அஜீத் படத்தை இயக்கவில்லை... - விஷ்ணுவர்தன் அறிவிப்பு

அஜீத் நடிக்கும் 57வது படத்தை தான் இயக்கவிருந்ததாகவும், பின்னர் அஜீத் அந்த முடிவை கைவிட்டதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் அஜீத், அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக சில வாரங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன.

ஆனால் விஷ்ணுவர்தன் மீது அவர் மனைவி சில புகார்களை அஜீத்திடம் கூறியதாகவும் இதனால் கோபமடைந்த அஜீத், விஷ்ணுவர்தனுக்கு படம் பண்ணும் யோசனைக்கே தற்காலி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

No proposal to direct Ajith: Vishnuvardhan

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார் விஷ்ணுவர்தன்.

அவர் கூறுகையில், "அஜீத்தை வைத்து படம் இயக்க எனக்கும் ஆசைதான். அவருக்காக கதை தயார் செய்யவும் நான் ரெடியாகவே உள்ளேன்.

ஆனால் இப்போதைக்கு இருவரும் இணைந்து படம் பண்ணும் திட்டமே இல்லை.

நான் இப்போது யட்சன் படத்தில் பிஸியாக உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

 

நடிகர் சங்கத்திற்குத் தேர்தல்... ஜூலை 15ம் தேதி நடைபெறும் என சரத்குமார் அறிவிப்பு!

சென்னை: நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் நடிகர் விஷாலுக்கும் நடந்து வருகின்ற பிரச்சினை ஊருக்கே அவலாக மாறியிருக்கும் இந்த வேளையில் நடிகர் சங்கத் தேர்தல் வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி அன்று நடைபெறும் என்று சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

ஒருபக்கம் சங்கக் கட்டிடம் முடிஞ்சாத்தான் கல்யாணம் என்று மார்தட்டிக் கிளம்பி இருக்கிறார் நடிகர் விஷால். மறுபக்கம் சங்கக் கட்டிடம் தற்போது கட்ட முடியாது என்று கூறி வருகிறார் தலைவர் சரத்குமார். தினமும் தமிழ்த் திரையில் படங்கள் வெளியாகிறதோ இல்லையோ இவர்கள் இருவரின் ஆவேசப் பேட்டிகள் தாங்கி தினசரி பத்திரிக்கைகள் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.

Nadigar Sangam elections on July 15

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை தியாகராய நகரில் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி முன்னிலையில் நடைபெற்றது. பல்வேறு நடிக, நடிகையர் உறுப்பினர்களாக கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இரு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

2015 -2018 க்கான நடிகர் சங்கத் தேர்தல் வரும் 15.7.2015 அன்று வடபழனியில் என்.எஸ்.கலைவாணர் சாலையில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடத்துவது என்றும், தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர் ஜெ. செல்வராசன் மற்றும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிப்பது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஷால் களத்தில் குதிப்பாரா.........?

 

அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.. பீலாகும் சிம்பு!

சென்னை: அடுத்தடுத்து இரு காதல்கள் தோல்வியில் முடிந்ததால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது எனது திருமணம் கடவுளின் விருப்பபடி நடக்கும் என்று பீலிங்க்ஸ் காட்டியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரான சிம்பு முதலில் நயன்தாராவை வல்லவன் படத்தின் போது உருகி உருகி காதலித்தார், பிரேக் அப் ஆனது தான் மிச்சம்.

மீண்டும் நடிகை ஹன்சிகாவை வாலு திரைப்படத்தின் போது காதலித்தார் , என் வாழ்க்கையே உன்னோடுதான் என்று இருந்த இருவருக்கும் இடையில் என்ன நடந்ததோ முதல் வாரம் காதலிக்கிறேன் என்று மீடியாவைக் கூப்பிட்டு சொன்னவர்கள் மறுவாரம் பிரிந்து விட்டோம் என்று அதே மீடியாவின் வாயிலாக அறிவித்துப் பிரிந்தார்கள்.

My Marriage is God Plan – Actor Simbu

எந்த நல்ல நேரத்தில் வாலுவுக்கு பூஜை போட்டார்களோ படம் இன்னும் வெளிவராமல் இதோ அதோ என்று பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்து விட்டது, இன்னும் வெளியானபாடில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்த படம் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வாலு ஆளாகி விட்டது.

