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாது. சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகளைப் போல, வரிக்குதிரைகளின் உடம்பில் உள்ள வரிகளைப் போல அது மரபணுவோட தொடர்புடையது என்றார் ஒருவர். சுபாவத்தை மாற்றிக்கொள்ள நினைத்தால் அது நடிப்பாக மாறிவிடும் என்று கூறினர் மற்றொருவர்.

அதேசமயம் சுபாவத்தை மாற்றிகொள்ள முடியும் என்று சிலர் கூறினர். தங்களின் வாழ்க்கையின் தேவைகளைப் பொருத்து சுபாவத்தை மாற்றிகொள்ளலாம் என்றும் திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் புகுந்த வீட்டிற்காக தங்களின் சுபாவத்தை மாற்றிகொள்கின்றனர் என்று கூறினர்.

சுபாவத்தை மாற்றிக்கொள்ளமுடியும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கவேண்டும் என்று கூறினார் சிறப்பு அழைப்பாளரான மவுனகுரு திரைப்பட இயக்குநர் சாந்தகுமார். எல்லோருக்கும் மாறிக்கொள்ள தன்மை இருக்கிறது. சிலர் மாற்றிக்கொள்வார்கள் என்று கூறிய சாந்த குமார். குழந்தை பருவத்தில் இருந்து பெற்றோர்கள் ஆன பின்னர் சுபாவத்தை மாற்ற முடியும். தன் தாயிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட கோபம் தன் குழந்தைகளின் மீது பாதித்தது என்று கூறினார். அதை தான் படிப்படியாக மாற்றிக்கொண்டதாக கூறினார். இன்றைக்கு எல்லாமே அவசரம் என்கிற சுபாவத்திற்குள் சிக்கியிருக்கிறது என்று கூறினார்.

சுபாவம் என்பது மாறக்கூடியது என்று கூறினார் ராஜேந்திரன் ஐஏஎஸ். தவறுகள் எல்லாமே உணர்ச்சிப்பூர்வமாக நடைபெறக்கூடியதுதான் எனவேதான் மக்களை பாதுகாக்க குறைந்த அளவிலான மக்களே இருக்கின்றனர் என்கிறார். கொஞ்சம் முயற்சி செய்தால் நம்முடைய சுபாவத்தை மாற்றிகொள்ள முடியும் என்றனர்.

சுபாவத்தை கண்டிப்பாக மாற்றிகொள்ள முடியும் என்று கூறினார் உளவியல் நிபுணர் ஷாலினி. ஒருவருடைய மரபணுக்கள்தான் ரசாயன மாற்றங்களின் மூலம் சுபாவம் ஏற்படுகிறது.

நவீன உலகத்தில் தயக்கம், கூச்ச சுபாவம் இன்றைக்கு அதிகம் பேரிடம் இருக்கிறது. ஆபத்து என்று தெரிந்தும் அதிலிருந்து வெளியே வராதவர்களும் இருக்கின்றனர் என்று ஷாலினி கூறினார். சிலருக்கு இயல்பிலேயே மாற்றிக்கொள்ளக்கூடிய தன்மை இருக்கும். அவர்கள் மாற்றிகொள்வார்கள். ஒரு சிலர் அறியாமையினால்தான் தங்களின் சுபாவத்தை மாற்றிக்கொள்வதில்லை என்கின்றனர்.

தன்னைப்பற்றி எதிர்மறையாக நினைப்பதினால்தான் அவர்களால் தங்களின் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. எனவே தங்களால் சாதிக்க முடியும் என்று நேர்மறையாக நினைத்தால் சுபாவத்தை கண்டிப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் உளவியல் நிபுணர் ஷாலினி.

நம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் நமக்கும், சமூகத்திற்கும் நன்மை கிடைக்கிறது எனில் அதை மாற்றிக்கொள்வதில் தவறேதும் இல்லை என்று கூறினர் சிறப்பு அழைப்பாளர்கள்.

 

முன்னணி பாகிஸ்தான் செய்தி இணையதளத்தில் கமலின் விஸ்வரூபம் நியூஸ்

Kamal Vishwaroopam Draws Pakistan Media

சென்னை: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ஒன்று தனது இணையதளத்தில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் அதன் தொழில்நுட்பத்திற்காக பெரிய அளவில் பேசப்படும் என்றார்கள். ஆனால் அதன் டிரெய்லர் பாகிஸ்தான் ஊடகங்களைக் கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் டெய்லிடைம்ஸ். அதன் இணையதளத்தில் இன்று நம் உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் பற்றி செய்தி வந்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் அனைவரையும் கவர்ந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கமல் ஸ்டார் ஆன்லைனுக்கு அளித்த பேட்டியை டெய்லிடைம்ஸ் வெளியிட்டுள்ளது.

கமலின் பேட்டி,

விஸ்வரூபம் சர்வதேச கதை கொண்டது. இந்த படம் சர்வதேச தரத்தை எட்டினால் எங்கள் வேலையை ஒழுங்காக செய்திருக்கிறோம் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 3,000 பிரிண்ட்களில் வெளியாகும் முதல் இந்திய படம் விஸ்வரூபம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி வாழ்க்கை வரலாறு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த பாடம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் சொல்லித் தரப்படுகிறது.

டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற பாடப் பிரிவில் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் என்ற தலைப்பில் இந்த பாடம் வருகிறது.

மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையையும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பையும் ஏற்படுத்துவதற்காக ரஜினி பாடத்தை வைத்துள்ளனர். கடுமையாக உழைத்தால் லட்சியத்தை அடையலாம் என்பதற்கு உதாரணமாக ரஜினியை முன்நிறுத்தியுள்ளனர்.

பெங்களூர் - திருப்பத்தூர் மார்க்கத்தில் ஒரு கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ரஜினி. தனது 26 வயதில் சென்னை வந்து பட வாய்ப்புகள் தேடினார். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். பிறகு படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.

ரஜினி பட்ட கஷ்டங்கள், போராட்டம், சினிமா பிரவேசம், வாங்கி குவித்த விருதுகள், நல்ல பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்து விஷயங்களும் பாட புத்தகத்தில் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன.

6-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தப் பாடம் வைக்கப்பட்டுள்ளது.

 

நான் நடிகர் விஜய் ரசிகை… பின்னணிப் பாடகி ராகினிஸ்ரீ

Music Is My Life Says Raginisri

ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொகுத்து வழங்கிய ‘என்னோடு பாட்டுப் பாடுங்கள்' நிகழ்ச்சியில் அறிமுகமாகி, விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008ல் பிரபலமானவர் ராகினிஸ்ரீ. இன்றைக்கு திரைப்படப் பின்னணிப் பாடகியாக உயர்ந்துள்ள அவர், துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு குரல் கொடுத்துள்ளார். தன்னுடைய இந்த பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

டி.வி. சேனல்கள் நடத்தின இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். பாராட்டுகள், அங்கீகாரம்னு என்னை அறியாம, என் வாழ்க்கை இசை உலகத்துக்குள்ள வேகமெடுக்க ஆரம்பிச்சது.

திடீரென்று யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘காதல் டூ கல்யாணம்' படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி படத்தில் கதாநாயகி காஜல் அகர்வாலுக்கு பின்னணி பேச வாய்ப்பு கிடைத்தது.

படம் பார்த்த எல்லாரும் ஹீரோயின் குரல் நல்லாருக்குன்னு பாராட்டறாங்க. அத்தனை கிரெடிட்டும் முருகதாஸ் சாருக்குத் தான்...'' என்கிறார் ராகினி. திரைப்படப்பாடல், பின்னணிக்குரல் என்று அசத்துகிற ராகினிஸ்ரீ நடிகர் விஜய்யின் ரசிகையாம். பிரசாத் ஸ்டூடியோவில் ‘துப்பாக்கி' பட பிரமோஷன் நடந்தபோது அங்கு சென்ற ராகினி ஸ்ரீயை விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். அப்போது விஜய், காஜலோட நடிப்புக்கு உங்க குரல் கரெக்ட்டாக மேட்ச் ஆயிருந்தது' என்று பாராட்டி கை கொடுத்தாராம். அப்போது விஜய் உடன் போட்டோ எடுத்த ராகினிஸ்ரீ, அது கனவா, நனவான்னு இன்னும்கூட என்னால நம்ப முடியலீங்க என்கிறார்.

எப்படியோ தமிழ் திரைப்படத்துறைக்கு ஆண்ட்ரியா, சின்மயி வரிசையில் இன்னும் ஒரு பாடகி, ப்ளஸ் பின்னணி குரல் கிடைத்திருக்கிறது.

 

விஜய்க்கும், கரீனா கபூருக்கும் என்ன சம்பந்தம்?

What S Common Between Vijay Kareena

சென்னை: இளைய தளபதி விஜய்க்கும், பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.

விஜய் நடிக்க வந்தபோது அவரது புகைப்படத்தை வெளியிட ஒரு நாளிதழ் மறுத்ததாம். இந்த ஆளெல்லாம் நடிக்க வந்துட்டார் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர். தன்னை இகழ்ந்தவர்கள் முன்பு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு விஜய் நடித்தார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் இளைய தளபதியாக அமர்ந்தார்.

விஜய் எல்லாம் பெரிய ஹீரோவாக முடியாது என்று கூறியவர்கள் கண் முன்னே அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இன்று விஜயுடன் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் போட்டி போடும் நிலை உள்ளது.

விஜயக்கு எப்படி சினிமா பின்னணி உள்ளதோ அதே போன்ற பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கும் உள்ளது. கரீனா நடிக்க வந்த புதிதில் அவருடைய படங்களில் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ரியாக்ஷன், டான்ஸ் ஸ்டெப் இருக்கும். இந்த கரீனா நடிக்க லாயக்கில்லை, சீக்கிரம் மூட்டையை கட்டிவிடுவது நல்லது என்று பாலிவுட்டில் உள்ள சிலர் விமர்சித்தனர்.

கரீனா பாலிவுட்டில் இருந்து ஓடுவதற்கு பதிலாக தனது நடிப்புத் திறனை மேம்படு்த்தி இந்தி திரையுலகில் நம்பர் 1 நாயகியானார். கோடி, கோடியாக கொட்டி கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு தற்போது உள்ளார் கரீனா. அவரை விமர்சித்தவர்கள் தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தெரியாமல் விழிக்கின்றனர்.

இப்படி தங்களை லாயக்கே இல்லாதவர்கள் என்று நினைத்தவர்கள் முன்பு சாதித்தவர்கள் விஜயும், கரீனாவும்.