இளையராஜா பேச்சு குழந்தைத்தனமானது - பாரதிராஜா

Bharathiraja Now Comments On Ilayaraaja

இளையராஜா - பாரதிராஜா மோதலை அவர்களே மறந்தாலும், மீடியா விடாது போலிருக்கிறது.

கடந்த வாரம் பாரதிராஜா பேச்சு குறித்து கோபத்துடன் எழுதியிருந்தார் இளையராஜா. அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முதலில் கருத்து கூற மறுத்த பாரதிராஜா, இப்போது ரொம்ப குத்தலாக பதில் சொல்லியிருக்கிறார்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல.

ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, ரஜினிக்கும் கமலுக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட். நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான்.

இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைக்கணத்தோடு திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.

நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் தயங்கல.

நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒளிவு மறைவும் கிடையாது. நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டிருப்பான்," என்று கூறியுள்ளார்.

 

ஐட்டம் டான்சராகிவிட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

Power Star Srinivasan Turns As Item Dancer

தமிழ்சினிமாவில் இன்றைக்கு ஏதாவது ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடணுமா... வாங்க சீனிவாசனை வைத்து ஒரு காமெடி பண்ணலாம் என கிளம்பிவிடுகிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.

கவர்ச்சியான நான்கு நடிகைகளை ஆட விட்டு, அவர்களுடன் டான்சே தெரியாத சீனிவாசன் கையைக் காலை ஆட்டுவதை வைத்து கவர்ச்சி ப்ளஸ் காமெடி ஐட்டம் பாட்டு எடுப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.

கிட்டத்தட்ட பத்துப் படங்களில் இப்படிப்பட்ட பாடல் மற்றும் நடனம் ஆட ஒப்புக் கொண்டுள்ளார் பவர் ஸ்டார்.

ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, அழகன் அழகி, சேட்டை, ஐ.. இப்படி நீள்கிறது பட்டியல். ஷங்கரின் ஐ படத்தில் கூட பவர் ஸ்டாருக்கு ஒரு பாடல் இருக்கிறதாம்.

அழகன் அழகி ஷூட்டிங்கிலிருந்த அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "எனக்கு இந்த வேடம் அந்த வேடம் என்ற பாகுபாடில்லை. என்னிடம் என்ன வேண்டுமோ அதை இயக்குநர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ரொம்ப சந்தோசமா இருக்கு," என்றார்.

 

‘லைப் ஆப் பை’ படத்திற்கு ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் செய்த நிறுவனம் திவால்… ஆஸ்கர் விழாவில் ஆர்ப்பாட்டம்

Special Effects Artists Picket Oscars

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘லைப் ஆப் பை' படத்திற்கு விருது அறிவிக்கப்படும் நேரத்தில் அந்த படத்திற்கு ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் செய்த ஊழியர்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

85 வது ஆஸ்கர் விருதுகள் லாஸ் ஏஞ்சலெஸில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விருது வழங்கப்படும் விழாவுக்கு கலைஞர்கள் வந்துசேரும் ரெட்-கார்ப்பெட் நிகழ்வின்போது, யாரும் எதிர்பாராத ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் லைப் ஆப் பை படத்தின் ஸ்பெஷன் எஃபக்ட்ஸ் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களே. காரணம், இந்தப் படத்துக்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்து கொடுத்த நிறுவனம் சமீபத்தில் திவாலாகி விட்டதாக அறிவித்ததில், அதன் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்தனர்.

இதனையடுத்து ஆஸ்கார் விருது வழங்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் தியேட்டருக்கு முன்னால் கூடிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் விருது பெறப்போகும் நட்சத்திரங்கள் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வருகையில், ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்.

லைப் ஆப் பை படத்தின் ஸ்பெஷன் எஃபக்ட்ஸ் பணியை செய்து கொடுத்த தனியார் நிறுவனம் ரிதம் அன் ஹியூஸ் ஸ்டுடியோ. (Rhythm and Hues Studios) கலிபோர்னியா, எல்-செகுண்டோவை தலைமையகமாக கொண்டது. இதன் கிளை நிறுவனம் ஒன்று மும்பை, மலாட் ஹைடெக் சிட்டியில் உள்ளது. கடந்த 11-ம் தேதி, இந்த நிறுவனம் சாப்டர்-11 சட்டப்படி திவால் நிலையை அறிவித்தது. சுமார் 200 ஊழியர்களுக்கு வேலை போனது. இதனையடுத்து இந்த தொழிலாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஊழியர்களை கைவிட கூடாது" என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

திவாலான நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த இரு படங்கள் பாபே(Babe) (1995) தி கோல்டன் கேம்பஸ் (The Golden Compass (2008) ) ஏற்கனவே ஆஸ்கார் விருதுகளை வென்ற நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட விருதுகளிலும், இந்த நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த லைப் ஆப் கை, ஆஸ்காரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குநராகிறார் ஏ ஆர் ரஹ்மான்!

