பெங்களூரில் வீடு கட்டும் நஸ்ரியா!

திருவனந்தபுரம்: காதலித்துக் கல்யாணம் செய்த மலையாள ஜோடி பகத்தும், நஸ்ரியாவும் பெங்களூரில் சொந்தமாக ஒரு வீட்டை பார்த்துப் பார்த்து கட்டி வருகின்றனர்.

அழகிய வில்லா ஒன்றைக் கட்டிவரும் இந்த ஜோடி கடந்த மே மாதம் 15ம் தேதி அன்று உலகமே கொண்டாடி மகிழ்ந்த குடும்ப தினத்தை தங்கள் வீட்டின் முன்னால் மரம் நட்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

Fahadh And Nazriya's Dream Home in bangalore

திருமணம் செய்து கொண்ட கையோடு சினிமாவை விட்டு ஒதுங்கிய நஸ்ரியா வீடு கட்டும் பணியில் மிகவும் மும்முரமாக இருக்கிறாராம். மீண்டும் நஸ்ரியா நடிக்க வருகிறார் என்று பேச்சு எழுந்த நிலையில் அதைப் பற்றிய எந்த பதிலும் நஸ்ரியாவிடம் இருந்து வரவில்லை.

இருவரும் இணைந்து பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடித்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் தங்களது கனவு இல்லத்தை பெங்களூரில் எழுப்புவது பொருத்தமானதுதான்.

 

'புலி' எந்தப் பக்கம் பாய்ந்தாலும் கவலை இல்லை – விஷால்

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவர இருக்கும் பாயும் புலி படம் வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் அதைப்பற்றிக் கவலைப் பட போவதில்லை என் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஷால் கூறியுள்ளார்.

ஹெலிகாப்டரில் சென்று குளிர்பானத்துக்கு லிப்ட் கொடுத்து உதவுவது, ஜீப்பின் டாப்பில் அமர்ந்து கொண்டே வானத்தில் பறந்து வருவது போன்ற செயல்களை செய்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் நடிகர் விஷால்.

I dont care the  result of paayum puli movie – actor vishal

இவரின் நடிப்பில் வெளிவர இருக்கும் பாயும் புலி படமும் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் புலி படமும் ஒரே நாளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. அதற்கு முன்பே விஷாலின் இந்த அதிரடி அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

2012ல் சிவகங்கை மாவட்டத்தில் சப்இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அதன் பின்னணியும் தான் கதையாம்.

படத்தின் ரிசல்ட் எப்படி வந்தாலும் அது குறித்து தான் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ள விஷாலுக்கு சமீப காலத்தில் பெரிய ஹிட் என்று எதுவும் அமையாமல் போனது ஆச்சரியம்தான்.

 

காஞ்சனா நாயகியின் கல்யாண பிசினஸ்!

சென்னை: காஞ்சனா 2 படத்தின் வெற்றி நாயகி டாப்சி தன் தங்கை மற்றும் சில தோழிகளுடன் இணைந்து வெட்டிங் பாக்டரி என்ற பெயரில் திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்.

ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்சி அதற்குப் பின் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவில் பெரிதாக பேசப் படாத நடிகையாக இருந்த இவரை நடிகர் லாரன்ஸ் தனது காஞ்சனா 2 படத்தில் நடிக்க வைத்தார்.

Actress taapsee’s new business- wedding planner

காஞ்சனா 2 படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தற்போது டாப்சி என்ன செய்தாலும் அது செய்தி ஆகி விடுகிறது.

டென்மார்க்கைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலிப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்த நிலையில் வெட்டிங் பாக்டரி ஆரம்பித்து உள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

தமிழில் சிம்புவுடன் ஒரு படம் ஜெய்யுடன் ஒரு படம் தெலுங்கில் ஒரு புதுப் படம் என்று பிசியான நடிகையாக இருந்தாலும் பிசினசிலும் பிசியாகவே இருக்கிறார் டாப்சி.

இப்போது உள்ள நடிகைகள் எல்லாருமே சொந்தமாக ஒரு பிசினசை ஆரம்பித்து அதனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்..அந்த லிஸ்டில் சமீபமாக இணைந்திருக்கிறார் டாப்சி.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...!

 

பாகுபாலி இசை வெளியீடு – சிறப்பு விருந்தினர் ரஜினி!

ஹைதராபாத்: கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாகுபலி படம் இறுதிக் கட்ட பணிகளை எட்டியுள்ளது. இதன் இசை வெளியீடானது இந்த மாதம் 31ம் தேதியன்றுஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டிற்கே கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கின்றனர்.

சரித்திரப் படமாக எடுக்கப்பட்டு வரும் பாகுபாலியில் நடிகைகள் அனுஷ்கா, நித்யா மேனன், ஸ்ரீதேவி நடிகர்கள் பிரபாஸ், ராணா, சுதீப், சத்யராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Rajni is chief guest for Baahubali – audio launch

ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார்.

படத்தை சீக்கிரமா கண்ணுல காட்டுங்கப்பா.. வயசாயிடும் போல...!

 

ஜாக்கி சான் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி!

சென்னை: பிரபல நடிகர் ஜாக்கி சான் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவி வருகிறது. இருப்பினும் அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான், ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சான்தான். 61 வயதாகும் ஜாக்கி சான் குறித்து சில முறை வதந்திகள் வந்துள்ளன. அந்த வகையில் இன்றும் ஒரு வதந்தி வாட்ஸ் ஆப் மூலமாக பரவி வருகிறது.