காதலி திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக வலம்வர நாயகன் படம் வெளியாவதே பெரும்பாடாக உள்ளது, இந்நிலையில் சிம்பு சமூக வலைதளமொன்றில் அவரின் ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு கடவுளின் விருப்பப்படி எனது திருமணம் நடைபெறும் என்று தற்போது கூறியிருக்கிறார்.

நடக்குமா நடக்காதா... !?!

 

பிசினஸில் பிஸியான பாசமலர்… விரைவில் டும் டும் டும்….

இப்ப எல்லாம் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலோனோர் சொந்த பிசினஸ் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் வாய்ப்பு எப்ப வரும் எப்ப போகும் என்று தெரியாது ஆனால் பிசினஸ்தான் நிரந்தரம் என்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றனர் சீரியல் நடிகைகள் எனவேதான் பிசியாக இருக்கும் போதே பிசினஸை தொடங்கி பிக்அப் செய்துவிடலாம் என்று நினைக்கின்றனர்.

இளவரசி நடிகை அழகு நிலையம், ரெடிமேட் ஆடை கடையைத் தொடங்கினார். இப்போதோ பாசமலர் நடிகையும் சொந்த பிசினஸ் ஆரம்பித்துள்ளாராம். கேரளாவாசியான இந்த நடிகை மலையாளம், தமிழ் என சீரியல்கள், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது சூரிய தொலைக்காட்சியில் ஒரு சீரியல் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக வேறு எந்த சீரியலும் இல்லையாம்.

TV actress turns entrepreneur

இதனையடுத்து யோசித்துப் பார்த்த நடிகை தனது தாயாருடன் சேர்ந்து மணப்பெண் ஆடை வடிவமைப்பு கடையை சென்னையில் தொடங்கிவிட்டார். கேரளாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்களை ஆடைகளில் வரைந்து கொடுக்கும் கடையாம். கேரளா இந்து மணமக்கள் அணியும் பிரத்யேக ஆடையாம் இது.

சென்னையில் தொடங்கியுள்ள பாசமலர் நடிகை விரைவில் கேரளாவிலும் இதேபோன்ற ஒரு கடையை தொடங்கப்போகிறாராம். நடிகையின் அம்மாவும் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறாராம். சூட்டோடு சூட்டாக நாயகிக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளாராம் அம்மா. பாசமலர் சாவித்திரிக்கு ஏற்ற ஜெமினிகணேசன் எங்கிருக்கிறாரோ?

 

புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடி வித்யா பாலன்?

தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பணியாற்றப் போகும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் நடிப்பவர்கள் யார் யார் என்ற விவரம் மட்டும் வெளியாகவில்லை.

குறிப்பாக கதாநாயகி யார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Vidhya Balan opposite to Rajini?

படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டது. பின்னர் ஜோடி உண்டு, டூயட் இல்லை... நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றெல்லாம் செய்தி பரவி வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டபோது, 'படத்தின் கதாநாயகி உண்டு. ஆனால் அவர் யார் என்பதை விரைவில் அறிவிக்கிறோம். நிச்சயமாக நயன்தாரா இந்தப் படத்தில் நாயகி அல்ல.." என்றார்.

இந்த நிலையில்தான், இந்தப் படத்தில் வித்யா பாலன் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கெனவே கோச்சடையான், ராணா படங்களில் வித்யா பாலன் நடிப்பதாக இருந்து பின்னர் அது நடக்காமல் போனது.

 

ரூ 10 கோடி நிதி மோசடி.. காதலனுடன் நடிகை லீனா மரியா பால் கைது

மும்பை: நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை லீனா மரியா பால். இவர், சென்னையில் கனரா வங்கியில் காதலனை ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டி நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தது மற்றும் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்.

அந்த வழக்குகளிலிருந்து ஜாமீனில் வெளிவந்த இவர், இப்போது மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை லீனா மரியா பால், அவரது காதலர் சேகர் சந்திரசேகர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

Actress Leena Maria Paul arrested for Rs 10 cr cheating

நடிகை லீனா மரியா பால் கோரேகாவ் மேற்கு லிங்க்சாலையில் உள்ள இம்பேரியல் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தனது காதலர் சேகர் சந்திரசேகருடன் வசித்து வருகிறார். இருவரும் சேர்ந்து அந்தேரி மேற்கு, சாலிமார் மோர்யா மார்க் கட்டிடத்தில் ‘லயன் ஓக் இண்டியா' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 20 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது தவிர குலுக்கல் முறையில் கார் பரிசாக கொடுப்பதாக அறிவித்து உள்ளனர்.