A R Rahman Direct Movie Soon

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் - தமிழர் என்ற பெருமைக்குரிய ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

நீண்ட நாட்களாக ஒரு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் அதை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. படத்தை இயக்குவது குறித்து தனது நண்பரான ரசூல் பூக்குட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, "ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போதே ஒரு படத்திற்காக கதையை எழுதி முடித்துள்ளார். இந்த கதையை நானும் ஏ.ஆர்.ரகுமானும் பலமுறை கலந்து பேசியுள்ளோம். விரைவில் படத்தை துவங்கவும் உள்ளோம். இப்படத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர், நடிகையர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது," என்றார்.

உலக சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ரஹ்மான். தான் இசையமைக்கும் படத்தின் கதையில் கூட அவர் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் அவர்களின் கதைகளில் தேவையான மாறுதல்களையும் அவர் சொல்வதுண்டு.

 

சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ் மீட்டுக்கு ஆட்டோவில் வந்த பவர்ஸ்டார்

Summa Nachunu Irukku Press Meet Power Star

சென்னை: சும்மா நச்சுன்னு இருக்கு பட பிரஸ் மீட்டுக்கு பவர்ஸ்டார் சீனிவாசன் ஆட்டோவில் வந்திறங்கினார்.

சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ் மீட் சென்னையில் உள்ள ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஷ், ஹீரோ தமன் குமார், ஹீரோயின் விபா, கேமராமேன் சிஜே ராஜ்குமார், தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோர் வந்துவிட்டனர். ஆனால் முக்கியமான ஒரு ஆளைக் காணவில்லை.

இதையடுத்து படக்குழுவினர் அவருக்காக காத்திருந்தனர். அந்த முக்கிய நபர் வேறு யாருமில்லை பவர்ஸ்டார் தான். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் கார் பன்ச்சரானதால் ஒரு ஆட்டோவை பிடித்து வந்து சேர்ந்தார். பவர் ஆட்டோவில் வந்து இறங்கியது அங்குள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இந்த படத்தில் பவர் ரஷ்ய நாட்டு டான்ஸர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம். தனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு பவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். புத்தாண்டு அன்று சும்மா நச்சுன்னு இருக்கு படத்தில் நடிக்க செக் கொடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

 

ரீமா சென்னுக்கு ஆண்குழந்தை!

Reema Sen Delivers Male Baby

நடிகை ரீமா சென்னுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மின்னலே படத்தில் அறிமுகமானவர் ரீமா சென். தமிழ், தெலுங்கு, இந்தியில் நிறைய படங்களில் நடித்த அவர், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஷிவ்கரன்சிங்கை காதலித்து கடந்த ஆண்டு மணந்தார்.

ரீமாசென் கர்ப்பமான பிறகும் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிப்புக்கு தற்காலிகமாக குட்பை சொன்னார்.

டெல்லியில் கணவருருடன் இருந்த அவருக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரீமாசென்னுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் கணவர் ஷிவ்கரன்சிங் நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

 

அஜீத் எனக்கு எப்போ போன் செய்தார்? கேள்வி கேட்கும் குஷ்பு

Ajith Didnt Call Me Says Kushboo

அரசியல் விவகாரங்களில் சிக்கி மீடியாவில் அடிபட்டுக்கொண்டிருக்கும் குஷ்புவிற்கு அஜீத் ஆறுதல் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. இந்த நிலையில் தனக்கு அஜீத் போன் செய்யவில்லை. இது தவறான செய்தி என்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் குஷ்பு. இதுபோன்று தேவையற்ற செய்திகளை வெளியிட்டு ஓவர் டைம் செய்வதை நிருபர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் குஷ்பு கண்டிப்பு காட்டியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி ஆனந்த விகடனில் குஷ்பு கருத்து கூறியதுதான் பிரச்சினையின் ஆரம்பம். இதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆக்சன், திமுக தலைவர் கருணாநிதியின் ரியாக்சன் என கடந்த இருவாரங்களாக ஊடகங்களின் செய்திகளில் அனல்தான். இதனிடையே இன்னொரு மணியம்மை என்று ரிப்போர்ட்டர் செய்தி போடவே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதனைக் கண்டித்து திமுக வினர் குமுதம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குஷ்புவும் டுவிட்டரில் காட்டமாக செய்தியை பகிர்ந்து கொண்டார். நக்கீரன் இதழுக்கு பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில், குஷ்புவுக்கு அஜீத் போன் செய்து ஆறுதல் கூறியதாக நேற்று முழுவதும் செய்திகள் பரபரத்தன. அஜீத் பேசிய செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து, வெவ்வேறு வடிவங்களில் செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன. இந்த தகவலை இன்று மறுத்திருக்கிறார் குஷ்பு.

