ஹரிக்காக சிறுத்தையுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Nayanthara Romance Karthi

சென்னை: ஹரி கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவர் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம்.

கேரளத்து அழகியான நயன்தாராவை ஐயா படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் ஹரி. அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஹரி நயனை கேட்டுள்ளார். ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஹரி கார்த்தியை வைத்து புதுப் படம் ஒன்றை எடுக்கிறார். இதில் யாரை ஹீரோயினாகப் போடுவது என்று ரூம் போட்டு யோசித்த ஹரியின் ஞாபகத்திற்கு வந்தது நயன்தாரா முகம். உடனே நயனை அணுகி கார்த்தியை வைத்து படம் பண்ணுகிறேன், நீங்கள் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.

நயனுக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

சம்பளத்தை வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு வைக்கும் ஹன்சிகா

Hansika S Conditions Saddens Produc   

சென்னை: ஹன்சிகா போடும் கன்டிஷன்களையும், வைக்கும் செலவுகளையும் பார்த்து தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.

ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவரானதும் தனது சேட்டையைக் காண்பிக்கிறாராம். தனக்கு கொடுக்கும் ரூ.1 கோடி சம்பளத்தில் பாதியை முன்பணமாக கொடுத்துவிட வேண்டுமாம். மீதியை கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போதே கொடுத்துவிட வேண்டுமாம்.

அண்மை காலமாக அவர் கார் ஓட்ட ஒருவர், மேக்கப் போட ஒருவர், ஹேர் டிரஸ்ஸர், காஸ்ஸ்ட்யூமை கவனிக்க ஒருவர் என்று ஏகப்பட்ட உதவியாளர்களை வைத்துள்ளார். அவர் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறார் அல்லவா. அதே போன்று தனது உதவியாளர்களுக்கும் தான் தங்கும் அதே ஹோட்டலில் அறைகள் ஒதுக்க வேண்டும் என்று ஹன்சிகா கன்டிஷன் போடுகிறாராம்.

தான் தங்கும் இடத்தில் உதவியாளர்கள் இருந்தால் மேக்கப்போட்டு ஷூட்டிங் செல்ல வசதியாக இருக்கும் என்கிறாராம். இதனால் ஹன்சிகா மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக செலவாகிறதாம்.

 

ஸ்ருதி ஹாஸனின் அடுத்த அதிரடி... இப்போ விலைமாது கேரக்டர்!

Shruthi Hassan Turns Prostitute D Day

மேக்ஸிம் இதழின் அட்டைப் பட செக்ஸி போஸ் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், ஸ்ருதிஹாசன் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார்.

கமல் ஹாஸன் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன் இப்போது இந்தி, தெலுங்கில் பரபரப்பான நடிகையாகிவிட்டார்.

அந்தப் பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வேலையையும் சரியாக செய்து வருகிறார்.

காதல் கிசுகிசு, பரபரப்பு பேட்டிகள் என ஆரம்பத்தில் செய்து வந்தவர், இப்போது செயலில் இறங்கிவிட்டார்.

சில தினங்களுக்கு முன் தம்மாத்துண்டு உடையில் மேக்ஸிம் இதழுக்கு போஸ்கள் கொடுத்தார்.

இப்போது ஒரு இந்திப் படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். டி டே என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார். ரிஷி கபூர், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

பொதுவாக திரையுலகிலிருந்து ரிடையராகும் சமயத்தில்தான் நடிகைகள் இந்த மாதிரி வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் ஸ்ருதி ஹாஸன் ரொம்பவே ஸ்பீடாக இருக்கிறார்... தனது ஏழாவது படத்திலேயே விலைமாதுவை விரும்பி ஏற்றுள்ளார்!!

 

ஹன்சிகாவின் 22 குழந்தைகள்!

The Other Side Hansika

சினிமாவுக்கு வெளியிலும் நல்ல பெயர், இமேஜோடு உள்ள நடிகைகள் மிக அரிதாகத்தான் வாய்க்கிறார்கள்.

ஹன்சிகா அப்படி ஒரு அரிதான நடிகையாகத்தான் இருக்கிறார்.

தன் சம்பாத்தியத்தில் 22 குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்க வைக்கிறார். அவர்களுக்குத் தேவையான அத்தனைப் பொருள்கள், படிப்புக்கான செலவுகள் என எல்லாவற்றையுமே ஹன்சிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி ஹன்சிகா கூறுகையில், "என் அம்மா ஒரு டாக்டர். ஃபீஸ் கொடுக்க முடியாத ஏழைகளுக்கு இலவச ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க.

