நடிகைகள் திருமணம் செய்வது குற்றமா?: கரீனா கபூர் கோபம்

Getting Married Not Crime A Actress Karina Kapoor   

ஒரு நடிகை திருமணம் செய்து கொள்வது குற்றமல்ல என்று ஹிந்தி திரைப்பட நடிகை கரீனா கபூர் கூறினார். கடந்த ஆண்டு ஹிந்தி நடிகர் சைப் அலி கானை மணந்த அவர், திருமண வாழ்வையும், வேலையையும் தொடர்படுத்திக் கொள்ள கூடாது என்று குறிப்பிட்டார்.

மும்பையில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய கரீனா, " ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொண்டாலோ, அவளை, அவள் கதாபாத்திரத்தை திரையில் யாரும் ரசிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. இது இரண்டுமே (திருமணம் மற்றும் திரைபடங்கள்) வெவ்வேறானவை. இரண்டையும் இணைத்துப் பார்க்க கூடாது. எதுவானாலும் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் குற்றமல்ல" என்றார்.

இதற்கு அவர் உதாரணம் கூறும் போது, " தற்போது இதை ஒரு பிரச்னையாக மக்கள் பேசுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில் வஹிதா, ஷர்மிலா போன்ற நடிகைகளும் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். எனவே இது வழக்கமான நடைமுறை தான்" என்று கூறினார்.

 

அமெரிக்காவின் ஏபிசி சேனலில் 'கல்யாண சமையல் சாதம்' சினிமா ஷோ!

Kalyana Samayal Saadham Feature Us Tv Show

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும், அந்தப் படத்தை இயக்கிய அருண் வைத்யநாதனும் இணைந்து 'கல்யாண சமையல் சாதம்' படத்தை தயாரித்து வருகின்றனர்.

பிரசன்னா, லேகா வாஷிங்க்டன், டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் மற்றும் கீதா ரவிஷங்கர் நடித்துவரும் இத் திரைப்படத்தை, சமீபத்தில் அமெரிக்காவின் முதன்மை தொலைக்காட்சி நிறுவனமான ஏ.பி.சி தனது ‘Born To Explore' நிகழ்ச்சிக்காக படம் பிடித்தனர்.

ரிச்சர்ட் வீஸ் ஏ.பி.சி நிறுவனத்திற்காக தயாரிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 2012ம் ஆண்டில் எமி விருதுக்காகப் போட்டியில் பங்கு பெற்ற, ஐந்தரை கோடி அமெரிக்கர்களை சென்றடையும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பற்றி ஒரு நிகழ்ச்சி எடுக்க வேண்டும் என்றவுடனே இந்தியாவில் வண்ணமயமாக நடக்கும் திருமணத்தைப் பற்றி எடுக்கப்படும் நகைச்சுவைப் படமான "கல்யாண சமையல் சாதம்" குழுவினரைப் பேட்டி காணலாம் என்று ரிச்சர்டுக்கு எண்ணம் தோன்ற, அதற்கு தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்களாம்.

படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா இதுபற்றி கூறுகையில், "இந்தியத் திருமணங்களையும், அதில் இருக்கும் பல வண்ணமயமான வழிமுறைகளையும் நான் விளக்கி சொல்ல, ரிச்சர்டும் அவரது குழுவினரும் ஆர்வமாக அதைப் படம் பிடித்தனர்.

படத்தின் ஒரு நிமிட ஒளிக்கோப்பை அவர்களிடம் காட்டிய போது, அவர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. எங்கள் குழுவினருக்கு அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உற்சாகமூட்டியதாக இருந்தது", என்றார்.

இந்த நிகழ்ச்சி நேஷனல் ஜியாகிராபி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது இன்னொரு கூடுதல் தகவல்.

கல்யாண சமையல் சாதத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, அரோரா எனும் புதிய இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார்.

 

'மாட்டை அடிப்பது போல நடிகர் நடிகைகளை அடித்து உதைக்கும் பாலா!' - ஒரு வீடியோ

Bala S Torture Over Artists Paradesi Shooting
தேனி காடு... தேயிலைத் தோட்டம்... பரதேசி ஷூட்டிங்... டெரர் பாலா, கையில் பிரம்போடு போய் நடிகை ஒருவரை மடேர் மடேர் என்று மாட்டை அடிப்பது போல அடிக்கிறார்... ஒரு சீனியர் நடிகரை காலில் எத்துகிறார்... மீண்டும் அடி.. உதை... கன்னா பின்னாவெனத் திட்டுகிறார்...

அடுத்தடுத்த காட்சிகளிலும் இந்த அடி உதை தொடர, ஈனஸ்வரத்தில் பின்னணி இசை.

இதெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, ஊடகங்களுக்கும் தரப்பட்டுள்ளது.

என்ன இதெல்லாம்..?

பரதேசியில் எல்லாமே எப்படி நிஜமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட Reality Teaser- யாம்!

பரதேசி ஷூட்டிங்கின்போது பாலா யாரையுமே திட்டவில்லை.. அடிக்கவில்லை என்றெல்லாம் அதன் ஹீரோ, ஹீரோயின்கள் தொலைக்காட்சிகளில் பேட்டிகளாய் கொடுத்துக் கொண்டிருக்க, இங்கு வீடியோவிலோ அதற்கு நேர் மாறாக, டெரரான காட்சிகளை தந்து, ஒளிபரப்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

என்னதான் நடிப்பு, ஷூட்டிங், சும்மனாங்காட்டியும் என்று சொன்னாலும், இந்தக் காட்சிகளைப் பார்க்கும் யாரும் நிச்சயம் பாலா ஒரு வார்த்தையாவது திட்டாமல் போக மாட்டார்கள்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் பட்ட கொடுமையை அப்படியே ஷூட்டிங்கில் நடிகர் - நடிகைகளுக்கு டெமோ காட்டியிருக்கிறார் பாலா!!

 

தலைவா Vs தலைவன்!

Thalaivaa Vs Thalaivan    | தலைவன்  

தலைவா என்ற தலைப்பை விஜய் அண்ட் விஜய் தங்கள் படத்துக்கு சூட்டும்போதே, 'இந்தப் படத்துக்கும் தடை கேட்டு வழக்கு வருவது நிச்சயம்' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அது நடந்துவிடும் போலிருக்கிறது!

ஆம்.. இந்தப் படத்துக்கு தலைவா என்ற தலைப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரத் தயாராகிறார் தலைவன் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாஸ்கரன் (ஜெஜெடிவி).

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது தலைவன் படத்தை ஆரம்பித்துவிட்டார் பாஸ்கரன். அது பத்திரிகைச் செய்தியாகவும் வந்துவிட்டது. இரண்டு விஜய்களுக்குமே அது நன்றாகத் தெரியும்.

இருந்தாலும் தலைவா என்று தலைப்பு வைத்துவிட்டனர். ஏற்கெனவே, இயக்குநர் ஏஎல் விஜய் படங்களும், நடிகர் விஜய் படங்களும் தலைப்பு விஷயத்தில் நீதிமன்றப் படி ஏறுவது வழக்கமாகிவிட்டன.

விஜய்யின் காவலன், துப்பாக்கி போன்ற படங்களுக்கு நடந்த தலைப்பு தகராறு ரொம்ப பிரசித்தம். குறிப்பாக துப்பாக்கி Vs கள்ளத் துப்பாக்கி கன்னித்தீவு கதை மாதிரி தொடர்ந்து, கடைசியில் காம்ப்ரமைசில் முடிந்தது.

அதேபோல, ஏஎல் விஜய் இயக்கிய தெய்வத் திருமகன், தாண்டவம் படங்களுக்கும் தலைப்பு சண்டை நடந்தது நினைவிருக்கலாம்.

இப்போது தலைவா Vs தலைவன் சண்டை தொடங்கப் போகிறது. கோர்ட்டில் இது எத்தனை வாய்தா வாங்கப் போகிறதோ!

 

இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அக்காவான சாயா சிங்

Chaya Singh Is Udhayanidhi Stalin Sister

சென்னை: மன்மத ராசா என்ற ஒற்றை பாட்டால் தமிழகத்தில் படு பிரபலமான சாயா சிங் தற்போது இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அக்காவாக நடிக்கிறாராம்.

திருடா திருடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் சாயா சிங்.  அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அவர் மன்மத ராசா பாட்டுக்கு போட்ட ஆட்டம் இருக்கிறதே. அதை தமிழக மக்களால் இன்றும் மறக்க முடியாது. அப்படி ஒரு ஆட்டம் போட்டிருந்தார். பொண்ணு நல்லா வரும் என்று நினைத்தால் பாவம் ஏனோ வாய்ப்பின்றி தவிக்க வேண்டியதாகிவிட்டது.

பின்னர் சின்னத்திரைக்கு சென்ற சாயா சிங் அங்கு ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபன் என்ற படத்தின் மூலம் பெரியதிரைக்கு மீண்டும் வந்தார். வாலிபனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தோடு அவர் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

படத்தில் அவர் ஒன்றும் உதயநிதிக்கு இன்னொரு ஜோடியல்ல, அக்கா. சாயா சிங்கை இப்படி அதற்குள் அக்கா வேடத்திற்கு அனுப்பி விட்டார்களே...