மாமல்லபுரம் கடலில்... சோனாவும் பிரேம்ஜியும் குளித்தபோது...!

Sona Drown Mamallapuram Sea

நடிகை சோனா மகாபலிபுரம் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அலையில் இழுத்துச் செல்லப்பட, கூடவே குளித்த பிரேம்ஜியும் குழுவினரும் ஓடிப்போய் காப்பாற்றினாராம்.

ஒன்பதுல குரு என்ற படத்துக்காகத்தான் இப்படி இருவரும் ஜலக்கிரீடை நடத்திக் கொண்டிருந்தார்களாம், இயக்குநர் பிடி செல்வகுமார் மேற்பார்வையில்.

அப்போது இருவரும் அலையில் சிக்கினார்களாம். சோனாவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தபடி அலற, படக்குழுவும் பிரேம்ஜியும் கடலுக்குள் பாய்ந்து சோனா தலைமுடியை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்தார்களாம்.

உயிர் பிழைத்தது குறித்து சோனா கூறுகையில் (சத்தியமா இது பப்ளிசிட்டி இல்லையாங்க!!)," ஒன்பதுல குரு படத்தில் நான் குளிப்பது போன்றும், என்னோடு நடிப்பவர்கள் கடலில் விழுந்து விடுவது போன்றும் காட்சிகளை எடுத்தனர். இயக்குனரிடம் என்னை இன்சூரன்ஸ் செய்து உள்ளீர்களா என்று அப்போது வேடிக்கையாக கேட்டபடி நடித்துக் கொண்டு இருந்தேன்.

திடீரென என்னுடன் நடித்தவர்கள் கடலில் விழுவதற்கு பதிலாக தவறிப் போய் நான் விழுந்துவிட்டேன். பயந்துபோய் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடினேன்.

படப்பிடிப்பு குழுவினர் வந்து மீட்டனர். இது எனக்கு பயங்கரமான அனுபவமாக இருந்தது," என்றார்.

 

தீபாவளி ரேஸில் சிம்பு நடிக்கும் போடா போடி!

Poda Podi Joins Deepavali Race   

சிம்பு நடிக்கும் போடா போடி படம் கடைசி நேரத்தில் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது.

சிம்பு - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த படம் இந்த போடா போடி.

சில வாரங்களுக்கு முன் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். ஆனால் பின்னர் டிசம்பருக்கு மாற்றப்பட்டதாகக் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, அஜந்தா மற்றும் அம்மாவின் கைப்பேசி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக துப்பாக்கி 9-ம் தேதியே ரிலீசாகி, கல்லாவை சுருட்டும் முயற்சியில் இருப்பது தெரிய வந்தது.

உடனே நடிகர் சிம்பு தனது போடாபோடியையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளார். தியேட்டர் புக்கிங், டிக்கெட் முன்பதிவு என செம வேகமெடுத்துள்ளது போடா போடி. அதுவும் துப்பாக்கி வெளியாகும் ஒன்பதாம் தேதியே வெளியிடுகின்றனர்.

இதனால் விஜய் - சிம்பு என புதிய போட்டி எழுந்துள்ளது.

 

அன்னை தெரசாவை அவமதிக்கும் அசைவம் படத்தை தடை செய்யக் கோரிக்கை!

Appeal Ban Asaivam Movie   

சென்னை: அன்னை தெரசாவை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ள அசைவம் படத்தை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசா பேரவை தலைவரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜி.கே.தாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்னை தெரசா ஜாதி, மதம், மொழிகளை கடந்து மனித குலத்துக்கு சேவை செய்தார். அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருதும் உலக நாடுகள் நோபல் பரிசும் அளித்தன.

அவரது அப்பழுக்கற்ற பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்னை தெரசா இன்டர்நேஷ்னல் நிறுவனம் அசைவம் என்ற ஆபாச படத்தை வெளியிட்டு உள்ளது.

இது தெரசா மேல்பற்று கொண்டவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. அன்னை தெரசா பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் அசைவம் திரைப்படத்தை அரசு தடை செய்ய வேண்டும், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

உயரத்திலிருந்தது போதும், வைரமுத்துவை கீழே இறக்குங்கப்பா..! - அதிர வைத்த அமீர்

சென்னை: கவிஞர் வைரமுத்து ரொம்ப நாட்களாக உயரத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். தயவுசெய்து யாராவது அவரை கீழே இறக்குங்கள் என்றார் இயக்குநர் அமீர்.