இன்று அவர் ட்விட் பண்ணியுள்ள தகவலில், அஜீத் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர் எனக்கு போன் பண்ணவில்லை. நான் இருக்க வேண்டிய இடத்தில் நலமே இருக்கிறேன். அவரும் அப்படித்தான். அவர் எதற்காக எனக்கு போன் செய்ய வேண்டும்? இது தவறான செய்தி என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, "சில செய்தியாளர்கள் ‘கற்பனை கோட்டை' தாண்டுவதை எப்போது நிறுத்தப் போகிறார்கள்? எப்போது எனக்கு அஜீத் போன் செய்தார்? இந்த நான்சென்ஸ் செய்தி ஏன் சுற்றி வருகிறது?

மேலும் சில செய்தியாளர்கள் பணியில், ‘ஓவர்டைம்' செய்வதற்காக இப்படியான கதைகளை உருவாக்குகிறார்களோ" என்றும் கேட்டிருக்கிறார்.

 

'சும்மா'வுக்காக பரிநிதி சோப்ராவைப் பிடித்த ராஜசேகர் தங்கை மகன்!

Bollywood Diva Pariniti Chopra Make Debut   

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் இயக்குநர் கம் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்துக்குப் பெயர் சும்மா!

இந்தப் படத்துக்கு முன்பே பார்வதிபுரம் என்ற தமிழ்ப் படத்திலும், கமணம் என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் மதன். ஆனால் அதற்கு முன்பே இந்த சும்மா வந்துவிடும் போலிருக்கிறது.

சும்மா படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை பரிநிதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளார் மதன்.

கோலிவுட்டைப் பொறுத்தவரை இது கொஞ்சம் ஆச்சர்யமான செய்தி. காரணம் ஏற்கெனவே சில பிரபல இயக்குநர்கள் அணுகியும் கூட சம்மதிக்காத பரிநிதி, இப்போது அறிமுக இயக்குநருக்கு ஓகே சொல்லியிருப்பதுதான்.

அப்படி ஒன்றும் சாதாரணமாக ஓகே சொல்லிவிடவில்லையாம் பரிநிதி. மும்பை மீடியேட்டர் மூலம் தன்னைத் தொடர்பு கொண்ட மதனுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்ட பரிநிதி, பெரிய தொகையாகக் கேட்டிருக்கிறார். எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டுதான் சம்மதம் பெற்றாராம். ஆனால் கேட்ட தேதிகளை முழுமையாகக் கொடுத்திருக்கிறாராம் பரிநிதி.

காடுகளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டுவரும் ஒரு கதை இது என்கிறார் மதன். தமிழகம், ஆந்திரா, கேரளா என மூன்று மாநிலங்களிலும் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

இளையதம்பி விவகாரம்: பவர்ஸ்டார், விஜய் ரசிகர்கள் மோதல்

Clash Between Power Star Vijay Fans

சென்னை: தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பவர்ஸ்டார் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவர் மோதிக் கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைய தளபதி விஜய் என் இளைய தம்பி என்று பவர்ஸ்டார் அண்மையில் தெரிவித்திருந்தார். போயும் போயும் பவர்ஸ்டார் எப்படி இளைய தளபதியை இளைய தம்பி என்று அழைக்கலாம் என்று அந்த முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் ரசிகர் ஒருவர் ஆவேசப்பட்டுள்ளார்.

இதைக் கேட்டு அங்கிருந்த பவர்ஸ்டார் ரசிகர் ஒருவர் கொதித்துவிட்டார். ஏன் எங்க பவர்ஸ்டாருக்கு என்ன, அவருக்கு அப்படி சொல்ல தகுதி உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர் மற்றும் பவர் ஸ்டார் ரசிகருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றி அலுவலகம் என்று கூட பார்க்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு சக ஊழியர்கள் வந்து விலக்கிவிட வேண்டியதாகிவிட்டது.

இந்த சம்பவத்தால் அந்த அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

அஜீத் படத்துக்கு தலைப்பு வலை... ரிலீஸ் ஜூலையில்!!

