ஹாலி பெர்ரி மீண்டும் கர்ப்பம்.. குழந்தைக்கு அப்பா மார்ட்டினஸ்!

Halle Berry Is Pregnant With Olivie Martinez

லாஸ் ஏஞ்சலெஸ்: 46 வயதான ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி கர்ப்பமடைந்துள்ளார். அவரது காதலர் ஆலிவர் மார்ட்டினஸின் குழந்தை இது என்று ஹாலியின் பிரதிநிதி கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பெற்றுக் கொள்ளும் முதல் குழந்தையாகும் இது. தற்போது ஹாலி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும் தெரிய வந்துள்ளதாம்.

ஹாலிக்கு ஏற்கனவே தனது முன்னாள் காதலர் கேப்ரியல் ஆப்ரி மூலம் நான்கு வயதில் மகள் உள்ளாள். அந்தக் குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்பது தொடர்பாக ஆப்ரிக்கும், ஹாலிக்கும் கோர்ட் கேஸ் நிலுவையில் உள்ளது.

 

ஆண்களின் வெட்கம் அழகானது… நீயா நானாவில் ஜாலியான விவாதம்…

Vijay Tv Neeya Naana Discussion About Femininity

ஆணுக்குள் இருக்கும் பெண்மையும், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்களையும் கண்டறிவது அத்தனை எளிதானதல்ல. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு குறிப்பிட்ட சதவிகித பெண்மை இருக்கிறது. அதேபோல் எல்லா பெண்ணுக்குள்ளும் ஆணுக்கே உரிய கோபம், தைரியம் இருக்கத்தான் செய்கிறது என்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி

பொதுவாகவே ஆண்கள் என்றாலே ஒருவித பிம்பம் இருக்கிறது கம்பீரமானவர்கள், வீரமானவர்கள், தைரியசாலிகள், என்று ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய ஆண்கள் தங்களுக்குள் ஒளிந்திருந்த பெண்மையை வெளிப்படுத்தினார்கள்.

தங்களுக்கும் வெட்கம் வரும், அழுகை வரும், நாங்களும் பயப்படுவோம் என்று வெளிப்படையாக பேசினார்கள்.

ஆண்கள் சீக்கிரம் உணர்ச்சி வசப்படமாட்டார்கள், ஈகோ, அவசரம், பழிவாங்கும் குணம், இருக்கும் என்று கூறிய ஆண்கள் தங்களுக்கு எப்பொழுதெல்லாம் வெட்கம் வரும் என்று தெரிவித்தனர்.

பெண்களின் அருகில் அமர்ந்து பேச வெட்கப்படுவதாக கூறினார்கள். ஒரு பெண்ணால் புகழ்ச்சிக்கு ஆளாகும் போது வெட்கப்படுவோம் என்பதை அழகாக வெளிப்படுத்தினார் ஒரு இளைஞர்.

‘அட ஏங்க நீங்க என்னைப் போய் இப்படி புகழுறீங்களே'... என்று வெட்கத்தை வெளிப்படுத்தும் ஆண்களைக் கண்டால் பெண்களுக்கு பிடிக்கத்தான் செய்கிறது.

அதேபோல் பெண்களுக்கு உள்ள கோபம் எத்தனை உக்கிரமாக வெளிப்படும் என்று இந்த நிகழ்ச்சியில் தெரியவந்தது. கோபப்பட்டால் என்னவெல்லாம் செய்வோம். எப்படி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என்று கூறினார்கள் பெண்கள்.

பெண்மைக்கே உரிய நளினம், வெட்கம், கருணை இதெல்லாம் இருந்தால் கூட அந்த ஆத்திரம், கோபம் வெளிப்படும் போது பெண்கள் காளியின் அவதாரமாகத்தான் இருக்கிறார்கள் என்றார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

இன்றைக்கு சண்டை என்றால் முதலில் கிளம்புவது ஆண்கள்தான் என்று சினிமாக்களிலும், கதைகளிலும், புராணங்களிலும் ஒரு பிம்பத்தை ஒருவாக்கியிருக்கின்றனர்.