ருத்ரன் இயக்கியுள்ள ‘வெற்றிச்செல்வன்' பட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து மகன் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

ameer wants depromote vairamuthu
Close
 
இந்த விழாவில் பங்கேற்ற அமீர் பேசுகையில், "தமிழ் சினிமாவில் உயரத்துல இருக்கிற வைரமுத்து ரொம்ப காலமா அந்த சீட்லயே உக்காந்துக்கிட்டிருக்கார். அவரை யாராலயும் இறக்க முடியலை. அவராவும் இறங்க மாட்டேங்கறார்.

இப்ப மதன் கார்க்கியோட பாடல்களைக் கேட்டதும் வைரமுத்துவை இறக்கிவிட சரியான ஆள் இவர்தான்னு தோணுது. எனக்கு வைரமுத்துவோட சேர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா திருத்தம் தேவைப்பட்டா அவர்கிட்ட எப்படி அதைக் கேட்டு வாங்கறது.. அவர்தான் அதை ஏத்துக்குவாரா?

அதனால அவர்கிட்ட நிறைவேறாத ஆசையை இப்ப கார்க்கியோட வேலை செய்து தீர்த்துக்கலாம்னு தோணுது," என்று பேசிக் கொண்டே போக, சிரிப்புடன் தலை கவிழ்ந்தார் மதன் கார்க்கி.

வைரமுத்துவை இறக்க மதன் கார்க்கி எதற்கு.. நா முத்துக்குமாரெல்லாம் தெரியலியா அமீர்? சொல்லப் போனால் இன்றைய தேதிக்கு வைரமுத்துவை ரொம்ப வேகமாக ஓவர் டேக் பண்ணிக் கொண்டிருப்பவர் முத்துக்குமார்தானே!

 

ரஜினி படத்துக்காக தமிழ் கற்கிறார் தீபிகா

Deepika is learning tamil for Rajini's movie சென்னை: ரஜினி படத்துக்காக தமிழ் கற்கிறார் தீபிகா படுகோன். மும்பை, கேரளா நடிகைகள் தமிழ் படங்களில் அதிகளவில் நடிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் நடிப்பதோடு சரி. டப்பிங் பேசுவதற்கு வேறு ஆளைத்தான் தேட வேண்டி இருக்கிறது. தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுக்கு பெரும்பாலும் வேறு நடிகைகள் அல்லது பாடகி, டப்பிங் பேசுபவர்கள் குரல் கொடுக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமன்னா தனது கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முடிவு செய்துள்ளார். மும்பை இறக்குமதியாக ரஜினியின் 'கோச்சடையான் படத்தில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன்.

பெங்களூரை சேர்ந்த இவர் தமிழில் முதல்படத்தில் நடித்தபோதும் தனது வேடத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேச முடிவு செய்துள்ளார். 'கோச்சடையான்Õ பட இயக்குனர் சவுந்தர்யாவை சமீபத்தில் தொடர்பு கொண்ட தீபிகா தனது கதாபாத்திரத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேச விரும்புவதாக தெரிவித்தார். அதை சவுந்தர்யா ஏற்றுக்கொண்டார். இதையடுத்து படத்தில் இடம்பெறும் வசனங்களை கேட்டு வாங்கி பயிற்சி எடுத்து வருகிறார். தீபிகா டப்பிங் பேச உள்ளதை பட குழுவில் உள்ளவர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் நடைமுறையில் வழக்கமாக பேசும் பாணியில் இல்லாமல் இலக்கிய நயத்துடன் அமைந்துள்ளது. ஆனாலும் அதை சவாலாக ஏற்று தீபிகா வசனம் பேச முடிவு செய்திருக்கிறாராம்.
 

நிலம் புயலில் ஷூட்டிங் நடத்தினார் மணிரத்னம்

Mani ratnam shot the movie in nilam storm சென்னை: நிலம் புயலில் 'கடல் படத்தின் ஷூட்டிங் நடத்தினார் மணிரத்னம். தமிழகத்தை நிலம் புயல் கடந்த புதன் கிழமை மிரட்டியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சினிமா ஷூட்டிங் மற்றும் சில தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இயக்குனர் மணிரத்னம் 'கடல் என்ற படத்தை இயக்கி வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் கிளைமாக்ஸுக்காக புயல் காட்சி படமாக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். இந்நிலையில் நிலம் புயல் வீசியதை பயன்படுத்திக்கொண்டார். புயல் காற்றால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்ட காசிமேடு பகுதிக்கு கேமராமேன் ராஜீவ் மேனனுடன் சென்ற மணிரத்னம் கொட்டும் மழையில் கடற்கரை பகுதியில் வீசிய புயல் மற்றும் அலையின் சீற்றத்தை படமாக்கினார். ஒரு மணிநேரம் ஷூட்டிங்  நடந்தது. இதுபற்றி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் 'புயல் வீசிய நேரத்தில் கடல் பட ஷூட்டிங் கில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம்Õ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

