இளையராஜா இசையில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் இளவரசி வேடத்தில் ஸ்ரேயா!

ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. கவிஞர் வாலி மறைவதற்கு முன்பே எழுதிய பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

சாதிகளற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி, பார்ப்பணர் என்ற பெயரில் நிலவிய பாகுபாட்டுக்கு எதிர்ப்பு என புரட்சியாளராய் வாழ்ந்த மகான் ஸ்ரீராமனுஜர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இந்தப் படத்தை இயக்குகிறார் ரவி.வி சந்தர். இதில் டெல்லியை ஆண்ட பாதுஷாவின் மகளான பீவி நாச்சியார் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.

இளையராஜா இசையில் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் இளவரசி வேடத்தில் ஸ்ரேயா!

இவருடன், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, டெல்லிகணேஷ், ஸ்ரீமன் என ஒரு அனுபவம் வாய்ந்த நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.

இளையராஜா - வாலி

மறைந்த கவிஞர் வாலியின் பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஹைகிரீவா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பாக டி.கிருஷ்ணன், பிஆர் சேதுராமன் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்காக தற்போது ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ‘சந்திரா' படத்தில் மகாராணி சந்திராவதியாக நடித்த ஸ்ரேயா, தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் ‘ஸ்ரீ ராமானுஜர்' என்ற புராணப்படத்தில் நடிக்கிறார். பாலாவின் புதுப் படத்தில் கரகாட்டக் கலைஞராகவும் நடிக்கிறார்.

 

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

ஆரோகணம் படத்துக்குப் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் புதிய படம் இயக்குகிறார்.

இந்தப் படத்தை ஆரோகணம் படத்தைத் தயாரித்த ஏவி அனூப்பே தயாரிக்கிறார்.

குறைந்த செலவில் ஆரோகணம் என்ற படத்தை எடுத்து, நிறைந்த லாபம் பார்த்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

அதே வழியில் இப்போது இரண்டாவது படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தின் நாயகியாக நடிப்பவர் பியா பாஜ்பாய். கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர்.

நாயகன் மற்றும் தலைப்பை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, மேட்லி புளூஸ் இசையமைக்கிறார். லூசியா படத்தின் நாயகி ஸ்ருதி ஹரிஹரன் இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார்.

தம்பி ராமய்யா உள்பட முன்னணி கலைஞர்கள் நடிக்கின்றனர்.

ஆரோகணம் படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படம்!

இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கும்பகோணம், கோவை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

 

நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளாரா?

மும்பை: இந்தி நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை வித்யா பாலன் யுடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வித்யா கடந்த சில வாரங்களாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி செல்கிறாராம். அவருடன் சில சமயம் அவரது குடும்பத்தார் செல்கிறார்களாம்.

நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளாரா?

வித்யா எதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு வருகிறார் என்பதை மருத்துவமனை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. வித்யாவும் இது குறித்து வாய் திறக்கவில்லை. மேலும் அவர் தன்னுடைய ஷாதி கி சைட் எபெக்ட்ஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் டிமிக்கி கொடுக்கிறார்.

நடிகை வித்யா பாலன் கர்ப்பமாக உள்ளாரா?   

இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் வித்யா கர்ப்பமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை அவரே வாய் திறந்து கூறினால் தான் உறுதிப்படுத்த முடியும்.

 

எடுத்து வைங்க ரூவா 25 லட்சத்தை..! - ஆன்ட்ரியா பிடிவாதம்

எடுத்து வைங்க ரூவா 25 லட்சத்தை..! - ஆன்ட்ரியா பிடிவாதம்

சென்னை: சொந்த குரலில் பாடி, அந்த பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட நான் ரெடி... ஆனால் சம்பளம் ரூ 25 லட்சம் தந்துவிட வேண்டும் என்ற புதிய முடிவுக்கு வந்திருக்கிறார் ஆன்ட்ரியா.

பிரசன்னா, தனுஷ், கார்த்தி போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த ஆன்ட்ரியா, கமலுடன் ‘விஸ்வரூபம்' படத்தில் நடித்த பின் தன் மார்க்கெட் உயரும், சம்பளத்தையும் ஏற்றிவிடலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் அவர் நினைப்பில் விழுந்தது மண். புதுப்படங்களில் இரண்டாவது ஹீரோயினாகக் கூட கேட்டு வரவில்லை யாரும்.

அடுத்து வரவிருக்கும் கமலின் விஸ்வரூபம்-2' படத்தை எதிர்பார்க்கிறார். காரணம் இதில் அவருக்கு பிரதான நாயகி வேடமாம். எனவே இந்தப் படம் வந்தால் சம்பளத்தை கணிசமாக உயர்த்தும் முடிவில் இருக்கும் அவர், அதற்கு முன்னோட்டமாக ஒருவேலை பார்த்திருக்கிறார்.