Ajith S Valai Scheduled July

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புது படத்துக்கு வலை என்ற தலைப்பே இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் தொடங்கிவிட்டார்கள்.

படத்தை மே 1-ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் வெளியிடப் போவதாக ஒரு செய்தி பரவியது.

ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்திடம் கேட்டபோது, "படத்துக்கு இப்போது வலை என்பதுதான் தலைப்பு. ஆனால் மாறினாலும் மாறக்கூடும். அஜீத் பிறந்த நாள் அன்று படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை. எப்படிப் பார்த்தாலும் ஜூன் இறுதி வரை பணிகள் நடக்கும். ஜூலையில் படத்தை வெளியிடும் திட்டமுள்ளது," என்றார்.

இப்போது துபாயில் உள்ள வலை படக்குழு, மார்ச் முதல் வாரம் சென்னை திரும்புகிறது. இங்கும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.

 

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க… நீயா நானாவில் நிபுணர்களின் அறிவுரை

Neeya Naana Late Marriage Vs Early Marriage

படிப்பு, வேலை, குடும்ப சுமைகள் என பெரும்பாலான இளைஞர்கள் இன்றைக்கு 30 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்து கொள்கினற்னர் அதே சமயம் படித்த உடன் வேலை, கை நிறைய சம்பளம் என ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் 23 வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதில் எந்த வயது திருமணத்திற்கு ஏற்ற வயது என்பது பற்றி ஞாயிறு இரவு நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது. இளம் வயது திருமணமே சரியானது என்றும், குடும்ப சுமைகளை நீக்கிய பின்னர் 28 வயதுக்கு மேல் திருமணம் செய்வதுதான் நல்லது என்றும் இரு தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இடையே சண்டையே ஏற்படாது என்றும் அவ்வாறு சண்டை வந்தாலும் எளிதில் சமாதானமாகிவிடுவார்கள் என்றும் இளவயது திருமணத்தை ஆதரிப்பவர்கள் தெரிவித்தனர்.

அதே சமயம் 28 வயதிற்கு மேல் திருமணம் செய்பவர்களுக்குத்தான் ஒரு முதிர்ச்சி இருக்கும் என்றும் அவர்கள்தான் குடும்பத்தை திறமையாக நடத்துவார்கள் என்றும் இள வயது திருமணத்தை எதிர்ப்பவர்கள் பேசினார்கள்.

திருமணம் செய்து கொள்வதற்கு எந்த வயது ஏற்றது என்பது பற்றி விளக்கம் அளிக்க இந்த நிகழ்ச்சியில் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் நாகராஜன், பிரபல வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் நாகராஜன், சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு ஏற்றது என்றார்.

பெண்ணோ, ஆணோ வயதான பின்னர் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உடல்ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும். தவிர பெண்களுக்கு குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படும் என்றார்.

தவிர எந்த வயதில் முதிர்ச்சி வரும் என்று சொல்ல முடியாது. 21 வயதில் முதிர்ச்சியடைந்த நபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் 40 வயதைக் கடந்தும் முதிர்ச்சிடையாதவர்கள் இருக்கின்றனர் என்றார் மருத்துவர்.

இன்றைக்கு இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றனர். அது அவசியமில்லை, குழந்தைகளை பெற்றுக்கொண்டு அதன்பின்னர் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்று அறிவுறுத்தினார்.

இன்றைய சூழலில் குழந்தை பிறப்பு என்பது வரம்போலதான் கிடைக்கிறது. ஏனெனில் உணவும், மாசடைந்த சூழலும் கூட குழந்தை பிறப்பை தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன. எனவே ஆணாக இருந்தால் 24 வயதில் இருந்து 28 வயதிற்குள்ளும், பெண்ணாக இருந்தால் 22 முதல் 24 வயதிற்குள்ளும் திருமணம் செய்து கொள்வது ஏற்ற பருவம் என்றார்.

காலம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள்தான் அதிகம் சண்டை போட்டு விவாகரத்து செய்து கொள்வதாகவும் கூறினார் நிபுணர். இதேபோன்று இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்தான் அதிகம் இணக்கமாக இருப்பதாக கூறினார் வழக்கறிஞர் கனிமொழி மதி. இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகாரத்து என்று வரும் போது அவர்களை எளிதாக கவுன்சிலிங் செய்துவிடலாம் என்றும் கூறினார் அவர்.