கிசு கிசு - அம்மா நடிகையின் வருத்தம்

Kodambakkam Kodangi நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

தாடிக்கார நடன இயக்கம் கோலிவுட், பாலிவுட் இண்டஸ்ட்ரில வேலை செய்றதுக்கு டபுள் டீம் வச்சிருக்காராம்... இருக்காராம்... கோலிவுட் டீம்ல ஒர்க் பண்றவங்க சவுத் மொழிகள்ல மட்டுமே கூட இருக்க முடியுமாம். பாலிவுட்டுன்னு புறப்பட்டுட்டா அங்க உள்ள இன்னொரு உதவியாளருங்க டீமோட ரெண்டற கலந்துடுவாராம் நடன இயக்கம். எங்களையும் பாலிவுட்டுக்கு கூட்டிட்டு போனா சம்பளமாவது கூட கிடைக்குமேன்னு உதவியாளருங்க ஏங்குறாங்களாம்... ஏங்குறாங்களாம்...

சுதாவான அம்மா நடிகைக்கு மல்லுவுட் மொழி நல்லா பேச வருமாம்... வருமாம்... ஆனா சமீபகாலமா வருத்தமா இருக்காராம். அதுக்கு காரணம் மல்லுவுட் படங்கள்ல யாரும் அவரை நடிக்க கூப்பிடுறதில்லையாம். சமீபத்துல கேரளாவுல நடந்த பங்ஷன்ல பரதநாட்டியம் ஆடினவர் தன்னோட ஆதங்கத்த வெளிப்படையா சொன்னாராம். மல்லுவுட்ல மொழி தெரியாதவங்க எல்லாம் நடிக்க¤றாங்க. ஆனா மொழி தெரிஞ்ச எனக்கு யாரும் சான்ஸ் தர்றதில்லன்னு சொல்றாராம்... சொல்றாராம்...

வேல்டு ஹீரோகிட்ட உதவி இயக்கமா இருந்தவருதான் கள்ள கன் படத்த தயாரிக்க¤றாராம்... தயாரிக்க¤றாராம்... 'இயக்கறத விட்டுட்டு ஏன் தயாரிப்பாளரா மாறீனிங்கன்னு கேட்டா கதை கதையா சொல்றாராம். 'ஸ்கிரிப்ட்டை எடுத்துட்டு ஹீரோங்ககிட்ட கதை சொல்லப்போனா, தயாரிப்ப பாருங்கன்னு அனுப்பறாங்க. தயாரிப்ப பாக்கப்போனா ஹீரோவ பாருங்கன்னு அனுப்பறாங்க. ரெண்டுபேருக்கும் இடைல உதவி இயக்குனருங்க பந்தாடப்படுறாங்க. அந்த அனுபவம்தான் என்ன தயாரிப்பாளராக்கிடுச்சின்னு புலம்புறாராம்... புலம்புறாராம்...
 

சம்பளத்தை விட்டுக்கொடுத்த தொழிலாளர்கள் : இயக்குனர் உருக்கம்

 The labours cimmited salary சென்னை: ஷூட்டிங் நேரம் முடிந்தும் பணியாற்றிய தொழிலாளர்கள், டெக்னீஷியன்கள் சம்பளத்தை விட்டுகொடுத்ததாக கூறினார் இயக்குனர். இது பற்றி 'சத்திரம் பேருந்து நிலையம் பட இயக்குனர் ரவிபிரியன் கூறியதாவது: படித்த இளைஞர்கள் டாஸ்மாக்கில் வேலை செய்கின்றனர். அவர்களை இந்த சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது என்ற கருவுடன் ஹீரோவின் காதல், சபதம் ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இரவு காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் எடுக்க முடிவு செய்து பட குழுவுடன் சென்றோம். அங்கு அரசியல் பிரமுகர் ஒருவரின் வருகையால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஷூட்டிங் நடத்த அனுமதிக்கவில்லை.