ரூ.10 கோடி மோசடி

இதை நம்பி அந்த நிறுவனத்தில் மும்பையை சேர்ந்த பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் கூறியபடி அந்த நிறுவனம் தரப்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதலீட்டாளர்கள் பலர் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நிறுவனம் ரூ.10 கோடி வரையிலும் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ரூ 6. 5 கோடி சொத்துகள் பறிமுதல்

இதையடுத்து போலீசார் நடிகை லீனா மரியா பால், அவரது காதலர் சேகர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் தங்கியிருக்கும் வீடு மற்றும் ‘லயன் ஒக் இண்டியா' அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள 117 விலை உயர்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், ரூ.37 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 12 செல்போன்கள், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சிக்கின. ரூ.5 கோடி மதிப்புள்ள 9 விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும்.

இது மட்டுமின்றி 2 வெளிநாட்டு துப்பாக்கிகள், பண பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரைவோலைகள், காசோலைகளையும் போலீசார் அங்கிருந்து கைப்பற்றினார்கள்.

கைதான இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பணமோசடியில் அத்தில் ஹுசைன் அக்தர்(24), அக்தர் ஹுசைன் ஜைபூரி(55), சல்மான் பிரோஜ் ரிஜ்வி(28), நாசீர் மும்தாஜ் ஜர்பூரி(50) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு இணை கமிஷனர் தனஞ்சய் கம்லாக்கர் தெரிவித்தார்.

லீனா மரியா பால் தேசிய விருது பெற்ற மெட்ராஸ் கபே படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவருதான் ராஜாவாம்.. இவங்கதான் ராணியாம்.. ஷாருக், பிரியங்காவுக்குக் கிடைத்த புதுப் பெருமை!

மும்பை: சமூக ஊடகங்கள் வந்த பிறகு சினிமாவில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது, முன்பெல்லாம் படம் பார்த்தோமா வந்தோமா என்று இருந்தவர்கள் தற்போது படம் வெளியான 1 மணி நேரத்திற்குள்ளேயே படத்தைப் பற்றிய செய்திகளை பரப்பி படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானித்து விடுகிறார்கள். தற்பொழுது படத்தின் பாடல்களை எத்தனை பேர் ரசித்தனர், டிரைலரை எவ்வளவு பேர் பார்த்துள்ளனர் போன்றவற்றையும் சேர்த்து தான் படத்திற்கு விளம்பரமே கொடுக்கின்றனர்.

நிலைமை இப்படியிருக்க பாலிவுட் லைப் என்னும் இணையதளம் சமூக ஊடகங்களின் ராஜா மற்றும் ராணியாக இந்தி நடிகர் ஷாருக்கானையும் நடிகை பிரியங்கா சோப்ராவையும் தேர்ந்தெடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசப்படும் இந்தி நடிகர் நடிகை யார் என்று இந்த இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவையும் கடந்து அமெரிக்கா, லண்டன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்திப்பட பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Shah Rukh Khan and Priyanka Chopra crowned the King & Queen of Social Media!

வாக்குகளின் எண்ணிக்கையில் நடிகர் ஷாரூக்கை சமூக ஊடகங்களின் ராஜா எனவும் நடிகை பிரியங்காவை சமூக ஊடகங்களின் ராணி எனவும் அறிவித்துள்ளனர். இந்த தேர்வுக்கு நன்றி தெரிவித்த ஷாரூக் உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றனர், தற்போது சமூக ஊடகங்களின் மூலம் வாழ்க்கை இன்னும் சுலப மாகிவிட்டது. என்னை சமூக ஊடகங்களின் ராஜா என்று தேர்ந்தெடுத்த பாலிவுட் லைப் இணையதளத்திற்கும் வாக்களித்த ரசிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதே போன்று நடிகை பிரியங்காவும் நான் எப்போதுமே ஒரு ராணியாக ஆசைப்படுவதுண்டு தற்போது சமூக ஊடகங்களின் ராணி என்று தெரிவித்திருப்பதன் மூலம் அந்த ஆசை நிறைவேறி விட்டதாக உணர்கிறேன் என்னை தேர்ந்தெடுத்த ரசிக,ரசிகைகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் லைப் என்பது இந்திப்பட செய்திகளை சுடச்சுட வழங்கி வரும் ஒரு சமூக (ஆன்லைன்) ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் எதெதுக்கெல்லாம் போட்டி வைக்கப் போறாங்களோ.............

