வரதட்சணைக் கொடுமை வழக்கு - காவ்யா மாதவன் கணவரின் மனு தள்ளுபடி

Kavya Madhavan
திருவனந்தபுரம்: வரதட்சனை கொடுமை தொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் கணவரின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரபல மலையாள நடிகை கவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்திரமோகன் என்பவரின் மகன் நிஷால் சந்திராவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே கணவரை வி்ட்டு பிரிந்து காவ்யா விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அவருடைய புகாரின் பேரில் நிஷால் சந்திரா, மாமனார் சந்திரமோகன், மாமியார் மணி மோகன், சந்திராவின் சகோதரர் தீபக் ஆகியோர் மீது போலீசார் வரதட்சனை கொடு்மை வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் நிஷாவின் குடும்பத்தினர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இரு தரப்பு சம்மதத்தின் பேரில் விவகாரத்து பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் நேற்று போலீஸ் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் நிஷால் சந்திரா குடும்பத்தினர் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 1 வாரமாகியும் யாரையு்ம் கைது செய்யவில்லை. அதற்குள் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம். எனவே வழக்கை ரத்து செய்ய தேவையி்ல்லை என்று கூறினார்.
இதை ஏற்ற நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
 

சீக்கிரமே கவுண்டர் புறப்பட்டு வருவாரு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனது பாணி காமெடியை, பலர் காப்பி அடிப்பதால் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கவுண்டமணி. இதுபற்றி அவரது நண்பர்களிடம் கேட்டோம்! சினிமாங்கறதே காப்பியடிக்குறதுதானே. யார் வேணாலும் அண்ணன் காமெடியை காப்பி அடிச்சு பிழைச்சுக்கட்டும். அதுக்காக அவர் இனி நடிக்க மாட்டார்னு சொல்றதெல்லாம் பொய். அண்ணன் இப்போ ஓய்வுல இருக்காரு. இருந்தாலும் தினமும் 4 மணி நேரம் ஆபீசுக்கு வந்து கதை கேட்குறாரு. சீக்கிரமே கவுண்டர் புறப்பட்டு வருவாரு என்கிறார்கள் கவுண்டரின் நண்பர்கள்.


Source: Dinakaran
 

பிசினசில் இறங்கிய விஜயலட்சுமி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கைவசம் படங்கள் இல்லாததால் பிசினசில் இறங்கிவிட்டார் விஜயலட்சுமி. இதுபற்றி அவரிடம் கேட்டோம் படங்கள் இல்லை என்பது உண்மைதான். இது நானாக ஏற்படுத்திக் கொண்டது. சூப்பர் ஸ்டாரின் 'சுல்தான் தி வாரியர்' வெளிவந்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். எனது அக்கா, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை திறக்கப் போகிறார். அவருக்கு உதவி வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி பிசினசுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார் விஜயலட்சுமி.


Source: Dinakaran
 

இளைஞன் படத்துக்கு கப்பல் தொழிற்சாலை செட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முதல்வர் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் 'இளைஞன்Õ. பா.விஜய் ஹீரோ. மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமீதா நடித்துள்ளனர். படம் பற்றி பா. விஜய் கூறியது: ஷூட்டிங்கிற்காக கப்பல் தயாரிக்கும் தொழிற்சாலை தேவைப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள தொழிற்சாலைக்கு சென்று பார்த்தோம். அது திருப்தி தரவில்லை. அதனால் சென்னை, பெரம்பூர் பின்னி மில்லில் செட் போட்டு படமாக்க முடிவு செய்தோம். அந்த பணியை ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணி சிறப்பாக செய்திருக்கிறார். பிரமாண்ட கப்பல் தொழிற்சாலை அரங்கு போடப்பட்டது. கதையே இங்குதான் நடக்கிறது. தொழிற்சாலை அரங்கம், அதற்குள் அலுவலக அறைகள் மட்டுமின்றி, 3 மாடி கொண்ட கப்பலும் செட்டாக போடப்பட்டுள்ளது.


Source: Dinakaran
 

கிசு கிசு - நடிகையின் கவர்ச்சி டெக்னிக்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
சமீபத்துல நடந்த விழாவுக்கு படு கவர்ச்சியா வந்திருந்தாரு குத்தகைதாரர் பட நாயகி. நடிகைக்கு புது படம் எதுவும் கிடைக்கல… கிடைக்கல… வாய்ப்பு பிடிக்கத்தான் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினாரு. இப்போ விழாக்களுக்கு இப்படி வர்றாருன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க…
உருமி தமிழ் படத்துல நடிக்க ஓகே சொல்லியிருந்தாரு வித்யாவான இந்தி நடிகை.  இயக்குனர் தரப்புலேருந்து நடிகைகிட்ட பேசினாங்களாம். Ôஇந்தியில பிசியா இருக்கேன். கொஞ்ச நாள் பொறுங்க சொல்றேன்Õனு காலம் கடத்துறாராம்… கடத்துறாராம்…
கதை சொல்ல வர்ற உதவி இயக்குனர்கள்கிட்ட கபடி ஆடின நடிகரு நிறைய மாற்றங்கள் சொல்றாராம்… சொல்றாராம்… Ôஇந்த மாற்றம் பண்ணினாத்தான் நடிப்பேன். அப்போதுதான் படமும் ஜெயிக்கும்Õனு வ¤ளக்கம் தர்றாராம்… தர்றாராம்…


Source: Dinakaran
 

இரண்டு ஹீரோ கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்-பரத்

Bharath
டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் பரத்.
இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்கிறீர்களே என்று என்னை சிலர் தொடர்ந்து கேட்கிறார்கள், எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்… நான் அறிமுகமானதே நான்கு ஹீரோக்களில் ஒருவனாகத்தான். தொடர்ந்து செல்லமே, வெயில், பட்டியல் இப்படி இரண்டு ஹீரோ கதைகளில் நடித்துள்ளேன். இனியும் கூட நடிப்பேன்…”
-தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்து, மார்க்கெட் டல்லடித்ததால் இரண்டு ஹீரோ கதாகளில் நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு பரத் சொன்ன பதில் இது.
மேலும் அவர் கூறுகையில், “ரசிகர்களின் கதை கேட்கும் திறன் மாறிவிட்டது. அதற்கு தகுந்தாற் போல் கதை சொல்லிகளும் மாற வேண்டும். எனக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இது மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேன் என இனி கூற முடியாது.
ஹாலிவுட், பாலிவுட் என எல்லா சினிமாக்களிலும் இந்த நிலை தொடர்கிறது. இங்கும் அந்த நிலை விரைவில் வந்துவிடும். சிம்பு என் நண்பன். இந்த படத்தில் நடிக்க அழைத்தார். நடித்து விட்டேன். இனி வாய்ப்புகள் வந்து கதை நன்றாக இருந்தால் இதே போல நடிப்பேன்” என்றார்.
காலத்தே வந்த ஞானோதயம்தான்!