Rumour mon Jackie Chan

ஆனால் ஜாக்கி சான் நலமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஜாக்கி சான் குறித்த வதந்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இணையதளங்களை முற்றுகையிட்டு செய்தி உண்மையா என்று தேடிப் பார்த்தனர்.

ஆரபத்தில் ஸ்டண்ட் மேனாக இருந்த ஜாக்கி சான், ப்ரூஸ் லீயுடன் 2 படங்களில் நடித்துள்ளார். பின்னர் ப்ரூஸ் லீயின் மறைவுக்குப் பின்னர் இவர் தனி நாயகாக மாறினார். காமெடியையையும், ஆக்ஷனையும் கலந்து கொடுத்து கலக்கிய ஜாக்கிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

முன்பு போல ஆக்ஷனில் நடிக்காமல் வித்தியாசமான கேரக்டர்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

 

செல்வராகவனுடன் "கானகம்" போகும் சிம்பு!

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘கானகம்' என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு செல்வராகவன், சிம்புவை வைத்து இயக்கும் புதிய படம் ‘கானகம்'. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் திரிஷா ஒப்பந்தமானார். ஏற்கனவே, இவர்கள் இருவரும் விண்ணத் தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தனர்.

Simbu film named as Kanagam ?

ஆனால், திடீரென திரிஷா இப்படத்திலிருந்து விலகவே, அவருக்குப் பதிலாக மெட்ராஸ் பட நாயகி கேத்ரின் தெரசா சிம்புவுக்கு ஜோடியாகியுள்ளார். இப்படத்தில் நடிகை டாப்ஸியும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே சமீபத்தில் இப்படத்திற்காக பூஜை போடப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘கானகம்' என்று பெயர் வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘காதல்கொண்டேன்', ‘7ஜி ரெயின்போ காலனி' போன்ற செல்வராகவனின் காதல் படங்கள் வரிசையில் இந்த படம் காதல் பின்னணியில் உருவாக இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

 

'கமரகட்டு’ ரெடி... ருசிக்க நீங்க ரெடியா?

சென்னை : இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினையைக் கதைக்களமாகக் கொண்ட ‘கமரகட்டு' படம் வரும் 22ம்தேதி ரிலீசாக இருக்கிறது.

‘சாட்டை' படத்தின் நாயகன் யுவன் மற்றும் ‘பசங்க' ஸ்ரீராம் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் ‘கமரகட்டு'. ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரக்ஷாராஜ், மனிஷா ஜித் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். ரீவ்ஸ் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் வழங்க ஸ்ரீதன்ஷா இன்னோபேஷன்ஸ் சார்பில் சந்திரமோகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Kamara kattu to be released on 21st may

பிளஸ்-2 முடித்துவிட்டு காலேஜ் செல்லும் பருவ வயதில் இருக்கும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினை தான் கதைக்களம்.

காதலில் தொடங்கி, அமானுஷ்ய சக்தியைக் காட்டி திகில் கூட்டி, இறுதியில் ஆன்மீகத்தைக் கொண்டு முடியும் வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இந்த திரைக்கதை புதிதாக இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

Kamara kattu to be released on 21st may

சென்னை, திருவண்ணமாலை, தலக்கோணம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. வரும் 22ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.

இதே தேதியில் தான் ‘விந்தை', ‘டிமான்ட்டி காலனி' ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்கள்... சிவ கார்த்திகேயன் சாதனை!

சென்னை: சமூக வலைத்தளமான டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களைத் தொட்டு இளம் நடிகர் சிவகார்த்திகேயன் சாதனை புரிந்து இருக்கிறார்.

நடிகர்களில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோருக்கு அடுத்து 10 லட்சம் பாலோயர்களைத் தொட்டிருக்கிறார் நடிகர் சிவா.

ஏற்கனவே இவர் விஜய் டிவியில் நடத்தி வந்த அது இது எது நிகழ்ச்சியை யூ டியூபில் இன்னும் பல லட்சம் பேர் தொடர்ந்து கண்டு கண்டு களித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் நடிகர் தனுசால் கதாநாயகனாக எதிர்நீச்சல் படத்தில் அறிமுகம் செய்யப் பட்ட நடிகர் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இந்த சாதனையைத் தொட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இவரின் தாக்கம்எந்த அளவுக்கு இருக்கிறதென்றால் தற்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் ரஜினி முருகன் படம் 40 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகும் அளவுக்கு உள்ளது.

பெரிய நடிகர்களின் படங்களுக்கு கூட இவர் அளவுக்கு மார்க்கெட் இல்லை என்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

 

நடிகராக அவதாரம் எடுக்கும் பிரபல பின்னணி பாடகர்

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர்கள் ஹீரோவாக மாறி வெற்றி பெற ஆரம்பித்த பின் பாடகர்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது போலும்.ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா விகடன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படம் ஓடாததால் அந்த முயற்சியை அவர் கைவிட்டு விட்டார்.

Singer Krish Is Introduced As A Hero In A Film

இந்தப் படம் சொல்லப் படாத ஒரு காதலை மையமாக வைத்து எடுக்கப் பட்டு வருகிறது.மறைவதற்கு முன் கவிஞர் வாலி கடைசியாக இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி கொடுத்திருக்கிறார். அதுவும் மரணம் சம்பந்தப்பட்ட பாடல் தானாம்.

கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கும் இப்படத்தை எழுதி இயக்குபவர் புதுமுக இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம்.படத்திற்கு இசை இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ரஹைனா சேகர்.

படத்துல கிரிஷே பாடிருவாரு... செலவு மிச்சம்