 

"பிதாமகன்" விக்ரம் இப்போ பிசினஸ்மேன்!

சென்னை: காலம் மிகவும் மாறிவிட்டது, முன்பு மாதிரியெல்லாம் நடிகர் நடிகைகள் இல்லை தாங்கள் சம்பாதித்த பணத்தை சினிமாவைத் தவிர்த்து புத்திசாலித்தனமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து வருகின்றனர். நடிகைகளில் நடிகை தமன்னா நகைக் கடை பிசினஸ் செய்து வருகிறார், டாப்சி தனது தோழிகள் மற்றும் தங்கையுடன் இணைந்து திருமணப் பொருட்களை சப்ளை செய்யும் துறைகளில் இறங்கியுள்ளார்.

Actor vikram  & Akshay Kumar enter TV Home shopping business with 'Best Deal TV'

நடிகர்களில் பல பேர் வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்தாலும் அது பெரும்பாலும் திருமண மண்டபம், நிலங்கள், மனைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றையே நாடுகின்றனர். நடிப்பில் தன்னை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப் படுத்தி காட்டிய சீயான் விக்ரம் தற்போது தொழிலும் ஒரு வித்தியாசமான தொழிலில் குதித்து உள்ளார். ஆமாம் இந்தி நடிகர் அக்சய் குமார் மற்றும் நடிகை ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவருடன் இணைந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் " பிக் டீல் டிவி " என்ற 24 மணிநேர வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இதன் முதல் பார்வை இன்று வெளியிடப் பட்டது, இது ஒரு இலவச விளம்பர சேனலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 18 ம் தேதி முதல் தமிழகத்தில் டிடி ஹெச் பொருத்தப்பட்டு உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த சேனலைப் பார்க்க முடியும். இந்த சேனலில் வீட்டு உபயோகப் பொருட்கள் தவிர்த்து அழகு பொருட்கள், உடை மற்றும் உடல்நலத்துக்குத் தேவையான பொருட்கள் முதன்மையானதாக விற்கப் படவுள்ளன.

நடிகர் நடிகைகள் பிஸினசுக்கு விளம்பரமே தேவையில்ல......

 

வேந்தர் மூவீஸின் பிரமாண்ட படத்தை இயக்கி நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்!

‘முனி', ‘காஞ்சனா' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி நடித்த, லாரன்ஸ் சமீபத்தில் ‘காஞ்சனா 2' படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பேய்ப் படமாக வெளியான ‘காஞ்சனா 2'வில் லாரன்சுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார்.

Raghava Lawrence to direct a movie for Vendhar Movies

முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என மூன்று தொடர் வெற்றிப் படங்களை இயக்கி நடித்த லாரன்ஸ், அடுத்து ரஜினி படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

அவரும் ரஜினியைச் சந்தித்து இரண்டு கதைகளைக் கூறினார். ஒன்று முனி மாதிரி பேய்ப்படம். இன்னொன்று பாட்ஷா மாதிரி ஆக்ஷன் படம். ஆனால் ரஜினி பின்னர் சொல்வதாகக் கூறி அனுப்பிவிட்டார்.

இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கவுள்ளார்.

இப்படம் பேய் படத்தில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. தற்போது கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

வேந்தர் மூவீஸ் மதன், டி சிவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் இந்தப் படத்தினை முறைப்படி நேற்று அறிவித்தனர்.

 

தொடரும் பொய்கள்.. சிங்காரவேலன் மீது கடும் நடவடிக்கை!- தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

லிங்கா விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிட்ட படங்களின் கணக்கு வழக்குகளில் தொடர்ந்து பொய்களைக் கூறி வரும் சிங்கார வேலன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு கூறினார்.