சில நிமிடங்களில் முடித்துவிடுகிறோம் என்ற சொன்னதையடுத்து அனுமதித்தனர். சொன்ன நேரத்துக்குள் முடிக்காமல் போனால் ஊழியர்களுக்கு டபுள் சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கேமரா மேன் விரைவாக செயல்பட்டார். 4 நிமிட காட்சியை ஒரே டேக்கில் எடுத்தோம். ஆனாலும் சில நிமிடங்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருந்தது. சிறிய பட கம்பெனி என்பதால் டபுள் சம்பளம் கேட்காமல் தொழிலாளர்களும், டெக்னிஷியன்களும் விட்டுக்கொடுத்தனர். ரோஷன் ஹீரோ. டுவிங்கிள், சுவாதி ஹீரோயின். படத்தில் டுவிங்கிள் ஏற்கும் பாத்திரத்துக்கு சாதனா என பெயரிடப்பட்டது. அந்த கேரக்டர் பிடித்துவிடவே அதையே தனது பெயராக மாற்றிக்கொள்வதாக கூறினார். பாண்டியராஜன், நளினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரவிசுந்தரம் ஒளிப்பதிவு. ஸ்ரீராம் இசை.
 

சேவை கட்டணத்தை உயர்த்துக: கேரளாவில் 'ஏ' கிளாஸ் தியேட்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருவனந்தபுரம்: சேவை கட்டணத்தை உயர்த்தக் கோரி கேரளாவில் ஏ கிளாஸ் தியேட்டர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.2 சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வு மற்றும் இதர செலவுகள் காரணமாக சேவை கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும் என்று ஏ கிளாஸ் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.

இதையடுத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் இந்த சங்கத்தைச் சேர்ந்த 360 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நேற்று வெளியாக இருந்த 4 படங்கள் வெளியாகவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் பி கிளாஸ் தியேட்டர்கள், மல்டி பிளாக்ஸ் தியேட்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த தியேட்டர்களில் வழக்கம் போல் படங்கள் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கமல் பிறந்த நாள்: ரசிகர்கள் உடல் தானம், ரத்ததானம்... 4 மாநிலங்களில் நடக்கிறது!

Fans Celebrate Kamal Birthday 4 Sta

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்கிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இது தொடர்பாக அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு விடுத்த அறிக்கை:

நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, அவருடைய 58-வது பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழாக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இம்மாதம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் நடக்கிறது.

சென்னையில், குரோம்பேட்டை சைல்டு கேர் பவுன்டேஷன் குழந்தைகளுக்கு உணவு மற்றும் 58 மரக்கன்றுகள் நடுவதுடன், காலை 8 மணிக்கு விழா தொடங்குகிறது.

மாலை 5 மணி வரை 12 இடங்களில், பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில், அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை ரமேஷ், ஜெயவேல், கமால், கிருபா, துரை, வட சென்னை மாறன், பாலா, காந்திபுரம் மணிவண்ணன், ஆவடி பாபு, ரூபலிங்கம் ஆகியோர் செய்து இருக்கிறார்கள்.

இதுபோல் தஞ்சை, காஞ்சிபுரம், வால்பாறை, கோவை, திருப்பூர், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களிலும் மதிய உணவு, வேட்டி-சேலை, குழந்தைகள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், ஆம்புலன்ஸ் வசதி போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

 

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடியுரிமை!

Aishwarya Rai Bachchan Receives Second   

மும்பை: நடிகை ஐஸ்வர்யாராயின் கலைச் சேவைக்குப் பரிசாக பிரான்ஸ் நாட்டின் கவுரவக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாள் விழாவில் இந்த விருதினை மும்பையில் வழங்கினர் பிரான்ஸ் அதிகாரிகள்.

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று தன் 39 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த விழாவில் ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் பிரான்கோயிஸ் ரிச்சியரும் பங்கேற்றார்.

அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸின் இரண்டாவது உயர்ந்த விருதான கவுரவ குடியுரிமையை வழங்குவதாக பிரான்கோயிஸ் ரிச்சியர் அறிவித்தார்.

இந்த விருது குறித்து அமிதாப் பச்சன் கருத்து தெரிவிக்கையில், ‘‘ஐஸ்வர்யா ராய் பிறந்த நாள் கொண்டாடும் நேரத்தில் அவரை பிரான்ஸ் நாடு அங்கீகரித்து கவுரவித்து உள்ளது. அவரது கலை சேவையை பாராட்டி விருது வழங்கி உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டின் மிக உயரிய ‘கவுரவ குடியுரிமை' விருதை எனக்கு வழங்கியது. தற்போது எங்களது குடும்பத்தை 2-வது முறையாக அங்கீகரித்து பிரான்ஸ் நாடு கவுரவித்து உள்ளது,'' என்றார்.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் தனது ஒரு வயது பெண் குழந்தை ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.