ஆனால் நீயா நானாவில் பேசிய ஆண்கள் சண்டையை எப்படி தவிர்ப்போம் என்று பேசினார். பேசிப் பேசியே எதிராளியை சமாதானம் செய்துவிடுவோம் என்று கூறினார் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த சமூக ஆர்வலர் சுதா, ஒரு திருநங்கையாக தன்னுடைய அனுபவங்களை தெரிவித்தார். ஆணுக்குள் இருக்கும் பெண்மை அதீதமாக வெளிப்படும் போதுதான் திருநங்கையாக மாறவேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறிய சுதா, அதன்பின்னர் சமூகத்தில் எத்தனை இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

ஒரு திருநங்கையாக தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், வலிகளையும் கூட எப்படி சமாளித்தோம் என்பதை உற்சாகமாக நகைச்சுவையாக குறிப்பிட்டார். திருநங்கைகளை பெண்கள் புரிந்து கொள்வதில்லை, ஆனால் ஆண்கள்தான் உதவுகின்றனர் என்று வேதனையோடு பதிவு செய்தார் சுதா.

ஆண்கள் மட்டுமே பங்கெடுத்து வரும் மோட்டர் பைக் ரேஸ் போட்டியில் ஆண்களுக்கு சரிசமமாக பங்கேற்று வெற்றி பெற்று வரும் அலீசா அப்துல்லா, தனக்குள்ளும் பெண்ணுக்குரிய நளினம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சக ஆண்கள் தன்னை போட்டியாளராக பார்க்காமல் பெண்ணாக மட்டுமே பார்த்து பேசும் போதுதான் சிரமப்படுவதாக தெரிவித்தார்.

ஆணுக்குள் பெண்மைக்குரிய அச்சம் இருப்பது இயல்புதான் அதை நானே உணர்ந்திருக்கிறேன் என்றார் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி. அதுதான் முழுமையான மனித சக்தியின் அடையாளம் என்றார்.

இந்த நிகழ்ச்சி பெண்கள் மீது ஆண்களும், ஆண்கள் மீது பெண்களும் வைத்திருந்த மிக நீண்டகால நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இன்றைய கால கட்டத்தில் ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அனைவரும் ஒன்றுதான். அனைத்து பாலினத்திற்குள்ளும் எல்லாவித இயல்பான குணங்களும் இருக்கின்றன. அதை வெளிப்படுத்தும் சமயங்களில் வெளிப்படுத்திவிட்டால் எந்த வித சிக்கல்களும் இல்லை என்றார் கோபிநாத்.

 

நான் சித்தாள் வேலை பார்த்தது ஞாபகத்திற்கு வந்துருச்சு! -அங்காடித்தெரு மகேஷ் உருக்கம்

Angadi Theru Mahesh S Next Adithalam

அர்ஜுன் நடித்த ஒற்றன், சர்வானந்த், ரவிகிருஷ்ணா, கமலினி முகர்ஜி நடித்த காதல்னா சும்மாயில்ல ஆகிய படங்களை இயக்கிய இளங்கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் அடித்தளம்.

'அங்காடி தெரு' மகேஷ், 'அழகன் அழகி' ஆருஷி ஜோடியாக நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் காமெடியனாக நடித்திருக்கிறார். இப்படம் கட்டிடத் தொழிலாளர்களின் கதையை மையமாக கொண்டது. சென்னையை சுற்றியுள்ள சில கட்டிடங்களில் தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக மகேஷையும் ஆருஷியையும் கல்லையும் மண்ணையும் சுமக்க வைத்தாராம் இளங்கண்ணன்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்ட ஆரம்பித்தார்கள். அப்போது நான் கவனித்த சில விஷயங்கள்தான் இந்த படம் உருவாக காரணமாக இருந்தது. வெளியூரில் இருந்து இங்கு வந்து தங்கும் இவர்கள் அந்த வீடு வளர வளர அந்த கட்டிடத்தின் மீது காட்டும் அக்கறையை விவரிக்கவே முடியாது.

அங்கேயே நாள் முழுக்க உழைத்து அங்கேயே ஒரு ஓரமாக குடிசை போட்டு தங்குவார்கள். இப்படி மாதக்கணக்காக இவர்கள் பார்த்து பார்த்து கட்டிய வீடு வளர்ந்து நிற்கும்போது, அதற்குள் செல்வதற்கே, அந்த வீட்டு சொந்தக்காரரின் அனுமதி வேண்டும் இவர்களுக்கு.

யார் யாரோ காரில் வருவார்கள். வீட்டை பார்ப்பார்கள், அட்வான்ஸ் கொடுப்பார்கள். தங்கள் முயற்சியில் கட்டப்பட்ட இந்த வீட்டுக்கும் அவர்களுக்கும் அதற்கப்புறம் எந்த சம்பந்தமும் இருக்காது. இதற்குள் கட்டிட தொழிலாளிகளான மகேஷுக்கும் ஆருஷிக்கும் காதல் வருகிறது. அந்த காதலுக்கும் ஒரு எதிர்ப்பு வருகிறது. அது எப்படி, யாரால்? இருவரும் இணைந்தார்களா என்பதை விறுவிறுப்பாகவும், அழுத்தமாகவும் கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறேன்," என்றார்.