குடும்ப சூழ்நிலை, பொறுப்பு என்று திருமணத்தை ஒத்திப்போடாமல் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது நல்லது என்றும் கூறினார் கனிமொழி மதி. மனித வாழ்க்கையில் திருமணமும், குழந்தை பிறப்பும் அவசியமான, அத்தியாவசியமான ஒன்று. எது சரியான பருவம் என்பதே கூட சில குழப்பம் உள்ளது. நீயா நானாவில் பேசப்பட்ட கருத்துக்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு தெளிவு படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

நிபுணர்களின் கருத்து சரிதான் அதேசமயம் வரதட்சணை பிரச்சினையால் முதிர்கன்னிகள் ஆகி திருமணம் செய்து கொள்ளும் பெண்களும், அக்கா, தங்கைகள், குடும்ப சூழ்நிலையால் 30 வயதுவரை குடும்பத்திற்கு உழைக்கும் ஆண்களும் இருக்கத்தானே செய்கின்றனர். அவர்கள் லேட்டாகத்தானே திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது மிஸ்டர் கோபிநாத்.

 

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது இல்லை… ஸ்கைபால் பாடகி தட்டிச்சென்றார்

Adele S Skyfall Wins Best Song Oscar

பாம்பே ஜெயஸ்ரீ எழுதி பாடிய பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. சிறந்த பாடலுக்கான விருதை ஸ்கை பால் படத்தில் பாடல் பாடியுள்ள அடெல் தட்டிச்சென்றார்.

85 வது ஆஸ்கார் விருதுக்கு, சிறந்த பாடலுக்கான விருது பெறுவோரின் பட்டியலில், லைப் ஆப் பை படத்தில் பாடல் பாடியுள்ள இந்திய பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

முதன் முறையாக இந்திய பாடகி ஒருவரின் பாடல் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பாம்பே ஜெயஸ்ரீக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பாடலுக்கான விருது அவருக்கு கிடைக்கவில்லை.

இன்று அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 85வது ஆஸ்கர் விருது அளிப்பு விழா நடைபெற்றது. அதில் ஸ்கை பால் படத்தில் பாடல் பாடியுள்ள அடெல் சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச்சென்றார்.

 

தனுஷ் கேட்டா நான் மாட்டேன்னா சொல்வேன்? - ஹன்ஸிகா

Hansika S Explanation On Dhanush Movie

தனுஷ் படத்தில் நான் நடிக்க மறுத்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அவர் எப்போதும் என் நெருக்கமான நண்பர், என்று நடிகை ஹன்ஸிகா கூறியுள்ளார்.

தனுஷ் இப்போது மரியான் என்ற தமிழ்ப் படத்தையும், ராஞ்ஜனா என்ற இந்திப் படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

அடுத்து சற்குணம் இயக்கத்தில் நய்யாண்டி படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் என்ற மலையாள நாயகி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஹன்ஸிகா மற்றும் அமலா பாலிடம் கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியானது.

இதுகுறித்து ஹன்ஸிகா வெளியிட்டுள்ள விளக்கத்தில், "தனுஷ் எனக்கு மிகச் சிறந்த நண்பர். அவருடன் நான் மாப்பிள்ளை படத்தில் நடித்திருக்கிறேன். நய்யாண்டி படத்தில் நடிக்க என்னைக் கேட்டது உண்மைதான். நானும் நடிக்க சம்மதித்தேன். ஆனால் தேதிகள் ஒத்துவரவில்லை. எனவே அவர்கள் வேறு நடிகையை தேடிக் கொண்டனர். மற்றபடி, தனுஷ் கேட்டு நான் மறுப்பேனா...," என்று கூறியுள்ளார்.

 

குத்தாட்டம் போட ஆசையா இருக்கு: அதித்தி ராவ் ஹைதரி

I Want Do An Item Number Next Adit

டெல்லி: குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட ஆசையாக உள்ளது என்று சிருங்காரம் நாயகி அதித்தி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிருங்காரம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் அதித்தி ராவ் ஹைதரி. பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மனைவி கிரண் ராவின் உறவினர். அவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடித்த மர்டர் 3 படம் ரிலீஸானது. பரதநாட்டிய கலைஞரான அவர் லண்டன் பாரிஸ் நியூயார்க் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்ததோடு பாடியும் உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

பாலிவுட் நடிகைகள் பலரும் குத்துப்பாட்டுக்கு படுகவர்ச்சியாக ஆட்டம் போட போட்டா போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அதித்திக்கும் அந்த ஆசை வந்துள்ளது. அதித்தி அக்ஷய் குமாருடன் நாம் நஹி பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இது சூப்பர் ஹிட் மலையாள படமான போக்கிரி ராஜாவின் ரீமேக் ஆகும்.