சின்ன வயசுல இருந்தே ஆசிரமங்களுக்கும், குடிசைப் பகுதிகளுக்கும் அம்மா என்னை அழைச்சிட்டுப் போவாங்க. 'மத்தவங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணணும்'னு அவங்க சொல்லிச் சொல்லி வளர்த்ததுதான் என்னுடைய இந்த குணத்துக்கு காரணம்.

நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அம்மா மாதிரி என்னால முடிஞ்ச அளவுக்கு நிறையப் பேருக்கு உதவி பண்ணணும்னு நினைச்சேன். அதான் 22 குழந்தைகளைத் தத்தெடுத்துப் படிக்கவைக்கிறேன். அந்த 22 குழந்தைகளுக்கும் ஸ்கூல் -டியூஷன் ஃபீஸ், யூனிஃபார்ம், விளையாட்டுப் பொருட்கள், தனித் திறமையை வளர்க்கும் பயிற்சிகள்னு எல்லாத்துக்கும் ஆகும் செலவுகளை நான் பார்த்துக்கிறேன்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் மும்பைக்குப் பறந்துபோய் அவங்களோடதான் நேரம் செலவழிப்பேன். என் மனத் திருப்திக்காக மட்டுமே இதைச் செய்றேன். இப்போ பிரஸ்ட் கேன்சரால் பாதிக் கப்பட்ட 30 பெண்களின் மருத்துவச் செலவையும் ஏத்துக்கிட்டேன். முதியோர்களுக்கான ஒரு ஹோம் கட்டத் திட்டமிருக்கு," என்றார்.

மகராசி.. நல்லாருக்கட்டும்!

 

அதிரப்பள்ளியில் கலாபவன் மணியின் அதிரடி.. வன அதிகாரிகளை சரமாரியாக தாக்கினார்!

Police Book Malayalam Actor Kalabhavan Mani

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் கலாபவன் மணி, கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குப் போனபோது தனது காரை சோதனையிட முயன்ற வனத்துறை அதிகாரிகளை தனது நண்பருடன் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீ்ழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மணி தலைமறைவாகி விட்டார்.

மனைவி- நண்பருடன்

மலையாளத்தில் நிறையப் படங்களில் நடித்துள்ளார் மணி. தமிழிலும் ஜெமினி, வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்குக் காரில் போனார் மணி.

அவருடன் அவரது மனைவி மற்றும் நண்பர் ஒருவரும் போனார்கள். காட்டுப் பகுதி வழியாகத்தான் அதிரப்பள்ளிக்குப் போக முடியும். அதிரப்பள்ளி பகுதியில், மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு வனத்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் வாகன சோதனையும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கலாபவன் மணி காரைப் பார்த்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர். இதற்கு மணி எதிர்ப்பு தெரிவித்து வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டார்.

நீர்வீழ்ச்சிக்குப் போய் விட்டுத் திரும்பிய அவரை அதிகாரிள் மடக்கி நிறுத்தினர். இதனால் கோபமடைந்த மணி வனத்துறையினரிடம் தகராறில்இறங்கினர். மேலும் மணியும், அவரது நண்பரும் சேர்ந்து வனத்துறை அதிகாரிகள் ரமேசன் மற்றும் ரவீந்திரன் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் இருவரும் காயமடைந்தனராம்.

உடனடியாக சாலக்குடி போலீஸாருக்குத் தகவல் பரவியது. சாலக்குடி போலீஸார் விரைந்து வந்தனர். மணியையும், அவரது நண்பரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.பின்னர் தான் வனத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக கூறி சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போய்ச் சேர்ந்து கொண்டார் மணி.

இந்த நிலையில் மணி, அவரது நண்பர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் போட்டதால் அதிர்ச்சி அடைந்த மணி தலைமறைவாகி விட்டார்.

 

ஜில்லாவில் விஜய்க்கு 17 வயது 'போராளி' தங்கச்சி

Niveda Thomas Is Vijay Sister Jilla

சென்னை: ஜில்லா படத்தில் விஜய் தங்கையாக போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் அவர் பெயர் சக்தி. இந்த படத்தில் இளைய தளபதிக்கு அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார். மதுரையில் எடுக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை, அதுவும் அந்த தங்கை கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாம்.

இந்த படத்தில் விஜய்க்கு யாரை தங்கையாக போடுவது என்று அலைந்துள்ளனர். அப்போது போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண்ணாக வந்த நிவேதா தாமஸை(17) பார்த்துள்ளனர். உடனே அவரையே விஜய்க்கு தங்கையாக்கிவிட்டனர். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமென்ட் தூக்கலாக இருக்குமாம்.

இது குறித்து நிவேதா கூறுகையில்,

என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அண்ணனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பாசமுள்ள தங்கையாக நடிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.