ஒற்றன் படத்தில் 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா...' என்று கவர்ச்சி நடிகை தேஜா ஸ்ரீயை அறிமுகப்படுத்தி அவருக்கு கலக்கலான ஒரு பாடலையும் கொடுத்தவர் இளங்கண்ணன். இந்த படத்தில் எப்படி?

'அந்த பாட்டுல எதார்த்தமா 'வீடு'ங்கற வார்த்தை அமைந்தது. இந்த படத்தின் கதையும் வீட்டை மையப்படுத்தி அமைந்திருக்கிறது. இதையே நல்ல சென்ட்டிமென்ட்டாக நினைக்கிறேன் நான்' என்றார் இளங்கண்ணன். தாஜ்நு£ர் இசையில் ஆறு பாடல்கள் உருவாகியிருக்கிறது. எல்லா பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் எல்லாருடைய ரிங் டோனிலும் அந்த பாடல்கள்தான் இருக்கும், என்றார் இளங்கண்ணன் அழுத்தமாக.

ஆருஷி

படத்தின் நாயகி ஆருஷி கூறுகையில், "நிஜமாகவே தலையில் செங்கல்லை ஏற்றி வைப்பார்னு நினைச்சு கூட பார்க்கல. என்னை இந்த படத்தில் கமிட் பண்ணும்போதே, ரொம்ப ஜாலியா கேரவேன்லேர்ந்து இறங்கி வந்து நடிச்சுட்டு போற கேரக்ட்டர் இல்லம்மா. கஷ்டப்படணும் என்றார் இளங்கண்ணன் சார். அப்ப சாதாரணமாதான் நினைச்சேன். ஆனால் ஸ்பாட்டுக்கு வந்த ரெண்டாம் நாளே தலையில சிமென்ட் சட்டியை ஏத்துவாருன்னு நினைச்சு கூட பார்க்கல. செருப்பு கூட போடாமல் வெறும் காலோடு வெயிலில் நின்று கஷ்டப்பட்டேன். இந்த படத்தின் வெற்றி என்னை தமிழ்சினிமாவில் ரொம்ப காலம் நிலைச்சு நிற்க வைக்கும்னு நம்புறேன்,' என்றார்.

ஹீரோ மகேஷுக்கு இப்படியெல்லாம் எந்த சிரமமும் இல்லை. ஏன்?

"ஏனென்றால் நான் நடிக்க வருவதற்கு முன்பு மிக சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவன். பல நாட்கள் கட்டிட வேலைக்கு போயிருக்கிறேன். அதனால் எனக்கு எந்த சிரமமும் தெரியவில்லை. எனக்கு என்னுடைய பழைய ஞாபகங்கள் வந்துருச்சு. அங்காடி தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு என்னை வழிநடத்த ஆள் இல்லாமல் இருந்தேன். ஆனால் இந்த படம் மறுபடியும் எனக்கு அந்தளவுக்கு ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும்," என்கிறார் மகேஷ்.

 

கார்த்தியுடன் முதல் முறையாக கைகோர்க்கும் ஹரி!

Hari Direct Karthi

கமர்ஷியல் படங்களில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்ட ஹரி, அடுத்து கார்த்தியுடன் கை கோர்க்கிறார்.

பருத்தி வீரனில் ஆரம்பித்து அலெக்ஸ் பாண்டியன் வரை அனைவராலும் விரும்பப்படும் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் கார்த்தி.

மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்போது பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

'தமிழ்', 'சாமி', 'வேல்', 'சிங்கம்' என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹரி, முதல் முறையாக கார்த்தியுடன் கைகோர்க்கிறார்.

இப்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவை வைத்து 'சிங்கம் 2' படத்தை இயக்கி வரும் ஹரி அடுத்த படத்தில் கார்த்தியை இயக்குகிறார். பெயரிடப்படாத இப்புதிய படத்தின் நடிகர் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரபல விநியோகஸ்தர்,தயாரிப்பாளரான இவர் இப்பொழுது கே.பாலச்சந்தர் இயக்கி, ரஜினிகாந்த் நடித்த 'தில்லு முல்லு' படத்தை அதே பெயரில் மீண்டும் தயாரித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கார்த்தி - ஹரி கூட்டணியின் படம் ஆரம்பமாகிறது.