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை படத்தை வாங்கி வெளியிட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நஷ்ட ஈடு கோரி பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து லிங்கா பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரஜினி கூறியதன்பேரில் ரூ 12.50 கோடி இழப்பீடு தர தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சம்மதித்தார்.

ஆனால், சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு 5 கோடியே 89 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகை இதுவரை கொடுக்கப்படவில்லையென்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் புகாராக தெரிவித்தனர். மேலும், மீதி நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் தருவதாக திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

Legal action on distributor Singaravelan

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் நேரில் சந்தித்தனர்.

அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு கூறுகையில், "லிங்கா பிரச்சினையில் சிங்காரவேலன் தன் பங்கு பணத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவும் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்து, நாளிதழ்களில் அவராகவே விளம்பரங்களும் கொடுத்தார். இப்போது மீண்டும் பணம் கேட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். விநியோகஸ்தர் சங்கத்தில் உறுப்பினர் கூட இல்லாத இவர் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து வருகிறார். தன்னுடன் மற்றவர்கள் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொண்டு ப்ளாக்மெயில் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவருக்கு இனி எந்தத் தயாரிப்பாளரும் ஒத்துபழைப்பு தரக்கூடாது. இதுபற்றி விரைவில் தயாரிப்பாளர் சங்கம் கூடி முடிவெடுக்கவிருக்கிறது. நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

திருப்பூர் சுப்பிரமணியன்

திருப்பூர் சுப்பிரமணியன் கூறும்போது, "லிங்கா நஷ்டத்தில் முதலில் ரூ.10 கோடி தருவதாகத்தான் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், நான்தான் ரஜினியிடம் பேசி முறையிட்டு, இந்த பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி மேலும் ரூ.2.50 கோடி பணத்தை விநியோகஸ்தர்களுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது முறையாக விநியோகஸ்தர்களை சென்றடையவில்லை என்று தற்போது விநியோகஸ்தர்கள் புகார் கூறுவது முறையற்றது.

மேலும், வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுப்பேன் என்று ரஜினி யாரிடமும் கூறவில்லை. அதை நானும், விநியோகஸ்தர்களிடம் கூறவில்லை. விநியோகஸ்தர் சிங்காரவேலன் இதுபோன்று முன்னுக்கு முரணான தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அவர் செய்யும் தில்லுமுல்லுகள் விரைவில் அம்பலத்துக்கு வரும்," என்றார்.

 

சினிமா இயக்குநரிடம் துப்பாக்கி முனையில் 40 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் கொள்ளை!

சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள சினிமா இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.

மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க என்ற படத்தை ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தயாரித்து, இயக்கி இருப்பவர் தஞ்சை கே.சரவணன்.

அவர் நேற்று முன்தினம் தனது வளசரவாக்கம் அலுவலகத்தில் இருந்தபோது. தன்னிடம் வேலை செய்த பிரபாகர் என்வபர் அடியாட்களுடன் வந்து கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மிரட்டி அவரிடம் இருந்த நாற்பது சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கே சரவணன் இன்று பிற்பகல் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

 

ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமல் ஹாஸனின் பாபநாசம்!

கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படம் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது.

கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் கடந்த மாதம் வெளியானது. அவர் நடித்துள்ள விஸ்வரூபம் 2, பாபநாசம் ஆகிய இரு படங்கள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளன. இப்போது அவர் தூங்கா வனம் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

Kamal's Papanasam on July 17th

கமலஹாசனின் பாபநாசம் படத்தை ரம்ஜான் பண்டிகையையொட்டி வரும் ஜூலை 17-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஆடியோ இந்த மாதம் 2 அல்லது 3 வாரத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கொலைபழியில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் குடும்ப தலைவன் கதைதான் இந்த பாபநாசம்.

மலையாளத்தில் மோகன் லால் - மீனா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தை, அந்தப் படத்தை இயக்கிய ஜீத்து ஜோப்பே தமிழில் கமல், கவுதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ளார்.

'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஜார்ஜ் குட்டி. ‘பாபநாசம்' படத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு சுயம்புலிங்கம் என பெயர் .

இந்தப் படத்தில் மலையாள மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகிறதார். இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாபநாசத்தில் போலீஸ் ஐ.ஜியாக ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள்.