‘பிரம்மன்' என்ற படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு ஆன்ட்ரியா ரூ.25 லட்சம் கேட்டு, அதைப் பெற்றும்விட்டார்.

ஆரம்பத்தில், 'சம்பளம் ரொம்ப அதிகமாக இருக்கிறதே?' என்று தயாரிப்பாளர் கேட்டுப் பார்த்திருக்கிறார். உடனே ஆன்ட்ரியா, ‘‘அந்த பாடலையும் நானே பாடி விடுகிறேன். பாட்டு, நடனம் இரண்டுக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் கொடுங்கள்'' என்றாராம். தயாரிப்பாளருக்கு அவ்வளவு பணம் கொடுக்க விருப்பம் இல்லை.

ஆனால், அந்த பாடல் காட்சியில் ஆன்ட்ரியா ஆடினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர், ஆன்ட்ரியாவுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தாராம்.

அட இந்த ரூட்டு கூட நல்லாருக்கே என இதையே தொடர முடிவு செய்துவிட்டாராம் ஆன்ட்ரியா.

 

இப்படி 'தல' நாயகி சம்பளம் உயர்ந்திடுச்சே: கவலையில் 'தளபதி' நாயகிகள்

சென்னை: பொங்கலுக்கு ரிலீஸான தல நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையின் சம்பளம் உயர்ந்துவிட்டதை நினைத்து தளபதி படத்தில் நடித்த 2 நாயகிகள் கவலையில் உள்ளார்களாம்.

கோலிவுட்டில் பறவை பெயர் கொண்ட படம் மூலம் பிரபலமான மில்க் நடிகை தளபதி நடிகரின் லீடர் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். படம் மட்டும் ஹிட்டாகட்டும் அடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகை நான் தான் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால் லீடர் படம் பப்படமாகி நடிகையின் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது.

இந்நிலையில் கோலிவுட்டில் காணாமல் போன பால் மேனி நடிகை தல நடிகரின் பொங்கல் ரிலீஸ் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். இந்த படம் ஹிட்டாகும் என்ற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இதையடுத்து அம்மணிக்கு வாய்ப்புகளும் வந்து குவிகிறது. இந்நிலையில் தல நாயகி தனது சம்பளத்தை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்திவிட்டாராம்.

இதனால் மில்க் நடிகையும், மாவட்டம் படத்தில் தளபதி ஜோடியாக நடித்த ஜல் நடிகையும் கவலையில் உள்ளார்களாம். நம்மால் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை இவர் இப்படி உயர்த்திவிட்டாரே என்று தான் அவர்களுக்கு வருத்தமாம்.

 

இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

சென்னை: தான் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்துக்கு வரிவிலக்கு வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ரெட்ஜெய்ண்ட் மூவிஸ்' நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனு:

உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்' படத்தை தயாரித்து உள்ளோம். இந்த படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டது.

இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு

எனவே உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து எங்களது திரைப்படத்தை பார்வையிட்டு இது வரிவிலக்கு பெற தகுதியானதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கையின் அடிப்படையில் வரிவிலக்கு வழங்குவது குறித்து வணிக வரித்துறை கமிஷனர் தகுந்த முடிவு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு நோட்டீசு

இந்த மனு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வணிக வரித்துறை கமிஷனர் பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்கும் வரிவிலக்கு அளிக்கவில்லை அரசு. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் வாழ்த்து!

பத்மபூஷண் விருது பெற்ற கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர் அதன் நிர்வாகிகள்.

கமல் ஹாஸனுக்கு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவித்தது மத்திய அரசு.

இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழ் திரையுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து பலரும் கமலை வாழ்த்த விரும்புவதை உணர்ந்து, தனது வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறார்.

கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் வாழ்த்து!

இது அவரது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கமல் ஹாஸன் என்ற பெரிய கலைஞரை தாங்களும் வாழ்த்த முடியும், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதே பலரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாஸனை தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் வாழ்த்து!

யூனியனின் தலைவர் டயமண்ட் பாபு, செயலாளர் பெரு துளசி பழனிவேல், பொருளாளர் பாலன், துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், வெங்கட், செயற்குழு உறுப்பினர்கள் நிகில் முருகன், கிளாமர் சத்யா, மூத்த உறுப்பினர் நெல்லை சுந்தரராஜன், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினரும் பிஆர்ஓவுமான விஜயமுரளி, சிங்காரவேலு ஆகியோர் கமல் ஹாஸனுக்கு பொன்னாடை போர்த்து, மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.